செய்திமுரசு

ஆஸ்திரேலியா நாடாளுமன்றத்திற்கு போட்டியிடும் தமிழர்

ஆஸ்திரேலியா குயின்ஸ்லாந்து நாடாளுமன்றத்திற்கு போட்டியிடும் முதல் தமிழர் ஆஸ்திரேலியாவின் குயின்ஸ்லாந்து மாநிலத்தில் வசித்து வரும்  பழனிச்சாமி ஒச்சாத்தேவர் . அவரை அரசு அதிகாரியாகவும் இந்தியா மற்றும் தமிழ் சமூகங்களின் முக்கிய தலைவராக பணிபுரிந்து வருகிறார். குயின்ஸ்லாந்து மாநிலத்தில் தலைநகர் பிரிஸ்பேன் நகரில் 31- 10 -2020 பாராளுமன்றத் தேர்தலில் ஆஸ்திரேலியாவில் இருபெரும் கட்சிகளில் ஒன்றான ஆளும்கட்சி லேபர் கட்சியின் தொகுதியின் நாடாளுமன்ற வேட்பாளராக போட்டியிடுகிறார் பழனிசாமி ஒச்சாத்தேவர். அவர் மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே உள்ள புதுக்கோட்டையை சேர்ந்தவர்.தற்போது ஆஸ்திரேலியாவில் குயின்ஸ்லாந்து நாடாளுமன்ற தேர்தலில் ...

Read More »

ஆஸ்திரேலியாவில் தஞ்சக்கோரிக்கையாளர்களை விடுவிக்கக்கோரி போராட்டம்!

ஆஸ்திரேலியாவின் பிரிஸ்பேனில் நகரில் உள்ள ஹோட்டலில் தடுத்து வைக்கப்பட்டுள்ள அகதிகள்/ தஞ்சக்கோரிக்கையாளர்களை விடுவிக்கக்கோரி நடந்த போராட்ட ஊர்வலத்தில் 100க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டிருக்கின்றனர். பிரிஸ்பேன் நகரில் உள்ள கங்காரு பாய்ண்ட் சென்ட்ரல் ஹோட்டலில் நீண்டகாலமாக தடுத்து வைக்கப்பட்டிருக்கும் 120+ அகதிகளை விடுவிக்கக்கோரி இப்போராட்டம் நடைபெற்றிருக்கின்றது. இப்போராட்டத்தினை நடத்த 2 மணிநேரம் அனுமதி வழங்கப்பட்டிருந்த நிலையில், அந்த நேரத்தை கடந்து தர்ணா செய்த 37 பேரை ஆஸ்திரேலிய காவல்துறையினர் கைது செய்துள்ளனர். சுமார் 7 ஆண்டுகளுக்கு முன்பு, ஆஸ்திரேலியாவில் படகு வழியாக தஞ்சமடைய முயன்ற இந்த ...

Read More »

இஸ்ரேலின் ‘இணைப்பு’ நடவடிக்கை; பதற்றத்தில் பாலஸ்தீனம்!

பெருந்தொற்றுக்கு நடுவே புதிய பதற்றத்தை ஏற்படுத்தியிருக்கிறார் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாஹு. பாலஸ்தீனத்தின் மேற்குக் கரையில் ஆக்கிரமித்து வைத்திருக்கும் பகுதிகளைத் தங்கள் நாட்டுடன் இணைக்கும் நடவடிக்கைகளில் இஸ்ரேல் அரசு இறங்கியிருக்கிறது. பாலஸ்தீனர்களைக் கொந்தளிப்பில் ஆழ்த்தியிருக்கும் இந்நடவடிக்கைக்கு, இஸ்ரேலின் மிக நெருங்கிய நட்பு நாடான பிரிட்டன் முதல் பிரான்ஸ், ஜெர்மனி உள்ளிட்ட பல்வேறு நாடுகளும் எதிர்ப்பு தெரிவித்திருக்கின்றன. எனினும், ட்ரம்ப் தலைமையிலான அமெரிக்க அரசின் ஆதரவு இருப்பதால் நெதன்யாஹு இதில் துணிச்சலுடன் இறங்குகிறார். ஒருதலைப்பட்சமானது பெருந்தொற்றுக்கு நடுவே புதிய பதற்றத்தை ஏற்படுத்தியிருக்கிறார் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் ...

