திரைமுரசு

ஓவியங்கள் மூலம் சாதனை படைக்க விரும்புகிறேன்!-ஷாம்லி

நடிப்பில் சாதிக்க முடியாவிட்டாலும் தம்மால் ஓவியத்தில் சாதிக்க முடியும் என்கிறார் நடிகை ஷாம்லி. நடிகை ஷாலினியின் தங்கை, நடிகர் அஜித்தின் மைத்துனி என்கிற அடையாளம் தனக்குத் தேவையில்லை என்பதிலும், தன் திறமை மூலம் தனக்கான அங்கீகாரம் கிடைக்கும் என்பதிலும் தாம் தெளிவாக இருப்பதாகச் சொல்கிறார். சிறு வயதில் சிறந்த குழந்தை நட்சத்திரம் எனப் பெயர் வாங்கி தேசிய விருது பெற்றவர் ஷாம்லி. சிங்கப்பூரில் திரைத்துறை சார்ந்த படிப்பை முடித்தவர், பின்னர் அமெரிக்கா, ஜெர்மனிக்குப் பறந்து மேற்கத்திய நடனத்தையும் கற்று வந்தார். இடையில் ஒன்றிரண்டு படங்களில் ...

Read More »

85 வயது பாட்டியாக காஜல் அகர்வால்!

இந்தியன் 2’ திரைப்படத்தில் நடிகை காஜல் அகர்வால் 85 வயது அமிர்தவள்ளி பாட்டியாக நடிக்கிறார். சினிமாவில் அறிமுகமானதில் இருந்து இன்றுவரையிலும் கவர்ச்சி மற்றும் குறும்புத்தனமான வேடங்களில் மட்டுமே நடித்தவர் காஜல் அகர்வால். இவருக்கு இதற்கு முன்பு எந்த படத்திலும் வயதான தோற்றத்தில் நடித்த அனுபவம் கிடையாது. ‘இந்தியன் 2’ படத்தில் வயதான மூதாட்டியாக நடிக்கப்போகிறார். தனக்கு இந்தப் படத்தில் நடிப்பது முற்றிலும் மாறுபட்ட அனுபவமாக இருக்கும் என்று கூறுகிறார் காஜல் அகர்வால். இயக்குநர் சங்கர் இயக்கும் இந்தப் படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார்.சங்கர் படத்தில் மட்டும்தான் ...

Read More »

திரவுபதி கதையை படமாக்கும் தீபிகா படுகோனே!

பாலிவுட்டில் முன்னணி நடிகையாக வலம் வரும் தீபிகா படுகோனே, திரவுபதி கதையை படமாக்கும் முயற்சியில் இறங்கியுள்ளார். ஆசிட் தாக்குதலால் பாதிக்கப்பட்டு மீண்டெழுந்து வந்து சாதித்த லக்ஷ்மி அகர்வால் என்பவரின் உண்மைக் கதை ‘சப்பாக்’ என்ற பெயரில் தயாராகிறது. இந்தப் படத்தில் லக்ஷ்மி கதாபாத்திரத்தில் நடித்ததோடு முதல் முறையாக தயாரிப்பாளராகவும் தீபிகா படுகோன் மாறியுள்ளார். இதைத் தொடர்ந்து மகாபாரதக் கதையைப் புதுவிதமாகச் சொல்லும் நோக்கில், பாண்டவர்களின் மனைவியான திரவுபதி கதாபாத்திரத்தின் பார்வையில் ஒரு திரைப்படத்தை தீபிகா தயாரிக்கவுள்ளார். 2021 தீபாவளிக்கு இந்தப் படம் வெளியாகத் திட்டமிடப்பட்டுள்ளது. ...

