திரைமுரசு

பாடகி சின்மயின் துணிச்சலை பாராட்டுகிறேன்!-நதியா

உலக அளவில் பெண்கள் தங்களுக்கு எதிராக நடைபெற்ற பாலியல் குற்றங்கள் குறித்து metoo மூலம் தெரிவித்து வருகிறார்கள். அந்த வகையில் தமிழகத்தில் பாடகி சின்மயி தனக்கு ஏற்பட்ட பாலியல் தொந்தரவு குறித்து தெரிவித்த கருத்து பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. சின்மயி குற்றசாட்டு குறித்து நடிகை நதியா கூறுகையில், இப்படி பல பெண்கள் முன்வந்து தங்களுக்கு நடந்த அநீதிகள் குறித்து பேசினால், குற்றம் செய்தவரின் பெயரை வெளியிட்டால் அவர்களுக்கு பயம் வரும் அதனால் பெண்கள் முன்வந்து இதுபோன்று பேசவேண்டும். ஆண்கள் தங்கள் உரிமைக்காக பேசுகின்றனர். அதுபோல் ...

Read More »

நான் அன்றும் பேசினேன்; இன்றும் பேசுகிறேன்; என்றும் பேசுவேன்!-ஐஸ்வர்யா ராய்

முன்னாள் உலக அழகி ஐஸ்வர்யா ராய் மீ டூ பிரச்சாரத்துக்கு ஆதரவாக பேசியுள்ளார்.  பாலியல் துன்புறுத்தலுக்கு எதிரான மீ டூ (#MeTooIndia) இயக்கம் இந்தியாவில் வலுப்பெற்று வருகிறது. கடந்த சில நாட்களாக செய்தி ஊடக நிறுவனங்கள், சினிமாத் துறை, நாடகக் கலைஞர்கள் எனப் பல்வேறு துறையைச் சேர்ந்த பெண்களும், தங்களுக்கு நேர்ந்த பாலியல் கொடுமைகள் குறித்தும், அதைச் செய்தவர்கள் குறித்தும் வெளிப்படையாகப் பேசி வருகின்றனர். இந்நிலையில், மும்பையில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பேசிய ஐஸ்வர்யா ராய், "நான் கடந்த காலத்தில் இது குறித்து பேசியிருக்கிறேன். ...

Read More »

திருநங்கை வேடத்தில் விஜய் சேதுபதி !

சூப்பர் டீலக்ஸ் படத்தில் விஜய் சேதுபதி நடித்த திருநங்கை தோற்றத்தை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். கதாநாயகர்கள் பலரும் அதிரடி கதைகளை விரும்பும்போது விஜய் சேதுபதி வித்தியாசமான கதாபாத்திரங்களை தேர்வு செய்து நடிக்கிறார். நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம், பீட்சா, சூது கவ்வும், இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா, திருடன் காவல் துறை , நானும் ரவுடிதான், தர்மதுரை, விக்ரம் வேதா என்று அழுத்தமான கதையம்சம் உள்ள பல படங்கள் அவருக்கு அமைந்தன. சமீபத்தில் திரைக்கு வந்த 96 படத்தில் காதலில் தோல்வி அடைந்தவராக நடித்துள்ள கதாபாத்திரத்துக்கு பாராட்டுகள் ...

Read More »

பார்வையற்றவன் பார்த்த கொலை!

ஒரு கொலை நிகழ்கிறது. அந்தக் கொலையைச் செய்தவர் யாரென்று அவனுக்குத் தெரியும். அந்தக் கொலையை எப்படி மூடி மறைக்கிறார்கள் என்பதும் அவனுக்குத் தெரியும். ஆனால், அந்தக் கொலைக்கு அவன் சாட்சியாக முடியாது. காரணம், அவன் ஒரு பார்வையற்ற மாற்றுத்திறனாளி. கொலைக்குச் சாட்சியாக மாறும் `பார்வையற்றவனின் மெல்லிசை’தான் இந்த `அந்தாதுன்’. பார்வைற்ற மாற்றுத்திறனாளியான ஆகாஷ் (ஆயுஷ்மான் குரானா) பியானோ கலைஞன். லண்டன் சென்று மிகப்பெரிய பியானோ கலைஞனாக வேண்டும் என்பது அவனின் கனவு. சாலை விபத்தொன்றில், சோபி (ராதிகா ஆப்தே) பழக்கமாகிறாள். சோபியின் ஹோட்டலில் பியானோ ...

Read More »

போர்முனையும் பேனா போராளியும்!

‘த சண்டே டைம்ஸ்’ என்ற இங்கிலாந்து நாளிதழின் போர்க்களச் செய்தியாளராகப் பணியாற்றிய மேரி கால்வின் ஒரு அமெரிக்கர். துணிச்சல் அவரது தனி அடையாளம். உலகத்தில் எங்கே போர் மூண்டாலும் அங்கே களமிறங்கி ரத்தமும் சதையுமாகப் போரின் அவலங்களை ஆதாரத்துடன் வெளியிடுவார். சொந்த மக்களைக் கொன்றொழிக்கும் அரசுகளின் கோர முகத்தை வெளிப்படுத்தியதற்காக அச்சுறுத்தலுக்கு ஆளானார். பரிசாக உடலில் பல காயங்களைப் பெற்றதுடன் ஒரு கண்ணையும் இழந்திருக்கிறார். கொசோவோ, செசன்யா, ஜிம்பாப்வே அரபு நாடுகள் எனத் தொடர்ந்த போர்முனைகளின் வரிசையில் அவர் இலங்கையில் செய்தி சேகரிக்கச் சென்றபோதுதான் ...

