திரைமுரசு

மீண்டும் இணையும் தனுஷ் – சாய் பல்லவி ஜோடி?

சேகர் கம்முல்லா இயக்கவுள்ள படத்தில் தனுஷ் – சாய் பல்லவி ஜோடி மீண்டும் இணைந்து நடிக்கவுள்ளதாகக் கூறப்படுகிறது. பாலாஜி மோகன் இயக்கத்தில் தனுஷ், சாய் பல்லவி, ரோபோ ஷங்கர், டோவினோ தாமஸ், வரலட்சுமி உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான படம் ‘மாரி 2’. இந்தப் படம் போதிய வரவேற்பைப் பெறவில்லை என்றாலும், தனுஷ் – சாய் பல்லவி ஜோடி பலரது கவனத்தையும் ஈர்த்தது. தற்போது தெலுங்கு திரையுலகின் முன்னணி இயக்குநரான சேகர் கம்முல்லா இயக்கத்தில் நடிக்கவுள்ளார் தனுஷ். இது தொடர்பான அறிவிப்பு சமீபத்தில் வெளியிடப்பட்டது. ...

Read More »

நயன்தாராவுக்கு வில்லனாகும் பிரபல நடிகர்

பல வெற்றிப் படங்களில் நடித்து முன்னணி நடிகையாக இருக்கும் நயன்தாராவின் அடுத்த படம் பற்றிய தகவல்கள் வெளியாகி உள்ளது. முன்னணி நடிகையாக இருக்கும் நயன்தாரா, தற்போது ரஜினியுடன் அண்ணாத்த படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தை அடுத்து பேஷன் ஸ்டுடியோ தயாரிக்கும் இரண்டு படங்களில் நடிக்க ஒப்பந்தம் செய்திருப்பதாக கூறப்படுகிறது. இந்நிலையில் அறிமுக இயக்குநர் ஒருவர் இதில் ஒரு படத்தை இயக்குவதாகவும் அதில் நயன்தாராவுக்கு வில்லனாக கன்னட நடிகர் ‘நான் ஈ’ சுதீப் நடிக்கவிருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியிருக்கின்றன. விரைவில் இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் ...

Read More »

சீதை வேடத்தில் கரீனாவுக்கு பதில் கங்கனா

கரீனா கபூர் சீதை வேடத்தில் நடிக்க எதிர்ப்பு கிளம்பியதால், அவருக்கு பதில் கங்கனாவை நடிக்க வைக்க படக்குழு பரிசீலித்து வருகிறதாம். ராமாயண கதையை ஏற்கனவே சிலர் படமாக எடுத்து வெளியிட்டுள்ளனர். தெலுங்கில் ஸ்ரீராமராஜ்ஜியம் என்ற பெயரில் வெளியான ராமாயண படத்தில் பாலகிருஷ்ணா ராமராகவும், நயன்தாரா சீதையாகவும் நடித்து இருந்தனர். தற்போது பிரபாஸ் நடிப்பில் தமிழ், தெலுங்கு மொழிகளில் ஆதிபுருஷ் என்ற பெயரில் ராமாயண கதை படமாகிறது. இந்நிலையில் தமிழ், தெலுங்கு, இந்தி மொழிகளில் 3டி தொழில்நுட்பத்தில் இன்னொரு ராமாயண படமும் தயாராகிறது. தங்கல் படம் ...

Read More »

அனுஷ்கா, சமந்தா மாதிரி இருந்தால் மட்டுமே சினிமாவில் நிலைக்க முடியும் – ராஷி கண்ணா

தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம் என பல்வேறு மொழிகளில் நடித்து வரும் ராஷி கண்ணா, சினிமா துறை ஆணாதிக்கம் உள்ள துறையாக இருப்பதாக தெரிவித்துள்ளார். தமிழில் இமைக்கா நொடிகள், அயோக்யா, சங்கத்தமிழன் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ள ராஷி கண்ணா, தெலுங்கிலும் முன்னணி நடிகையாக இருக்கிறார். இதுதவிர மலையாளத்தில் ஒரு படத்திலும், இந்தியில் இரண்டு வெப் தொடர்களிலும் நடித்து வருகிறார். இவ்வாறு பிசியான நடிகையாக வலம்வரும் ராஷி கண்ணா, சமீபத்திய பேட்டியில் சினிமாவில் ஆணாதிக்கம் இருப்பதாக தெரிவித்துள்ளார். மேலும் அவர் கூறியதாவது: “சினிமா துறை ஆணாதிக்கம் ...

Read More »

பிரபல நடிகர் ஹம்சவர்தனின் மனைவி காலமானார்

பிரபல நடிகர் ரவிச்சந்திரனின் மருமகளும், நடிகர் ஹம்சவர்தனின் மனைவியுமான சாந்தி ஹம்சவர்தன் (42) நேற்று மாலை காலமானார். காதலிக்க நேரமில்லை, நான், ஊமை விழிகள் உள்ளிட்ட 100க்கும் மேற்பட்ட படங்களில் நடித்தவர் ரவிச்சந்திரன். இவரது மகன் ஹம்சவர்தன், ‘மானசீக காதல்’, ‘வடுகபட்டி மாப்பிள்ளை’, ‘புன்னகை தேசம்’ உள்ளிட்ட படங்களில் நடித்தார். மம்மூட்டியுடன் ‘ஜூனியர் சீனியர்’ படத்தில் இணைந்து நடித்தார். இவரது மனைவி சாந்தி. இவர் ரேஷ்மா என்ற பெயரில் மு.களஞ்சியம் இயக்கிய ‘பூமணி’ படத்தில் இரண்டாவது நாயகியாகவும், நடிகர் கார்த்திக் உடன் ‘கிழக்கு முகம்’ ...

