குமரன்

நாய்க்கு டப்பிங் பேசிய சூரி

இந்தப் படத்தில் நாய் ஒன்று முக்கிய வேடத்தில் நடித்துள்ளது. கில்லி என பெயர் கொண்ட லாப்ரடார் வகை நாயின் மனக்குரலில் திரைக்கதை நகர்வது போன்று கதை உருவாக்கப்பட்டுள்ளது. அந்த நாய்க்கு சூரி குரல் கொடுத்துள்ளார். இதுபற்றி இயக்குனர்  ஸ்ரீ நாத் ராமலிங்கம் கூறியதாவது: இதுவரை வெளியான மனிதன், நாய் உறவு தொடர்பான படங்களிலிருந்து இது வித்தியாசமானதாக இருக்கும். ஒளிப்பதிவாளர் பாலசுப்பிரமணியம் தான் நாய்க்கு சூரியை குரல் கொடுக்க வைக்கலாம் என ஐடியா கொடுத்தார். இதுதொடர்பாக சூரியிடம் கேட்டபோது உடனே ஒப்புக்கொண்டார். அவரது பின்னணி குரல் ...

Read More »

இந்தியா-ஆஸ்திரேலியா டெஸ்ட் தொடர் : பகல்-இரவு போட்டியுடன் தொடக்கம்?

இந்தியா- ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி அடிலெய்டில் பகல்-இரவு போட்டியாக டிசம்பர் 17-ந்தேதி முதல் 21-ந்தேதி வரை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இந்திய கிரிக்கெட் அணி அடுத்த மாதம் முதல் ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடுகிறது. ஒரு நாள் போட்டியுடன் தொடர் ஆரம்பிக்கும் என்று தெரிகிறது. பிரிஸ்பேனில் நவம்பர் 25-ந்தேதி முதல் 30-ந்தேதிக்குள் மூன்று ஒரு நாள் போட்டிகளையும், அடிலெய்டில் டிசம்பர் 4-ந்தேதி முதல் 8-ந்தேதிக்குள் மூன்று 20 ஓவர் போட்டிகளையும் நடத்த ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் முடிவு செய்துள்ளது. அதைத் தொடர்ந்து ...

Read More »

தமன்னாவை வாழ்த்திய காஜல், சமந்தா

கொரோனாவில் இருந்து மீண்ட பிரபல நடிகை தமன்னாவை நடிகைகள் காஜல் அகர்வால், சமந்தா ஆகியோர் வாழ்த்து தெரிவித்திருக்கிறார்கள். கொரோனா பாதிப்பு குறித்து தமன்னா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,  “படப்பிடிப்பு தளத்தில் நானும் என்னுடைய குழுவும் மிகக் கவனமாக இருந்தும் கூட, ஒரு வாரத்துக்கு முன்பு நான் கொரோனா காய்ச்சலால் பாதிக்கப்பட்டேன். தேவையான பரிசோதனைகளை செய்தபிறகு எனக்கு கொரோனா பாசிடிவ் எனத் தெரியவந்தது. எனவே ஐதராபாத்திலுள்ள தனியார் மருத்துவமனையில் என்னை நானே அனுமதித்துக்கொண்டேன். மருத்துவர்களின் உதவியுடன் இப்போது குணமடைந்து வீடு திரும்பியிருந்தாலும், சில காலத்துக்கு என்னை ...

Read More »

