அவுஸ்திரேலியாவின் கிறிஸ்மஸ் தீவு தடுப்பு முகாமில் அகதிகள் கலவரம்

அவுஸ்திரேலியாவின் கிறிஸ்மஸ்தீவு தடுப்பு முகாமில் தடுத்துவைக்கப்பட்டுள்ள அகதிகள் கலவரத்தில் ஈடுபட்டுள்ளதுடன் முகாமின் கட்டிடங்களிற்கு தீ மூட்டியுள்ளனர்.

செவ்வாய்கிழமை இரவு இரண்டு கட்டிடங்கள் தீமூட்டப்பட்டன என தடுப்பு முகாமிற்குள் இருந்து வரும் தகவல்கள் தெரிவித்துள்ளன.

தடுப்புமுகாமின் கட்டிடமொன்றின் உச்சியில் இருவர் காணப்படுவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

முகாமில் தாங்கள் மனிதாபிமானமற்ற முறையில் நடத்தப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து அமைதியான முறையில் ஆர்ப்பாட்டங்களை நடத்துவதற்கு அனுமதி கோரினோம் அதற்கு அனுமதி மறுக்கப்பட்டதால் நாங்;கள் கலவரத்தில் ஈடுபடவேண்டிய நிலையேற்பட்டது என அகதியொருவர் தெரிவித்துள்ளார்.

கடந்த ஆறு வருடமாக முகாமில் தடுத்துவைக்கப்பட்டுள்ள ரோய் என்ற அகதியொருவர் தனது சகாக்கள் 22 மணித்தியாலங்களாக தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்,வைபையை பயன்படுத்த அனுமதி மறுக்கப்பட்டுள்ளது,உளவியல் மற்றும் உடல்நலம் பாதிக்கப்பட்டுள்ளோம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

நாங்கள் இவ்வாறே நடத்தப்படுகின்றோம் இது மனிதாபிமானமற்ற நடவடிக்கை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

நாங்கள் அனைவரும் குடும்பத்தவர்களுடன் இணைய விரும்புகின்றோம் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

எங்களை நாளொன்றிற்கு 22 மணித்தியாலங்கள் உள்ளே பூட்டிவைக்கின்றனர்எங்கள் நடமாட்டங்கள் கட்டுப்படுத்தப்படுகி;ன்றன அனைத்தும் முடக்கப்பட்டுள்ளது எங்களை கைதிகள் போல அழைத்துச்செல்லப்படுகின்றனர் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அகதிகள் மெத்தைகளை தீ மூட்டுவதையும் கூரையில் ஏறி நினறு போதும் போதும் என கோசங்களை எழுப்புவதையும் காண்பிக்கும் வீடீயோக்கள் வெளியாகியுள்ளன.