திரைமுரசு

காதல் காட்சிகளில் நடிப்பதற்கு நடிகைகள் படும் கஷ்டங்கள் ஏராளம்!

“சினிமாவில் முத்த காட்சிகளில் நடிப்பதையும் காதல் காட்சிகளில் நெருக்கமாக நடிப்பதையும் ஒரு காலத்தில் பரபரப்பாக பேசினார்கள். அந்த காட்சிகளில் நடிப்பதற்கு நடிகைகள் தயங்கிய காலமும் இருந்தது. ஆனால் இப்போது அவை சகஜமாகி விட்டன. முத்த காட்சிகளும் காதல் காட்சிகளும் படங்களில் சர்வசாதாரணமாக இடம் பெறுவதை பார்க்க முடிகிறது. நடிகைகளும் இந்த காட்சிகளில் நடிப்பதற்கு ஆட்சேபிப்பது இல்லை. காதல் மற்றும் முத்த காட்சிகளை ரசிகர்கள் திரையங்குகளில் சாதாரணமாக பார்த்து விட்டு போய் விடுகிறார்கள். ஆனால் அந்த காட்சிகளில் நடிப்பதற்கு நடிகைகள் படும் கஷ்டங்கள் ஏராளம். படப்பிடிப்பு ...

Read More »

இந்தி பட உலகை நம்பி நான் இல்லை! –

இந்த பட உலகை நம்பி நான் இல்லை என்று கமல் பட நாயகி அதிரடியாக அறிவித்துள்ளார். இந்தி படஉலகில் முன்னணி நடிகையாக வலம்வந்தவர் ரவீணா தண்டன். இவர் தமிழில் கமல் நடிப்பில் வெளிவந்த ‘ஆளவந்தான்’ படத்திலும் நடித்துள்ளார். சில ஆண்டுகளாக சினிமாவில் நடிக்காமல் ஒதுங்கிஇருந்த ரவீணா, ‘மாத்தர்’ என்ற படத்தின் மூலம் மீண்டும் இந்தி படங்களில் நடிக்கத் தொடங்கி இருக்கிறார். இந்த படத்தை பிரபலப்படுத்துவதில் தீவிரமாக இருக்கிறார். இந்நிலையில் படங்களில் நடிப்பது பற்றி கூறிய ரவீணா தண்டன், “இந்தி பட உலகை மட்டும் நம்பி ...

Read More »

ஜோக்கர் திரைப்படத்தை தமிழ் தவிர மற்ற மொழிகளிலும் படமாக்கபட உள்ளது

சிறந்த தமிழ்படத்திற்கான தேசிய விருது பெற்ற ஜோக்கர் திரைப்படத்தை மற்ற மொழிகளிலும் படமாக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்திய திரைப்படங்களுக்கான 64வது தேசிய விருது சமீபத்தில் அறிவிக்கப்பட்டது. இதில் ஜோக்கர் திரைப்படத்திற்கு 2 தேசிய விருதுகள் கிடைத்துள்ளன.. சிறந்த தமிழ்படத்திற்கான தேசிய விருதையும், இந்த படத்திற்கு பாடிய சுந்தர ஐயர், சிறந்த ஆண் பின்னனி பாடகருக்கான தேசிய விருதை பெற்றுள்ளார். இந்த படத்தை ராஜூ முருகன் இயக்கி உள்ளார். சிறந்த கதையம்சம், தேசிய கருத்தும் நிறைந்து இருந்ததால் இந்த படம் தேசிய விருது பெற்றுள்ளது என்றும் ...

