திரைமுரசு

என்னுடைய முதல் சம்பளம் ரூ. 75: சல்மான்கான்

முதல் சம்பளமாக ரூ.75 வாங்கியதாக நடிகர் சல்மான்கான் தெரிவித்துள்ளார். இந்தி திரையுலகின் ‘சூப்பர் ஸ்டார்’ ஆக திகழும் நடிகர் சல்மான்கான், படத்துக்கு ரூ.50 கோடிக்கு மேல் சம்பளம் வாங்குகிறார். மேலும், இந்தி திரையுலகில் அதிக சம்பளம் வாங்கும் நடிகர்கள் பட்டியலில் சல்மான்கான் 2-வது இடத்தில் இருப்பதாக போர்ப்ஸ் பத்திரிகை செய்தி வெளியிட்டது. இது தவிர, டி.வி.யில் ‘பிக் பாஸ்’ நிகழ்ச்சியையும் அவர் தொகுத்து வழங்குகிறார். இந்நிகழ்ச்சி மொத்தம் 11 பாகங்களை கொண்டது. இதன் ஒவ்வொரு பாகத்துக்கும் சல்மான்கான் தலா ரூ.11 கோடி வரை சம்பளம் ...

Read More »

சினிமாவில் அறிமுகமாகும் அஞ்சலியின் தங்கை ஆரத்யா!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வரும் நடிகை அஞ்சலியின் தங்கை ஆரத்யா சினிமாவில் நடிக்க வருகிறார். ராம் இயக்கத்தில் ‘கற்றது தமிழ்’ மூலம் தமிழ் பட உலகில் அறிமுகமானவர் அஞ்சலி. ‘அங்காடிதெரு’ அவரை பிரபலமாக்கியது. தொடர்ந்து நடித்து வரும் அஞ்சலி திரை உலகில் தனி இடம் பிடித்து இருக்கிறார். ‘பலூன்’ படத்தில் நடித்துள்ள அவர் ‘பேரன்பு’, ‘காளி’ படங்களில் நடித்து வருகிறார். இந்த நிலையில்,அஞ்சலியின் தங்கை ஆரத்யாவும் நடிகை ஆகிறார். விரைவில் தெலுங்கு படம் ஒன்றில் அறிமுகமாகிறார். தொடர்ந்து தமிழ் படங்களிலும் நடிக்க ...

Read More »

யாரையும் பின்பற்றாமல் எனது ஸ்டைலில் நடிப்பேன்: காஜல் அகர்வால்

‘குயின்’ ரீமேக்கில் நடிக்கவிருக்கும் காஜல் அகர்வால் தான் கங்கனா ரணாவத்தை பின்பற்றாமல் தனது ஸ்டைலிலேயே நடிப்பேன் என்று கூறியிருக்கிறார். கங்கனா ரணாவத் நடிப்பில் உருவான இந்தி படம் ‘குயின்’. வசூலில் மிகப்பெரிய சாதனை படைத்த இந்த படம் தேசிய விருது உள்பட 32 விருதுகளை குவித்தது. ‘குயின்’ படம் தமிழில் ‘பாரிஸ் பாரிஸ்’ என்ற பெயரில் ரீமேக் ஆகிறது. இதுதவிர தெலுங்கு, மலையாளம், கன்னடத்திலும் தயாராகிறது. தமிழ், கன்னட படங்களை ரமேஷ் அரவிந்த் இயக்குகிறார். இதில் கங்கனா ரணாவத் பாத்திரத்தில் காஜல் அகர்வால் நடிக்கிறார். ...

Read More »

அடுத்தடுத்து இரு பேய் படங்களில் நடிக்கும் ஓவியா!

