திரைமுரசு

மர்ம நபர்களிடம் சிக்கிய வரலட்சுமி சரத்குமார்

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக இருக்கும் வரலட்சுமி சரத்குமாரின் கணக்குகளை மர்ம நபர்கள் கைபற்றி இருப்பதாக அறிக்கை வெளியிட்டுள்ளார். சமூக வலைதளத்தில் தீவிரமாக இயங்கி வருபவர் வரலட்சுமி சரத்குமார். பாலியல் வன்முறை, கொரோனா விழிப்புணர்வு, உள்ளிட்டவை குறித்து தொடர்ச்சியாகப் பகிர்ந்து வந்தார். இந்நிலையில் நடிகை வரலட்சுமியின் சமூக வலைதளப் பக்கத்தை மர்ம நபர்கள் ஹேக் செய்துள்ளனர். இதனால், தனது சமூக வலைதளப் பக்கத்தில் வரும் தகவல்களை நம்ப வேண்டாம் என்று வரலட்சுமி அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், “என்னுடைய இன்ஸ்டாகிராம் மற்றும் டிவிட்டர் உள்ளிட்ட சமூக ...

Read More »

எங்கள் அனைவருக்கும் பெருமைக்குரிய தருணம் சகோதரா

எங்கள் அனைவருக்கும் பெருமைக்குரிய தருணம் சகோதரா என்று நடராஜனுக்கு சிவகார்த்திகேயன் வாழ்த்து தெரிவித்துள்ளார். ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 3-வது ஒருநாள் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றுள்ளது. 3 போட்டிகள் கொண்ட இந்தத் தொடரில் இந்தியா முதல் இரண்டு போட்டிகளில் ஏற்கெனவே தோற்று தொடரை இழந்துவிட்ட நிலையில், இது ஆறுதல் வெற்றியாக அமைந்துள்ளது. இந்தப் போட்டியில் எதிர்பார்த்தது போலவே தமிழக வீரர் நடராஜன் இடம்பெற்றார். அவரது முதல் சர்வதேச ஒருநாள் போட்டி என்பதால் ஆட்டம் தொடங்குவதற்கு முன் அணியினர் முன்னிலையில் அவருக்கு வாழ்த்து தெரிவிக்கப்பட்டு, அணியின் ...

Read More »

வெற்றிமாறன் இயக்கத்தில் பாரதிராஜா – சூரி

வெற்றிமாறன் இயக்கத்தில் உருவாகும் படத்தில் பாரதிராஜா – சூரி இருவரும் இணைந்து நடிக்கின்றனர். ‘அசுரன்’ படத்தின் வெற்றிக்குப் பிறகு, வெற்றிமாறன் இயக்கத்தில் உருவாகும் அடுத்த படம் குறித்துப் பல்வேறு தகவல்கள் வெளியாகி வந்தன. சூரி படம், தனுஷ் படம், ‘வாடிவாசல்’ எனப் பல செய்திகள் வெளியாகி வந்த நிலையில், தனது அடுத்த படத்தை முடிவு செய்துவிட்டார் வெற்றிமாறன். இந்தப் படத்தை அவரே தயாரித்து, இயக்கவும் திட்டமிட்டுள்ளார். ஜெயமோகன் எழுதிய ‘துணைவன்’ என்ற சிறுகதையை மையப்படுத்தி இப்படம் உருவாகிறது. இதில் நாயகனாக சூரி நடிக்கவுள்ளார். முக்கியக் ...

Read More »

விஜய் சேதுபதி படப்பிடிப்புக்கு பலத்த காவல் துறை பாதுகாப்பு

கிருஷ்ணகிரி அருகே நடைபெற்று வரும் விஜய் சேதுபதியின் லாபம் படத்தின் படப்பிடிப்பு காவல் துறை  பாதுகாப்புடன் நடைபெற்று வருகிறது. எஸ்.பி.ஜனநாதன் இயக்கத்தில் உருவாகி வரும் படம் லாபம். விஜய் சேதுபதி நாயகனாக நடிக்கும் இப்படத்தில் அவருக்கு ஜோடியாக சுருதிஹாசன் நடிக்கிறார். மேலும் ஜெகபதிபாபு, கலையரசன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். இப்படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு கிருஷ்ணகிரி மாவட்ட சுற்றுவட்டார பகுதிகளில் நடைபெற்று வருகிறது.     படப்பிடிப்பை காண சுற்றுவட்டார பகுதி மக்கள் அதிகளவில் வருவதாக கூறப்பட்டது. அனைவரும் முகக்கவசம் அணிவதில்லை, சமூக இடைவெளியை ...

Read More »

தனுஷை தலைவா என்று அழைத்த பிரபல நடிகை

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருக்கும் தனுசை பிரபல நடிகை தலைவா என்று அழைத்து வருகிறார். தனுஷ் தற்போது பாலிவுட் திரைப்படமான ’அத்ராங்கே’ என்ற படத்தில் நடித்து வருகிறார். அக்ஷய்குமார் முக்கிய வேடத்தில் நடிக்கும் இந்தப் படத்தில் தனுஷ் மற்றும் சாரா அலி கான் ஆகிய இருவரும் ஜோடியாக நடித்து வருகின்றனர். இந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது டெல்லியில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் தனுஷ் மற்றும் சாரா அலிகான் ஜிம்மில் உடற்பயிற்சி செய்யும் வீடியோ ஒன்றை சாரா அலிகான் தன்னுடைய சமூக ...

Read More »

விளம்பரத்தில் நடிக்க மறுத்த லாவண்யா… காரணம் தெரியுமா?