Read More »

ஆஸ்திரேலியாவில் டி20 உலக கோப்பையை நடத்துவதற்கான திட்டத்தை நினைத்தாலே….

ஆஸ்திரேலியாவில் டி20 உலக கோப்பையை நடத்துவதற்கான திட்டத்தை நினைத்தாலே படுபயங்கரமாக இருக்கிறது என்று மைக் ஹசி தெரிவித்துள்ளார். ஆஸ்திரேலியாவில் டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடர் அக்டோபர் – நவம்பர் மாதங்களில் நடைபெற இருக்கிறது. இந்த உலக கோப்பையில் 16 அணிகள் பங்கேற்க இருக்கின்றன. ஏற்கனவே ஆஸ்திரேலியா கிரிக்கெட் போர்டு இந்த வருடம் டி20 உலக கோப்பையை நடத்துவதற்கான சாத்தியம் இல்லை என்று தெரிவித்துவிட்டது. ஆனால், ஐசிசி இதுகுறித்து இன்னும் முடிவு எடுக்காமல் இருக்கிறது. இந்நிலையில் டி20 உலக கோப்பையை நடத்துவதற்கான திட்டமிடுதலை நினைத்தாலே ...

Read More »

ஊரடங்கு கட்டுப்பாடுகளை மீறிய நியூசிலாந்து சுகாதார மந்திரி ராஜினாமா

ஊரடங்கு கட்டுப்பாடுகளை மீறி தனது குடும்பத்தினரை கடற்கரைக்கு அழைத்துச்சென்றது போன்று பல முறை கட்டுப்பாடுகளை மீறியதால் கண்டனங்களுக்குள்ளான நியூசிலாந்து சுகாதார மந்திரி தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். நியூசிலாந்து நாட்டில் பெண் பிரதமர் ஜெசிந்தா ஆர்டர்ன் கொரோனா வைரஸ் பரவல் பிரச்சனையை மிக நேர்த்தியாக கையாண்டார். இதன் காரணமாக அங்கு கொரோனா வைரஸ் தொற்று 1528 பேருக்கு மட்டுமே பாதித்து, 22 பேர் மரணம் அடைந்த நிலையில் கட்டுப்படுத்தப்பட்டது. இது அவருக்கு பலத்த பாராட்டுக்களை சர்வதேச அளவில் பெற்றுத்தந்தது. அதைத் தொடர்ந்து அங்கு கடந்த ...

Read More »

அரசாங்கம் தன்னை தானே அவமானப்படுத்திக்கொள்கிறது

அரசாங்கம் தன்னை தானே அவமானப்படுத்திக்கொள்ளும் அரசாங்கமாக மாறிவிட்டது என முன்னாள் அமைச்சரும் தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவருமான மனோ கணேசன் தெரிவித்துள்ளார். கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பின் போதே இவ்வாறு அவர் கூறினார். தற்போதைய அரசாங்கம் ஒரு குழப்பகரமான அரசாங்கமாக மாறியுள்ளதாகவும் அவர் இதன்போது தெரிவித்தார். அத்துடன், நாட்டிற்கு பெருமையைக் கொண்டுவந்த கிரிக்கட் வீரர்களை அவமானப்படுத்தி தற்போதைய அரசாங்கம் குழப்பத்தினை ஏற்படுத்துவதாகவும் அவர் குற்றஞ்சாட்டினார். தேசிய ரீதியில் மஹேல ஜெயவர்த்தனவிற்கும், குமார் சங்கக்காரவிற்கும் ஏற்படுத்தப்பட்டுள்ள அவமானத்தினை ஏற்றுக்கொள்ள முடியாது எனவும் அவர் இதன்போது ...

Read More »

மூத்த போராளி பசீர் காக்கா யாழ்ப்பாணத்தில்……..

சுமந்திரனை அன்ரன் பாலசிங்கத்துடன் ஒப்பிடுவதும், வரப்போகும் நாடாளுமன்றத் தேர்தலில் அவருக்கு வாக்களிப்பதும் மாவீரர்களுக்குச் செய்யும் அவமரியாதையாகும்” என தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் மூத்த போராளியும் – மாவீரர் அறிவிழியின் தந்தையுமான பசீர் (காக்கா) என்று அறியப்பட்ட மு.மனோகர் தெரிவித்துள்ளார். யாழ். ஊடக அமையத்தில் இன்று அவர் நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பிலேயே இதனைத் தெரிவித்தார். அவர் மேலும் தெரிவித்தவை வருமாறு- தமிழ்த் தேசியத்தைத் தூக்கிலிடுவதற்கான முயற்சிகள் தீவிரமடைந்து வரும் இன்றைய சூழலில் ஒரு மாவீரரின் தந்தையான முத்துக்குமார் மனோகர் ஆகிய நான், சில விடயங்களை ...