13ஆம் திருத்தமும் தமிழரின் பரிதாப நிலையும்

சகுனம் பார்த்து, அதிஷ்டத்தை நம்பி வாழ்க்கையின் நடவடிக்கைகளைத் தீர்மானிக்கும் ஒரு சமூகத்தில், அப்பாவியான இலக்கம் 13 ஒரு அபகீர்த்தி வாய்ந்ததென்று பலராலும் கருதப்படுவதால் அதனை உபயோகிப்பதை எவ்வாறாயினும் தவிர்க்கவே விரும்புவர். உல்லாச விடுதிகள் கூட தமது அறைகளுக்கு 13ஆம் இலக்கத்தைத் தவிர்த்தே வரிசைப்படுத்துவதும் உண்டு. இந்தத் துரதிஷ்டத்தினாற்தானோ என்னவோ அரசியல் ரீதியாக இலங்கைத் தமிழரின் எதிர்காலத்தைத் தீர்மானிக்கக்கூடிய முக்கியத்துவம் வாய்ந்த ஒரு யாப்புத் திருத்தத்துக்கும் இந்த எண்ணே கிட்டியுள்ளது. இது தமிழர்களுக்கோர் அபசகுனமா? அது ஒரு புறமிருக்க, இலங்கையின் இன்றைய அரசியற் சூழலில் அந்தத் ...

Read More »

அமெரிக்காவிற்கு அதிகாரம் இல்லை

இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் பேட்டியொன்றின் போது இராஜதந்திர நடைமுறைகளை மீறியுள்ளார் என இலங்கைக்கான சீன தூதரகம் குற்றம்சாட்டியுள்ளது. நேற்று அமெரிக்க தூதுவர் வழங்கிய பேட்டி குறித்தே சீன தூதரகம் இந்த குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளது. மூன்றாவது நாடொன்றின் தூதுவர் இலங்கை அமெரிக்க உறவுகளை வெளிப்படையாக கேள்விக்குட்படுத்தியுள்ளார் என சீன தூதரகம் தெரிவித்துள்ளது. இறைமையுள்ள நாடொன்றின் உள்விவகாரங்களில் அமெரிக்கா தலையிடுவது எப்போதும் ஆச்சரியமளிக்காத விடயம் என தெரிவித்துள்ள சீன தூதரகம் மற்றையவர்களின் இராஜதந்திர உறவுகளை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்தும் வெறுக்கத்தக்க நடவடிக்கைகளை கண்டு மக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர் என ...

Read More »

அங்குதான் எனக்கு நிம்மதி – கங்கனா ரணாவத்

பல்வேறு சர்ச்சைகளில் சிக்கி வரும் பாலிவுட் நடிகை கங்கனா ரணாவத், அங்குதான் எனக்கு நிம்மதி என்று கூறியுள்ளார். கங்கனா ரனாவத்தை பல்வேறு சர்ச்சைகள் பின் தொடர்கின்றன. அவருக்கும் மராட்டிய மாநில அரசுக்குமான மோதல் பெரிதாகிக்கொண்டே போகிறது. தற்போது அவர் கையில் இருக்கும் படம் தலைவி. ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறான இந்த படத்தின் படப்பிடிப்பு மீண்டும் தொடங்கி உள்ளது. இந்நிலையில் தனது ட்விட்டர் பக்கத்தில் ‘தலைவி’ படப்பிடிப்புத் தொடர்பான புகைப்படங்களைப் பகிர்ந்துள்ள கங்கனா கூறியிருப்பதாவது: வணக்கம் நண்பர்களே, அன்பான மற்றும் மிகவும் திறமையான இயக்குநரான ஏ.எல்.விஜய்யுடன் ...

Read More »

மனைவியையும், குழந்தையையும் கொலை செய்த தமிழர் தானும் தற்கொலை!

லண்டனில் உள்ள தொடர் மாடி குடியிருப்பு ஒன்றில் தனது மனைவியையும், மூன்று வயதான மகளையும் கோரமாகக் கொலை செய்த தமிழரான தந்தை ஒருவர், தானும் தற்கொலை செய்துகொண்ட பரிதாபகரமான சம்பவம் இன்று அதிகாலை இடம்பெற்றிருக்கின்றது. இக்குடும்பத்தினர் மலேஷியத் தமிழர்கள் என லண்டன் தகவல்கள் தெரிவிக்கின்றன. மூன்று வயது சிறுவனும் அவரது தாயும் குறிப்பிட்ட தொடர்மாடி குடியிருப்பில் இறந்து கிடந்தனர், புதன்கிழமை காலை தகவல் அறிந்த பிரிட்டிஷ் காவல் துறை அந்த வீட்டுக்குள் நுளைந்தபோது தந்தை தற்கொலை செய்து கொண்டதாக தகவல்கள் வந்துள்ளன.     ...