பிரம்மன், மாயவன் படங்களில் நடித்த லாவண்யா, விளம்பரத்தில் நடிக்க மறுத்து இருக்கிறார். சசிகுமார் ஜோடியாகப் பிரம்மன், சந்தீப் கிஷன் ஜோடியாக மாயவன் படங்களில் நடித்தவர் லாவண்யா திரிபாதி. இவர் தெலுங்கில் பல படங்களில் நடித்திருக்கிறார். கவர்ச்சி வேடங்களில் நடிக்காமல் இருந்தவருக்கு பட வாய்ப்புகள் குறைந்து காணப்பட்டது ஒரு கட்டத்துக்கு பிறகு கவர்ச்சி வேடங்களில் நடிக்கச் சம்மதித்தார். லாவண்யா சமூக அக்கறையுடன் தனது பணிகளை மேற்கொள்கிறார். தவிரத் தற்கொலைக்கு எதிராக விழிப்புணர்வு பிரசாரங்களிலும் ஈடுபடுகிறார். சமீபத்தில் இவருக்கு மதுபான நிறுவனம் ஒன்றிடமிருந்து விளம்பரத்தில் நடிக்க வாய்ப்பு ...

Read More »

‘ஜல்லிக்கட்டு’-க்கு ஆஸ்கார் விருது கிடைக்க வாய்ப்பு: செல்வராகவன் கணிப்பு

ஆஸ்கார் விருதுக்கு தேர்வாகி உள்ள ஜல்லிக்கட்டு என்கிற மலையாள படம் விருதை வெல்ல வாய்ப்பு இருப்பதாக இயக்குனர் செல்வராகவன் தெரிவித்துள்ளார். இந்தியா சார்பில் ஆஸ்கார் விருது போட்டிக்கு மலையாள படமான ஜல்லிக்கட்டு தேர்வாகி உள்ளது. இந்த படத்தில் ஆண்டனி வர்கீஸ், செம்பன் வினோத், சாந்தி பாலச்சந்திரன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். லிஜோ ஜோஸ் பெல்லிசேரி இயக்கி உள்ளார். ஒரு மலை கிராமத்தில் இருந்து கசாப்பு கடைக்கு கொண்டு வரப்பட்ட எருமை மாடு வெட்டப்படுவதற்கு முன்னால் தப்பித்து விடுகிறது. அந்த மாட்டை பிடித்தே தீர வேண்டும் என்று ...

Read More »

‘என் பெயர் ஆனந்தன்’ பட புரமோஷனுக்கு வர மறுக்கும் அதுல்யா

‘என் பெயர் ஆனந்தன்’ படத்தின் புரமோஷன் நிகழ்ச்சிகளில், நடிகை அதுல்யா ரவி ஆர்வம் காட்டவில்லை என்று படக்குழுவினர் தெரிவித்துள்ளனர். வரும் நவ-27ஆம் தேதி, திரையரங்குகளில் வெளியாக இருக்கும் படம் ‘என் பெயர் ஆனந்தன்’. ஸ்ரீதர் வெங்கடேசன் இயக்கியுள்ள இந்தப்படத்தில் சந்தோஷ் பிரதாப் கதாநாயகனாகவும் அதுல்யா ரவி கதாநாயகியாகவும் நடித்துள்ளனர். சர்வதேச திரைப்பட விழாக்களில் கலந்துகொண்டு நான்கு முறை சிறந்த படத்திற்கான விருதுகளை வென்றுள்ள இந்தப்படத்தின் புரமோஷன் நிகழ்ச்சிகளில், நாயகி அதுல்யா ரவி பெரிய அளவில் ஆர்வம் காட்டவில்லை என்று ஒரு தகவல் வெளியானது. இதுகுறித்து ...

Read More »

இந்தியாவின் பெருமை சூர்யா…

முன்னணி நடிகராக இருக்கும் சூர்யா இந்தியாவின் பெருமை என்று சமூக வலைத்தளத்தில் அவரது ரசிகர்கள் கொண்டாடி வருகிறார்கள். இயக்குநர் சுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யா நடிப்பில் வெளியான சூரரைப் போற்று திரைப்படம் இந்த ஆண்டு வெளியான இந்திய திரைப்படங்களிலேயே சிறந்த படம் என ரசிகர்கள் மற்றும் பொதுமக்கள் பாராட்டி வருகின்றனர். இந்நிலையில் இந்தியாவின் பெருமை சூர்யா என்றும் 2020ம் ஆண்டின் சிறந்த படம் சூரரைப் போற்று என்றும் சூர்யா ரசிகர்கள் #PrideOfIndianCinemaSURIYA என்ற ஹாஷ்டேக்கை டிரெண்ட் செய்து வருகின்றனர். சூர்யாவின் சூரரைப் போற்று தமிழில் ...

Read More »

அனுஷ்கா எடுத்த திடீர் முடிவு

தமிழ், தெலுங்கு மொழிகளில் நடித்து பிரபலமான நடிகை அனுஷ்கா திடீர் முடிவு ஒன்றை எடுத்துள்ளார். தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகைகளுள் முக்கியமானவர் அனுஷ்கா. அருந்ததி, இஞ்சி இடுப்பழகி, பாகமதி போன்ற படங்களில் தன்னுடைய கம்பீரமான நடிப்பால் ரசிகர்கள் நீங்கா இடம் பிடித்தவர் அனுஷ்கா. பாகுபலி படத்தின் மூலம் தேவசேனாவாய் உலகளாவிய பெருமையைப் பெற்றார். தற்போது அனுஷ்கா பெண் மையக் கதாபாத்திரங்களில் கொண்ட படங்களில் நடிக்க ஆர்வம் காட்டுவதில்லை. காரணம் கடைசியாக அனுஷ்கா நடிப்பில் வெளியான சைலன்ஸ் படமும் சரியான வரவேற்பைப் பெறவில்லை. தற்போது வரை ...

Read More »