திரைமுரசு

எனக்கு தமிழ் கற்றுக் கொடுத்தது அவர்தான் – பாடகி பி.சுசிலா

 பிரபல பின்னணி பாடகியான பி.சுசிலா, தமிழ் திரைப்பட பத்திரிகையாளர்கள் சங்கத்தின் பொங்கல் விழாவில் தனக்கு தமிழ் கற்றுக் கொடுத்தது யார் என்ற விவரத்தை கூறினார். தமிழ் திரைப்பட பத்திரிகையாளர்கள் சங்கத்தின் பொங்கல் விழா சென்னையில் நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினர்களாக இயக்குனர் சேரன், பாடகி பி.சுசிலா, எடிட்டர் மோகன், பிக்பாஸ் புகழ் தர்ஷன், நடிகை சர்மிளா ஆகியோர் கலந்துக் கொண்டனர். இவ்விழாவில் சங்கத்தின் பொங்கல் சிறப்பு மலரை மூத்த பின்னணி பாடகி பி.சுசிலா மற்றும் எடிட்டர் மோகன் இருவரும் வெளியிட இயக்குனர் சேரன் மற்றும் ...

Read More »

வித்தியாசமான தோற்றத்தில் பார்வதி!

தமிழ், மலையாள மொழிகளில் பிரபலமாக இருக்கும் பார்வதியின் வித்தியாசமான தோற்றம் சமூக வலைத்தளத்தில் வைரலாகியுள்ளது. நடிகை பார்வதி பொதுவாகவே தேர்ந்தெடுத்த படங்களில் மட்டுமே நடித்து வருகிறார் என்றாலும் கடந்த ஒரு வருட காலமாகவே அவரை தங்களது படங்களில் தேர்ந்தெடுத்து நடிக்க வைக்க மலையாள திரையுலகம் தயங்கி வருகிறது. மோகன்லால், மம்முட்டி உள்ளிட்ட நடிகர்களுடன் மோதல் போக்கை கடைபிடிப்பதால் பார்வதியை கதாநாயகியாக ஒப்பந்தம் செய்ய பலரும் தயங்குகின்றனர், ஆனாலும் அதைப்பற்றி எல்லாம் பார்வதி கவலைப்பட்டதாக தெரியவில்லை. தன்னை தேடிவந்து கதை சொன்ன இயக்குனர் வேணுவுக்கு உடனடியாக ...

Read More »

‘அகோரி’ படத்தின் முன்னோட்டம்!

டி.எஸ்.ராஜ்குமார் இயக்கத்தில் சாயாஜி ஷிண்டே, ஸ்ருதி ராமகிருஷ்ணன் நடிப்பில் உருவாகி இருக்கும் ‘அகோரி’ படத்தின் முன்னோட்டம். அறிமுக இயக்குநர் டி.எஸ்.ராஜ்குமார் இயக்கத்தில் சாயாஜி ஷிண்டேயின் வித்தியாச நடிப்பில் உருவாகி இருக்கும் படம் ‘அகோரி’. மோஷன் பிலிம் பிக்சர் சுரேஷ் கே.மேனன் தயாரித்திருக்கும் இப்படத்தில் ஸ்ருதி ராமகிருஷ்ணன் ஹீரோயினாக நடித்திருக்கிறார். மேலும் மைம் கோபி, சித்து, டார்லிங் மதனகோபால், ரியாமிகா, மாதவி, வெற்றி, கார்த்தி, ‘கலக்கப்போவது யாரு’ சரத் ஆகியோரும் நடித்துள்ளனர். கூத்துப்பட்டறையில் பயிற்சி பெற்ற புதிய கலைஞர்களும் இப்படத்தில் நடித்திருக்கிறார்கள். சிவனடியாராக உள்ள ஓர் ...

Read More »

ஐந்து குழந்தைகளுடன் ஹரிஷ் கல்யாண்!

