திரைமுரசு

அரவிந்த்சாமியை தேடும் மதுரை, தூத்துக்குடி பெண்கள்!

செல்வா இயக்கத்தில் `வணங்காமுடி’ படத்தில் நடித்து வரும் அரவிந்த்சாமியை மதுரை மற்றும் தூத்துக்குடியை சேர்ந்த இரு பெண்கள் தேடி வருகிறார்களாம். அரவிந்த் சாமி தற்போது `சதுரங்க வேட்டை 2′, `வணங்காமுடி’, `பாஸ்கர் ஒரு ராஸ்கல்’, `நரகாசூரன்’ உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார். செல்வா இயக்கத்தில் உருவாகி வரும் படம் ‘வணங்காமுடி’. அரவிந்த்சாமி நாயகனாக நடிக்கும் இதில் ரித்திகா சிங், சிம்ரன், நந்திதா ஸ்வேதா, சாந்தினி தமிழரசன், கணேஷ் வெங்கட்ராம், தம்பி ராமைய்யா, ஹரிஷ் உத்தமன் ஆகியோர் முக்கிய பாத்திரங்களில் நடிக்கிறார்கள். இவர்களில் அரவிந்த்சாமி மனைவியாக ...

Read More »

சமூக விழிப்புணர்வு படத்திற்கு சான்றிதழ் வழங்க தணிக்கைக் குழு மறுப்பு!

சமூக விழிப்புணர்வு படத்திற்கு சான்றிதழ் தர தணிக்கைக் குழு மறுப்பு தெரிவிப்பதாக படத்தின் இயக்குநர் மனவேதனையுடன் தனது வருத்தத்தை தெரிவித்திருக்கிறார். எக்ஸட்ரா எண்டர்டெய்ன்மெண்ட் சார்பில் வி. மதியழகன், ஆர்.ரம்யா தயாரித்திருக்கும் ‘மறைந்திருந்து பார்க்கும் மர்மமென்ன’ படத்திற்கு சென்ஸார் மறுக்கப்பட்டிருக்கிறது. இப்படத்தில் ‘திலகர்’ படத்தில் நடித்த துருவா ஹீரோவாகவும், ஐஸ்வர்யா தத்தா, அஞ்சனா உள்ளிட்ட இரண்டு பேர் நாயகிகளாகவும் நடித்துள்ளனர். இவர்களுடன் ஜேடி சக்ரவர்த்தி, சரண்யா பொன்வண்ணன், ராதாரவி, நாகிநேடு, மனோபாலா, அருள்தாஸ், ‘மைம்’ கோபி, ‘சதுரங்க வேட்டை’ புகழ் வளவன், ‘நான் மகான் அல்ல’ ...

Read More »

நீச்சல் உடைக்கு மாறிய கேத்தரின் தெரசா

பட உலகில் நுழைந்தபோது நான் கவர்ச்சி காட்ட மாட்டேன் என்று கூறிவந்த கேத்தரின் தெரசா தற்போது தனது கொள்கையை தளர்த்தி நீச்சல் உடையில் வரத் தொடங்கியிருக்கிறார். ‘மெட்ராஸ்’ படத்துக்குப் பிறகு ‘கடம்பன்’ படத்தில் கேத்தரின் தெரசா நடித்தார். தற்போது தமிழில் ‘கதாநாயகன்’ படத்தில் நடிக்கிறார். இது தவிர தெலுங்கு படங்களிலும் நடித்து வருகிறார். பட உலகில் நுழைந்தபோது ‘நான் கவர்ச்சி காட்ட மாட்டேன். உடை அணிவதில் கட்டுப்பாட்டை மீற மாட்டேன்’ என்று கூறிய கேத்தரின் தெரசா இப்போது தெலுங்கு படங்களுக்காக தனது கொள்கையை தளர்த்தி ...