Read More »

“அப்பாவுக்கு ‘சேது’; எனக்கு ‘வர்மா’!” – ஜூனியர் விக்ரம்

“இதெல்லாம் இவ்வளவு வேகமா நடக்குமாங்கிறதே எனக்கு ஒரு கனவு போலத்தான் இன்னும் இருக்கு. ‘சேது’ படத்துக்கு முன்பான பத்து வருஷங்களும் என் அப்பாவுக்கு அவ்வளவு கஷ்டமான காலம். அப்போதான் நான் பிறந்தேன். பாலா மாமாதான் என் அப்பாவோட எல்லாக் கனவுகளுக்கும் ஒரே படத்தின் மூலம் உயிர் கொடுத்தவர். திடீர்னு கட் பண்ணினா, அதே பாலா மாமா இப்போ என்னையும் ஹீரோவாக்கி, ‘வர்மா’ படம் டைரக்ட் பண்ணிட்டிருக்கார். இது ரெண்டுக்கும் பின்னால கடவுள்னு ஒருத்தர் இருக்கார்… காரணம்னு ஏதோ இருக்கு… அதை எனக்கு சிம்பிளா சொல்லத் ...

Read More »

ராகுல் காந்தியை விரும்பிய நடிகை கரீனா கபூர்!

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை இந்தி நடிகை கரீனா கபூர் விரும்பியதாக ஒரு பத்திரிகையாளர் தெரிவித்துள்ளார். பிரபல இந்தி நடிகை கரீனா கபூர், பிரபல இந்தி நடிகர் சயீப் அலிகானை காதல் திருமணம் செய்து கொண்டுள்ளார். இந்த தம்பதிக்கு குழந்தையும் உள்ளது. ஆனால், சயீப் அலிகான் மீது காதல்வயப்படுவதற்கு முன்பு, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை கரீனா கபூர் விரும்பி உள்ளார். இந்த தகவலை ஒரு பத்திரிகையாளர் தெரிவித்துள்ளார். அவர், சோனியா காந்தி குடும்பத்துக்கும், கரீனா கபூர் குடும்பத்துக்கும் மிகவும் நெருக்கமானவர். இரு குடும்பங்களைப் ...

Read More »

சர்வதேச திரைப்பட விழாவுக்கு தனுஷின் வடசென்னை!

வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் – ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் உருவாகி இருக்கும் வடசென்னை படம், சீனாவின் பிங்யோ சர்வதேச திரைப்பட விழாவில் திரையிட தேர்வாகியுள்ளது. வுண்டர்பார் பிலிம்ஸ் சார்பில் தனுஷ் தயாரிப்பில் உருவாகி வரும் படம் `வடசென்னை’. வெற்றிமாறன் இயக்கியிருக்கும் இந்த படத்தில் தனுஷ் நாயகனாகவும், ஐஸ்வர்யா ராஜேஷ் நாயகியாகவும் நடித்துள்ளனர். இயக்குநர் அமீர், சமுத்திரக்கனி, ஆண்ட்ரியா, டேனியல் பாலாஜி, கிஷோர், கருணாஸ், பவான், ராதா ரவி, சுப்ரமணியன் சிவா, சீனு மோகன், டேனியல் அனி போப் உள்ளிட்ட பலரும் முக்கிய கதபாத்திரங்களில் நடித்துள்ளனர். ...

Read More »

சீன நடிகருக்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ்!

சீன நடிகர் ஒருவருக்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடிக்க இருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இயக்குநர் பிரியதர்ஷனின் கனவுப்படம் ‘மரக்கார்: அரபிக்கடலிண்டே சிம்ஹம்’. 16-ம் நூற்றாண்டில் கேரளாவில் வாழ்ந்த கடற்படைத் தலைவனான குஞ்சலி மரக்கார் என்பவரின் வாழ்க்கை வரலாறுதான் இந்தப் படம். பிரிட்டிஷ்காரர்களைத் தீவிரமாக எதிர்த்தவர் இவர். குஞ்சலி மரக்கார் வேடத்தில், மோகன்லால் நடிக்கிறார். அவருடைய இளம் வயது கதாபாத்திரத்தில், மோகன்லாலின் மகன் பிரணவ் மோகன்லால் நடிக்கிறார். முக்கியக் கதாபாத்திரத்தில் பிரபு நடிக்கிறார். ‘சிறைச்சாலை’ படத்துக்குப் பிறகு 22 வருடங்கள் கழித்து மோகன்லால் – பிரபு ...

Read More »

‘பரியேறும் பெருமாள்’ தமிழ் சினிமாவில் ஒரு மைல் கல்!- சாரு நிவேதிதா

‘பரியேறும் பெருமாள்’ தமிழ் சினிமாவில் ஒரு மைல் கல். தமிழ் சினிமாவில் நிகழ்ந்துள்ள ஓர் அற்புதம் என்று எழுத்தாளர் சாரு நிவேதிதா கூறியுள்ளார். மாரி செல்வராஜ் இயக்கத்தில் நாளை (செப்டம்பர் 28) ரிலீஸாக இருக்கும் படம் ‘பரியேறும் பெருமாள்’. கதிர் – ஆனந்தி ஜோடியாக நடித்துள்ள இந்தப் படத்தில், யோகி பாபு முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இயக்குநர் பா.இரஞ்சித்தின் நீலம் புரொடக்‌ஷன்ஸ் இந்தப் படத்தைத் தயாரித்துள்ளது. திருநெல்வேலி சுற்று வட்டாரப் பகுதியை சார்ந்த ஒரு கிராமத்து இளைஞனின் வாழ்வில் நடந்த சுவாரஸ்யமான சம்பவங்களை அடிப்படையாக ...

Read More »