திரைமுரசு

பெற்ற வயிறு கலங்கியது: தனுஷ் அம்மா

தனுஷ் தங்கள் மகன் என சொந்தம் கொண்டாடிய விஷயத்தை என்னிடம் யாராவது கேட்கும் போது அதிக வலியை சுமந்தேன் என்று தனுஷின் அம்மா விஜயலட்சுமி கூறினார். நடிகர் தனுஷ் தங்களின் மகன் என்றும் கடந்த 2002ஆம் ஆண்டு அவர் தங்களை விட்டு பிரிந்து சென்றதாகவும் மேலூரை சேர்ந்த கதிரேசன்- மீனாட்சி தம்பதியினர் மேலூர் குற்றவியல் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தனர். இந்த வழக்கை ரத்து செய்து உயர்நீதிமன்ற மதுரைக்கிளை நேற்று(21) உத்தரவிட்டது. இதுபற்றி நடிகர் தனுஷின் அம்மா, விஜயலட்சுமி கூறும்போது, ‘என் பிள்ளையை வேறொருவர் சொந்தம் ...

Read More »

மக்களுக்கு எது தேவை என அரசு முடிவு செய்யட்டும் – சன்னி லியோன்

ஆபாச நடிகையான சன்னி லியோன், பாலிவுட்டில் கவர்ச்சி நடிகையாக வலம் வருகிறார். சினிமாவில் மட்டுமல்லாது விளம்பர படங்களிலும் கல்லா கட்டி வருகிறார். சமீபத்தில் இவர் காண்டம் விளம்பரம் ஒன்றில் நடித்திருக்கிறார். இதற்கு பெண்கள் அமைப்புகள் உள்ளிட்ட சிலர் எதிர்ப்பு தெரிவித்துள்ளதோடு, இதுபோன்ற விளம்பரங்களை இந்தியாவில் தடை செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர். இந்த எதிர்ப்பு பற்றி சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற சன்னி லியோனிடம் கேட்டபோது, அவர் கூறியதாவது. ‛‛ஒரு நாட்டில் உள்ள குடிமகனுக்கு எது வேண்டும், வேண்டாம் என்பதை அந்நாட்டு அரசு ...

Read More »

வெளிநாடு செல்ல அனுமதிக்க வேண்டும்: குஷ்பு

நான் குடும்பத்துடன் வெளிநாடு செல்லதற்கு அனுமதிக்க வேண்டும் என்று மதுரை உயர்நீதிமன்றில்  குஷ்பு மனு அளித்துள்ளார். இந்த மனு விரைவில் விசாரணைக்கு வருகிறது. நடிகை குஷ்பு மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருப்பதாவது:- கடந்த 2011-ம் ஆண்டு நடந்த தமிழக சட்டசபை தேர்தலின் போது தேனி மாவட்டம் ஆண்டிபட்டி பகுதியில் பிரசாரம் செய்தேன். அப்போது தேர்தல் விதிகளை மீறியதாக ஆண்டிபட்டி காவல் துறை  என் மீது வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கு நிலுவையில் இருந்ததால் எனது கடவுச் சீட்டை புதுப்பித்துத் தர மறுக்கப்பட்டது. இது ...

Read More »

நடிகை ரம்யாவுக்கு எதிரான தேச துரோக வழக்கு தள்ளுபடி!

கர்நாடகாவில் நடிகை ரம்யாவுக்கு எதிரான தேச துரோக வழக்கில் ஆதாரங்கள் இல்லாததால் வழக்கை நீதிபதி தள்ளுபடி செய்தார். பிரபல கன்னட நடிகை ரம்யா. இவர் மண்டியா தொகுதி முன்னாள் எம்.பி. ஆவார். கடந்த 2016-ம் ஆண்டு தான் பாகிஸ்தான் சென்று வந்ததாகவும், அங்குள்ள மக்கள் நல்லவர்கள் என்று கூறியதுடன், பாகிஸ்தானுக்கு ஆதரவாக கருத்துக்களை தெரிவித்து இருந்தார். இதைத்தொடர்ந்து நடிகை ரம்யா மீது தேச துரோக வழக்குப்பதிவு செய்ய வக்கீல் விட்டல் கவுடா என்பவர் குடகு மாவட்டம் சோமவார் பேட்டை ஜூடிசியல் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் வழக்கு ...

Read More »

எழுத்தாளராக நடிப்பது மகிழ்ச்சி: சாந்தினி

எழுத்தாளராக நடிப்பதில் மிகவும் மகிழ்ச்சியுள்ளதாக நடிகை சாந்தினி தமிழரசன் கூறியுள்ளார். தமிழ் சினிமாவில் தற்போது 10-க்கும் மேற்பட்ட படங்களில் பிசியாக நடித்து வருபவர் சாந்தினி தமிழரசன். எந்தவித வேடங்களிலும் நடிக்கும் இவர் பல படங்களில் கவுரவ வேடங்களிலும் நடிக்கிறார். ‘கடுகு’ படத்தில் ஒரு பாடலுக்கு ஆடினார். இப்போது, தரணிதரன் தனது பர்மா பிக்சர்ஸ் சார்பில் தயாரித்து இயக்கும் ‘ராஜா ரங்குஸ்கி’ படத்தில் சாந்தினி எழுத்தாளராக நடிக்கிறார். இதுபற்றி கூறிய அவர்… ‘ரங்குஸ்கி’ என்பது பிரபல எழுத்தாளர் சுஜாதாவின் புனை பெயர். இந்த படத்தில் நான் ...

