அவுஸ்திரேலியமுரசு

தேசிய கீதத்தில் ஒற்றை வார்த்தையை மாற்றிய அவுஸ்திரேலியா! கிடைத்துள்ள கலவையான வரவேற்பு

பிரதமர் ஸ்காட் மோரிசன் கூறியதன்படி நாட்டின் பழங்குடி மக்களையும் பிரதிபலிக்கும் வகையில் ஆஸ்திரேலியா தனது தேசிய கீதத்தில் ஒரு வா ர்த்தையை மாற்றியுள்ளது. புத்தாண்டு தினத்தன்று அவுஸ்திரேலியாவின் பிரதமர் ஸ்காட் மோரிசன், “Advance Australia Fair” தேசிய கீதத்தின் இரண்டாவது வரியான “For we are young and free” என்பதை “For we are one and free” என்று மாற்றப்பட்டுள்ளதாக அறிவித்தார். இந்த மாற்றம் ஜனவரி 1 முதல் நடைமுறைக்கு வந்தது. அவுஸ்திரேலியாவை “பூமியில் மிகவும் வெற்றிகரமான பன்முக கலாச்சார நாடு” ...

Read More »

பிரிஸ்பேன் டெஸ்ட்: ஆஸ்திரேலியா அணியில் ஒரு மாற்றம்

பிரிஸ்பென் டெஸ்ட் போட்டிக்கான ஆஸ்திரேலியா அணியில் தொடக்க வீரர் வில் புகோவ்ஸ்கி காயம் காரணமாக இடம்பெறமாட்டார் என டிம் பெய்ன் தெரிவித்துள்ளார். ஆஸ்திரேலியா – இந்தியா அணிகளுக்கு இடையில் நான்கு போட்கள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. முதல் டெஸ்டில் ஆஸ்திரேலியாவும், 2-வது டெஸ்டில் இந்தியாவும் வெற்றி பெற்றது. 3-வது டெஸ்ட் டிராவில் முடிந்தது. 4-வது மற்றும் கடைசி டெஸ்ட் பிரிஸ்பேன் நகரில் நாளை தொடங்குகிறது. இந்த போட்டியில் வெற்றிபெறும் அணி தொடரை கைப்பற்றும். பிரிஸ்பேன் கபா மைதானத்தில் ஆஸ்திரேலியாவை வீழ்த்துவது ...

Read More »

ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் : முன்னணி வீரர்களை அடிலெய்டில் தனிமைப்படுத்த முடிவு

ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டியில் பங்கேற்கும் முன்னணி வீரர்கள் அனைவரும் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக 14 நாட்கள் தனிமைப்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. ஆண்டின் முதல் ‘கிராண்ட்ஸ்லாம்’ போட்டியான ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடர் அடுத்த மாதம் (பிப்ரவரி) 8-ந்தேதி முதல் 21-ந்திகதி வரை நடக்கிறது. போட்டியில் பங்கேற்க 1,270 வீரர், வீராங்கனைகள் மற்றும் பயிற்சியாளர், உதவியாளர்கள் அடுத்த வார இறுதியில் வர உள்ளனர். கொரோனா தடுப்பு நடவடிக்கையாக அவர்கள் அனைவரும் 14 நாட்கள் தனிமைப்படுத்தப்படுவார்கள். தங்குவதற்கு மெல்போர்னில் ஓட்டல் அறைகள் பற்றாக்குறையாக இருப்பதால் 50 ...

Read More »

மார்ச் மாத இறுதிக்குள் நான்கு மில்லியன் அவுஸ்திரேலிய மக்களிற்கு கொரோனா வைரஸ் மருந்தினை வழங்க திட்டம்

மார்ச் மாத இறுதிக்குள் நான்கு மில்லியன் அவுஸ்திரேலிய மக்களிற்கு கொரோனா வைரஸ் மருந்தினை வழங்கும் தி;ட்டம் குறித்து அவுஸ்திரேலிய அரசாங்கம் அறிவித்துள்ளது. அவுஸ்திரேலிய பிரதமர் இதனை தெரிவித்துள்ளார். பெப்ரவரி நடுப்பகுதியில் கொரோனா வைரஸ் மருந்தினை வழங்கும் நடவடிக்கைகள் ஆரம்பமாகலாம் எனஅவர் தெரிவித்துள்ளார். மார்ச் மாத இறுதிக்குள் 4 மில்லியன் பேருக்கு மருந்தினை வழங்கும் திட்டம் காணப்படுவதாக அவர் தெரிவித்துள்ளார். முதலில் வெளிநாட்டிலிருந்து வந்தவர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ள ஹோட்டலில் பணியாற்றுபவர்களிற்கும் வெளிநாடுகளில் இருந்து வருபவர்களை கையாள்பவர்களிற்கும் சுகாதார பணியாளர்களிற்கும் முதியோர் மற்றும் அங்கவீனர்களிற்கு முன்னுரிமை வழங்கப்படும் என ...

