திரைமுரசு

விருதுக்கு தேர்வான ‘ஒரு நாள் கூத்து’

லாஸ் ஏஞ்சல்ஸ் சினிஃபெஸ்ட் விருதின் இறுதி சுற்றுக்கு ஒரு நாள் கூத்து திரைப்படம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. நிவேதா பெதுராஜ், மியா ஜார்ஜ், ரித்விகா, தினேஷ், ரமேஷ் திலக் ஆகியோர் நடித்துள்ள ஒரு நாள் கூத்து கடந்த வருடம் ஜூன் மாதம் வெளியானது. அறிமுக இயக்குநர் நெல்சன் வெங்கடேசன் இயக்கத்தில் வெளிவந்த இப்படம் லாஸ் ஏஞ்சல்ஸ் சினிஃபெஸ்ட் விருதுக்கான இறுதி சுற்றுக்குதேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. திருமணம் குறித்த இன்றைய இளைஞர்களின் பார்வை மற்றும் திருமணத்தில் இருக்கும் சிக்கல்களை எடுத்துக் கூறியிருக்கும், இப்படத்தின் கதை மட்டுமல்லாது பாடல்களும் ரசிகர்கள் மத்தியில் ...

Read More »

வடசென்னை பெண்ணாக நடிக்கும் தமன்னா

விக்ரம் படத்தில் நடிக்கும் தமன்னா, அப்படத்தில் வடசென்னை பெண்ணாக நடிப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளது. விக்ரம் – தமன்னா நடிக்கும் புதிய படம் வடசென்னை கதை களத்தில் உருவாகி வருகிறது. இதில் வடசென்னை குப்பத்து பெண்ணாக தமன்னா நடிக்கிறார். இந்த படத்தின் கதையை கேட்டு அதில் ஒன்றி விட்டார். இதன் கிளைமாக்சை கேட்டு அவர் கண்கலங்கி விட்டார் என்று படக்குழுவினர் தெரிவித்தனர். வழக்கமாக கவர்ச்சி நாயகியாக வரும் தமன்னா, இந்த படத்தில் எந்தவித ஆடம்பரமும் இல்லாத அழுத்தமான கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இதுபற்றி கூறிய அவர், “பாகுபலி ...

Read More »

விண்வெளி பயணம் மேற்கொள்ளும் ஜெயம் ரவி!

தனது அடுத்த படத்திற்காக 45 நாட்கள் பயணமாக விண்வெளிக்கு ஜெயம் ரவி பயணம் மேற்கொள்கிறார். ஜெயம் ரவி நடிப்பில் சமீபத்தில் வெளியான `போகன்’ ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. அதனைத்தொடர்ந்து  ஜெயம் ரவி இயக்குநர் விஜய் இயக்கத்தில் `வனமகன்’ படத்திலும், சக்தி சவுந்தர் ராஜன் இயக்கத்தில் `டிக் டிக் டிக்’ படத்திலும்  நடித்து வருகிறார். முழுக்க முழுக்க காடுகளில் படமாக்கப்பட்டுள்ள `வனமகன்’ படத்தின் இறுகட்ட படப்பிடிப்பு நேற்றுடன்  முடிந்தது. அதன்தொடர்ச்சியாக ஜெயம் ரவி `டிக் டிக் டிக்’ படத்தின் அடுத்த கட்ட படப்பிடிப்பில் கலந்து ...

Read More »

இயக்குநராக அவதாரம் எடுக்கும் காயத்ரி ரகுராம்

`யாதுமாகி நின்றால்’ என்ற படத்தின் மூலம் நடன இயக்குநரும், நடிகையுமான காயத்ரி ரகுராம் இயக்குநராக அவதாரம் எடுக்க உள்ளார். பிரபல நடன இயக்குநர் ரகுராம் மாஸ்டரின் மகளான காயத்ரி ரகுராம் இயக்குநராக அவதாரம் எடுக்க உள்ளார். தமிழ்  சினிமாவில் நடிகையாக அறிமுகமான காயத்ரி ரகுராம் பின்னர் நடன இயக்குநராக தனது துறையை மாற்றிக் கொண்டார்.  எனினும் அவ்வப்போது படங்களிலும் நடித்து வருகிறார். இந்நிலையில், தற்போது `யாதுமாகி நின்றால்’ என்ற படத்தின் மூலம்  இயக்குநராக அவதாரம் எடுக்கிறார். ஒரு பெண் தன் அன்றாட வாழ்வில் சந்திக்கும் ...

