குமரன்

முன்னேறுகிறவர்களை பலியிட நீட் போன்ற வலிமையான ஆயுதங்களை வைத்திருக்கிறார்கள்

படித்து முன்னேறுகிறவர்களை பலியிட நீட் போன்ற வலிமையான ஆயுதங்களை வைத்திருக்கிறார்கள் என்று நீட் தேர்வால் மூன்று மாணவர்கள் உயிரிழந்ததற்கு தனது வேதனையை நடிகர் சூர்யா தெரிவித்துள்ளார். நடிகர் சூர்யா டுவிட்டர் மூலம் வெளியிட்டுள்ள அறிக்கையில் ‘‘நீட் தேர்வு பயத்தில் ஒரே நாளில் மூன்று மாணவர்கள் தற்கொலை செய்து கொண்டது மனசாட்சியை உலுக்குகிறது. தேர்வெழுதப் போகும் மாணவர்களுக்கு வாழ்த்து சொல்வதற்குப் பதிலாக அறுதுல் சொல்வதை போல அவலம் எதுவுமில்லை. கொரோனா தொற்று போன்ற உயிர் அச்சம் மிகுந்த பேரிடர் காலத்தில் கூட மாணவர்கள் தேர்வெழுதி தங்கள் ...

Read More »

ஆஸ்திரேலியாவின் ஷேன் வார்னே ராஜஸ்தான் ராய்ல்ஸ் அணியின் ஆலோசர், பிராண்ட் தூதராக……

ஆஸ்திரேலியாவின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் ஷேன் வார்னே, ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் ஆலோசகராகவும், பிராண்ட் தூதராகவும் நியமிக்கப்பட்டுள்ளார். ஆஸ்திரேலிய அணியின் முன்னணி சுழற்பந்து வீச்சாளராக திகழ்ந்தவர் ஷேன் வார்னோ. ஐபிஎல் அறிமுகம் தொடரில் இவரது தலைமையில்தான் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி சாம்பியன் பட்டத்தை வென்றது. கடந்த ஆண்டு ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் பிராண்ட் தூதராக நியமிக்கப்பட்டிருந்தார். இந்நிலையில் இந்த வருடமும் பிராண்ட் தூதராக நியமிக்கப்பட்டுள்ளார். மேலும், அணியின் ஆலோசகராகவும் நியமிக்கப்பட்டுள்ளார். இதுகுறித்து ஷேன் வார்னே கூறுகையில் ‘‘இரண்டு பணியுடன் மீண்டும் ராஜஸ்தான் ராயல்ஸ், என்னுடைய ...

Read More »

சுமந்திரன் கட்சியிலிருந்து……….தவராஜா விரிவான கடிதம்

“கட்சியின் நலனை முதன்மைப்படுத்தி திட்டங்களை வகுப்பதும் செயற்படுத்துவதும் கட்சியின் மீது பற்றுக் கொண்ட அனைவரதும் கடப்பாடாகும். ஆனால் தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஊடக பேச்சாளரான ஆப்பிரகாம் மதியாபரணம் சுமந்திரன் தொடர்ந்தும் தமிழ்மக்களின் உணர்வுகளை புரிந்து கொள்ளாமல் தமிழ் தேசியத்தை கொச்சைப்படுத்தியதுடன் தன்னிச்சையாக செயல்பட்டமை தமிழ் தேசிய கூட்டமைப்பை பாரிய பின்னடைவுக்கு எடுத்துச் சென்றுள்ளது” எனக் குறிப்பிட்டுள்ள இலங்கைத் தமிழரசுக் கட்சித் கொழும்புக் கிளைத் தலைவரும், அரசியல் உயர்மட்டக் குழு உறுப்பினருமான கே.வி.தவராஜா, “சுமந்திரன் கட்சியிலிருந்து நீக்கப்படலாம். இது தொடர்பில் தலைமைத்துவம் உடனடியாக செயல்படாவிடின் ஜக்கிய ...

