அவுஸ்திரேலியமுரசு

அவுஸ்திரேலியாவில் சேற்றில் “HELP” என எழுதி உயிர்தப்பிய தம்பதி!

அவுஸ்திரேலியாவின் வடக்குப் பகுதியில் சதுப்புநிலத்தில் சிக்கிக்கொண்ட தம்பதியும் அவர்களின் நாய்க்குட்டியும் அங்கிருந்து வெயியேற வழியில்லாமல் தவித்துக்கொண்டிருந்தனர். முதலைகள் நிறைந்த பகுதியில் அவர்களின் கார் பழுதாகி நின்றுள்ளது. இதனால் இரவை அங்கு கழிக்க நேரிட்டது. அங்கிருந்து எப்படி வெளியேறுவது எனத் திக்குமுக்காடிய நேரத்தில், அற்புதமான யோசனை அவர்களுக்குத் தோன்றியது. உதவி நாட HELP எனும் வார்த்தையை அவர்கள் சேற்றில் செதுக்கினர். அதன் அருகில் இருந்த பகுதியில் தீ மூட்டினர். அந்தச் செயல் பலன் தந்தது. அந்த வழியே பறந்து சென்ற தேடல், மீட்பு விமானம், அந்த ...

Read More »

ஆஸ்திரேலியாவில் வீட்டில் வளர்த்த மான் தாக்கி ஒருவர் பலி!

ஆஸ்திரேலியாவில் வீட்டில் வளர்த்த சிவப்பு மானுக்கு உணவு கொடுக்கும் போது அது தாக்கியத்தில் சம்பவ இடத்திலேயே ஒருவர் பலியானார். ஆஸ்திரேலியாவின் விக்டோரியா மாகாணத்தின் வடகிழக்கு பகுதியில் உள்ள வான்கரட்டா நகரை சேர்ந்தவர் பவுல் மெக்டொனால்டு (வயது 47). இவர் தனது வீட்டில் சிவப்பு மான் ஒன்றை செல்லப்பிராணியாக வளர்த்து வந்தார். மிகப்பெரிய அளவில் வளரக்கூடிய இந்த சிவப்பு மான் ராட்சத கொம்புகளை கொண்டிருக்கும். பார்ப்பதற்கு மிகவும் மூர்க்கமாக இருக்கும். இந்த நிலையில் நேற்று அதிகாலை பவுல் மெக்டொனால்டு, மானுக்கு உணவு கொடுப்பதற்காக சென்றார். மான் ...

Read More »

ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் நகரம் அமைக்கப்பட்ட நாள்: ஏப்ரல் 18, 1912

ஆஸ்திரேலியாவில் உள்ள விக்டோரியா மாநிலத்தில் தலைநகரமான மெல்போர்ன் 1912-ஆம் ஆண்டு இதே நாளில் அமைக்கப்பட்டது. ஆஸ்திரேலியாவின் இரண்டாவது மிகப்பெரிய நகரம் ஆகும். 2006-ஆம் ஆண்டு கணக்கெடுப்பின்படி இந்நகரத்தின் மக்கள்தொகை 3.8 மில்லியன் ஆகும்.  

Read More »

பிரியா, நடேசலிங்கம் தம்பதி அவுஸ்திரேலியாவில் தங்கியிருக்க வாய்ப்பு கிட்டுமா?

அவுஸ்திரேலியாவில் நடைபெறும் பொதுத்தேர்தலில் தொழில் கட்சி வெற்றி பெற்றால், இலங்கைக்கு நாடு கடத்தப்படவுள்ள தமிழ் தம்பதியினர், நாட்டிலேயே தங்கியிருக்க வாய்ப்பு கிட்டும் என்று அந்த கட்சியின் ஆதரவாளர்கள் தெரிவித்துள்ளனர். பிரியா, நடேசலிங்கம் மற்றும் அவர்களின் இரண்டு பெண் பிள்ளைகள் ஆகியோர் கடந்த ஒரு வருட காலமாக தடுப்பில் வைக்கப்பட்டுள்ளார்கள். வீசா முடிந்த நிலையில், அவர்கள் வசித்து வந்த குயின்ஸ்லாந்தில் இருந்து அழைத்து வரப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில் தொழில் கட்சி தேர்தலில் வெற்றிப்பெற்றால், இந்த குடும்பத்தினர் மீண்டும் குயின்ஸ்லாந்தில் சென்று வசிக்கக்கூடியதாக இருக்கும் ...

