திரைமுரசு

பீட்டா அளித்த விருதை அவமானமாகக் கருதுகிறேன்

பீட்டா அளித்த விருதை பெரும் அவமானமாகக் கருதுகிறேன். அதற்காக மிகவும் வருந்துகிறேன் என்று தனுஷ் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் ஜல்லிக்கட்டு நடைபெற வேண்டும் பல்வேறு ஊர்களில் போராட்டம் நடைபெற்று வருகிறது. இதற்காக இளைஞர்கள் நடத்தி வரும் போராட்டம் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. திரையுலக பிரபலங்கள் பலரும் இப்போராட்டத்துக்கு தங்களுடைய முழு ஆதரவையும் தெரிவித்து வருகிறார்கள். இளைஞர்களின் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து தனுஷ் விடுத்துள்ள அறிக்கையில், “மூவாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட சிந்து சமவெளி நாகரிகத்தில் காளையும் மனிதனும் இணைந்தே உழைத்ததை அறிய முடிகிறது. இதை உணர்ந்துதான் இந்திய அரசு, ...

Read More »

லாரன்ஸ் மருத்துவமனையில் அனுமதி

உடல்நலக் குறைவிலும் மெரினாவில் நடைபெற்று வரும் ஆர்ப்பாட்டத்தில் பங்குபெற்று வந்த நடிகர் லாரன்ஸ் மருத்துவமனையில்ம அனுமதிக்கப்பட்டுள்ளார். மதுரை மாவட்டம், அலங்காநல்லூரில் இரண்டு நாட்களாக போராட்டம் நடந்து வருகிறது. சென்னையில் கடந்த 17-ம் திகதி முதல் போராட்டம் நடைபெற்று வருகிறது. கடந்த 4 நாட்களாக இளைஞர்கள், மாணவர்கள், பொதுமக்கள் இந்த போராட்டத்தை நடத்தி வருகின்றனர். இவர்களின் போராட்டத்துக்கு நடிகர்கள் மற்றும் பல்வேறு தரப்பினர் ஆதரவு தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில், நடிகர் ராகவா லாரன்ஸ் கடந்த 18-ம் திகதி காலை ஜல்லிக்கட்டு போராட்டம் நடைபெறும் மெரினாவுக்கு ...

Read More »

ஜல்லிக்கட்டை நடத்த பார்த்திபன் கூறும் புதிய யோசனை!

ஜல்லிக்கட்டை தமிழகத்தில் நடத்துவதற்கு நடிகர் பார்த்திபன் புதிய யோசனை ஒன்றை தெரிவித்துள்ளார். தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டான ஜல்லிக்கட்டுக்கு உச்சநீதிமன்றம் தடை விதித்துள்ளது. இந்நிலையில், ஜல்லிக்கட்டை நடத்த அனுமதிக்கவேண்டும் என்று தமிழகத்தில் இளைஞர்களும், மாணவர்களும் போராட்டக்களத்தில் இறங்கியுள்ளனர். இளைஞர்களின் போராட்டம் தீவிரமடைந்துள்ள நிலையில், தற்போது அவர்களுக்கு ஆதரவாக பல்வேறு தரப்பினரும் களத்தில் இறங்கியுள்ளனர். இந்நிலையில், நடிகர் பார்த்திபன் ஜல்லிக்கட்டை தமிழகத்தில் நடத்துவதற்கு புதிய யோசனை ஒன்றை தெரிவித்துள்ளார். அவர் கூறும் யோசனையாவது, பஞ்சாயத்து ராஜ் சட்டத்தின் கீழ் ஊராட்சிகள் தோறும் பொது கிராம சபையில் சிறப்பு ...