`யாமிருக்க பயமே’ படத்தை இயக்கிய டிகே அடுத்ததாக இயக்கவிருக்கும் காட்டேரி படத்தில் ஆதி சாய்குமார் – ஓவியா இணைந்து நடிக்க உள்ளனர். டிகே இயக்கத்தில் கடந்த 2014-ஆம் ஆண்டு வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற படம் `யாமிருக்க பயமே’. த்ரில்லர் கலந்த காமெடி படமாக வெளியான இந்த படத்தில் கிருஷ்ணா, ரூபா, ஓவியா, கருணாகரன் முக்கிய கதபாத்திரத்தில் நடித்திருந்தனர். இந்நிலையில், 3 வருட இடைவேளைக்குப் பிறகு டிகே அடுத்ததாக இயக்கவிருக்கும் புதிய படத்திற்கு `காட்டேரி’ என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இந்த படத்தில் நாயகனாக ஆதித்யா ...

Read More »

மீண்டும் நாயகனாக நடிக்கிறார் ராம்கி!

சின்ன பூவே மெல்ல பேசு படத்தில் நாயகனாக( ஹீரோவாக )அறிமுகமானவர் ராம்கி. அதன் பிறகு தங்கச்சி, செந்தூரப்பூவே, பார்வைகள் பலவிதம், இரண்டில் ஒன்று, இது எங்க நீதி, மனைவி ஒரு மந்திரி, ஒரு தொட்டில் சபதம், இணைந்த கைகள் உள்பட 60க்கும் மேற்பட்ட படங்களில் நடித்தார். சில காலம் சினிமாவை விட்டு ஒதுங்கி இருந்த ராம்கி, மாசானி என்ற படத்தின் மூலம் மீளவும் வந்தார். அதன்பிறகு குணசித்ர நடிகராக பிரியாணி, வாய்மை, அட்டி படங்களில் நடித்தார். தற்போது நீண்ட இடைவெளிக்கு பிறகு இங்கிலீஸ் படம் என்ற ...

Read More »

தமிழ் சினிமா வாய்ப்புக்கு ‘ஜிமிக்கி கம்மல்’ ஷெரில் இன்னும் பதில் அளிக்கவில்லை!

யூ டியூப்பில் 1½ கோடி பேரை மயக்கிய ‘ஜிமிக்கி கம்மல்’ பாட்டுக்கு நடனம் ஆடிய கல்லூரி ஆசிரியை தமிழ் சினிமாவில் நடிக்க வந்த வாய்ப்பை ஏற்க மறுப்பு தெரிவித்திருக்கிறார். ‘என்ட அம்மையிட ஜிமிக்கி கம்மல், என்ட அப்பன் அத கொண்டு போயி’ என்ற மலையாள பாடல், மோகன்லால் நடித்த ‘வெளிப்பாடின்றே புத்தகம்’ என்ற மலையாள படத்தில் இடம்பெற்றிருந்தது. அந்த படம் பெரிய அளவில் வெற்றி பெறவில்லை, என்றாலும் அதில் இடம்பெற்ற ‘ஜிமிக்கி கம்மல்’ என்ற பாடல் மட்டும் கேரளா முழுவதும் பெரும் வரவேற்பை பெற்றது. ...

Read More »

நடிகர் திலீப்பின் புதிய படம் வெளியாவதை தடுக்க கூடாது: மஞ்சுவாரியர் வேண்டுகோள்

நடிகர் திலீப்பின் புதிய படம் வெளியானால் தியேட்டர்களை கொளுத்துவோம் என்று மிரட்டல் வந்துள்ளதை அடுத்து, படம் வெளியாவதை யாரும் தடுக்கக் கூடாது என்று நடிகை மஞ்சுவாரியர் `பேஸ்புக்’கில் வேண்டுகோள் விடுத்துள்ளார். கேரளாவில் ஓடும் காரில் பிரபல நடிகை கடத்தி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட வழக்கில் நடிகர் திலீப் கைது செய்யப்பட்டு ஜெயிலில் அடைக்கப்பட்டார். அவரது ஜாமீன் மனுவும் 4 முறை தள்ளுபடி செய்யப்பட்டது. நடிகர் திலீப் மலையாள பட உலகில் முன்னணி நடிகர்களில் ஒருவர் என்பதால் அவர் ஒரே நேரத்தில் பல மலையாள படங்களில் ...