Read More »

அவுஸ்திரேலியாவின் கோலா கரடிகள் அழிந்து போகக்கூடுமாம் – ஆய்வில் தகவல்

அவுஸ்திரேலியாவில் நியூ சவுத் வேல்ஸ் மாநிலத்திலுள்ள ;கோலா கரடிகள் குறித்து அரசாங்கம் உடனடியாக அவற்றையும் அதன் ;வாழ்விடங்களையும் பாதுகாக்க தலையிடாவிட்டால் ;2050 ஆண்டுக்குள் அழிந்து போகக்கூடும், என ஆய்வொன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டின் ஆரம்பத்தில் அவுஸ்திரேலியாவில் இடம்பெற்ற, வறட்சி, காட்டுத்தீ போன்றன விலங்குகளுக்கு பேரழிவை ஏற்படுத்தியது. நியூ சவுத் வேல்ஸ் மாநிலம் முழுவதும் அவற்றின் வாழ்விடங்களில் கால் பகுதியை, சில பகுதிகளில் 81 வீதமானவை வரை அழிவடைந்துள்ளன. குறித்த பேரழிவு தீ விபத்தால் சுமார் 5,000 கோலா கரடிகள் இறந்துவிட்டதாக கருதப்படுகிறது என்று அறிக்கையில் ...

Read More »

முடிவுறாத போரின் இன்னோர் அத்தியாயம்

முடிந்தது என்று நம்புவதற்கு தான், எல்லோருக்கும் விருப்பம். ஆட்சியாளர்களும் இவ்வாறே இதை, மக்களும் நம்ப வேண்டும் என்று விரும்புகிறார்கள். ஆனால், யாதார்த்தம் என்னவோ வேறுபட்டதாக இருந்து விடுகிறது. ‘முடிந்தது’ என்றும் ‘ஒழித்து விட்டோம்’ என்றும், பெருமைப் பேச்சுகள் ஒருபுறம் பேசப்பட்டாலும், இன்னொருபுறம் அழிவு மெதுமெதுவாக முன்னகர்ந்து, ஒரு பேரழிவை நோக்கிச் சென்று கொண்டிருப்பதை, நாம் கண்முன்னால் காண்கின்றோம். ஆனால், அதை ஏற்றுக்கொள்ளும் மனநிலையில் நாமும் இல்லை. அதை வெளிப்படையாக, மக்களுக்குச் சொல்லும் மனநிலையில், அரசாங்கங்களும் இல்லை. உயிர்களுக்கும் இலாபத்துக்கும் இடையிலான முடிவுறாத போரின் இன்னோர் ...

Read More »

இரகசிய வாக்குமூலம் ஊடகங்களுக்கு கசிந்தது எப்படி?

உயிர்த்தஞாயிறு தின தொடர் தற்கொலை தாக்குதல்கள் குறித்த விசாரணைகளுக்காக கைது செய்யப்பட்டு சி.ஐ.டி.யில் தடுத்து வைக்கப்பட்டுள்ள சிரேஷ்ட சட்டத்தரணி ஹிஜாஸ் ஹிஸ்புல்லாஹ் விவகாரத்தில், நீதிமன்றுக்கு அளிக்கப்பட்ட இரகசிய வாக்கு மூலங்களில் உள்ள விடயங்கள் ஊடகங்களுக்கு கசிந்தது எப்படி என சிறப்பு விசாரணைகளை நடாத்துமாறு கோட்டை நீதிவான் ரங்க திஸாநாயக்க நேற்று உத்தர்விட்டார். குற்றவியல்ச் அட்டத்தின் 127 ஆவது அத்தியாயம் பிரகாரம், இரு சிறுவர்கள் கடந்த மே 12 ஆம் திகதி, கோட்டை நீதிவான் முன்னிலையில் இரகசிய வாக்கு மூலம் அளித்துள்ளதுடன், அதன் பின்னர் அவ்வாக்கு ...

Read More »