Read More »

நியூஸிலந்தில் பாதுகாப்பு இடைவெளிக் கட்டுப்பாடுகளை எதிர்த்துப் போராட்டம்

நியூஸிலந்தின் ஆக்லந்து நகரில் COVID-19 நோய்த்தொற்று காரணமாக அறிவிக்கப்பட்ட பாதுகாப்பு இடைவெளிக் கட்டுப்பாடுகளை எதிர்த்து மக்கள் போராட்டம் நடத்தியுள்ளனர். போராட்டத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். அவர்கள் நெருக்கமாகவும் முகக்கவசங்கள் அணியாமலும் இருந்தனர். உரிமைக்காகவும் விடுதலைக்காகவும் மக்கள் போராட்டம் நடத்தியுள்ளதாக ஏற்பாட்டுக் குழுவினர் தெரிவித்தனர். போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கைது செய்யப்பட்டார்களா என்பது பற்றிய விவரங்கள் வெளியிடப்படவில்லை. நியூஸிலந்தில் கட்டுக்குள் கொண்டுவரப்பட்ட நோய்த்தொற்று கடந்த மாதம் மீண்டும் தலைதூக்கியது. அதைத் தொடர்ந்து சில இடங்களில் முடக்கநிலை அறிவிக்கப்பட்டது. நியூஸிலந்தில் தற்போது ஓர் இடத்தில் 10-க்கும் அதிகமானோர் ...

Read More »

கடல் அலைகளுடன் மோதி விளையாடும் பிகில் பட நடிகை

விஜய் நடிப்பில் வெளியான பிகில் படத்தில் நடித்த நடிகை ஒருவர் கடல் அலைகளுடன் மோதி விளையாடும் சர்ஃப் பயிற்சி எடுத்து வருகிறார். அட்லி இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளியான படம் பிகில். இப்படத்தில் சிங்கப் பெண்களில் ஒருவராக நடித்தவர் காயத்ரி ரெட்டி. அந்தப் படத்தைத் தொடர்ந்து அடுத்தடுத்து பெண்களின் வளர்ச்சிக்கு முக்கியத்துவம் கொடுக்கும் பல துணிச்சலான கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில் தன்னுடைய துணிச்சலையும் அறிவுக்கூர்மையும் மெருகேற்றிக் கொள்ள சர்ஃபிங் எனப்படும் அலைச்சறுக்கு விளையாட்டை   தன் நண்பரின் அறிவுறுத்தலின்படி கற்று வருகிறார். கடல் அலைகளுடன் ...

Read More »

பூஸா கைதிகளின் கோரிக்கைகளை நிறைவேற்ற முடியாது என்கிறார் கமல் குணரத்ன

பூஸா சிறைச்சாலையில் உணவு தவிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டுவரும் கைதிகளின் கோரிக்கைகளை நிறைவேற்ற முடியாது என பாதுகாப்பு செயலாளர், ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் கமல் குணரத்ன தெரிவித்துள்ளார். நேற்று பிற்பகல் கண்டியில் வைத்து ஊடகவியலாளர்கள் சந்திப்பில் இவ்வாறு தெரிவித்துள்ளார். சிலரது கோரிக்கைகள் நிறைவேற்றக்கூடியதாக இருக்கின்றபோதிலும், சிறைச்சாலைகளுக்குள் இருந்து கைதிகள் முன்வைத்துள்ள கோரிக்கைகள் ஏற்றுக்கொள்ள முடியாது. அவர்களின் நடவடிக்கைக்கு அச்சமடைந்து இந்த பதவியை வகிக்க முடியாது. உணவு தவிர்ப்பு போராட்டத்தில் ஈடுப்பட்டு வரும் குறித்த சிலரே நாட்டில் போதைப் பொருள் வர்த்தகத்தில் ஈடுப்பட்ட பாரிய குழுவினராவர் என ...

Read More »

தமிழில் ஒரு சர்வதேச நாவல்

சென்ற நூற்றாண்டில் தமிழில் பிரதானப் போக்காக இருந்த நவீன நாவல் வடிவம், நவீன எழுத்துகளோடு சேர்த்துப் பார்க்க முடியாத தனித்துவமான எழுத்து ப.சிங்காரத்துடையது. ஆயிரக் கணக்கான ஆண்டுகள் தொன்மை கொண்ட தமிழர் வரலாறு, மெய்யியல், பண்பாடு, வாழ்க்கைப் பார்வை, மொழி மரபின் குணங்கள் சேர்ந்த வெளிப்பாடு ப.சிங்காரம். உலகப் போரின் பின்னணியில் தென்கிழக்காசிய நாடுகளின் ஒரு காலகட்டத்து அரசியல், வெகுஜனப் பண்பாட்டை விரிவாகவும் நுட்பமாகவும் அவர் தனது இரண்டு நாவல்களிலும் படைத்துள்ளார். அதிலும், ‘புயலில் ஒரு தோணி’ நாவலானது லியோ டால்ஸ்டாயின் ‘போரும் வாழ்வும்’ ...

