உள்ளம் உருகுதய்யா… சூர்யா படத்தின் அடுத்த பாடல்

சூர்யா நடிப்பில் தற்போது உருவாகி இருக்கும் எதற்கும் துணிந்தவன் படத்தின் 2வது பாடலை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.

பாண்டிராஜ் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘எதற்கும் துணிந்தவன்’. இந்தப் படத்தின் நாயகியாக பிரியங்கா அருள் மோகன் நடித்துள்ளார். மேலும் சத்யராஜ், சரண்யா பொன்வண்ணன், தேவதர்ஷினி, இளவரசு, சுப்பு பஞ்சு, திவ்யா துரைசாமி, ஜெயப்பிரகாஷ் உள்ளிட்ட பலர் சூர்யாவுடன் நடித்துள்ளனர்.

சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இப்படம் பிப்ரவரி 4ஆம் தேதி வெளியாக இருக்கிறது. இப்படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் ‘வாடா தம்பி…’ என்ற பாடல் ஏற்கனவே வெளியாகி வைரலானது. இந்நிலையில் அடுத்த பாடலான உள்ளம் உருகுதய்யா என்ற பாடலை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். இந்த தற்போது ரசிகர்களை கவர்ந்து வருகிறது.
https://www.youtube.com/watch?v=ubIJEDUfE68