Read More »

அவுஸ்திரேலியாவில் புதிய வகை கொரோனா சமூகத்திற்குள் பரவுகின்றதா என அச்சம்

புதிய வீரியமிக்க கொரோனா வைரசினால் உருவாகியுள்ள சமூக பரவல் காரணமாக அவுஸ்திரேலியாவின் பிரிஸ்பேர்ன் மூன்று நாட்களிற்கு முடக்கப்பட்டுள்ளது. குயின்ஸ்லாந்து பிரதமர் அனஸ்டேசியா பாலஸ்சே அறிவித்துள்ளார். ஹோட்டலின் தனிமைப்படுத்தல் பணியாளர் பி117 என்ற வகை கொரோனா வைரசினால் பாதிக்கப்பட்டுள்ளதை தொடர்ந்தே அவர் புதிய முடக்கலை அறிவித்துள்ளார். அவருடன் தொடர்பிலிருந்த 179 பேர் அடையாளம் காணப்பட்டதை தொடர்ந்து இந்த பரவல் குறித்த அச்சம் அதிகரித்துள்ளது. குறிப்பிட்ட வகை வைரஸ் வெளிநாட்டிலிருந்து திரும்பியவர்களிடம் முன்னர் காணப்பட்ட போதிலும் சமூகத்தில் காணப்படவில்லை. புதிய கொரோனா வைரஸ் அதிகளவு தொற்றும் தன்மை ...

Read More »

அவுஸ்திரேலியாவின் கிறிஸ்மஸ் தீவு தடுப்பு முகாமில் அகதிகள் கலவரம்

அவுஸ்திரேலியாவின் கிறிஸ்மஸ்தீவு தடுப்பு முகாமில் தடுத்துவைக்கப்பட்டுள்ள அகதிகள் கலவரத்தில் ஈடுபட்டுள்ளதுடன் முகாமின் கட்டிடங்களிற்கு தீ மூட்டியுள்ளனர். செவ்வாய்கிழமை இரவு இரண்டு கட்டிடங்கள் தீமூட்டப்பட்டன என தடுப்பு முகாமிற்குள் இருந்து வரும் தகவல்கள் தெரிவித்துள்ளன. தடுப்புமுகாமின் கட்டிடமொன்றின் உச்சியில் இருவர் காணப்படுவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. முகாமில் தாங்கள் மனிதாபிமானமற்ற முறையில் நடத்தப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து அமைதியான முறையில் ஆர்ப்பாட்டங்களை நடத்துவதற்கு அனுமதி கோரினோம் அதற்கு அனுமதி மறுக்கப்பட்டதால் நாங்;கள் கலவரத்தில் ஈடுபடவேண்டிய நிலையேற்பட்டது என அகதியொருவர் தெரிவித்துள்ளார். கடந்த ஆறு வருடமாக முகாமில் தடுத்துவைக்கப்பட்டுள்ள ரோய் ...

Read More »

சிட்னி டெஸ்ட்: ரஹானேவுக்கு மீண்டும் புதிர் தகவல் அனுப்பிய வாசிம் ஜாபர்

சிட்னி டெஸ்டில் பேட்டிங் ஆர்டரை இந்த வரிசையில் தேர்வு செய்யுங்கள் என்று ரஹானேவுக்கு புதிர் மெஸேஜ் அனுப்பியுள்ளார் வாசிம் ஜாபர். ஆஸ்திரேலியா – இந்தியா அணிகளுக்கு இடையிலான 3-வது டெஸ்ட் போட்டி சிட்னியில் வருகிற 7-ந்திகதி நடக்கிறது. முதல் இரண்டு போட்டிகளில் ஹனுமா விஹாரி, மயங்க் அகர்வால் ஆகியோர் சரியாக விளையாடவில்லை. ஷுப்மன் கில் அறிமுக போட்டிகள் நம்பிக்கையூட்டும் வகையில் ஆட்டத்தை வெளிப்படுத்தினார். ரோகித் சர்மா அணிக்கு திரும்பியுள்ளார். இந்த நிலையில் அணியின் பேட்டிங் ஆர்டர் எப்படி இருக்கும்? என ரசிர்கள் யோசித்துக் கொண்டிருக்கிறார்கள். ...

