திரைமுரசு

25 வருடங்களுக்கு பிறகு மீண்டும் தமிழுக்கு வரும் சுதாராணி

தமிழில் வசந்தகால பறவை, தங்கக்கிளி ஆகிய படங்களில் நடித்த சுதாராணி 25 வருடங்களுக்கு பிறகு மீண்டும் தமிழில் நடித்துள்ளார். தமிழில் வசந்தகால பறவை, தங்கக்கிளி ஆகிய படங்களில் நடித்தவர் சுதாராணி. இவர் 25 வருடங்களுக்கு பிறகு கோசுலோ என்ற புதிய படம் மூலம் ரீஎன்ட்ரி ஆகிறார். கோசுலோ என்கிற படத்தின் பர்ஸ்ட்லுக் போஸ்டர்  சமீபத்தில் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. சந்திரகாந்த் என்பவர் இயக்கியுள்ள இந்தப்படத்தை பி.ஆர்.ராஜசேகர் தயாரித்துள்ளதுடன் கதை திரைக்கதையையும் அவரே எழுதியுள்ளார். கோபால் இசையமைக்க, ஸ்ரீனிவாசன் ஒளிப்பதிவு செய்துள்ளார்.  “தமிழ், தெலுங்கு, ...

Read More »

வீட்டில் துப்பாக்கிச்சூடு…. மிரட்டலுக்கு அஞ்ச மாட்டேன் – கங்கனா பதிலடி

பாலிவுட்டில் முன்னணி நடிகையாக இருக்கும் கங்கனா ரணாவத், மிரட்டலுக்கு அஞ்ச மாட்டேன் என தெரிவித்துள்ளார். ஜெயம் ரவி ஜோடியாக தாம் தூம் படத்தில் நடித்த கங்கனா ரணாவத் தற்போது ஜெயலலிதா வாழ்க்கை கதையான தலைவி படத்தில் நடித்து வருகிறார். பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் தற்கொலைக்கு வாரிசு நடிகர்கள் காரணம் என்று கங்கனா குற்றம்சாட்டியது சர்ச்சையானது. இந்நிலையில் மணாலியில் உள்ள கங்கனாவின் இல்லத்தில் துப்பாக்கி சூடு சம்பவம் நடந்துள்ளதாக பரபரப்பு ஏற்பட்டு உள்ளது. இதுகுறித்து கங்கனா கூறியதாவது: “இரவு 11.30 மணிக்கு எனது அறையில் ...

Read More »

விஜய் சேதுபதி படத்தில் இணைந்த பிரபல இசையமைப்பாளர்

விஜய் சேதுபதி நடிப்பில் உருவாக இருக்கும் புதிய படத்தில் பிரபல இசையமைப்பாளர் இணைந்திருக்கிறார். இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் முத்தையா முரளிதரனின் வாழ்க்கை வரலாறு திரைப்படம் குறித்த செய்திகள் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் வெளிவந்தது. முத்தையா முரளிதரன் கதாபாத்திரத்தில் விஜய் சேதுபதி நடிக்க உள்ளார். இந்த நிலையில் இந்த படத்தின் பணிகள் தற்போது தொடங்கப்பட உள்ளதாகவும், படத்திற்கு ’800’ என்ற டைட்டில் வைக்க போவதாக படக்குழுவினர்களிடம் இருந்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  மேலும் இந்த படத்தில் இசையமைக்க இசையமைப்பாளர் சாம் சிஎஸ் ...