Read More »

‘‘என் மனதுக்கு பிடித்தவரை சந்தித்து விட்டேன்’’ நடிகை அஞ்சலி பேட்டி

‘‘என் மனதுக்கு பிடித்தவரை சந்தித்து விட்டேன்’’ என்று நடிகை அஞ்சலி கூறினார். நடிகை அஞ்சலி ஐதராபாத்தில் அளித்த பேட்டி விவரம் வருமாறு:– சச்சரவுகள்கேள்வி:– சித்தி தகராறு உள்ளிட்ட குடும்ப சச்சரவுகளில் இருந்து மீண்டு விட்டீர்களா? பதில்:– எந்த வீட்டில் பிரச்சினை இல்லை. சிறுசிறு சண்டை, கருத்து மோதல்கள் எல்லா குடும்பத்திலுமே இருக்கிறது. ஆனால் அவை நிரந்தரம் இல்லை. நடந்ததை நினைத்து வருத்தப்படாமல் வாழ்க்கையை நகர்த்துவதில்தான் சந்தோ‌ஷம் இருக்கிறது. நான் இப்போது பழைய வி‌ஷயங்களை மறந்து விட்டு உற்சாகமாக இருக்கிறேன். கேள்வி:– நீங்கள் ஒருவரிடம் இருந்து ...

Read More »

ரூ. 2 கோடி வீட்டை பரிசாக கொடுத்த கங்கனா ரனாவத்

இந்தி பட உலகின் முன்னணி நடிகையான கங்கனா ரனாவத் ரூ. 2 கோடி வீட்டை பரிசாக கொடுத்துள்ளார். இந்தி பட உலகின் முன்னணி நடிகை கங்கனா ரனாவத். இவரை மிகவும் கவர்ந்தவர் யோகா குரு சூர்ய நாராயண் சிங். கங்கனா  ரனாவத் நடிக்க வரும் முன்பு அவரது 18-வது வயதில் மும்பையில் உள்ள ஜுஹூ கடற்கரைக்கு சென்றார். அப்போது, அங்கு யோகா  செய்து கொண்டிருந்த சூர்ய நாராயண்சிங்கை பார்த்து வியப்பு அடைந்தார். பின்னர் அவரை சந்தித்து தனக்கு யோகா கற்றுத்தரும்படி கங்கனா கேட்க, அதில் ...

Read More »

காஷ்மீர் படத்தில் காஷ்மீர் பொண்ணு

மணிரத்னம் இயக்கி வரும் படம் காற்று வெளியிடை. இதில் கார்த்தி, அதிதிராவ், ஆர்.ஜே.பாலாஜி, விபின் சர்மா உள்பட பலர் நடிக்கிறார்கள். இதில் இரண்டாவது நாயகியாக நடிக்கிறார் கன்னட படமான யூடேர்ன் படத்தில் நடித்த ஸ்ரத்தா ஸ்ரீநாத். கார்த்தியை ஒரு தலையாக காதலிக்கும் கேரக்டர் என்கிறார்கள். இந்தப் படத்தின் கதை காஷ்மீரில் நடக்கிறது. அதிதியும், கார்த்தியும் தமிழ்நாட்டை சேர்ந்தவர்களாக நடிக்கிறார்கள். இதில் காஷ்மீரைச் சேர்ந்த ஒரு பெண் கேரக்டர் இருக்கிறது. இதில் நடிக்க காஷ்மீரில் பிறந்த வளர்ந்த பெண்ணாக இருந்தால் நன்றாக இருக்கும் என்ற கருதிய ...

