திரைமுரசு

மாஸ்க்குகளை விட்டுக்கொடுங்கள்

யோகி பாபு நடிப்பில் உருவாகவிருக்கும் காக்டெய்ல் படத்தின் நாயகி ராஷ்மி கோபிநாத் பொது மக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார். கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டு நாடே முடங்கி கிடக்கிறது. அரசின் உத்தரவை மதித்து சினிமா நட்சத்திரங்கள் உள்ளிட்ட பலரும் தங்களது வீட்டிற்குள்ளேயே இருக்கின்றனர். இதில் சிலர் மக்களுக்கு விழிப்புணர்வு தரும் விதமாக நல்ல ஆலோசனைகளையும் தருகின்றனர். யோகிபாபுவுடன் ‘காக்டெய்ல்’ மற்றும் சி.வி.குமார் தயாரிப்பில் ஒரு புதிய படம் ஆகிய படங்களில் கதாநாயகியாக நடித்துள்ள ராஷ்மி கோபிநாத் மக்களுக்கு சில ஆலோசனைகளுடன் ...

Read More »

வீட்டிலிருந்து உலகை காக்கும் அற்புத வாய்ப்பு இது!

கொரோனா விழிப்பணர்வு வீடியோ வெளியிட்டு உள்ள நடிகை மீனா, மக்கள் வீட்டிலிருந்து உலகை காக்கும் அற்புத வாய்ப்பு இது என தெரிவித்துள்ளார். நடிகை மீனா கொரோனா விழிப்பணர்வு வீடியோ வெளியிட்டு உள்ளார். அதில் அவர் பேசி இருப்பதாவது:- கொரோனா வைரஸ் இந்த உலகத்தையே ஆட்டிப்படைக்கிறது. அரசாங்கம் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஊரடங்கு பிறப்பித்து இருக்கிறது. ஆனாலும் நிறைய பேர் இதை சீரியஸாக எடுத்துக்கொள்ளாமல் விளையாட்டாக வெளியே சுற்றுவதை தொலைக்காட்சிகளில் பார்க்கும்போது வருத்தமாக இருக்கிறது. இதுபோன்று, அரசாங்கம் சொன்னதை கேட்காததால்தான் இத்தாலி, ஸ்பெயின் போன்ற நாடுகளில் நிலைமை ...

Read More »

ரஜினி, அமிதாப் நடித்த குறும்படத்தின் மூலம் ஒரு லட்சம் தொழிலாளர்களுக்கு நிவாரணம்

ரஜினி, அமிதாப் நடித்த குறும்படத்தின் மூலம் ஒரு லட்சம் தொழிலாளர்களுக்கு உதவ முடிவு செய்துள்ளனர். ஊரடங்கு காலத்தில் வீட்டில் பாதுகாப்பாக இருப்பது, உடல்நலனைப் பேணுவது, வீட்டிலிருந்து பணிபுரிவது, சமூக விலகல் உள்ளிட்ட விஷயங்களை வலியுறுத்தும் விதமாக ‘ஃபேமிலி’ என்ற குறும்படம் வெளியானது. இதில் நடிகர்கள் அமிதாப் பச்சன், ரஜினிகாந்த், சிரஞ்சீவி, பிரியங்கா சோப்ரா, ரன்பீர் கபூர், ஆலியா பட் உள்ளிட்ட முன்னணி நடிகர்கள் நடித்து இருந்தனர். இந்த படத்தின் மூலம் கிடைக்கும் பணம் அனைத்தையுமே தினசரித் தொழிலாளர்களுக்கு உதவ முடிவு செய்துள்ளனர். இது தொடர்பாக ...

Read More »

விலகி நின்று ஒன்றிணைவோம்!

தமிழில் பேசி விழிப்புணர்வு வீடியோ வெளியிட்டுள்ள தமன்னா, இதை செய்தால் கொரோனாவை எளிதில் ஜெயிக்க முடியும் என கூறியுள்ளார். இந்தியாவில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. இதை தடுக்க மத்திய அரசு 21 நாட்கள் ஊரடங்கை அறிவித்து உள்ளது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டு வீட்டில் முடங்கி உள்ளனர். சினிமா படப்பிடிப்புகள் ரத்தானதால் நடிகர்-நடிகைகள் வீட்டில் இருக்கிறார்கள். ஊரடங்கை மீறி சிலர் வெளியே சுற்றவும் செய்கின்றனர். அவர்களால் கொரோனா மேலும் பரவலாம் என்ற அச்சம் நிலவுகிறது. அவர்களுக்கு அறிவுரை சொல்லும் வகையில் ...

Read More »

பிரபல தயாரிப்பாளரின் மகளை தாக்கிய கொரோனா

இலங்கைக்கு சென்று வந்த பிரபல தயாரிப்பாளரின் மகளை அறிகுறியே இல்லாமல் கொரோனா தாக்கி இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. நடிகர் ஷாருக்கான் நடித்த சென்னை எக்ஸ்பிரஸ், ரா ஒன், தில்வாலே உள்ளிட்ட இந்தி படங்களை தயாரித்தவர் கரீம் மோரானி. இவரது மகள்கள் ஷாஜா, சோயா. இதில் ஷாஜா சமீபத்தில் இலங்கைக்கு சென்று வந்து உள்ளார். இதேபோல சோயா ராஜஸ்தானுக்கு சென்று திரும்பி உள்ளார். இந்தநிலையில் வெளிநாடு மற்றும் வெளியூரில் இருந்து திரும்பியதால் 2 பேருக்கும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில் ஷாஜாவுக்கு கொரோனா பாதிப்பு ...

