நிறைய குழந்தைகள் பெற்றுக்கொள்ள ஆசைப்படும் தீபிகா படுகோனே

இந்தி பட உலகின் முன்னணி ஹீரோயின் தீபிகா படுகோனே, நிறைய குழந்தைகள் பெற்றுக்கொள்ள ஆசைப்படுவதாக தெரிவித்துள்ளார். இந்தி பட உலகின் முன்னணி ஹீரோயின் தீபிகா படு கோனேவிடம் அவர் மனம் திறந்து அளித்த பேட்டி….

“நான் சிவப்பாக மாற சிகிச்சை செய்து கொண்டதாக யாரோ சொல்கிறார்கள். எனக்கே தெரியாமல் அது என்ன சிகிச்சை என்பது அதிசயமாக இருக்கிறது.

நான் மாடலிங் செய்து வாங்கிய முதல் சம்பளம் ரூ3 ஆயிரத்து 500. பெங்களூரில் நடந்த ‘பே‌ஷன் ஷோ’ ஒன்றில் ஒய்யாரமாக நடந்து வந்தேன். அதற்கு வெகுமதியாக அது கிடைத்தது.

நான் பார்த்தவர்களில் மிகவும் பிரபலமானவர் டென்னிஸ் வீரர் ரோஜர் பெடரர். நான் சமீபத்தில் பார்த்து என்னை அழ வைத்த படங்கள், ‘லாலா லேண்ட்’, ‘மான்செஸ்டர் பைத சீ’, ஆகியவை” என்றார்.

இறப்பதற்கு முன்பு நீங்கள் செய்ய விரும்பும் முக்கியமான காரியம் என்ன என்று தீபிகா படுகோனேவிடம் கேட்ட போது, “நிறைய குழந்தைகள் பெற்றுக் கொள்ளவேண்டும். அதைத்தான் நான் விரும்புகிறேன்” என்று கூறி அதிசயப்பட வைத்திருக்கிறார்.