Read More »

நாம் வாழும் காலத்தில் தீவிரவாதம் வளர்ந்து வருவது கவலையளிக்கிறது

இந்தி திரை உலகில் வித்தியாசமான கதைக்களங்களைக் கொண்ட சினிமாக்களை தேர்ந்தெடுத்து, சிறப்பாக நடித்து பெயரைத் தட்டிச் செல்பவர் சோஹா அலிகான். இந்தி திரை உலகில் வித்தியாசமான கதைக்களங்களைக் கொண்ட சினிமாக்களை தேர்ந்தெடுத்து, சிறப்பாக நடித்து பெயரைத் தட்டிச் செல்பவர் சோஹா அலிகான். இளம் வயதிலே குணால் கெமுவை திருமணம் செய்து கொண்ட இவர், இப்போதும் முன்னணி நடிகைகளின் பட்டியலில் இடம் பிடித்திருக்கிறார். திருமணத்திற்கு பிறகு தனது நடிப்பில் ஏற்பட்டிருக்கும் மாற்றங்கள் பற்றி அவர் சொல்லக்கேட்போம்! * நான் 12 ஆண்டுகளாக நடித்துக் கொண்டிருக்கிறேன். திருமணத்திற்கு ...

Read More »

சமூக வலைதளங்களில் நடிகர்–நடிகைகளின் முகப்பு படங்கள் -சுருதிஹாசன் கண்டனம்

‘‘டுவிட்டர் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் சிலர் தங்கள் படங்களுக்கு பதிலாக நடிகர்–நடிகைகளை முகப்பு படங்களாக வைத்து அவதூறு பரப்பும் செயல்களில் ஈடுபட்டு வருகிறார்கள்’’ என்று நடிகை சுருதிஹாசன் கண்டனம் தெரிவித்தார். இதுகுறித்து நடிகை சுருதிஹாசன் அளித்த பேட்டி வருமாறு:– விமர்சனங்கள் ‘‘நடிகர்–நடிகைகளின் பின்புலங்கள், அவர்கள் நடித்துள்ள படங்கள், அவர்களின் திறமைகள் போன்ற எதுவும் தெரியாமலேயே சிலர் சமூக வலைதளங்களில் விமர்சித்து வருகிறார்கள். அவதூறுகளும் பரப்புகிறார்கள். இதற்கு முக்கியத்துவம் கொடுக்க கூடாது என்பது எனது கருத்து. நம்மை பற்றி தெரிந்தவர்கள் விமர்சனம் செய்தால் மட்டுமே அதனை ...

Read More »

அஸ்வின் சரவணன் இயக்கத்தில் எஸ்.ஜே.சூர்யா

நயன்தாரா நடிப்பில் வெளிவந்து வெற்றிநடை போட்ட படம் ‘மாயா’. இப்படத்தை அஸ்வின் சரவணன் என்பவர் இயக்கியிருந்தார். இப்படம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் அடைந்த பெரிய வெற்றியைத் தொடர்ந்து, அஸ்வின் சரவணனுக்கு பட வாய்ப்புகளும் அதிகமாக வந்தது. அந்த வரிசையில் தன்னுடைய அடுத்த படத்தை எஸ்.ஜே.சூர்யாவை வைத்து இயக்கவுள்ளார். இப்படத்திற்கு ‘இறவாக்காலம்’ என்று பெயர் வைத்துள்ளனர். எஸ்.ஜே.சூர்யாவுக்கு ஜோடியாக ஷிவதா, வாமிகா காஃபி ஆகியோர் நடிக்கின்றனர். ரான் யத்தன் யோகான் என்பவர் இசையமைக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கி நடைபெற்று வருகிறது. விரைவில் இப்படம் குறித்து ...

Read More »

காற்று வெளியிடை – திரை விமர்சனம்

போர் விமான பைலட் ஒருவரின் வாழ்க்கையில் காதல் புயல் அடித்தால்..? அதுதான் ‘காற்று வெளியிடை’. காஷ்மீர் மாநிலம் ஸ்ரீநகரில் இந்திய ராணுவப் போர் விமானியாகப் பணியாற்றுபவர் வருண் (கார்த்தி). அதே ஊரில் மருத்துவராகப் பணியில் சேருகிறார் லீலா (அதிதி ராவ்). ஒரு விபத்தில், வருணுக்குக் காயம் ஏற்பட, லீலா சிகிச்சை அளிக்கிறார். இருவருக்கும் காதல் வருகிறது. வரு ணின் ஆணாதிக்க, முரட்டுப் போக்கு லீலாவைக் கசப்படையச் செய்தாலும் முரண்பாடுகளுக்கு இடையில் காதல் வளர்கிறது. முரண்பாடு முற்றும்போது பிரிவு ஏற்படுகிறது. பிறகு என்ன ஆயிற்று என்பதுதான் ...

Read More »

சண்டை வடிவமைப்புக்கான தேசிய விருது அறிமுகம்

64வது தேசிய திரைப்பட விருதுகள் பட்டியலில் சிறந்த சண்டை வடிவமைப்புக்கான தேசிய விருதை அறிமுகம் செய்துள்ளார்கள். 64-வது தேசிய திரைப்பட விருதுகள் டெல்லியில்07 ஆம் திகதி அறிவிக்கப்பட்டது. இதில் சிறந்த சண்டை வடிவமைப்பு என்ற விருதை இம்முறை தேசிய விருதுகள் பட்டியலில் சேர்த்துள்ளார்கள். சிறந்த சண்டைக் கலைஞருக்கான முதல் தேசிய விருதை ‘புலிமுருகன்’ படத்தின் சண்டைக்காட்சியமைப்புகாக பீட்டர் ஹெய்ன் பெற்றுள்ளார். வைசாக் இயக்கத்தில் மோகன்லால், கமாலினி முகர்ஜி, ஜெகபதி பாபு உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான படம் ‘புலிமுருகன்’. வசூலில் பெரும் வரவேற்பைப் பெற்ற இப்படத்தின் ...

Read More »