Read More »

மணிரத்னம் படத்தில் நடிக்க மாட்டேம்ப்பா – பார்த்திபன் மகள்

தனது மகள் கீர்த்தனா மணிரத்னத்தின் இரண்டு படங்களில் ஹீரோயினாக நடிக்கும் வாய்ப்பு வந்தும் ஏற்க மறுத்ததாக நடிகர் பார்த்திபன் தெரிவித்துள்ளார். இயக்குனரும், நடிகருமான பார்த்திபனின் மகள் கீர்த்தனா இயக்குனர் மணிரத்னத்தின் கன்னத்தில் முத்தமிட்டால் படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார். முதல் படத்திலேயே தனது நடிப்பால் அனைவரையும் கவர்ந்துவிட்டார் கீர்த்தனா. மணிரத்னத்தின் எந்தெந்த படங்களை கீர்த்தனா நிராகரித்தார் என்பதை பார்த்திபன் தெரிவிக்கவில்லை. மணியின் படத்தை கீர்த்தனா நிராகரித்ததற்கு முக்கிய காரணம் உள்ளது. கீர்த்தனாவுக்கு மணியின் படத்தில் நடிக்க விருப்பம் இல்லையாம். மணிரத்னமாக ஆக வேண்டும் என்பதே ...

Read More »

விவசாயத்திற்கான விழிப்புணர்வை ஏற்படுத்த தயாரிப்பாளர் எடுத்த திடீர் முடிவு

விவசாயத்திற்கான விழிப்புணர்வை ஏற்படுத்த பிரபல தயாரிப்பாளரான சி.வி.குமார் திடீர் முடிவு எடுத்துள்ளார். ‘அட்டக்கத்தி’, ‘பீட்சா’, ‘சூது கவ்வும்’, ‘இறுதிச்சுற்று’ உள்ளிட்ட வெற்றிப்படங்களை தயாரித்தவர் சி.வி.குமார். திருக்குமரன் எண்டர்டெயின்மெண்ட் என்ற தனது நிறுவனம் மூலம் பல வெற்றிப் படங்களை கொடுத்த பெருமை இவருக்கு உண்டு. அதேநேரத்தில் பல வெற்றி இயக்குனர்களையும் அறிமுகப்படுத்தியவர் என்ற பெருமையும் இவருக்கு உண்டு. இந்நிலையில், தற்போது சி.வி.குமார் இயக்குனராகவும் மாறியுள்ளார். ‘மாயவன்’ என்ற படத்தை இயக்கி வரும் சி.வி.குமார் தமிழகத்தில் விவசாயிகள் படும் கடும் துன்பங்களை கண்டு ஒரு புதிய முடிவை ...

Read More »

பீட்டாவில் த்ரிஷா இல்லை: தாயார் உமா விளக்கம்

ஜல்லிக்கட்டிற்கு எதிரான எந்த கருத்தையும் த்ரிஷா தெரிவிக்கவில்லை எனவும் பீட்டா அமைப்பிலும் அவர் இல்லை எனவும் த்ரிஷா தாயார் உமா விளக்கம் அளித்துள்ளார். ஜல்லிக்கட்டு தடைக்குக் காரணமான பீட்டா அமைப்புக்கு ஆதரவாக நடிகை த்ரிஷா செயல்பட்டு வருவதாக அவருக்கு எதிராக இணையத்தில் கண்டனக் குரல்கள் எழுந்தன. சமூக வலைத்தளங்களிலும் அவருக்கு எதிரான மீம்ஸ்-கள் பரப்பப்பட்டு வந்தன. இதனால் தனது டுவிட்டர் பக்கத்தில் இருந்து த்ரிஷா தற்காலிகமாக வெளியேறினார். மேலும் ஜல்லிக்கட்டுக்குத்தான் எதிரானவள் இல்லை எனவும், பிறப்பால் ஒரு தமிழச்சி என்றும் அதில் தான் பெருமை ...

Read More »

25 வருடங்கள் கழித்து மலையாள திரையுலகில் மீண்டும் நுழையும் ஏ.ஆர்.ரகுமான்..!

