திரைமுரசு

ஹரிவராசனம் பாடலை யேசுதாஸ் திருத்தி பாடினால் ஒலிபரப்ப தயார்

அய்யப்பனுக்கு இரவில் பாடப்படும் ஹரிவராசனம் பாடலில் தவறு இருப்பதால், அந்த தவறை திருத்தி மீண்டும் யேசுதாஸ் பாடினால் சபரிமலையில் ஒலிபரப்ப தயாராக உள்ளதாக தந்திரி கூறி உள்ளார்.கேரளாவில் உள்ள பிரசித்திப் பெற்ற சபரிமலை அய்யப்பன் கோவிலில் வருகிற 26-ந்தேதி மண்டல பூஜை நடக்கிறது. அய்யப்பனை தரிசிக்க நாடு முழுவதிலும் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் தினமும் சபரிமலை வந்த வண்ணம் உள்ளனர். சன்னிதானத்தில் 18-ம் படி ஏற மணிக்கணக்கில் காத்திருக்கிறார்கள்.ஒவ்வொரு நாளும் இரவு 11 மணிக்கு நடை அடைக்கப்படுகிறது. அப்போது அய்யப்பனை தூங்க வைக்க ஹரிவராசனம் ...

Read More »

வினோத் – கார்த்தி- ‘தீரன் அதிகாரம் ஒன்று’

வினோத் இயக்கத்தில் கார்த்தி நடிக்கவிருக்கும் படத்துக்கு ‘தீரன் அதிகாரம் ஒன்று’ என தலைப்பிட்டு இருக்கிறார்கள். மணிரத்னம் இயக்கத்தில் கார்த்தி, அதிதி ராவ் நடிப்பில் உருவாகி வரும் ‘காற்று வெளியிடை’ படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. மெட்ராஸ் டாக்கீஸ் தயாரித்து வரும் இப்படத்துக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்து வருகிறார். இப்படத்தைத் தொடர்ந்து வினோத் இயக்கத்தில் உருவாகும் படத்துக்கு தேதிகள் ஒதுக்கினார் கார்த்தி. ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரிக்கவுள்ள இப்படத்தின் நாயகியாக ராகுல் ப்ரீத் சிங் ஒப்பந்தமாக்யுள்ளார். ‘மாயா’ ஒளிப்பதிவாளர் சத்யா ஒளிப்பதிவு செய்யவிருக்கும் இப்படத்துக்கு திலீப் ...

Read More »

உன்னிகிருஷ்ணனிடம் ரூ.1½ லட்சம் கொள்ளை!

பிரபல சினிமா பின்னணிப்பாடகர் உன்னி கிருஷ்ணனின் கிரெடிட் கார்டை தவறாக பயன்படுத்தி ரூ.1½ லட்சம் சுருட்டப்பட்டுள்ளது. பிரபல சினிமா பின்னணிப்பாடகர் உன்னிகிருஷ்ணன் சென்னை ராயப்பேட்டை ‘வெஸ்ட்காட்’ சாலையில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசிக்கிறார். இவரிடம் சர்வதேச அளவில் பயன்படுத்தும் கிரெடிட் கார்டு உள்ளது. அந்த கிரெடிட் கார்டை தவறாகப்பயன்படுத்தி யாரோ மர்மநபர்கள் ரூ.1½ லட்சம் பணத்தை சுருட்டிவிட்டனர். பணம் எடுக்கப்பட்ட தகவல் செல்போன் எஸ்.எம்.எஸ். மூலம் உன்னிகிருஷ்ணனுக்கு தெரிவிக்கப்பட்டது. இதைப்பார்த்த அவர் அதிர்ச்சியடைந்தார். உடனடியாக அவர் அண்ணாசாலை போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். மேலும் ...

