ஆஸ்திரேலியா நாடாளுமன்றத்திற்கு போட்டியிடும் தமிழர்

ஆஸ்திரேலியா குயின்ஸ்லாந்து நாடாளுமன்றத்திற்கு போட்டியிடும் முதல் தமிழர் ஆஸ்திரேலியாவின் குயின்ஸ்லாந்து மாநிலத்தில் வசித்து வரும்  பழனிச்சாமி ஒச்சாத்தேவர் .

அவரை அரசு அதிகாரியாகவும் இந்தியா மற்றும் தமிழ் சமூகங்களின் முக்கிய தலைவராக பணிபுரிந்து வருகிறார்.

குயின்ஸ்லாந்து மாநிலத்தில் தலைநகர் பிரிஸ்பேன் நகரில் 31- 10 -2020 பாராளுமன்றத் தேர்தலில் ஆஸ்திரேலியாவில் இருபெரும் கட்சிகளில் ஒன்றான ஆளும்கட்சி லேபர் கட்சியின் தொகுதியின் நாடாளுமன்ற வேட்பாளராக போட்டியிடுகிறார் பழனிசாமி ஒச்சாத்தேவர்.

அவர் மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே உள்ள புதுக்கோட்டையை சேர்ந்தவர்.தற்போது ஆஸ்திரேலியாவில் குயின்ஸ்லாந்து நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடும் முதல் தமிழர் என்ற பெருமையையும் சேர்த்துள்ளார்.