Read More »

பாகுபலியால் திருமணத்துக்கு தடையா? அனுஷ்கா பதில்

ராஜமவுலி இயக்கத்தில் பிரபாஸ், அனுஷ்கா, தமன்னா நடித்துள்ள பாகுபலி 2, ஏப்.28ம் திகதி திரைக்கு வருகிறது. இந்த படத்தின் செய்தியாளர்கள் சந்திப்பு நிகழ்ச்சி சென்னையில் நேற்று நடைபெற்றது. இதில் அனுஷ்கா பேசும்போது, ‘பாகுபலி படத்தின் இரண்டு பாகங்கள் உருவாக 5 ஆண்டுகள் ஆனது. இதனால்தான் எனது திருமணம் தள்ளிப்போய்க்கொண்டே இருக்கிறதா என பலரும் கேட்கிறார்கள். திருமணத்துக்கும் இந்த படத்துக்கும் எந்த தொடர்பும் இல்லை. அது நடக்கும்போது நடக்கும். இஞ்சி இடுப்பழகி படத்துக்காக உடல் எடையை கூட்டிய பிறகு பாகுபலி 2 படத்துக்காக எடையை குறைக்க ...

Read More »

புகைபிடிப்போருக்கு சன்னிலியோன் அறிவுரை

கைபிடிப்போருக்கு நடிகை சன்னிலியோன் அறிவுரை ஒன்றை கூறியுள்ளார்.புகை பிடிப்பது உடல் நலத்துக்கு கேடு. ஆயுள் குறையும், புற்று நோய்வரும் என்று டாக்டர்கள் மீண்டும் மீண்டும் கூறுகிறார்கள். என்றாலும், இந்த பழக்கத்துக்கு அடிமையானவர்கள் திருந்துவது கடினமாகவே உள்ளது. அரசும் விளம்பரம் செய்து வருகிறது. அதற்கு எதிர்பார்க்கும் அளவு பயன்கிடைக்கிறதா என்பது கேள்விக்குறிதான். இந்த நிலையில், புகைபிடிப்பது தீங்கு விளைவிக்கும் என்ற கருத்தை வலியுறுத்தும் வீடியோவை இந்தி நடிகை சன்னிலியோன் நடித்து வெளியிட்டுள்ளார். அதில் அதிகமாக புகைப்பிடிக்கும் பழக்கம் உள்ள ஒரு வாலிபர் மரணபடுக்கையில் இருக்கிறார். அவர் ...

Read More »

`ஜோக்கர்’ படத்திற்கு தேசிய விருது

ஜோக்கர்’ படம் 2 தேசிய விருதுகளை வென்றது கருத்து சுதந்திரத்திற்கு கிடைத்த வெற்றி என்று செய்தியாளர்களை சந்தித்த `ஜோக்கர்’ படக்குழு பேட்டி அளித்துள்ளது. 2 தேசிய விருதுகளை பெற்ற ஜோக்கர் திரைப்படத்தின் படக்குழு கலந்துகொண்ட பத்திரிக்கையாளர் சந்திப்பு இன்று நடைபெற்றது. இதில் தயாரிப்பாளர் எஸ்.ஆர்.பிரபு , இயக்குநர் ராஜு முருகன் , நாயகன் சோம சுந்தரம் , இசையமைப்பாளர் ஷான் ரோல்டன் ஆகியோர் கலந்துகொண்டனர். நிகழ்ச்சியில் இயக்குநர் ராஜு முருகன் பேசிய போது, நான் ஒரு நல்ல படத்தை இயக்க வேண்டும் என்று நினைத்தேன் ...

Read More »