Read More »

சிங்கம்-3 படத்தின் ஒரு சில காட்சிகளை வெளியிட்ட இணைய தளம் முடக்கப்பட்டது

சிங்கம்-3 படத்தின் ஒரு சில காட்சிகளை ‘லைவ்’ ஆக பேஸ்புக்கில் வெளியிட்ட இணைய தளம் முடக்கப்பட்டது. ஸ்டுடியோ கிரீன் ஞானவேல் ராஜா தயாரித்துள்ள படம்‘சி-3’. ஹரி இயக்கத்தில் சூர்யா நடித்திருக்கும் இந்த படத்தை இணைய தளத்தில் வெளியாகாமல் தடுக்க பல்வேறு முயற்சிகள் எடுக்கப்பட்டன. கோர்ட்டும் இந்த படத்தை இணையத்தில் வெளியிட தடைவிதித்துள்ளது. சூர்யா அவரது ரசிகர்களுக்கு தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்ட வேண்டுகோளில், ‘சி-3’படம் அனைவரையும் திருப்திப்படுத்தும் என்று நம்புகிறேன். உங்கள் அன்பு ஆசீர்வாதத்துக்கு நன்றி. அனைவரும் தியேட்டருக்கு சென்று இந்த படத்தை பாருங்கள் ...

Read More »

ஓ.பன்னீர்செல்வம் முதல்வராக நடிகர்-நடிகைகள் ஆதரவு

தமிழகத்தின் முதலமைச்சராக வருவதற்கு ஓ.பன்னீர் செல்வத்தை ஆதரித்து நடிகர், நடிகைகள் கருத்து தெரிவித்துள்ளனர். அவர்கள் யார் யார்? தமிழ்நாட்டுக்கு ஓ.பன்னீர்செல்வம் முதல்-அமைச்சராக இருக்க வேண்டுமா? சசிகலா முதல்வராக பதவி ஏற்க வேண்டுமா? என்ற கேள்விகள் மாநிலம் முழுவதும் எதிரொலிக்கின்றன. அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க் கள், எம்.பி.க்கள், கட்சி நிர்வாகிகளில் பெரும்பாலானோர் சசிகலாவுக்கு ஆதரவு அளிப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர்கள் ஓ.பன்னீர்செல்வத்தை எதிர்க்கிறார்கள். கட்சியின் ஒரு சில எம்.எல்.ஏ.க்கள், மதுசூதனன் உள்ளிட்ட மூத்த நிர்வாகிகள், பெரும்பாலான தொண்டர்கள் பன்னீர் செல்வத்தை ஆதரிப்பதாக அந்த தரப்பினர் கூறுகிறார்கள். கலை உலகில் ...

Read More »

தமிழ்நாட்டில் நல்லாட்சி அமையும் என்ற நம்பிக்கை உள்ளது!

தமிழ்நாட்டில் நல்லாட்சி அமையும் என்ற நம்பிக்கை உள்ளது என்று நடிகர் சூர்யா தெரிவித்தார். துபாய் உள்பட அனைத்து இடங்களிலும் நடிகர் சூர்யா நடித்த ‘சிங்கம்-3’ திரைப்படம் நேற்று வெளியானது. துபாயில் ஹயாத் ரீஜென்சியில் உள்ள ஒரு தியேட்டரில் இந்த படம் திரையிடப்பட்டது. இந்த படத்தை பார்ப்பதற்காக நடிகர் சூர்யா நேற்று துபாய் வந்தார். முதல் காட்சியாக இரவு 7 மணி அளவில் திரையிடப்பட்ட ‘சிங்கம்-3’ படத்தை ரசிகர்களோடு அமர்ந்து பார்த்தார். முன்னதாக நடிகர் சூர்யா, நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:- சிங்கம், சிங்கம்-2 படங்கள் ...

Read More »