செய்திமுரசு

கொவிட்-19க்குப் பின்னரான உலகம்

“வழமைக்குத் திரும்புதல்” என்ற சொற்றொடர், இன்று பொருளற்றது. இனி, புதிய சொற்களை நாம், தேடியாக வேண்டும். கடந்துபோன காலத்தில் எவ்வாறு, இந்தச் சொற்றொடரைப் பயன்படுத்தினோமோ அவ்வாறு, இதைப் பயன்படுத்தவியலாது. வழமை என்பது, இனிப் புதிதாக வரையறுக்கப்படும். அந்த வழமை, நாம் விரும்பியதாக இராது, நாம் எதிர்பார்த்ததாக இராது. ஆனால், உலகம் புதிய நடைமுறைகளுடன் இயங்கத் தொடங்கும். அது தவிர்க்கவியலாதது. புதிய வழமை எது, அது ஏற்படுத்தியுள்ள சட்டகங்கள், ஒழுங்குகள் எவை? அவை எம்மை எவ்வாறு பாதிக்கும், எம்மில் எவ்வாறு செல்வாக்குச் செலுத்தும்? இவை, கொவிட்-19 ...

Read More »

இளம் ஊடகவியலாளர் விபத்தில் பலி

இளம் ஊடகவியாளர் ஒருவர், மட்டக்களப்பு – கல்முனை பிரதான வீதியின் கோட்டைக்கல்லற்றில், நேற்று (13) பிற்பகல் இடம்பெற்ற கோர விபத்தில் ஸ்தலத்திலேயே உயிரிழந்துள்ளாரென,  களுவாஞ்சிகுடி பொலிஸார் தெரிவித்தனர். திருகோணமலை, இன்ன காபர் வீதியைச் சேர்ந்த 21 வயது ரகுநாதன் மிதுன்சங்கர் எனும் இந்த ஊடகவியலாளர், வந்தாறுமூலையிலுள்ள தனது உறவினர் வீட்டில் வசித்து வந்த நிலையில் இந்த அனர்த்தத்துக்கு உள்ளாகியுள்ளார். விபத்து தொடர்பில் தெரியவருவதாவது, தனது சக ஊடகவியலாளர் ஒருவர் உட்பட மூவருடன் 2 மோட்டார் சைக்கிளில் நால்வரும் கல்லாற்றிலுள்ள நண்பரொருவரின் வீட்டுக்குச் சென்றுள்ளனர். இதன்போது, ...

Read More »

எதிர்வரும் 17ஆம் திகதி இலங்கை  ரீதியில் ஊரடங்கு

கொழும்பு மற்றும் கம்பஹா ஆகிய மாவட்டங்களில் அமலில் உள்ள பொலிஸ் ஊரடங்கு சட்டம் மறு அறிவித்தல்வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது. அத்துடன், எதிர்வரும் 17ஆம் திகதி இலங்கை   ரீதியில் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, குறித்த மாவட்டங்களில் எதிர்வரும் 16 ஆம் திகதி இரவு 8 மணி முதல் எதிர்வரும் 18 ஆம் திகதி திங்கட்கிழமை அதிகாலை 5 மணிவரை ஊரடங்கு உத்தரவு அமலில் காணப்படும். இதேவேளை, கொழும்பு மற்றும் கம்பஹா மாவட்டங்களைத் தவிர்ந்த ஏனைய மாவட்டங்களில் ஊரடங்கு ...

Read More »

விபத்தில் சிக்கி உயிருக்கு போராடியவர்களை கேலி செய்த நபர்!

அவுஸ்திரேலியாவில் சாலை விபத்தில் சிக்கி உயிருக்கு போராடிய நான்கு காவல் துறை அதிகாரிகளை காப்பாற்றாமல் கேலி செய்த நபர் தற்போது விசாரணை எதிர்கொள்கிறார். அவுஸ்திரேலியாவின் விக்டோரியா மாகாணத்தில் ஏப்ரல் மாத இறுதியில் இந்த கொடூர சம்பவம் ஏற்பட்டுள்ளது. சம்பவத்தன்று வழக்கம் போல ரோந்துப் பணியில் ஈடுபட்டு வந்த நான்கு பேர் கொண்ட ஒரு காவல் துறை குழு, அசுர வேகத்தில் பறந்த ஒரு போர்ஷே வாகனத்தை மடக்கிப் பிடித்துள்ளனர். விசாரணையில் 41 வயதான Richard Pusey என்ற அந்த நபர் அதிகமான போதைமருந்தும் உட்கொண்டிருந்தது ...

Read More »

ட்விட்டர் ஊழியர்கள் இனி எப்போதும் வீட்டில் இருந்தே பணியாற்றலாம்

சமூக வலைதள நிறுவனமான ட்விட்டர் நிறுவனத்தின் ஊழியர்கள் இனி எப்போதும் வீட்டில் இருந்தே வேலை செய்ய அந்நிறுவனம் அனுமதி வழங்கி உள்ளது. ஃபேஸ்புக், கூகுளின் அல்பபெட் நிறுவனங்கள் இவ்வருட இறுதிவரை தங்களது ஊழியர்கள் வீட்டில் இருந்து பணியாற்றலாம் என அறிவித்துள்ளன. இந்நிலையில் ட்விட்டர் நிறுவனத்தின் ஊழியர்களும் இனி எப்போதும் வீட்டில் இருந்தே வேலை செய்ய அந்நிறுவனம் அனுமதி வழங்கி உள்ளது. அலுவலகம் வராமல் வேலை செய்தாலும் அவர்களுக்கு வழக்கமான ஊதியமே வழங்கப்படும் என்றும் ட்விட்டர் விளக்கம் அளித்துள்ளது. அலுவலகம் வராமலேயே செய்யக்கூடிய பணியில் உள்ளவர்களுக்கு ...

