திரைமுரசு

சண்டைக்காரியாக களமிறங்கும் ஸ்ரேயா!

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையாக வலம் வந்த ஸ்ரேயா, நரகாசூரன் படத்தை தொடர்ந்து சண்டைக்காரியாக விமலுடன் களமிறங்க இருக்கிறார். தமிழ் சினிமாவின் முன்னணி நடிகை, ஸ்ரேயா. சிம்புவுடன் இணைந்து `அன்பானவன் அடங்காதவன் அசராதவன்’ படத்தில் நடித்தார். பிறகு கார்த்திக் நரேன் இயக்கத்தில் `நரகாசூரன்’ படத்தில் நடித்தார். அரவிந்த்சாமி ஜோடியாக இப்படத்தில் இவர் நடித்திருந்தார். இப்படம் இன்னும் ரிலீசாகவில்லை. இதற்குப் பிறகு தமிழில் எந்தப் படங்களிலும் நடிக்காமல் இருந்த ஸ்ரேயா, தற்போது நடிகர் விமலுடன் இணைந்து `சண்டக்காரி’ படத்தில் அவருக்கு பாஸாக நடித்துக்கொண்டிருக்கிறார். `சண்டக்காரி’ என ...

Read More »

ஈழ பின்னணியில் உருவாகி `யு’ சான்றிதழ் பெற்ற முதல் தமிழ்ப் படம்!

ரஞ்சித் ஜோசஃப் இயக்கத்தில் ஈழ பின்னணியில் உருவாகி `யு’ சான்றிதழ் பெற்ற முதல் தமிழ்ப் படம் என்ற பெருமை `சினம் கொள்’ படத்திற்கு கிடைத்துள்ளது. கனடாவில் பிறந்து வளர்ந்த ரஞ்சித் ஜோசஃப் இயக்கத்தில் உருவாகி இருக்கும் படம் `சினம் கொள்’. இலங்கையில் போருக்குப் பிறகான தசாப்தத்தில் இலங்கையில் தமிழர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் பற்றி பேசும் படமாக இது உருவாகி இருக்கிறது. 6 வருடங்கள் சிறை தண்டனை முடிந்து வெளியே வரும் ஆண்டவன் கட்டளை புகழ் அரவிந்தன், அவரது வீடு சிறிலங்கா  ராணுவத்தால் கைப்பற்றப்பட்டதை காண்கிறார். ...

Read More »

இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு நடிக்க வரும் அனுஷ்கா!

அனுஷ்கா நடிப்பில் ‘பாகமதி’ படம் கடைசியாக வெளியான நிலையில், தற்போது இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு அனுஷ்கா புதிய படமொன்றில் நடிக்க இருக்கிறார். நடிகை அனுஷ்கா மாதவன் ஜோடியாக ரெண்டு படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். தொடர்ந்து முன்னணி நாயகர்கள் பலருடன் இணைந்து நடித்து தமிழ், தெலுங்கு சினிமாவின் முன்னணி நாயகியானார். ராஜமவுலி இயக்கத்தில் பாகுபலி படத்தில் நடித்து இந்தியா முழுவதும் பிரபலமானார். கடைசியாக அவரது நடிப்பில் ‘பாகமதி’ படம் கடந்த 2017-ஆம் ஆண்டு வெளியானது. அதன்பின்னர் அனுஷ்கா படங்களில் நடிக்கவில்லை. இஞ்சி இடுப்பழகி ...

Read More »

இணையத்தில் வைரலான ராணாவின் புதிய புகைப்படம்!

பிரபு சாலமன் இயக்கத்தில் ராணா நடித்து வரும் புதிய படத்தின் புகைப்படம் ஒன்று இணையதளத்தில் வெளியாகி வைரலாகி இருக்கிறது. மைனா, கயல், கும்கி ஆகிய படங்களின் இயக்குனரான பிரபு சாலமன் இயக்கத்தில் தமிழ், தெலுங்கு, ஹிந்தி ஆகிய மூன்று மொழிகளிலும் உருவாகி வரும் புதிய படத்தில் ராணா டகுபதியின் வயதான தோற்றம் இணையத்தில் வைரலாகி வருகிறது. ராணா டகுபதி, விஷ்ணு விஷால், சோயா ஹுசைன் ஆகியோர் நடிக்கும் இப்படத்திற்கு தமிழில் ‘காடன்’ என்றும் தெலுங்கில் ‘அரன்யா’ என்றும் இந்தியில் ‘ஹாத்தி மேரே சாத்தி’ என்றும் ...

Read More »

“சிவரஞ்சனியும் இன்னும் சில பெண்களும்” சிறந்த திரைப்படமாக தெரிவு!

அட்லாண்டா இந்திய திரைப்பட விழாவில் “சிவரஞ்சனியும் இன்னும் சில பெண்களும்” சிறந்த திரைப்படமாக தேர்வு செய்யப்பட்டு விருது பெற்றிருக்கிறது. விழாவினையும் தொடர்ந்து அட்லாண்டா மாகாணத்தின் திரைப்பட விழாவிலும் திரையிட இயக்குனர் வஸந்தின் “சிவரஞ்சனியும் இன்னும் சில பெண்களும்” திரையிடப்பட்டு சிறந்த திரைப்படமாக தேர்வு செய்து விருது பெற்றுள்ளது. தொடர்ந்து பல சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடபட்டு கொண்டிருக்கும் இத்திரைப்படத்திற்கு திரைப்பட விழாக்கள் மத்தியில் பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது. இயக்குனர் வஸந்தின் “சிவரஞ்சனியும் இன்னும் சில பெண்களும்” திரைப்படம் மும்பை திரைப்பட விழா, 23வது கேரள ...