Read More »

விக்டோரியாவில் மீண்டும் கொரோனா நோயாளர்கள்

இரண்டு மாத இடைவெளியின் பின்னர் அவுஸ்திரேலியாவின் விக்டோரியாவில் கொரோனா நோயாளிகள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். மூன்று நோயாளிகள் அடையாளம் காணப்பட்டுள்ளனர் என விக்டோரியா அரசாஙகம் தெரிவித்துள்ளது. மெல்பேர்னின் புறநகர் பகுதியை சேர்ந்;த ஒருவரும், ஹலாமிலிருந்து ஒருவரும் மிச்சாமிலிருந்து ஒருவரும் அடையாளம் காணப்பட்டுள்ளனர் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். புதிதாக பாதிக்கப்பட்டவர்களை வீடுகளில் தனிமைப்படுத்துமாறு கேட்டுக்கொண்டுள்ள அதிகாரிகள் அவர்களுடன் தொடர்பிலிருந்தவர்களை கண்டுபிடிப்பதற்கான நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ளனர். கொரோனா எவ்வாறு பரவியது என்பதனை கண்டுபிடிப்பதற்கான விசாரணைகள் இடம்பெறுகின்றன என அதிகாரிகள் தெரிவிததுள்ளார். 40 வயதுடைய இரு பெண்களும 70வயதுடைய பெண்ணும் பாதிக்கப்பட்டுள்ளனர் ...

Read More »

சிட்னியில் கொரோனா பரவல் – இந்திய பெண்கள் கிரிக்கெட் அணி ஆஸ்திரேலிய பயணம் தள்ளி வைப்பு

சிட்னியில் கொரோனா வைரஸ் பரவல் அதிகமாக இருப்பதையொட்டி இந்தியா-ஆஸ்திரேலியா அணிகள் மோதும் ஒருநாள் போட்டித் தொடர் தள்ளி வைக்கப்படுவதாக ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது. இந்திய பெண்கள் கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து 3 ஒருநாள் போட்டியில் விளையாட திட்டமிடப்பட்டு இருந்தது. முதல் போட்டி வருகிற 22-ந் தேதி கான்பெராவிலும், 2-வது போட்டி 25-ந் தேதி மெல்போர்னிலும், 3-வது மற்றும் கடைசி போட்டி 28-ந் தேதி ஹோபர்டிலும் நடக்க இருந்தது. இந்தநிலையில் சிட்னியில் கொரோனா வைரஸ் பரவல் அதிகமாக இருப்பதையொட்டி இந்தியா-ஆஸ்திரேலியா அணிகள் ...

Read More »

ஆஸ்திரேலியாவில் உள்ள அகதிகள் கனடா செல்ல முடியாத நிலை…!

ஆஸ்திரேலியாவில் உள்ள 97 அகதிகளை கனடாவுக்கு வரவேற்க கனடாவில் உள்ள Vancouver குடியமர்த்தல் முகமை தயாராக உள்ள நிலையில், இந்த திட்டத்துக்கு தற்போதைய கொரோனா சூழல் முட்டுக்கட்டையாக இருந்து வருகின்றது. இந்த அகதிகளை கனடாவுக்குள் அனுமதிப்பதற்கான முதல்கட்ட விண்ணப்ப பணி நிறைவடைந்துள்ள நிலையில், சிட்னி நகரில் உள்ள கனடா விசா அலுவலகத்துக்கு அடுத்தக்கட்ட அனுமதிக்காக இந்த விண்ணப்பங்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. “ஆனால், கொரோனா சூழல் இதனை அத்தனையும் மாற்றிவிட்டது,” என்கிறார் அகதிகளுக்கான ஏற்பாட்டை மேற்கொள்ளும் சலீம் ஸ்பிண்டரி. கொரோனா பெருந்தொற்று சூழல் காரணமாக, கனடா ...

Read More »