Read More »

தமிழ்த் தேசிய கூட்டமைப்பு என்ன சாதித்தது?

பிரதமர் மஹிந்த ராஜபக்‌ஷ, மே 4ஆம் திகதியன்று, அலரி மாளிகையில் கூட்டிய முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களின் கூட்டத்தில் கலந்து கொண்டு, தமிழ்த் தேசிய கூட்டமைப்பு என்ன சாதித்தது? தமிழ்த் தேசிய கூட்டமைப்பு ஒரு புறமிருக்க, அதை கூட்டிய பிரதமரோ, அரசாங்கமோ என்ன தான் சாதித்திருந்தன? கூடினார்கள், சுகாதார அதிகாரிகளும் முப்படை அதிகாரிகளும் கொவிட்- 19 தடுப்புக்காகத் தாம் மேற்கொண்ட நடவடிக்கைகளை விவரித்தார்கள். பலர், கொவிட்-19 தடுப்பு விடயத்தில், அரசாங்கம் எடுத்த நடவடிக்கைகள் தொடர்பாக, அரசாங்கத்தைப் பாராட்டினார்கள்; அவ்வளவுதான்; கலைந்து சென்றார்கள். அதிலிருந்து 10 நாள்கள் ...

Read More »

சுமந்திரனின் உருவ பொம்மைக்கு செருப்பு மாலை

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரனின் உருவ பொம்மைக்கு செருப்பு மாலை அணியப்பட்டு காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.யாழ். நல்லூர் கந்தசுவாமி ஆலயத்துக்கு பின்புறமாக பருத்தித்துறை வீதியில் அமைந்துள்ள தியாக தீபம் திலீபனின் நினைவிடத்துக்கு அருகாமையிலையே குறித்த உருவ பொம்மை காட்சிப்படுத்தப்பட்டு உள்ளது.நேற்று இரவு 8 மணி முதல் இன்று அதிகாலை 5 மணி வரையில் நாடளாவிய ரீதியில் ஊரடங்கு சட்டம் அமுல் படுத்தப்படிருந்த வேளையிலையே இனம் தெரியாத நபர்களால்  உருவ பொம்மைக்கு செருப்பு மாலை அணிந்து வீதியோர மின் கம்பத்துடன் உருவ ...

Read More »

செம்மணியில் தடைகளை தாண்டி சுடரேற்றி அஞ்சலி

முள்ளிவாய்க்கால் நினைவேந்தலை முன்னிட்டு இன்றைய தினம் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் ஏற்பாட்டில் செம்மணி பகுதியில் நினைவேந்தல் நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன. நிகழ்வு ஆரம்பமாகவிருந்த வேளை அப்பகுதிக்கு வந்திருந்த , யாழ்ப்பாண காவல் துறையினர் நிகழ்வினை நடாத்த விடாது தடைகளை ஏற்படுத்தும் முகமாக அஞ்சலி நிகழ்வுக்கு வந்திருந்தவர்களை அப்புறப்படுத்த முனைந்தனர். அதன் போது தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திர குமார் பொன்னம்பலம், ”நாம் சுகாதார நடைமுறைகளை பின்பற்றியே நிகழ்வுகளை ஏற்பாடு செய்துள்ளோம்” என கூறி நிகழ்வினை ஆரம்பிக்க முயற்சிக்கப்பட்டது.     ...

Read More »

சிறிலங்கா பாதுகாப்பு அமைச்சின் முக்கிய அறிவித்தல் !

கையடக்க தொலைபேசியை அடிப்படையாகக் கொண்ட பணபரிமாறலை பயன்படுத்தி மேற்கொள்ளப்படும் மோசடி மற்றும் நபர்களை அச்சுறுத்தி கப்பம் பெறுவது தொடர்பில் பொது மக்கள் விழிப்புடனிருக்குமாறு பாதுகாப்பு அமைச்சு பொது மக்களைக் கேட்டுக்கொண்டுள்ளது. இது தொடர்பாக பாதுகாப்பு அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கை பின்வருமாறு,      

Read More »

புதுக்குடியிருப்பில் விடுதலைப்புலிகளின் சீருடைகள் மீட்பு!

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு காவல் துறை  பிரிவிற்கு உட்பட்ட கைவேலிப்பகுதியில் நேற்யதினம் (11) காணி ஒன்றில் நிலத்தினை தோண்டும் போது நிலத்தில் புதைக்கப்பட்ட பெட்டி ஒன்று காணப்பட்டுள்ளது. குறித்த பெட்டி பச்சை நிறப்பெட்டியாக காணப்பட்டதால் இது தொடர்பில் நிலத்தின் உரிமையாளர் புதுக்குடியிருப்பு காவல் துறைக்கு தகவல் கொடுத்துள்ளதை தொடர்ந்து குறித்த இடத்திற்கு சென்ற காவல் துறை குறித்த பெட்டியினை எடுத்து பார்த்தபோது விடுதலைப்புலிகளின் சீருடைகள் உள்ளிட்ட ஆவணங்கள் சில காணப்பட்டுள்ளன. இதன்போது விடுதலைப்புலிகளின் நான்கு சீருடைகளும் அவற்றுக்கான தொப்பிகளுடன் பெண்போராளிகள் பயன்படுத்தும் இடுப்பு பட்டி மற்றும் சிவில் ...

Read More »