Read More »

ஒஸ்கர் விருதுக்கு ‘நியூட்டன்’ படம் பரிந்துரை!

2018-ம் ஆண்டுக்கான ஒஸ்கர் விருதுக்கு ‘நியூட்டன்’ இந்தி படம் ஒருமனதாக பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. இந்தி பட இயக்குனர் அமித் மசூர்கர் இயக்கிய ‘நியூட்டன்’ திரைப்படம் நேற்று வெளியானது. இந்த படத்தில் நடிகர்கள் ராஜ்குமார் ராவ், பங்கஞ் திரிபாதி, ரகுபிர் யாதவ், நடிகை அஞ்சலி பாட்டீல் உள்ளிட்டோர் நடித்து உள்ளனர். அரசியலை மையமாக வைத்து எடுக்கப்பட்ட இந்த படத்தில் நேர்மையான தேர்தல் அதிகாரி தேர்தலை நடத்துவதில் ஏற்படும் சிரமத்தை பற்றி கூறி இருக்கின்றனர். இந்நிலையில் இந்திய திரைப்பட கூட்டமைப்பு கூட்டம் மும்பையில் நேற்று நடந்தது. இந்த ...

Read More »

அமராவதி நகரை உருவாக்கும் பணியில் நான் இல்லை: இயக்குநர் ராஜமவுலி

ஆந்திராவின் புதிய தலைநகரான அமராவதியை கட்டமைக்கும் பணியில் சினிமா இயக்குநர் ராஜமவுலி இருப்பதாக வெளியான தகவலை அவர் மறுத்துள்ளார். ஆந்திராவின் புதிய தலைநகரான அமராவதியை கட்டமைக்கும் பணியில் சினிமா இயக்குநர் ராஜமவுலி இருப்பதாக வெளியான தகவலை அவர் மறுத்துள்ளார். ஆந்திராவில் இருந்து தெலுங்கானா மாநிலம் பிரிந்த பிறகும் இரண்டு மாநிலத்திற்கும் ஐதராபாத் தலைநகராக இருந்து வருகிறது. 10 ஆண்டுகளுக்கு இந்த உரிமை இரண்டு மாநிலங்களுக்கும் உள்ளது. இந்நிலையில், ஆந்திராவுக்கு புதிய தலைநகராக அமராவதியை முதல்வர் சந்திரபாபு நாயுடு அறிவித்துள்ளார். அமராவதியை பல கோடி ரூபாய் ...

Read More »

நான்கு வயது குழந்தைக்கு அம்மாவான சாய் பல்லவி

பிரேமம் படம் மூலம் தமிழ் மற்றும் மலையாள ரசிகர்களை கவர்ந்த சாய் பல்லவி, தற்போது நான்கு வயது குழந்தைக்கு அம்மாவாக நடித்து கவர இருக்கிறார். ‘பிரேமம்’ என்ற மலையாளப் படத்தின் மூலம் இளைஞர்களின் கனவுக் கன்னியாக மாறியவர் சாய் பல்லவி. அப்படத்தில் மலர் டீச்சராக நடித்திருந்த அவரது வேடம் அனைவராலும் விரும்பி பார்க்கப்பட்டது. இப்படத்தின் மூலம் மலையாள திரையுலகில் மட்டுமின்றி, தமிழ் திரையுலக ரசிகர்களையும் தனது அழகாலும், நடிப்பாலும் மிகவும் கவர்ந்தார். இவரை தமிழில் நடிக்க வைக்க பேச்சுவார்த்தைகள் நடைபெற்றது. மணிரத்தினம் இயக்கத்தில் ‘காற்று ...

Read More »