Read More »

ஏ.ஆர்.ரகுமானை ஈர்த்த இளம் பாடகி

ஏ.ஆர்.ரகுமானால் தமிழ் திரை உலகிற்கு அறிமுகப் படுத்தப்பட்ட இளம் பாடகி அவரை இசையால் ஈர்த்துள்ளார். வளர்ந்து வரும் தமிழ் பின்னணி பாடகி தர்ஷனா கே.டி., இவர் ஏ.ஆர்.ரகுமானால் தமிழ் திரை உலகிற்கு அறிமுகப் படுத்தப்பட்டார். அழகிய தமிழ் மகன் படத்தில்  “மதுரைக்கு போகாதடி” பாடலின் மூலம் அறிமுகமான இவர், ஓகே கண்மணியில் “காரா ஆட்டக்காரா”, “தீர உலா”, காஞ்சனா 2 வில் “கருப்பு பேரழகா”, ஓகே கண்மணி ஆந்திர மொழியில் “மெண்டல் மனதில்” மற்றும் இந்தியில் பல  பாடல்களை பாடியுள்ளார். தற்போது இவர் ஏ.ஆர்.ரகுமான் ...

Read More »

பின்வாங்காத போராளியாக என்னை மாற்றியது ‘தல’ அஜித் தான் – பிரசன்னா நெகிழ்ச்சி

எதிலும் பின்வாங்காத போராளியாக என்னை மாற்றியது ‘தல’ அஜித் தான் என நடிகர் பிரசன்னா நெகிழச்சியுடன் பதிவிட்டுள்ளார். நடிகர் அஜித், சினிமாக்கு வந்து 28 ஆண்டுகள் ஆவதையொட்டி நடிகர், நடிகைகள் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். இதேபோல் அஜித்தின் ரசிகர்கள் டுவிட்டரில் ஹேஷ்டேக் உருவாக்கி கொண்டாடுகிறார்கள். அமராவதி படத்தில் கதாநாயகனாக அறிமுகமான அஜித் தொடர்ந்து வான்மதி, காதல் கோட்டை, ராசி, உல்லாசம், காதல் மன்னன், அவள் வருவாளா, வாலி, அமர்க்களம், தீனா, வரலாறு, பில்லா, மங்காத்தா, ஆரம்பம், வீரம், வேதாளம், விஸ்வாசம், நேர்கொண்ட பார்வை ...

Read More »

அமிதாப்பச்சனின் கொரோனா அனுபவங்கள்- உருக்கமாய் ஒரு பதிவு

கொரோனா நோயாளிகளின் உலகம் எப்படிப்பட்டதாக இருக்கிறது என்ற கசப்பான உண்மையை அமிதாப்பச்சன் அவருக்கே உரித்தான விதத்தில் தனது வலைப்பக்கத்தில் பதிவு செய்துள்ளார். ஒட்டு மொத்த இந்தியாவே அதிர்ந்துபோனது. வயதானவர்களுக்குத்தானே கொரோனா அதிகமாக பாதிக்கிறது என்பதால், அமிதாப்புக்கு கொரோனா என்றதும் அவரது ரசிகர்கள் கவலைக்குள்ளாகினர். ஆனால் அமிதாப்பச்சன் வயது 77 என்றாலும் அதை வெறும் எண்ணாக பார்ப்பவர். அதனால்தான் தைரியமாக அவரால் கொரோனாவை இன்று வரை எதிர்கொள்ள முடிகிறது. அவரும் சரி, அவரது மகன் அபிஷேக் பச்சனும் சரி, கொரோனா உறுதியான நிலையில் கடந்த 11-ந் ...

Read More »

வில்லி வேடத்தில் நடிக்க எனக்கு ஆசையாக உள்ளது! -பிரியாமணி

தமிழ், தெலுங்கு, கன்னடம் என பல்வேறு மொழிப்படங்களில் நடித்துவரும் நடிகை பிரியாமணி, தனக்கு அந்தமாதிரி வேடங்களில் நடிக்க ஆசை என தெரிவித்துள்ளார். நடிகை பிரியாமணி 2004-ம் ஆண்டு ‘கண்களால் கைது செய்’ படம் மூலம் தமிழில் கதாநாயகியாக அறிமுகமானார். ‘பருத்திவீரன்’ படத்தில் நடித்து பிரபலமானார். இந்த படத்துக்காக அவருக்கு சிறந்த நடிகைக்கான தேசிய விருது கிடைத்தது. இவர் தமிழ் மட்டுமல்லாது தெலுங்கு, கன்னட மொழி படங்களிலும் நடித்து வருகிறார். கொரோனா ஊரடங்கில் நடிகை பிரியாமணி அளித்துள்ள பேட்டி வருமாறு: “நான் விராட பருவம் படத்தில் ...