Read More »

மீண்டும் உயிர் பெற்றது போல உள்ளது

சினிமா படப்பிடிப்புகளை நடத்த அனுமதி அளித்த முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்து இயக்குனர் பாரதிராஜா கடிதம் எழுதி உள்ளார். தமிழகத்தில் கொரோனா இரண்டாவது அலை காரணமாக ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டதால், கடந்த 2 மாதங்களாக சினிமா மற்றும் சின்னத்திரை படப்பிடிப்புகள் நடைபெறாமல் இருந்தன. தற்போது ஊரடங்கில் தளர்வுகள் அளித்துள்ள தமிழக அரசு, சினிமா மற்றும் சின்னத்திரை படப்பிடிப்புகளை இன்று முதல் நடத்தவும் அனுமதி அளித்துள்ளது. தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினின் இந்த அறிவிப்புக்கு நன்றி தெரிவித்து இயக்குனர் பாரதிராஜா, கடிதம் எழுதி உள்ளார். அதில் அவர் ...

Read More »

பிரபல நடிகரை மீண்டும் இயக்கும் பிரித்விராஜ்

நடிகராகவும் இயக்குனராகவும் இருக்கும் பிரித்விராஜ், தனது அடுத்த படத்தை பிரபல நடிகரை வைத்து இயக்க இருப்பதாக அறிவித்திருக்கிறார். மலையாள நடிகர் பிரித்விராஜ் சினிமாவில் நடிகராகும் முன்பு, இணை இயக்குநராக பணிபுரிந்தவர். அந்த வகையில் ஓர் இயக்குநராக தனது முதல் படத்தை மோகன்லாலை வைத்து ‘லூசிபர்’ படத்தை இயக்கினார். இப்படத்தின் இரண்டாம் பாகத்தை பிரித்விராஜ் இயக்க இருப்பதாக செய்திகள் வெளியானது. பிரித்விராஜ் இயக்கும் அடுத்த படத்தின் தலைப்பு இந்நிலையில், பிரித்விராஜ் தனது அடுத்த பட அறிவிப்பை வெளியிட்டு இருக்கிறார். அதில், மீண்டும் மோகன்லாலை வைத்து எனது ...

Read More »

மகள் கதையை பகிர்ந்த பிரித்விராஜ்

நடிகரும் இயக்குனருமான பிரித்விராஜ், தன்னுடைய மகள் எழுதிய கதையை தனது சமூக வலைதளத்தில் பகிர்ந்திருக்கிறார். மலையாள நடிகர் பிரித்விராஜ் சினிமாவில் நடிகராகும் முன்பு, இணை இயக்குநராக பணிபுரிந்தவர். அந்த வகையில் ஓர் இயக்குநராக தனது முதல் படத்தை மோகன்லாலை வைத்து ‘லூசிபர்’ படத்தை இயக்கினார். தற்போது இப்படத்தின் இரண்டாம் பாகத்தை எடுக்கும் முயற்சியில் இருக்கிறார் பிரித்விராஜ். இந்நிலையில் பிரித்விராஜ் தனது தனது சமூக வலைத்தள பக்கத்தில், தன் மகள் சிலேட்டில் எழுதிய ஒன்லைன் கதையை பகிர்ந்தார். இந்தக் கதை 2-ஆம் உலகப் போரின் பின்னணியில் ...

Read More »

மீண்டும் வெப் தொடரில் நடிப்பது உண்மையா?

நடிகை சமந்தா மீண்டும் ஒரு வெப் தொடரில் நடிக்க உள்ளதாக தகவல் பரவி வந்த நிலையில், அதுகுறித்து அவர் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. தமிழ், தெலுங்கில் முன்னணி நடிகையாக வலம்வரும் சமந்தா, திருமணத்துக்கு பின்னரும் படங்களில் பிசியாக நடித்து வருகிறார். இவர் கைவசம் ‘காத்துவாக்குல ரெண்டு காதல்’, ‘சகுந்தலம்’ போன்ற படங்கள் உள்ளன. இதனிடையே, நடிகை சமந்தா நடிப்பில் அண்மையில் வெளியான, ‘தி பேமிலி மேன் 2’ வெப் தொடர், பல்வேறு சர்ச்சைகளில் சிக்கினாலும், நல்ல வரவேற்பை பெற்றது. இதனால் நடிகை சமந்தா மீண்டும் ...

Read More »

சீதையாக நடிக்க நடிகை கரீனாவுக்கு எதிர்ப்பு

கரீனாவுக்கு பதில் அந்த கதாபாத்திரத்தில் கங்கனா அல்லது யாமி கவுதமை நடிக்க வைக்குமாறு ரசிகர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர். தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய 3 மொழிகளில் ராமாயண கதையை 3டி தொழில் நுட்பத்தில் சினிமா படமாக எடுக்கின்றனர். சீதை பார்வையில் கதை நகர்வதுபோல் திரைக்கதை அமைத்துள்ளனர். இந்த படத்தில் சீதை வேடத்துக்கு பல நடிகைகள் பரிசீலிக்கப்பட்டு இறுதியில் பிரபல இந்தி நடிகை கரீனா கபூரை தேர்வு செய்து இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. சீதையாக நடிக்க அவர் ரூ.12 கோடி சம்பளம் கேட்டதாக கூறப்படுகிறது. ...

Read More »