ஏ.ஆர்.ரஹ்மான் யோதா என்ற ஒரே ஒரு மலையாளப்படத்திற்கு மட்டும்தான் இசையமைத்திருக்கிறார். 1992ல் வெளியான இந்தப்படத்தில் மோகன்லால், மதுபாலா நடிக்க, சங்கீத்சிவன் இந்தப்படத்தை இயக்கியிருந்தார். அப்போதுதான் தமிழில் ரோஜா படத்திற்கு இசையமைத்ததின் மூலம் பிரபலமாகியிருந்த ஏ.ஆர்.ரஹ்மானுக்கு மலையாளத்தில் இருந்து மோகன்லால் படத்திற்கு இசையமைக்கும் வாய்ப்பு வரவே அதை உடனே ஏற்றுக்கொண்டார். ஆனால் அதன்பின் இந்த 25 வருடங்களில் மற்றொரு மலையாள படத்துக்கு அவர் இதுவரை இசையமைக்கவே இல்லை. ஆனால் இப்போது மீண்டும் மலையாள படத்திற்கு இசையமைப்பாளர் என்கிற பேச்சு மலையாள திரையுலகில் அடிபட்டு வருகிறது. மோகன்லால் ...

Read More »

‘ராவணன்’ படப் பாடலுக்கு மறுவடிவம் தந்த சுருதி ஹாசன்

மணி ரத்தினம் இயக்கத்தில் முன்னர் வெளியான ‘ராவணன்’ இந்திப் படத்தில் இடம்பெற்ற ’ரஞ்சா, ரஞ்சா’ என்ற பாடலுக்கு நடிகை ஷ்ருதி ஹாசன் தற்போது மறுவடிவம் தந்து பாடியுள்ளார். மணி ரத்தினம் இயக்கத்தில் முன்னர் வெளியான ‘ராவணன்’ இந்திப் படத்தில் இடம்பெற்ற ’ரஞ்சா, ரஞ்சா’ என்ற பாடலுக்கு நடிகை சுருதி ஹாசன் தற்போது மறுவடிவம் தந்து பாடியுள்ளார். எம்.டி.வி. தயாரித்துள்ள ’ராயல் ஸ்டாக் பேரல் சீசன் சிக்ஸ்’ இசை நிகழ்ச்சிக்காக இசைப்புயல் ஏ.ஆர். ரஹ்மான் இசையில் இந்தப் பாடலை பாடிய அனுபவம் தொடர்பாக சுருதி ஹாசன் ...

Read More »

தமிழர்களின் கலாச்சாரத்தில் கைவைக்கக் கூடாது- ரஜினிகாந்த்

தமிழகத்தில் ஜல்லிக்கட்டு நடத்த வேண்டும் என்று பலரும் போராட்டம் நடத்தி வரும் நிலையில் தமிழர்களின் கலாச்சாரத்தில் கைவைக்கக் கூடாது என சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் ஜல்லிக்கட்டு நடத்த வேண்டும் என்று பலரும் போராட்டம் நடத்தி வரும் நிலையில்  தமிழர்களின் கலாச்சாரத்தில் கைவைக்கக் கூடாது என சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார். சென்னையில் நேற்று நடந்த ஒரு விழாவில், ரஜினி, விஜய் என பலரும் கலந்து கொண்டனர். அப்போது ஜல்லிக்கட்டு மீதான தடை குறித்து ரஜினி கூறுகையில், ஜல்லிக்கட்டு தமிழர்களின் கலாச்சாரம், கலாச்சாரத்தில் ...

Read More »

தமிழ் பெண்ணாக மாறிவிட்டேன்: பார்வதி நாயர்

‘கோடிட்ட இடங்களை நிரப்புக’ பட நாயகி பார்வதி நாயர் தான் தமிழ் பெண்ணாக மாறிவிட்டேன் என்று கூறியுள்ளார். என்னை அறிந்தால்’ படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானவர் பார்வதிநாயர். இவர் நாளை வெளியாகும் ‘கோடிட்ட இடங்களை  நிரப்புக’ படத்தில் நடித்திருக்கிறார். பார்த்திபன் இயக்கி இருக்கும் இந்த படத்தில் சாந்தனுவுடன் நடித்த அனுவம்பற்றி கூறிய பார்வதி நாயர்… “இந்த படத்தில் ‘மோகினி’ என்ற மலையாள பெண் கதாபாத்திரத்தில் எந்த வித ஒப்பனையும் இல்லாமல் நடித்து இருக்கிறேன்.  பார்த்திபன் சார் எனக்கு மிகுந்த நம்பிக்கை அளித்து, என்னுள் இருக்கும் ...

Read More »