Read More »

அவுஸ்திரேலியாவில் இருந்து திருப்பி அனுப்பப்பட்ட அகதி கொடூரமாக கொலை!

வியட்நாமிய அகதி ஒருவர் கடந்த வியாழக்கிழமை சொந்த ஊரில் கத்தியால் குத்தி கொலைசெய்யப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்படுகிறது. மனுஸ் தீவில் ஐந்து வருடங்களாக தடுத்து வைக்கப்பட்டிருந்த பின்னர் திருப்பி அனுப்பப்பட்ட அகதிக்கே இந்த நிலைமை ஏற்பட்டுள்ளர். சொந்த நாட்டில் உயிருக்கு அச்சுறுத்தலிருப்பதாகக்கூறி அவுஸ்திரேலியாவுக்கு வந்த குறிப்பிட்ட வியட்நாமிய அகதி அவுஸ்திரேலிய குடிவரவுக்கொள்கையின் பிரகாரம் மனுஸ் தீவுக்கு அனுப்பிவைக்கப்பட்டிருந்தார். அங்கு முகாமிலும் வெளியிலும் வைக்கப்பட்டிருந்த இந்த வியட்நாமிய அகதி சுமார் ஐந்து வருடங்களாக தன்னை அகதியாக ஏற்றுக்கொண்டு தஞ்சமளிக்கும்படி அவுஸ்திரேலிய அரசிடம் விண்ணப்பித்தார். இவரது விண்ணப்பங்கள் அனைத்தும் நிராகரிக்கப்பட்ட ...

Read More »

ஜூலியன் அசாஞ்ச்சை அவுஸ்திரேலியாவிற்கு அழைத்துவர வேண்டும் !

WikiLeaks நிறுவனர் ஜூலியன் அசாஞ்ச்சை அவுஸ்திரேலியாவிற்கு அழைத்துவர வேண்டும் என்று அவரின் தந்தை கேட்டுக்கொண்டுள்ளார். தமது மகன் கைது செய்யப்பட்ட விதம் கண்டு, தாம் அதிர்ச்சியடைந்ததாகவும் அவர் கூறினார். கடந்த 7 ஆண்டுகளாக லண்டனில் உள்ள எக்குவடோர் தூதரகத்தில் அடைக்கலமாகத் தங்கியிருந்த அசாஞ்ச்சை சில நாள்களுக்கு முன்னர் காவல் துறை யினர் கைது செய்தனர். அசாஞ்ச் விவகாரத்தை, அவுஸ்திரேலிய வெளியுறவு அமைச்சர் மாரிஸ் பேன் கவனித்து வருகிறார். இதற்கு முன்பாக அசாஞ்ச்சைத் தன்னிடம் ஒப்படைக்க ஆஸ்திரேலியா கோரிக்கை விடுக்கப் போவதில்லை என்றும், அந்த விவகாரம், ...

Read More »

உலகத் தமிழ் மக்களுக்கு புத்தாண்டு வாழ்த்துத் தெரிவித்த அவுஸ்திரேலிய பிரதமர்!

சித்திரைப் புத்தாண்டு நாளாகிய இன்றைய தினம் உலகத் தமிழ் மக்களுக்கு அவுஸ்திரேலிய பிரதமர் Scott Morrison தனது புத்தாண்டு நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் விசேட வாழ்த்துச் செய்தி ஒன்றினை வெளியிட்டுள்ளார். உலகெங்கும் பரந்து வாழும் தமிழ் மக்களாலும் சிறிலங்காவின் சிங்கள மக்களாலும் இன்றைய தினம் வசந்த காலத்தை வரவேற்கும் சித்திரைப் புத்தாண்டு நாள் கடைப்பிடிக்கப்படுகின்ற நிலையில் அவ்ஸ்திரேலியப் பிரதமர் தனது வாழ்த்துக்களை தமிழ் மக்களுக்குத் தெரிவித்திருக்கின்றார். அவுஸ்திரேலியாவில் அனைத்து கலாசாரங்களும் மதிக்கப்படுகின்ற நிலையில் ஆஸிவாழ் தமிழர்களுக்கும் மற்றும் உலகெங்கும் பரந்துவாழும் தமிழ் மக்களுக்கும் ...