தமிழில் தம்பி, தெலுங்கில் அண்ணனாக அவதாரம் எடுக்கும் ஆர்யா

நடிகர் ஆர்யா தமிழில் தம்பியாகவும், தெலுங்கில் அண்ணனாகவும் அவதாரம் எடுக்கவுள்ளதாக ஒரு செய்தி வெளியாகியுள்ளது. ஆர்யா நடிப்பில் உருவாகிவரும் புதிய படம் ‘கடம்பன்’. இப்படத்தை ‘மஞ்சப்பை’ இயக்குனர் ராகவா இயக்கி வருகிறார். ஆர்யாவுக்கு ஜோடியாக கேத்ரீன் தெரசா நடித்துள்ளார். சூப்பர் குட் பிலிம்ஸ் சார்பில் ஆர்.பி.சௌத்ரி தயாரித்துள்ளார். இப்படத்திற்கு தணிக்கை குழுவினர் யு சான்றிதழ் கொடுத்துள்ளனர். இப்படம் தமிழ் மட்டுமில்லாது தெலுங்கிலும் வெளியாகவிருக்கிறது. அதன்படி, இரண்டு மொழிகளிலும் வருகிற 14-ந் தேதி இப்படம் வெளியாகவுள்ளது. தமிழில் கடம்பன் என்ற பெயரிலும், தெலுங்கில் கஜேந்திரடு என்ற ...

Read More »

பொன்மொழிகளுக்கு அஜித் நவீன உதாரணம்

பிரபல பாடலாசிரியர் கபிலன் வைரமுத்து அஜித் பொன்மொழிகளுக்கு நவீன உதாரணம் என்று பாராட்டியுள்ளார். வீரம், வேதாளம் ஆகிய படங்களை தொடர்ந்து அஜித் மீண்டும் ‘சிறுத்தை’ சிவா இயக்கத்தில் ‘விவேகம்’ படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்புகள் முடிவடைந்து தற்போது இறுதிக்கட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில், இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது. அதைத் தொடர்ந்து இப்படத்தில் அஜித்தின் ஒவ்வொரு புகைப்படத்தையும் அப்படத்தின் இயக்குனர் சிவா வெளியிட்டு வருகிறார். அந்த வரிசையில் நேற்று இரவு விவேகம் படத்தில் ...

Read More »

நிறைய குழந்தைகள் பெற்றுக்கொள்ள ஆசைப்படும் தீபிகா படுகோனே

இந்தி பட உலகின் முன்னணி ஹீரோயின் தீபிகா படுகோனே, நிறைய குழந்தைகள் பெற்றுக்கொள்ள ஆசைப்படுவதாக தெரிவித்துள்ளார். இந்தி பட உலகின் முன்னணி ஹீரோயின் தீபிகா படு கோனேவிடம் அவர் மனம் திறந்து அளித்த பேட்டி…. “நான் சிவப்பாக மாற சிகிச்சை செய்து கொண்டதாக யாரோ சொல்கிறார்கள். எனக்கே தெரியாமல் அது என்ன சிகிச்சை என்பது அதிசயமாக இருக்கிறது. நான் மாடலிங் செய்து வாங்கிய முதல் சம்பளம் ரூ3 ஆயிரத்து 500. பெங்களூரில் நடந்த ‘பே‌ஷன் ஷோ’ ஒன்றில் ஒய்யாரமாக நடந்து வந்தேன். அதற்கு வெகுமதியாக ...

Read More »

பாலிவுட் செல்கிறார் விஜய் சேதுபதி

பாலிவுட் பிரபலம் பாக்யஸ்ரீயின் மகன் அபிமன்யூ தசானி கதாநாயகனாக அறிமுகமாகும் படத்தில் விஜய் சேதுபதி முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க இருக்கிறார். `மைனே பியார் கியா’ என்ற படத்தில் மூலம் பாலிவுட்டில் அறிமுகமான பாக்யஸ்ரீ, தனது முதல் படத்தின் மூலமே 1979-ல் முன்னணி நடிகையாக வலம் வந்தார். அதன்பின்னர் சினிமாவில் இருந்து விலகி குடும்பத்தை கவனித்த அவர் பின்னர் மீண்டும் திரையில் தோன்றினார். அதன் பின்னர் சில தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலும் தலைகாட்டினார். இந்நிலையில், பாக்யஸ்ரீயின் மகன் அபிமன்யூ தசானி, காஷ்யப் புரொடக்‌ஷன் கம்பெனி நிறுவனம் சார்பில் ...

Read More »