தனுசு ராசி நேயர்களே படத்தை தொடர்ந்து ஹரிஷ் கல்யாண் நடிப்பில் உருவாகி வரும் புதிய படத்தில் 5 குழந்தைகளுடன் இருக்கும் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது. தனுசு ராசி நேயர்களே படத்தை தொடர்ந்து ஹரிஷ் கல்யாண் நடிப்பில் தற்போது ‘தாராள பிரபு’ திரைப்படம் உருவாகியுள்ளது. ஆயுஷ்மான் குரானா நடிப்பில் பெரும் வெற்றி பெற்ற ‘விக்கி டோனர்’ என்ற படத்தின் ரீமேக்காக உருவாகியுள்ளது. ரொமான்டிக் காமெடி வகையை சேர்ந்த இந்த படம், விந்து தானம் மற்றும் குழந்தையின்மை ஆகியவற்றை மையமாக வைத்து எடுக்கப்பட்டது. பாக்ஸ் ஆபீசில் ...

Read More »

மாணவர்கள் தாக்கப்பட்டதற்கு சன்னி லியோன் கண்டனம்!

ஜே.என்.யு பல்கலைக்கழக மாணவர்கள் தாக்கப்பட்டதை குறித்து பாலிவுட் நடிகை சன்னி லியோன் கண்டனம் தெரிவித்துள்ளார். சமீபத்தில் ஜே.என்.யு பல்கலைக்கழகத்தில் மர்ம நபர்கள் நுழைந்து மாணவர்களை கொடூரமாக தாக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதனைத் தொடர்ந்து நடிகை தீபிகா படுகோன் ஜே என் யு மாணவர்களை நேரில் சந்தித்து ஆதரவு தெரிவித்தார். இதனால் அவரை பலரும் விமர்சித்து வருகின்றனர். இந்நிலையில் இத்தாக்குதல் குறித்து பாலிவுட் நடிகை சன்னி லியோன் கண்டனங்களை தெரிவித்துள்ளார். அதில், ‘ஜே என் யு தாக்குதல் சம்பவம் மாணவர்களை மட்டுமல்லாது அவர்களது ...

Read More »

அவரை பிரிந்ததற்காக ஒருமணிநேரம் அழுதேன்!

தமிழில் முன்னணி நடிகையாக இருக்கும் நயன்தாரா, முக்கியமான நபர் ஒருவரை பிரிந்ததற்காக ஒருமணிநேரம் அழுததாக தெரிவித்துள்ளார். சரத்குமாருக்கு ஜோடியாக ஐயா திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை நயன்தாரா. அதனை அடுத்து ரஜினி, விஜய், அஜித் என தமிழ் சினிமாவில் பல்வேறு முன்னணி நடிகர்களுடன் ஜோடி சேர்ந்து நடித்து புகழின் உச்சிக்கு சென்ற இவர், அதே நேரம் பல்வேறு சர்ச்சைகளிலும் சிக்கினார். தற்போது இயக்குனர் விக்னேஷ் சிவனை காதலித்து வரும் இவர் கோவில் கோவிலாக, ஊர் ஊரக சுற்றி வருகிறார். இந்நிலையில், நயன்தாரா ...

Read More »

விருது மட்டும் வேண்டுமா?

பட விழாக்கள் எதிலும் கலந்துகொள்ளாமல் இருக்கும் நயன்தாரா, விருது விழாவில் மட்டும் பங்கேற்பதை நெட்டிசன்கள் விமர்சித்து வருகின்றனர். தமிழ் சினிமாவில் முன்னணி கதாநாயகியாக இருப்பவர் நயன்தாரா. இவர் கடந்த ஆண்டு சிரஞ்சீவியுடன் ‘சைரா நரசிம்மா ரெட்டி’, விஜய்யுடன் ‘பிகில்’, அஜித்துடன் ‘விஸ்வாசம்‘, தனி கதாநாயகியாக ‘ஐரா’, சிவகார்த்திகேயனுடன் ‘மிஸ்டர்.லோக்கல்’ ஆகிய படங்களில் நடித்தார். ஆனால் எந்த படத்தின் நிகழ்ச்சியிலும் நயன்தாரா கலந்து கொள்ளவில்லை. சீரஞ்சிவி நடித்த ‘சைரா நரசிம்மா ரெட்டி’ படத்தின் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளாதது பெரும் சர்ச்சையாக மாறியது. கோடிகளில் சம்பளம் வாங்குபவர் ...