Read More »

கொரோனாவிலிருந்து குணமடைய தான் எடுத்துக்கொண்ட மருந்துகளை வெளியிட்ட விஷால்

கொரோனாவில் இருந்து ஒரே வாரத்தில் குணமடைந்த விஷால், அதற்காக தான் பயன்படுத்திய மருந்துகளை வெளியிட்டு உள்ளார். தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது. சினிமா பிரபலங்களும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு  உள்ளனர். அந்தவகையில் விஷாலும், அவரது தந்தை ஜி.கே.ரெட்டி மற்றும் விஷாலின் உதவியாளர் ஹரி ஆகியோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு ஒரே வாரத்தில் குணமடைந்தனர். மருத்துவமனைக்கு செல்லாமல் வீட்டில் இருந்தபடியே ஆயுர்வேத சிகிச்சை எடுத்துக்கொண்டு குணமானதாக விஷால் தெரிவித்திருந்தார். இந்நிலையில் தாங்கள் பயன்படுத்திய மருந்தின் விவரங்களை வெளியிட்டுள்ள விஷால், பலர் கேட்டு ...

Read More »

அவர் கொடுத்த காதல் கடிதத்தை பத்திரமா வச்சிருக்கேன் – கீர்த்தி சுரேஷ்

தென்னிந்திய திரையுலகில் முன்னணி நடிகையாக இருக்கும் கீர்த்தி சுரேஷ், தனக்கு வந்த காதல் கடிதம் குறித்து தெரிவித்துள்ளார். ‘இது என்ன மாயம்’ படத்தின் மூலம் தமிழில் அறிமுகமான கீர்த்தி சுரேஷ், விஜய், சூர்யா, விக்ரம் ஆகியோரின் படங்களில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவின் முன்னணி கதாநாயகியாக வளர்ந்தார். நிறைய கமர்சியல் படங்களில் நடித்த இவருக்கு, ‘மகாநடி’ படம் மிகப் பெரிய பெயரைப் பெற்றுக்கொடுத்தது. இப்படத்திற்காக அவர் தேசிய விருதும் பெற்றார். அடுத்ததாக ரஜினி-சிவா கூட்டணியில் உருவாகும் அண்ணாத்த படத்தில் முக்கிய வேடத்தில் நடிக்கிறார். இதுதவிர ...

Read More »

அன்பு ரகுமான்… அஞ்ச வேண்டாம்

பாலிவுட்டில் தனக்கு வரும் பட வாய்ப்புகளை தடுக்க சதி நடப்பதாக ஏ.ஆர்.ரகுமான் கூறிய நிலையில், அவருக்கு ஆதரவாக வைரமுத்து டுவிட் செய்துள்ளார். இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான், பாலிவுட்டில் தன்னை பணியாற்ற விடாமல் தடுக்க ஒரு கும்பல் வேலை செய்கிறது என்ற திடுக்கிடும் புகாரை தெரிவித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ஆஸ்கார் விருது பெறுவதற்கு முன்புவரை 11 வருடங்களில் 33 இந்தி படங்களுக்கு இசையமைத்து வட இந்தியாவில் ஏ.ஆர்.ரகுமான் கொடி கட்டி பறந்தார். ஆனால் ஆஸ்கார் விருது பெற்ற பிறகு அவருக்கு பாலிவுட்டில் பட வாய்ப்புகள் குறைந்தன. ...

Read More »