Read More »

ரஜினிகாந்துடன் நடிக்க ஆர்வமாக இருக்கிறேன்-அமீர்கான்

ரஜினிகாந்துடன் இணைந்து நடிக்க ஆர்வமாக இருப்பதாக நடிகர் அமீர்கான் கூறியுள்ளார்.இந்தி நடிகர் அமீர்கான் ஐதராபாத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- “எனது படங்கள் வசூல் குவிப்பதாகவும், நல்ல கதைகள் எனக்கு அமைவதாகவும் பலரும் பேசுகிறார்கள். நான் கதை தேர்வில் கவனமாக இருக்கிறேன். டைரக்டர்கள் கதை சொல்லும்போது ஒரு ரசிகன் மாதிரி கேட்பேன். எனக்குள் இருக்கும் அந்த ரசிகனை கதை திருப்தி செய்தால் உடனே நடிக்க ஒப்புக்கொள்வேன். அதுமட்டுமன்றி டைரக்டர்களும் என்னை மனதில் வைத்து கதை எழுதுகிறார்கள். அதனால்தான் நல்ல படங்கள் அமைகின்றன. ...

Read More »

பாடகி அனுராதா ஸ்ரீராம் இசையமைப்பாளர் ஆனார்

பிரபல பின்னணி பாடகி அனுராதா ஸ்ரீராம் இசையமைப்பாளராக உருவாகியிருக்கிறார். தனது தனித்துவமான குரல் வளத்தை கொண்டு இசை பிரியர்களின் உள்ளங்களை தன் பாடல்களால் வென்று இருப்பவர் அனுராதா ஸ்ரீராம். ‘இனி அச்சம் அச்சம் இல்லை’… ‘அன்பென்ற மழையிலே’… ‘கருப்புதான் எனக்கு பிடிச்ச கலரு’ என பல பாடல்களுக்கு அனுராதா ஸ்ரீராமின் குரல் உயிர் மூச்சாக இருந்துள்ளது என்று சொன்னால் அது மிகையாகாது. இவர் தற்போது இசையமைப்பாளராக மாறியிருக்கிறார். ‘மனசு’, ‘விருப்பம்’ என இரண்டு பாடல்களையும் எழுதி, அவரே இசையமைத்து, அதை மதன் கார்க்கியின் ‘டூப்பாடூ’ ...

Read More »

விஷாலுக்கு வில்லனான பாக்யராஜ்

நடிகர் விஷாலுக்கு வில்லனாக பிரபல இயக்குனர் கே.பாக்யராஜ் ஒப்பந்தம் செய்யப்பட்டிருக்கிறார். தான் இயக்கும் படங்களில் வில்லனுக்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பது இயக்குனர் மிஷ்கின் வழக்கம். ஏற்கனவே தான் இயக்கிய ‘அஞ்சாதே’ படத்தில் பிரசன்னாவை வில்லனாக்கி அழகு பார்த்தார். அந்த வரிசையில் விஷாலை வைத்து தான் இயக்கும் ‘துப்பறிவாளன்’ படத்தில் இயக்குனர் கே.பாக்யராஜை வில்லனாக்கியிருக்கிறார். கதாநாயகனாக நடித்து வந்த இயக்குனர் கே.பாக்யராஜ் சமீப காலமாக குணச்சித்திர வேடங்களிலும் நடித்து வருகிறார். இந்நிலையில் விஷாலுக்கு வில்லனாக நடிக்க பாக்யராஜ் ஒப்புக்கொண்டது பலருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. பாக்யராஜ் வில்லனாக ...

Read More »

மோசடி வழக்கில் மலையாள நடிகை, கணவர் கைது

ரியல் எஸ்டேட் மோசடி வழக்கில் பிரபல மலையாள நடிகை தன்யா மேரி வர்கீஷ் அவரது கணவர் ஆகியோரை போலீசார் கைது செய்தனர். பிரபல மலையாள நடிகை தன்யா மேரி வர்கீஸ். தலப்பாவு, கேரளா கபே, நாயகன், ரெட் சில்லீஸ், பிரணாயம் உள்ளிட்ட பல்வேறு மலையாள படங்களில் நடித்துள்ள அவர், திருடி, வீரமும் ஈரமும் ஆகிய தமிழ் படங்களில் நாயகியாக நடித்துள்ளார். இது தவிர விளம்பர படங்களிலும் நடித்து உள்ளார். இவர் கடந்த 2012–ம் ஆண்டு ஜனவரி மாதம் ஜான் ஜேக்கப் என்பவரை திருமணம் செய்து ...

