திரைமுரசு

‘ஆளப்போறான் தமிழன் என்பதை ரசிகர்கள் மெய்யாக்க வேண்டும்’ – ஏ.ஆர் ரஹ்மான்

விஜய் நடிப்பில் தயாராகியுள்ள மெர்சல் திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் கலந்து கொண்ட ஏ.ஆர்.ரகுமான் திரைப்படத்தில் இடம்பெற்றுள்ள ‘ஆளப்போறான் தமிழன்’ என்ற பாடல் வரிகளை ரசிகர்கள் மெய்யாக்க வேண்டும் என பேசினார். விஜய் நடிப்பில் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு இடையே வருகிற தீபாவளிக்கு ரிலீசாக இருக்கும் இப்படத்தை அட்லி இயக்கியுள்ளார். படத்தின் மீது அதீத எதிர்ப்பார்ப்பு நிலவி வரும் நிலையில், படத்தில் இருந்து ஆளப்போறான் தமிழன், நீதானே நீதானே என்ற இரு பாடல் மட்டும் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. ஆஸ்கார் நாயகன் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்திருக்கும் ...

Read More »

ஒரே சினிமா தான் இனி – விவேக் ஓபராய்

ஹாலிவுட், கோலிவுட், பாலிவுட் என்றெல்லாம் இனி இல்லை. ஒரே சினிமா தான் இனி என்று விவேகம் பத்திரியாளர்கள் சந்திப்பில் நடிகர் விவேக் ஓபராய் கூறினார். இந்திய சினிமாவில் இளம் பெண்களின் கனவு கண்ணன், காதலனாக வலம் வந்தவர் விவேக் ஓபராய். தமிழ் மக்களின் மீது அளவு கடந்த அன்பையும், மரியாதையையும் வைத்திருப்பவர். சுனாமியால் தமிழகம் நிலை குலைந்திருந்த போது தமிழ் மக்களுக்கு அவர் நீட்டிய ஆதரவு கரம் பற்றி சொல்லி தெரிய வேண்டியதில்லை. தமிழ் சினிமாவில் நல்ல ஒரு அறிமுகத்துக்காக காத்திருந்த நேரத்தில் அவரின் ...

Read More »

எங்கள் காதலை சினிமாவாக எடுத்தால் நடிக்க தயார்: நாகசைதன்யா

எங்கள் காதலை சினிமாவாக எடுத்தால் அதில் நானும், சமந்தாவும் இணைந்து நடிக்க தயாராக இருக்கிறோம் என்று நடிகர் நாகசைதன்யா கூறியிருக்கிறார். சமந்தாவுக்கும் நாகசைதன்யாவுக்கும் வருகிற அக்டோபர் 6-ந்திகதி கோவாவில் திருமணம் நடைபெறுகிறது. இதற்கான அழைப்பிதழ்கள் கொடுக்கப்பட்டு வருகின்றன. தனது காதல் அனுபவம் பற்றி கூறிய சமந்தா, “இந்த உலகத்தில் நாகசைதன்யாவை விட எதுவும் பெரிதில்லை. எங்களை பொருத்தமான அழகான ஜோடி என்று சொல்கிறார்கள். இதை கேட்க மகிழ்ச்சியாக இருக்கிறது” என்று கூறி இருக்கிறார். இதுபற்றி கூறிய நாகசைதன்யா, “சமந்தாவை விட இந்த உலகில் அழகான ...

Read More »

கொச்சியை ஸ்தம்பிக்க வைத்த சன்னிலியோன்

கொச்சிக்கு வருகை புரிந்த சன்னிலியோனை பார்க்க திரண்ட கூட்டத்தால் போக்குவரத்து ஸ்தம்பித்தது. தடுப்பு கட்டைகளை உடைத்துக் கொண்டு ரசிகர்கள் பாய்ந்ததால் பரபரப்பு ஏற்ப்பட்டது. நடிகை சன்னிலியோன் ஏராளமான ஆபாச படங்களில் நடித்து உள்ளவர். வெளிநாட்டைச் சேர்ந்தவரான இவர் சமீபத்தில் இந்தியாவுக்கு வந்து, இந்தி சினிமாக்களிலும் நடித்தார். ‘ஜிஸ்ம்-2’ என்ற என்ற இந்திப்படத்தில் நடிக்கத் தொடங்கிய இவருக்கு ரசிகர்கள் மத்தியில் அமோக ஆதரவு கிடைத்தது. இதனால் அவர் தொடர்ந்து பல இந்தி படங்களில் நடித்து புகழ் பெற்றார். மேலும் தமிழில் `வடகறி’ என்ற படத்தில் ஒரு ...

Read More »

பிக்பாஸ் தொடருக்கு மீண்டும் திரும்புகிறேனா?

தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் தொடரில் ஓவியா மீண்டும் பங்கேற்க உள்ளதாக எழுந்த சர்ச்சைகளுக்கு அவர் அளித்துள்ள விளக்கத்தை கீழே பார்க்கலாம். தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் தொடரில் ஓவியா மீண்டும் பங்கேற்க உள்ளதாக எழுந்த சர்ச்சைகளுக்கு அவர் அளித்துள்ள விளக்கத்தை கீழே பார்க்கலாம். தனியார் தமிழ் தொலைக்காட்சியில் ‘பிக்பாஸ்’ நிகழ்ச்சி ஒளிபரப்பாகி வருகிறது. பிரபலமான நபர்கள் ஒரே வீட்டில் ஒன்றாக 100 நாட்கள் இருக்குமாறு இந்த நிகழ்ச்சி வடிவமைக்கப்பட்டுள்ளது. சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் மட்டும் நடிகர் கமல்ஹாசன் இதனை தொகுத்து வழங்குகிறார். ...