Read More »

அவுஸ்ரேலியாவில் இரவு கேளிக்கை விடுதியில் முன் துப்பாக்கிச் சூடு!

அவுஸ்ரேலியா, மெல்பேணில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் நால்வர் காயமடைந்துள்ளனர்.  அதில் 37 வயதான பாதுகாப்பு காவலர் இறந்துவிட்டார்  காவல் துறையினர் உறுதிப்படுத்தியுள்ளனர். ”லவ் மெசின்” இரவு கேளிக்கை விடுதியின் வெளிப்புறத்தில்    இன்று (14) ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 3.20 மணியளவில் இத்துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் இடம்பெற்றது. Narre Warren South இலிருந்து ஆரோன் காலிட் ஓஸ்மணி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்,    ஆனால் பின்னர் அவர் மருத்துவமனையில் இறந்தார். 28 வயதான மனிதன் ஒரு மோசமான நிலையில் இருக்கிறார். ஒரு 50 வயது மனிதன் மற்றும் ...

Read More »

ஜுலியன் அசாஞ்சேவை கழட்டிவிட்டது அவுஸ்ரேலியா!

விக்கிலீக் நிறுவுநர் ஜுலியன் அசாஞ்சேவைத் எங்களிடம் ஒப்படைக்குமாறு கோரமாட்டோம் என அவுஸ்ரேலியப் பிரதமர் ஸ்காட் மொரிஸ்ஸன் கூறினார். ஏனைய அவுஸ்ரேலியக் குடிமக்களுக்கு தூதரகம் ஊடகச் செய்யும் செய்யக்கூடிய அனைத்து உதவிகளும் அசாஞ்சேக்கு வழங்கப்படும். பிரபல்மானவர் என்பதால் எதுவித சிறப்பு நடைமுறைகள் எதுவும் வழங்கப்படமாட்டாது. ஜுலியன் அசாஞ்சேவைத் எங்களிடம் ஒப்படைக்குமாறு கோரமாட்டோம். அது பிரித்தானியாவுக்கும் அமொிக்காவுக்கும் இடையிலான விவகாரம் என அவுஸ்ரேலியப் பிரதமர் ஸ்காட் மொரிஸ்ஸன் மேலும் கருத்து வெளியிட்டுள்ளார்.

Read More »

அவுஸ்திரேலியாவில் காத்திருக்கும் ஆபத்து!

அவுஸ்திரேலியாவில் Flu, மிக அதிகளவில் பாதிப்புக்களை ஏற்படுத்திவருவதாக தெரிவிக்கப்படுகின்றது. காலநிலை மாற்றத்தோடு அவுஸ்திரேலியாவில் வழக்கம்போல Flu பரவத்தொடங்கியுள்ளது. அதற்கமைய இவ்வருடம் குறைந்தது நாலாயிரம் பேரையாவது பலியெடுப்பதற்கான வாய்ப்புக்கள் உண்டு என்றும் மருத்துவ வட்டாரங்கள் எச்சரித்திருக்கின்றன. கடந்த வருடங்களுடன் ஒப்பிடும்போது இவ்வருடம் Flu தாக்கம் நினைத்துப்பார்க்கமுடியாதளவு வீச்சடைந்திருப்பதாக சுகாதாரத்துறை வட்டாரங்கள் கூறுகின்றது. கடந்த வருடம் மார்ச் மாதம் இதனால் பாதிக்கப்பட்டவர்கள் 3173 என்றும், இந்தவருடம் மார்ச் மாதம் பத்தாயிரம் பேராக பதிவாகியிருப்பதாகவும் தெரிவித்துள்ளன. நாட்டு மக்கள் அனைவரையும் தவறாது Flu தடுப்பூசியை போட்டுக்கொள்ளுமாறு அறிவுறுத்தியுள்ள சுகாதாரத்துறை ...

Read More »