Read More »

புயலால் சாய்ந்த மரங்களை மீண்டும் நட்டு வளர்க்க முதல்வரிடம் கோரிக்கை

புயலால் சாய்ந்த மரங்களை மீண்டும் நட்டு வளர்க்க முதல்வரிடம் விவேக் கோரிக்கை விடுத்துள்ளார். நடிகர் விவேக் கிரீன் கலாம் என்ற பெயரில் நாடு முழுவதும் லட்சக்கணக்கான மரங்களை நட்டு வருகிறார். இவருடைய இலக்கு 1 கோடி மரங்களை தமிழகத்தில் நடவேண்டும் என்பதுதான். அந்த இலக்கை நோக்கி பயணித்துக் கொண்டிருக்கும் வேளையில் சமீபத்தில் சென்னையை தாக்கிய வர்தா புயல் ஏகப்பட்ட மரங்களை வேரோடு சாய்த்துள்ளது. பசுமையை இழந்து தவிக்கும் சென்னையை மீண்டும் பசுமையாக்குவதற்கு பலரும் பல்வேறு முயற்சிகளை எடுத்துவரும் நிலையில், விவேக் இன்று இதுதொடர்பாக சென்னை ...

Read More »

2016 கூகுள் தேடலில் நடிகை பிரியங்கா சோப்ரா முதலிடம்

2016-ம் ஆண்டு கூகுளில் அதிகம் தேடப்பட்டவர்கள் பட்டியலில் இந்திய நடிகை பிரியங்கா சோப்ரா முதலிடம் பெற்றுள்ளார். பிரபல பாலிவுட் நடிகைகளில் ஒருவரான பிரியங்கா சோப்ரா, குவாண்டிகோ என்னும் ஹாலிவுட் சீரியலின் மூலம் உலகளவில் புகழ் பெற்றார். தொடர்ந்து ஆஸ்கர் விருது விழாவில் விருது வழங்கும் நபர்களில் ஒருவராக பிரியங்கா சோப்ரா இடம் பெற்றது உலகளாவிய அவரது புகழை மேலும் அதிகப்படுத்தியது. ஹாலிவுட் நடிகர் டுவைன் ஜான்சன் ஜோடியாக பிரியங்கா நடித்திருக்கும் ‘பே வாட்ச்’ திரைப்படம் அடுத்த ஆண்டு மார்ச் மாதம் வெளியாகவுள்ளது. இதுதவிர ஐக்கிய ...

Read More »

உலகப்பட விழாவில் தேசிய கீதத்துக்கு அவமதிப்பு

கேரள மாநிலத்தில் நடைபெற்றுவரும் உலகப்பட விழாவில் திரைப்படம் போடுவதற்கு முன்னர் தேசியகீதம் இசைக்கப்பட்டபோது எழுந்துநின்று மரியாதை செலுத்த மறுத்த 6 பேரை காவல் துறையினர் கைது செய்துள்ளனர். உச்ச நீதிமன்ற  உத்தரவுப்படி நாடு முழுவதும் உள்ள சினிமா தியேட்டர்களில் திரைப்படம் போடுவதற்கு முன்னால் தேசிய கீதம் இசைக்கப்பட வேண்டும் என்ற நடைமுறை தற்போது கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், கேரள மாநில தலைநகரான திருவனந்தபுரத்தில் தற்போது சர்வதேச திரைப்பட விழா நடைபெற்று வருகிறது. கன்னாகக்குன்னு நிஷாகாந்தி திறந்தவெளி திரையரங்கத்தில் நேற்று தேசிய கீதம் இசைக்கப்பட்டபோது, அங்கிருந்த ...

Read More »