Read More »

படப்பிடிப்பின்போது பிரபல நடிகர் மஞ்சு விஷ்ணு படுகாயம்

மலேசியாவில், படப்பிடிப்பின்போது பிரபல தெலுங்கு நடிகர் மஞ்சு விஷ்ணு படுகாயம் அடைந்தார். பிரபல தெலுங்கு நடிகர் மோகன் பாபுவின் மகனும், நடிகருமான மஞ்சு விஷ்ணு நடிக்கும் ‘அச்சாரி அமெரிக்கா யாத்ரா’ என்ற தெலுங்கு படத்தின் படப்பிடிப்பு மலேசியாவில் நடந்து வருகிறது. இதன் ஒரு காட்சிக்காக கோலாலம்பூர் நகர சாலையில் அவர் மோட்டார் சைக்கிளில் வேகமாக செல்வது போன்று படம் பிடிக்கப்பட்டது. அப்போது யாரும் எதிர்பாராத வகையில் அவருடைய மோட்டார் சைக்கிள் சாலையில் சறுக்கியவாறு கீழே விழுந்தது. இதில் மஞ்சு விஷ்ணு படுகாயம் அடைந்தார். இதையடுத்து ...

Read More »

இயக்குநர் சங்க தேர்தலுக்கான வாக்குப் பதிவு

தமிழ்த் திரைப்பட இயக்குநர்கள் சங்கத் தேர்தலுக்கான வாக்குப் பதிவு சென்னை வடபழநியில் உள்ள இசை அமைப்பாளர்கள் சங்க அலுவலகத்தில் தொடங்கியுள்ளது. தமிழ் திரைப்பட இயக்குநர்கள் சங்கத்துக்கு 2 வருடத்துக்கு ஒரு முறை தேர்தல் நடப்பது வழக்கம். தற்போதைய நிர்வாகிகளின் பதவி காலம் நிறைவடைந்ததை அடுத்து புதிய நிர்வாகிகளுக்கான தேர்தல் சென்னை வடபழநியில் உள்ள இசை அமைப்பாளர்கள் சங்கத்தில் இன்று நடைபெற்று வருகிறது. காலை 8 மணிக்கு தொடங்கியுள்ள வாக்குப் பதிவு மாலை 5 மணி வரை நடைபெறும். பின்னர் மாலை 6 மணிக்கெல்லாம் முடிவுகள் ...

Read More »

அரசியல் கட்சி தொடங்குவதற்கு என்னை கட்டாயப்படுத்த வேண்டாம்: கமல்ஹாசன்

அரசியல் கட்சி தொடங்குவதற்கு என்னை கட்டாயப்படுத்த வேண்டாம் என்று மனதில் பட்டதை சொல்வதாக தந்தி டி.வி.க்கு நடிகர் கமல்ஹாசன் பேட்டி அளித்துள்ளார். தந்தி டி.வி.யில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு நடிகர் கமல்ஹாசன் பதில் அளித்துள்ளார். கமல்ஹாசன் அளித்த பதில்களின் முக்கிய அம்சங்கள் வருமாறு:- நான் சிறுவயதாக இருக்கும் போதே எங்கள் வீட்டில் பலவிதமான கருத்துக்கள் பற்றி விவாதம் நடக்கும். பரந்த மனதுடன் கருத்துக்களை பரிமாறிக் கொள்வோம். அதில் ஆத்திகம், நாத்திகம் எல்லாம் இடம் பெறும். அதன் மூலம்தான் எனக்கு தமிழ் மீது ...

Read More »

`சங்கமித்ரா’ பிரம்மாண்ட படத்தில் சத்யராஜ்?

`பாகுபலி’ படத்தை தொடர்ந்து சுந்தர்.சி இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவாகவிருக்கும் `சங்கமித்ரா’ படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் சத்யராஜ் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. எஸ்.எஸ்.ராஜமவுலி இயக்கத்தில் கடந்த ஏப்ரல் மாதம் ரிலீசாகி தற்போது வரை வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் படம் `பாகுபலி’-2. வசூல் ரீதியாகவும் மாபெரும் வரவேற்பை பெற்றுள்ள `பாகுபலி’ படத்தின் இரண்டாவது பாகம் உருவாகுவதற்கு சத்யராஜின் கட்டப்பா கதாபாத்திரம் முக்கிய காரணமாக அமைந்தது. இந்நிலையில், `பாகுபலி’ படத்தின் மூலம் அனைத்து தரப்பு மக்களையும் கவர்ந்த சத்யராஜ், மற்றுமொரு வரலாற்றுக் கதையில் நடிக்க இருக்கிறாராம். சுந்தர்.சி இயக்கத்தில் பிரம்மாண்டமாக ...