Read More »

கார்த்தி படத்தில் சீதா!

ஜீத்து ஜோசப் இயக்கத்தில் கார்த்தி – ஜோதிகா – சத்யராஜ் இணைந்து நடிக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பு கோவாவில் நடந்து வரும் நிலையில், இந்த படத்தில் நடிகை சீதா ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். கடந்த 2015-ஆம் ஆண்டு வெளியான தனுஷின் தங்க மகன் படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்த சீதா அதன்பின்னர் படங்களில் நடிக்கவில்லை. இந்த நிலையில், ஜீத்து ஜோசப் இயக்கத்தில் கார்த்தி, ஜோதிகா நடிப்பில் உருவாகும் புதிய படத்தின் மூலம் மீண்டும் நடிக்க வந்திருக்கிறார். இதுகுறித்து சீதாவிடம் கேட்டபோது, அவரும் ...

Read More »

அம்மா வேடங்களில் கவனம் செலுத்தும் கௌசல்யா!

முன்னணி நடிகையாக வலம் வந்த சௌசல்யா, நட்பே துணை படத்திற்குப் பிறகு தொடர்ந்து அம்மா வேடங்களில் அதிகமாக கவனம் செலுத்தி வருகிறார். காலமெல்லாம் காதல் வாழ்க, நேருக்கு நேர், பிரியமுடன் உள்பட பல வெற்றி படங்களில் முன்னணி நடிகர்களுடன் நடித்தவர் சௌசல்யா. சமீபத்தில் வெளியான நட்பே துணை படத்தில் ஆதிக்கு அம்மாவாக நடித்தவர் அடுத்து லைலா என்ற படத்திலும் அம்மா வேடத்தில் நடிக்கிறார். பூதோபாஸ் இன்டர்நே‌ஷனல் பிலிம்ஸ் என்ற பட நிறுவனம் சார்பாக பாஸ்கர் சீனுவாசன் தயாரித்து இயக்கும் இந்த படத்தில் தானாநாயுடு கதாநாயகியாக ...

Read More »

ஜெயம் ரவியின் அரசியல் கொள்கை!

லக்‌ஷ்மண் இயக்கத்தில் தன்னுடைய 25வது படத்தில் நடிக்கும் ஜெயம்ரவி தனக்கு அரசியல் கொள்கை இருப்பதாக கூறியிருக்கிறார். ஜெயம் ரவி 25-வது படத்தை தொடுகிறார். அந்த படம் பற்றி அவர் கூறியிருப்பதாவது:- ‘என்னுடைய 25வது படத்தை லக்‌ஷ்மண் இயக்குறார். நான் ரொம்ப நாளா பண்ணணும்னு நினைச்ச வி‌ஷயத்தைப் படமா பண்ணப்போறோம். விவசாயம் சார்ந்த படமா, மண்ணின் மைந்தர்கள் பற்றிய படமா இது இருக்கும். அண்ணனுக்கும் இந்தப் படம் மேல பெரிய நம்பிக்கை இருக்கு. அதனால, இதை முடிச்சுட்டு வா, நாம எப்போவேணா `தனி ஒருவன் 2’ ...

Read More »

அயோக்யா! -விமர்சனம்

நடிகர் -விஷால் நடிகை ராஷி -கண்ணா இயக்குனர் -வெங்கட் மோகன் இசை- சாம்.சி.எஸ். ஓளிப்பதிவு- விஐ கார்த்திக் தாய், தந்தையை இழந்த விஷால் தனது சிறுவயதில் ஆனந்த ராஜ் சொல்லைக் கேட்டு  சிறிய அளவில் திருடி வருகிறார். ஒருமுறை திருட்டு வழக்கில் சிக்கும் விஷாலை, ஆனந்த்ராஜ் வந்து மீட்டுச் செல்கிறார். அதுவரை ஆனந்த்ராஜ் தான் பெரிய ஆள் என்று நினைத்துக் கொண்டிருந்த விஷால், காவல் நிலையத்திற்கு சென்று வந்த பிறகு போலீஸாக இருந்தால் யாரும் கேள்வி கேட்க முடியாது என்று போலீசாக வேண்டும் என்று ...

Read More »

நயன்தாரா, திரிஷா வழியை பின்பற்றும் தமன்னா!

தமிழில் முன்னணி நடிகையாக வலம் தமன்னா, அடுத்ததாக நயன்தாரா, திரிஷா வழியை பின்பற்றி படங்களை தேர்வு செய்து நடித்து வருகிறார். நயன்தாரா, திரிஷா போன்ற முன்னணி கதாநாயகிகள், பெண்களின் கதாபாத்திரங்களுக்கு முக்கியத்துவம் அளிக்கும் படங்களில் நடித்து வருகிறார்கள். அந்த வரிசையில் இப்போது தமன்னாவும் இணைந்து இருக்கிறார். அவர் நகைச்சுவை கலந்த புதிய திகில் படத்தில் நடிக்கிறார். படத்துக்கு இன்னும் பெயர் சூட்டப்படவில்லை. `அதே கண்கள்’ படத்தை இயக்கிய ரோஹின் வெங்கடேசன், இந்த படத்தை டைரக்டு செய்கிறார். படத்தை பற்றி இவர் கூறியதாவது:- தமன்னா தனக்கென ...

Read More »