Read More »

தொல்பொருள் ஆய்வாளராக களமிறங்கும் ரெஜினா!

தமிழ், தெலுங்கு படங்களில் நடித்து மிகவும் பிரபலமான நடிகை ரெஜினா அடுத்ததாக தொல் பொருள் ஆய்வாளராக நடிக்க இருக்கிறார். திருடன் போலீஸ், உள்குத்து படம் மூலம் ரசிகர்களை கவனிக்க வைத்தவர் இயக்குனர் கார்த்திக் ராஜு. இவர் அடுத்ததாக மர்மங்கள் நிறைந்த திரில்லர் திரைப்படத்தை இயக்க தயாராகி இருக்கிறார். இந்த புதிய படத்தில் ரெஜினா முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்கிறார். தமிழ், தெலுங்கு மொழிகளில் உருவாக இருக்கும் இப்படத்தை ஆப்பிள் டிரி ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இன்னும் பெயரிடப்படாத இப்படத்தில் ரெஜினா தொல்பொருள் ஆய்வாளராக நடிக்கவுள்ளார். தற்போது ...

Read More »

விஜய்சேதுபதி பிறந்தநாளை முன்னிட்டு உடல் உறுப்பு தானம் செய்த ரசிகர்கள்!

தமிழில் முன்னணி நடிகராக இருக்கும் விஜய் சேதுபதியின் பிறந்தநாளை முன்னிட்டு அவரது ரசிகர்கள் உடல் உறுப்புதானம் செய்து அசத்தி இருக்கிறார்கள். தமிழில் முன்னணி நடிகராக வலம் வருபவர் விஜய் சேதுபதி. இவருடைய பிறந்தநாள் ஜனவரி 16. விஜய் சேதுபதியின் பிறந்தநாளை முன்னிட்டு உடல் உறுப்பு தானம் நிகழ்ச்சி திருச்சியில் நடைபெற்றது. இதில் 202 ரசிகர் நற்பணி இயக்க உறுப்பினர்கள் குடும்பத்தில் அனுமதி பெற்று திருச்சி ரசிகர் நற்பணி இயக்க அலுவலகத்தில் அரசு மருத்துவமனை உடல் உறுப்பு தானம் பிரிவு அதிகாரியிடம் உடல் உறுப்புதான செய்த ...

Read More »

அமெரிக்காவில் கோல்டன் குளோப் விருதுகள் வழங்கப்பட்டன – சிறந்த படமாக ‘1917’ தேர்வு

அமெரிக்காவில் கோல்டன் குளோப் விருதுகள் வழங்கப்பட்டன. இதில் சிறந்த திரைப்படமாக, முதலாவது உலகப்போரை விவரிக்கும் ‘1917’ என்ற ஹாலிவுட் படம் தேர்வானது. ஆஸ்கார் விருதுக்கு அடுத்தபடியாக உலக அளவில் திரைத்துறையினருக்கு வழங்கப்படும் கவுரவமிக்க விருதாக கோல்டன் குளோப் விருதுகள் பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் 77-வது கோல்டன் குளோப் விருதுகள் வழங்கும் விழா அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணம் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் உள்ள பெவர்லி ஹில்சில் நடந்தது. இதில் சிறந்த திரைப்படமாக, முதலாவது உலகப்போரை விவரிக்கும் ‘1917’ என்ற ஹாலிவுட் படம் தேர்வானது. இந்த படத்தின் ...

Read More »