Read More »

சினிமாவாகிறது ஐபிஎஸ் அதிகாரி ரூபாவின் வாழ்க்கை!

சொத்துகுவிப்பு வழக்கில் சிறைத் தண்டனை பெற்ற சசிகலா பெங்களூர பரப்பண அக்ரஹார சிறையில் தண்டனை அனுபவித்து வருகிறார். அவர் 2 கோடி ரூபாய் லஞ்சம் கொடுத்து சிறைக்குள் உல்லாச வாழ்க்கை வாழ்ந்துள்ளார் என்று கர்நாடக மாநில சிறைத்துறை டிஐஜி ரூபா பரபரப்பு தகவல்களை வெளியிட்டார். அதைத் தொடர்ந்து அதற்கான வீடியோ ஆதாரங்களும் வெளிவந்தன. ரூபாவின் துணிச்சலையும், நேர்மையையும் பாராட்ட வேண்டிய அரசு அவரை பணியிடமாற்றம் செய்தது. பல்வேறு தரப்பிலிருந்தும் அவருக்கு மிரட்டல் வந்தது. கர்நாடக டிஜிபி அவர் மீது மானநஷ்ட வழக்கு போட்டுள்ளார். ஒரு ...

Read More »

போதை பொருள் விவகாரம்: சார்மியை பெண் அதிகாரிகள் மட்டுமே விசாரிக்க உத்தரவு!

போதை பொருள் விவகாரத்தில் நடிகை சார்மியை பெண் அதிகாரிகள் மட்டுமே விசாரிக்க வேண்டும் என்று ஐதராபாத் ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. தெலுங்கானா மாநிலத்தில் போதை பொருட்கள் சப்ளை செய்ததாக தென் ஆப்பிரிக்காவை சேர்ந்த கெல்வின், ஐதராபாத்தை சேர்ந்த பியூஸ் உள்ளிட்டோரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையின் அடிப்படையில் தெலுங்குபட உலகின் நடிகர்-நடிகைகள் மற்றும் கலைஞர்களுக்கு தெலுங்கானா மாநிலம் கலால் வரித்துறையின் சிறப்பு புலனாய்வு குழு சம்மன் அனுப்பி விசாரணை நடத்தி வருகிறது. அந்த வகையில் நடிகை சார்மிக்கும் விசாரணைக்கு ஆஜராகும்படி சம்மன் அனுப்பப்பட்டது. ...

Read More »

மெல்போர்ன் இந்திய திரைப்பட விழாவில் ஐஸ்வர்யாராய் – வித்யாபாலன்

இந்தியா 70-ஆம் ஆண்டு சுதந்திர தினத்தை கொண்டாட இருக்கும் நிலையில், அவுஸ்ரேலியாவின் மெல்போர்ன் நகரில் இந்தியா-70 என்ற பெயரில் இந்திய திரைப்பட விழா நடக்கயிருக்கிறது. இதில் தரமான இந்திய படங்கள் மற்றும் ஆவணப்படங்கள் திரையிடப்பட உள்ளன. இந்த நிகழ்ச்சியில் ஹிந்தி நடிகைகளான ஐஸ்வர்யாராய், வித்யாபாலன் ஆகியோர் கலந்து கொள்கிறார்கள். இந்த விழாவில், ஐஸ்வர்யா ராய், இந்திய தேசிய கொடியை அசைத்து திரைப்பட விழாவை தொடங்கி வைக்கிறாராம். அந்த வகையில், இந்திய தேசிய கொடியை அவுஸ்ரேலியாவில் பறக்க விடும் முதல் இந்திய பெண் பட்டியலில் இடம் ...

Read More »