Read More »

அவுஸ்திரேலிய காட்டில் விடப்பட்ட ‘டாஸ்மானியாவின் பேய்’

பாலூட்டி விலங்கினமான டாஸ்மானியாவின் பேய்(Tasmanian devil) 3,000 ஆண்டுகளுக்குப் பிறகு அவுஸ்திரேலிய பெருநிலப் பரப்பில் மீண்டும் விடப்பட்டுள்ளது. இயற்கை பாதுகாப்புக் குழுக்கள் சிட்னியின் வடக்குப் பகுதியிலுள்ள உயிரியல் பூங்கா ஒன்றில் 26 பாலூட்டிகளை விடுவித்துள்ளனர். டாஸ்மானியாவின் பேய் என்று அழைக்கப்படும் இந்த விலங்குகள் அழிவின் விளிம்பில் இருக்கும் ஒரு விலங்கினம். இது எழுப்பும் அதீத ஒலிதான் இந்த விலங்கிற்கு இந்தப் பெயர் வரக் காரணம். மேலும் இந்த விலங்கு, விலங்குகளின் சடலங்களை வெறித்தனமாக தேடிச் சென்று, கடித்து நொறுக்கிவிடும். தனது தாடைகளின் சக்தியைக் கொண்டு ...

Read More »

முற்றாக முடக்கப்பட்டது புங்குடுதீவு

யாழ். மாவட்டம், தற்போது ஏற்பட்டிருக்கும் அனர்த்தத்தை மிகவும் சிக்கலான நிலையில், எதிர்கொள்ளும் பாரிய ஒரு அபாயகரமான நிலைமை ஏற்பட்டிருக்கின்றது என யாழ். மாவட்ட அரச அதிபர் க.மகேசன் எச்சரித்துள்ளார். புங்குடுதீவு முற்றாக முடக்கப்பட்டிருப்பதாகவும் அவர் தெரிவித்தார். யாழ்.மாவட்ட செயலகத்தில் நேற்று கொரோனா ஒழிப்புச் செயலணிக் கூட்டம் இடம்பெற்றது. இந்தக் கூட்டத்தின் நிறைவில் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும் போது அவர் இவ்வாறு குறிப்பிட்டார். அவர் மேலும் கூறுகையில்:- யாழ்.மாவட்டத்தில், கொரோனா தொற்று தீவிரம் காரணமாக, அவசரமாக மாவட்ட கொரோனா ஒழிப்புச் செயலணிக் கூட்டத்தை நடத்தியிருந்தோம். இந்தச் ...

Read More »

பாலச்சந்திரன் “ சிறுவர் படையணியின் தளபதி” என்கிறார் பொன்சேகா

விடுதலைப்புலிகள் இயக்க தலைவர் பிரபாகரனின் இளையமகன் பாலச்சந்திரன் சிறிலங்கா இராணுவத்தினர் கொல்லவில்லை என சிறிலங்கா நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ள ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் சரத்பொன்சேகா பிரபாகரன் மகன் சிறுவர் படையணியின் தளபதி எனவும் குறிப்பிட்டுள்ளார். சிறிலங்கா இராணுவத்தினர் பிஸ்கட் வழங்கிய பின்னர் பிரபாரகனின் மகனை கொன்றனர் என தமிழ்தேசிய மக்கள் முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரன் குற்றம்சாட்டியவேளை அதற்கு பதிலளித்து உரையாற்றுகையிலேயே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். பிரபாகரனின் மனைவி விடுதலைப்புலிகள் இயக்க உறுப்பினர் என தெரிவித்துள்ள சரத்பொன்சேகா அவரது மூத்த மகன் விடுதலைப்புலிகள் ...

Read More »