Read More »

பிரபல நகைச்சுவை நடிகர் மரணம்

சிறுநீரக கோளாறால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த பிரபல நகைச்சுவை நடிகர் ‘புல்லட்’ பிரகாஷ் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். கன்னட திரையுலகின் பிரபல நகைச்சுவை நடிகராக இருந்து வந்தவர் ‘புல்லட்’ பிரகாஷ். இவருக்கு வயது 44. சிறுநீரக கோளாறால் பாதிக்கப்பட்டிருந்த இவர், கடந்த ஒரு மாதமாக துபாயில் உள்ள கொலம்பியா ஆசியா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில் கடந்த 31-ந்தேதி அவர், பெங்களூரு கன்னிகாம் சாலையில் உள்ள போர்ட்டிஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்த ...

Read More »

அவருடன் நடிக்க வாய்ப்பு கிடைத்தால் மகிழ்ச்சி

சமூக வலைத்தளத்தில் ரசிகர்களுடன் பேசிய பிரசன்னா, பிரபல நடிகருக்கு வில்லனாக நடிக்க ஆசை என்று கூறியிருக்கிறார். கதாநாயகனாக நடித்து வந்த பிரசன்னா இப்போது பல படங்களில் வில்லன் வேடங்களில் வருகிறார். சமூக வலைத்தளத்தில் ரசிகர்களுடன் நடந்த கலந்துரையாடலில் அவர் கூறியதாவது:- எனக்கு அஜித்குமாரை மிகவும் பிடிக்கும், அவருக்கு வில்லனாக நடிக்க ஆசை உள்ளது. விஜய்யுடன் நடிக்க வாய்ப்பு கிடைத்தால் மகிழ்ச்சி அடைவேன். விஷால் எனது நல்ல நண்பர், இயக்குனராக மாறி உள்ள அவருக்கு வாழ்த்துகள். சமீபகாலமாக வில்லன் வேடங்களில் நடித்து வருகிறேன். இந்த மாற்றமானது ...

Read More »

கொரோனாவில் இருந்து மீண்டார் பாடகி கனிகா கபூர்

பிரபல இந்தி திரைப்பட பாடகி கனிகா கபூர், 6-வது முறையாக பரிசோதனை செய்ததில், கொரோனா தொற்று இல்லை என்பது உறுதி ஆகியுள்ளது. பிரபல இந்தி திரைப்பட பாடகி கனிகா கபூர், லண்டனுக்கு சென்றுவிட்டு இந்தியா திரும்பிய நிலையில், வீட்டில் தன்னை தனிமைப்படுத்திக் கொள்ளாமல் 3 நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார். நட்சத்திர ஓட்டலிலும் தங்கி இருந்தார். பின்னர் அவருக்கு உடல் நிலை குன்றியதால் ஆஸ்பத்திரியில் பரிசோதித்தபோது கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது உறுதியானது. இதையடுத்து லக்னோவில் உள்ள சஞ்சய் காந்தி ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று ...

Read More »

இதை செய்யுங்கள் உலகில் மாற்றம் வரும் – அமலாபால்

தமிழ் திரையுலகில் முன்னணி நடிகையாக இருக்கும் அமலாபால், இதை செய்தால் உலகில் மற்றம் வரும் என கூறியுள்ளார். ஆடை படத்தில் நிர்வாணமாக நடித்து பரபரப்பை ஏற்படுத்திய நடிகை அமலாபால், சமீபத்தில் இந்தி பாடகர் பவ்னிந்தர் சிங்கை திருமணம் செய்து கொண்டார். திருமண புகைப்படங்களை பவ்னிந்தர் தனது சமூக வலைத்தள பக்கத்தில் வெளியிட்டு சிறிது நேரத்தில் நீக்கி விட்டார். இந்த திருமணம் குறித்து சர்ச்சை நடிகை ஸ்ரீரெட்டி, “‘உங்களுடைய பஞ்சாப் கணவர், உங்களை நன்றாக பார்த்துக்கொள்வார். பஞ்சாபியரை நம்பலாம்” என்று வலைத்தளத்தில் பதிவிட்டு இருந்தார். இந்த ...

Read More »

கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஷாருக்கான் உதவி

பாலிவுட்டில் முன்னணி நடிகராக இருக்கும் ஷாருக்கான் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவி செய்ய இருக்கிறார். கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு பல்வேறு வகையான உதவிகளை செய்ய உள்ளதாக நடிகர் ஷாருக்கான் கூறியுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது:- கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி சார்பில் பிரதமர் நிவாரண நிதிக்கு நிதி உதவி அளிக்கப்படும். தானும், தனது மனைவியான கவுரிகான் உரிமையாளர்களாக இருக்கும் ரெட் சில்லிஸ் நிறுவனம் சார்பில் மராட்டிய மாநில முதல்-மந்திரி நிவாரண நிதிக்கு நிதி உதவி அளிக்கப்படும். மேற்கு வங்கம் மற்றும் மராட்டிய மாநிலத்துக்கு ...

Read More »