Read More »

விரைவில் திருமணம் – காஜல் அகர்வால்

தமிழ், தெலுங்கு, இந்தி மொழி படங்களில் நடித்துவரும் நடிகை காஜல் அகர்வால் விரைவில் திருமணம் செய்ய இருப்பதாக அறிவித்திருக்கிறார். காஜல் அகர்வாலுக்கு 34 வயது ஆகிறது. 2008-ல் பொம்மலாட்டம் படத்தில் அறிமுகமானார். விஜய், அஜித், சூர்யா, கார்த்தி, விஷால், ஜெயம்ரவி, தனுஷ் உள்ளிட்ட முன்னணி கதாநாயகர்களுடன் ஜோடி சேர்ந்துள்ளார். தெலுங்கு, இந்தி படங்களில் நடித்தும் பிரபலமாக இருக்கிறார். தற்போது பாரிஸ் பாரிஸ் என்ற படத்தில் கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள கதையில் நடித்துள்ளார். இந்த படம் விரைவில் திரைக்கு வர உள்ளது. அடுத்து இந்தியன் 2-ம் ...

Read More »

ஜான்விக்கு ஒரே நேரத்தில் அடுத்தடுத்து மூன்று படங்களில் நடிக்க வாய்ப்பு!

மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் மகள் ஜான்வி இந்தி படத்திற்கு பிறகு, ஒரே நேரத்தில் அடுத்தடுத்து மூன்று படங்களில் நடிக்க வாய்ப்பு கிடைத்திருக்கிறது. மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் மகள் ஜான்விக்கு, முதல் படத்துக்கு பின், வேறு எந்த படமும் ஒப்பந்தமாகவில்லை. இதனால், ஜான்வி மட்டுமல்லாமல், அவரது தந்தை போனி கபூரும் கவலையில் இருந்தார். தற்போது, ஒரே நேரத்தில், மூன்று இந்தி படங்கள், அவருக்கு ஒப்பந்தமாகி உள்ளன. இதனால் தந்தையும், மகளும் உற்சாகத்தில் உள்ளனர். இந்த படங்களின் படப்பிடிப்பு, அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் நடப்பதால், அங்கேயே ...

Read More »

கனத்த மனதோடு ‘பிகில்’ பார்க்கிறேன்: வனிதா விஜயகுமார்

கனத்த மனதோடு ‘பிகில்’ பார்க்கிறேன் என உருக்கமாகத் தெரிவித்துள்ளார் வனிதா விஜயகுமார். திருச்சி மாவட்டம் மணப்பாறையை அடுத்த நடுக்காட்டுப்பட்டியில், ஆழ்துளைக் கிணற்றில் விழுந்த குழந்தை சுஜித்தை மீட்கும் பணி 69 மணி நேரத்தைக் கடந்து நடைபெற்று வருகிறது. இரண்டு வயதேயான சுஜித், 88 அடி ஆழத்தில் சிக்கித் தவித்து வருகிறார். 10-க்கும் மேற்பட்ட மீட்புக் குழுக்கள் முயற்சி செய்தும், இன்னும் சுஜித்தை மீட்க முடியவில்லை. எனவே, தீபாவளிக் கொண்டாட்டத்தையும் தாண்டி பலரும் சுஜித்துக்காகப் பிரார்த்தனையில் ஈடுபட்டு வருகின்றனர். தங்களுடைய அனுதாபங்களை சமூக வலைதளங்களில் பதிவிட்டு ...

Read More »

அவர்கள் முன் நடிக்கும்போது மிகவும் பதட்டம் அடைந்தேன் – ஷாருக்கான்

ஷாருக்கான் தனது நடிப்புலக வாழ்க்கை பற்றி ஒரு நிகழ்ச்சியில், அவர்கள் முன் நடிக்கும் போது மிகவும் பதட்டம் அடைந்தேன் என்று கூறியிருக்கிறார். ஷாருக்கான் தனது நடிப்புலக வாழ்க்கை பற்றி ஒரு நிகழ்ச்சியில் கூறியதாவது:- ‘நீங்கள் ஒரு காட்சியில் நடித்து பின், அதிலுள்ள நெகட்டிவ் மட்டும் உங்களுக்குத் தெரியும். அப்போது, உங்களுக்குள் முழுமையான எதிர்மறையான எண்ணங்கள் மட்டுமே இருக்கும். நானா படேகர், அம்ரிதா சிங், ஜூஹி சாவ்லா போன்ற நடிகர்கள் முன் நடிக்கும்போது மிகவும் பதட்டம் அடைந்தேன். படத்தில் நான் நடித்த காட்சிகளை பார்த்ததும், `என்னால் ...