Read More »

அவுஸ்திரேலியா விக்டோரியாவில் ஆற்றில் மூழ்கி தமிழ் இளைஞர் பலி

விக்டோரியாவின் Mildura பகுதியில் Murray ஆற்றில் மூழ்கி தமிழ் இளைஞர் ஒருவர் பலியானதாக தெரிவிக்கப்படுகிறது. நேற்றுமுன்தினம் தனது நண்பர்களுடன் Murray ஆற்றுக்குச் சென்ற இவ்விளைஞர் நீச்சலில் ஈடுபட்டபோது காணாமல்போனதாக அறிவிக்கப்பட்டது. இவரைத் தேடும்பணி வெள்ளி பிற்பகல் முதல் மேற்கொள்ளப்பட்டுவந்தநிலையில் குறித்த இளைஞரின் சடலம் Murray ஆற்றிலிருந்து மீட்கப்பட்டதாக  காவல் துறையினர்  தெரிவித்துள்ளனர். மெல்பேர்னில் கல்விகற்றுவரும் இலங்கையைச் சேர்ந்த21 வயது தமிழ் இளைஞரே இவ்வாறு மரணமடைந்ததாகவும், தொழில்நிமித்தம் தனது நண்பர்களோடு அவர் Mildura-வுக்கு சென்றிருந்ததாகவும் கூறப்படுகிறது.

Read More »

அகதிகள் திட்டத்தின் கீழ் நாட்டுக்குள் அகதிகளை அனுமதிக்க வேண்டும்!

ஆஸ்திரேலியா அரசு மீண்டும் அகதிகள் திட்டத்தின் கீழ் நாட்டுக்குள் அகதிகளை அனுமதிக்க வேண்டும் என அகதிகள் நல ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். கொரோனா பெருந்தொற்று சூழல் காரணமாக, கடந்த மார்ச் மாதம் முதல் சர்வதேச எல்லைகளை மூடிய ஆஸ்திரேலிய அரசு வெளிநாட்டினர் நாட்டுக்குள் நுழைய கட்டுப்பாடு விதித்துள்ளது. ஆஸ்திரேலிய அகதிகள் கவுன்சலின் கணக்குப்படி, மனிதாபிமான விசாக்கள் பெற்ற சுமார் 4,000 அகதிகள் ஆஸ்திரேலியாவுக்குள் நுழைய முடியாமல் வெளிநாடுகளில் தவித்து வருகின்றனர். ஆஸ்திரேலியாவில் உள்ள டேவிட் ஓதீஷ் எனும் ஈராக்கிய அகதியின் சகோதரிக்கும் அவரது குடும்பத்துக்கும் ...

Read More »

ஆஸ்திரேலியாவில் தடுத்து வைக்கப்பட்டுள்ள முஸ்லீம் அகதிகளுக்கு ஹலால் உணவு மறுக்கப்படுகின்றதா?

ஆஸ்திரேலிய அரசால் தடுத்து வைக்கப்பட்டுள்ள தங்களுக்கு கடந்த ஓராண்டுக்கு மேலாக அங்கீகாரம் பெற்ற ஹலால் உணவை வழங்கப்படுவதில்லை என ஆஸ்திரேலிய மனித உரிமைகள் ஆணையத்திடம் முஸ்லீம் அகதிகளும் தஞ்சக்கோரிக்கையாளர்களும் முறையிட்டுள்ளனர். நவுரு மற்றும் பப்பு நியூ கினியாவில் செயல்பட்ட ஆஸ்திரேலியாவின் கடல் கடந்த தடுப்பிலிருந்து மருத்துவ சிகிச்சைக்காக ஆஸ்திரேலியா அழைத்துச் செல்லப்பட்ட சுமார் 100 பேர் பிரிஸ்பேன் நகரில் உள்ள கங்காரூ பாய்ண்ட் எனும் ஹோட்டலில் சிறைவைக்கப்பட்டுள்ளனர். இந்த ஹோட்டல் அகதிகளை சிறைப்படுத்தும் தடுப்பிற்கான மாற்று இடமாகவும் அறியப்படுகின்றது. இங்கு வைக்கப்பட்டுள்ள பெரும்பாலானோர் முஸ்லீம் ...

Read More »