Read More »

அவுஸ்ரேலியாவில் ஆடையால் அவதி அடைந்த ஐஸ்வரயாராய்!

அவுஸ்ரேலியாவின் மெல்போர்ன் நகரில் நடந்த இந்திய திரைப்பட விழாவில் பாலிவுட் நடிகை ஐஸ்வர்யா ராய் பச்சன் தனது மகள் ஆராத்யாவுடன் கலந்து கொண்டார். அந்த விழாவில் இந்திய தேசிய கொடியை நடிகை ஐஸ்வர்யா ஏற்றினார். அப்போது லோ கட் நெக் வைத்த ஆடையால் அவர் சற்று தர்மசங்கடமான நிலைக்கு ஆளானார். புகைப்படங்களுக்கு போஸ் கொடுக்கும்போதும், அங்கிருப்பவர்களுடன் உரையாடும்போது தனது கை மற்றும் துப்பட்டாவை வைத்து கழுத்தினை மறைத்துக்கொண்டு சங்கடப்பட்டது தெளிவாக தெரிந்தது. ஊடகங்களுக்கு பேட்டியளிக்கும்போது  தனது கையை வைத்து மறைத்தபடியே நின்றிருந்தார். மெல்போர்னில் நடக்கும் ...

Read More »

உலகில் சமந்தாவை விட அழகான பெண் யாரும் இல்லை! நாகசைதன்யா

உலகில் சமந்தாவை விட அழகான பெண் யாரும் இல்லை என்று நடிகர் நாகசைதன்யா கூறியுள்ளார்.நடிகை சமந்தாவுக்கும், பிரபல தெலுங்கு நடிகர் நாகார்ஜுனாவின் மகனும், நடிகருமான நாகசைதன்யாவுக்கும் திருமணம் முடிவாகி உள்ளது. இவர்கள் நிச்சயதார்த்தம் கடந்த ஜனவரி மாதம் முடிந்தது. திருமணம் அக்டோபர் மாதம் 6-ந் திகதி கோவாவில் உள்ள நட்சத்திர ஓட்டலில் நடக்கிறது. சமந்தா-நாகசைதன்யா இருவரும் இந்து, கிறிஸ்தவ முறைப்படி திருமணம் செய்துகொள்கின்றனர். திருமணம் முடிந்ததும் ஐதராபாத்தில் விருந்து நிகழ்ச்சிக்கும் ஏற்பாடு செய்துள்ளனர். திருமணத்துக்கான அழைப்பிதழ்கள் தயாராகி உள்ளது. ஆந்திரா, தெலுங்கானாவில் உள்ள அரசியல் ...

Read More »

என் வாழ்வில் நாகசைதன்யாவை விட எதுவும் பெரிதில்லை – சமந்தா

என் வாழ்வில் நாகசைதன்யாவை விட எதுவும் பெரிதில்லை என்று நடிகை சமந்தா கூறியிருக்கிறார். பத்திரிகையாளர்களை சந்தித்த சமந்தா தனது காதல் பற்றி மனம் திறந்து கூறியுள்ளார். இது குறித்து அவர் அளித்த பேட்டி… ‘‘நான், நாகசைதன்யாவை முதன் முதலில் ‘ஏமாயசேசவே’ என்ற படத்துக்காக சந்தித்தேன். அப்போதே அவர் மீது எனக்குள் காதல் வந்துவிட்டது. தொடர்ந்து இருவரும் ஒருவருக்கொருவர் அன்பாகவே பழகிவந்தோம். மனதளவில் எனக்கு அவருடன் எப்போதோ திருமணம் ஆகிவிட்டது. இப்போது என் வாழ்வில் அவரைவிட எனக்கு எதுவும் பெரிதில்லை. 30 வயதில் திருமணம் என்று ...

Read More »

எப்போதும் அன்பைத் தேர்ந்தெடுங்கள்! – சிம்பு

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வரும் நடிகர் சிம்பு, சமூக வலைதளங்களில் எதிர்மறை எண்ணங்கள் பரவிவருவதாக அதிரடி முடிவை எடுத்திருக்கிறார். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் சிம்பு. தனக்கே உரிய தனி ஸ்டைல் மூலமாக தமிழ் சினிமாவில் முத்திரை பதித்து வரும் சிம்புவுக்கு ரசிகர்களோ ஏராளம். ஆண் ரசிகர்களை விட பெண் ரசிகைகளே அதிகம் என்னும் அளவுக்கு தனத் திறமை கொண்டவர். எத்தனை சர்ச்சைகள் வந்தாலும் அதனால் துவண்டுவிடாத சிம்பு, சமீபத்தில் அவரது அடுத்த படம் குறித்த அதிரடி அறிவிப்புகளை ...

Read More »

புரூஸ் லீ வாழ்க்கை வரலாற்றில் ஏ.ஆர்.ரகுமான்!

புரூஸ் லீ வாழ்க்கை வரலாற்றில் ஆஸ்கார் நாயகன் ஏ.ஆர்.ரகுமான் இணைந்திருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. கடந்த சில வருடங்களாக பிரபலங்களின் வாழ்க்கை வரலாறு படமாக வெளியாகி வருகிறது. அந்த வகையில் குங் பூ கலையில் வல்லவரான புரூஸ் லீ-யின் வாழ்க்கை வராலாறும் படமாக எடுக்கப்படுகிறது. ஹாலிவுட்டில் பிரபல நடிகர் புரூஸ் லீ. அவரது படங்களுக்கென்று தனி மவுசு உண்டு. அவரைப் போன்ற ஒரு வீரன், கலைஞன், நடிகன் உலகத்தில் இன்னமும் பிறக்கவில்லை. பிறக்கப் போவதும் இல்லை என்னும் அளவுக்கு தனக்கென தனி முத்திரை பதித்து ...

Read More »