25 வருடங்கள் கழித்து மலையாள திரையுலகில் மீண்டும் நுழையும் ஏ.ஆர்.ரகுமான்..!

ஏ.ஆர்.ரஹ்மான் யோதா என்ற ஒரே ஒரு மலையாளப்படத்திற்கு மட்டும்தான் இசையமைத்திருக்கிறார். 1992ல் வெளியான இந்தப்படத்தில் மோகன்லால், மதுபாலா நடிக்க, சங்கீத்சிவன் இந்தப்படத்தை இயக்கியிருந்தார்.

அப்போதுதான் தமிழில் ரோஜா படத்திற்கு இசையமைத்ததின் மூலம் பிரபலமாகியிருந்த ஏ.ஆர்.ரஹ்மானுக்கு மலையாளத்தில் இருந்து மோகன்லால் படத்திற்கு இசையமைக்கும் வாய்ப்பு வரவே அதை உடனே ஏற்றுக்கொண்டார்.

ஆனால் அதன்பின் இந்த 25 வருடங்களில் மற்றொரு மலையாள படத்துக்கு அவர் இதுவரை இசையமைக்கவே இல்லை. ஆனால் இப்போது மீண்டும் மலையாள படத்திற்கு இசையமைப்பாளர் என்கிற பேச்சு மலையாள திரையுலகில் அடிபட்டு வருகிறது.

மோகன்லால் நடிப்பில் எம்.டி.வாசுதேவன் நாயர் இயக்கத்தில் உருவாகவுள்ள ரந்தமூலம்  என்கிற சரித்திரப்படத்திற்கு பின்னணி இசையமைக்க ஏ.ஆர்.ரகுமானுடன் பேச்சு வார்த்தை நடத்தி வருகிறார்களாம்.