Read More »

2 கதாநாயகிகள் படங்களில் நடிப்பது ஏன்? – ராசி கன்னா

2 கதாநாயகிகள் படங்களில் நடிப்பது ஏன் என்பது குறித்து நடிகை ராசி கன்னா சமீபத்திய பேட்டியில் தெரிவித்துள்ளார். இமைக்கா நொடிகள் படம் மூலம் அறிமுகமான ராசி கன்னா அடுத்து விஜய் சேதுபதியுடன் சங்கத்தமிழன் படத்தில் நடித்து வருகிறார். இதில் நிவேதா பெத்துராஜும் நடிக்கிறார். தொடர்ந்து 2 கதாநாயகிகள் படங்களில் நடிப்பது குறித்தும் விஜய் படத்தில் நடிக்க இருப்பதாக வரும் தகவல்கள் பற்றியும் ராசி கன்னா கூறியிருப்பதாவது:- ’தெலுங்கில் மல்டி ஸ்டார் படங்களில் நடித்து இருக்கிறேன். தமிழில் என் முதல் படமான ‘இமைக்கா நொடிகள்’கூட அப்படிப்பட்ட ...

Read More »

பாடல்கள், ஹீரோயின் இல்லாத கதையில் நடித்தது ஏன்?

பாடல்கள், ஹீரோயின் இல்லாத கதையில் நடித்தது ஏன் என்பது குறித்து நடிகர் கார்த்தி சமீபத்திய பேட்டியில் கூறியுள்ளார். லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கார்த்தி, நரேன், தீனா உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘கைதி’. நாளை வெளியாக உள்ள இந்த படத்தை டிரீம் வாரியர்ஸ் நிறுவனம் சார்பில் எஸ்.ஆர்.பிரபு தயாரித்துள்ளார். இந்த படத்தில் பாடல்கள், நாயகி என எதுவுமே இல்லை. மேலும் 10 வயது பெண் குழந்தைக்கு அப்பாவாக நடித்துள்ளார் கார்த்தி. இந்த படத்தின் படப்பிடிப்பு அனுபவங்கள் குறித்து கார்த்தி அளித்துள்ள பேட்டியில் கூறியதாவது: ...

Read More »

நயன்தாராவை பாராட்டிய பிரபல பாலிவுட் நடிகை!

தமிழில் முன்னணி நடிகையாக இருக்கும் நயன்தாராவை, பிரபல பாலிவுட் நடிகை கேத்ரீனா கைப் பாராட்டி கூறியுள்ளார். பாலிவுட் திரையுலகில் முன்னணி நடிகர்களுடன் நடித்து மிகவும் பிரபலமாக இருப்பவர் கேத்ரீனா கைப். தற்போது தனது பிராண்ட் மேக்கப் உபகரணங்களை அறிமுகம் செய்வதற்காக வீடியோ சூட் நடத்தி அதற்கு கே பியூட்டி என்று பெயர் சூட்டியுள்ளார். கே பியூட்டி விளம்பரத்தில் நடிகை கேத்ரீனா கைப்புடன் பல்வேறு முன்னணி நடிகைகளும் இணைந்து நடித்துள்ளனர். அவர்களில் நயன்தாராவும் இடம்பெற்றுள்ளார். இந்நிலையில் தனது சமூக வலைத்தள பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டு ...

Read More »