குமரன்

ஆவணத்தில் சொல்லப்பட்டிருப்பது என்ன?

ஐ.நா. மனித உரிமைகள் ஆணைக்குழுவின் வரும் மார்ச் மாத அமர்வை ஒட்டி சர்வதேச சமூகத்தை ஐக்கியப்பட்டு அணுகுவதற்காகத் தாம் சமர்ப்பித்த வரைவு ஒன்று தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர்களான நீதியரசர் சி.வீ.விக்னேஸ்வரன் எம்.பியும், கஜேந்திரகுமார் பொன்னம்பலம் எம்.பியும் பொய்யான, விஷமத்தனமான பிரச்சாரம் செய்கின்றனர் என தமிழ்க் கூட்டமைப்பின் பேச்சாளரும் ஜனாதிபதி சட்டத்தரணியுமான எம்.ஏ.சுமந்திரன் எம்.பி. குற்றம் சுமத்தியிருக்கின்றார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்தவை வருமாறு:- “நான் அவர்களுக்குக் கொடுத்த ஆவணத்தில் இரண்டே இரண்டு விடயங்கள் தான் இருக்கின்றன. ஒன்று – இதுவரை ஐ.நா. மனித ...

Read More »

முஸ்லீம்களின் உடல்களை வைப்பதற்கு குளிரூட்டப்பட்ட கொள்கலன்கள்

கொரோனாவினால் உயிரிழந்த முஸ்லீம்களின் உடல்களை குளிரூட்டப்பட்ட கொள்கலன்களில் வைப்பது குறித்த யோசனையொன்று முன்வைக்கப்பட்டுள்ளது. சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் மருத்துவர் அசேல குணவர்த்தன ஆங்கில இணையத் தளமொன்றிற்கு இதனை தெரிவித்துள்ளார். கொரோனா வைரஸ் தொற்றிற்குள்ளானவர்களின் உடல்களை நீண்டகாலம் ஏனையவர்களின் உடல்களுடன் பிரேதஅறையில் வைத்திருக்க முடியாது என்பதாலேயே இந்த யோசனை முன்வைக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். இறுதிசடங்குகள் முடிவடையும் வரை கொரோனாவினால் உயிரிழந்த முஸ்லீம்களின் உடல்களை குளிரூட்டப்பட்ட கொள்கலனில் வைத்திருப்பதற்கான யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது என அவர் குறிப்பிட்டுள்ளார். ஐந்து இடங்களில் இவ்வாறான குளிரூட்டப்பட்ட கொள்கலன்களை பயன்படுத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது ...

Read More »

மாகாண சபைகளுக்கான தேர்தலும் ”கொரோனா இராஜதந்திரமும்”

புதிய அரசியலமைப்பில் மாகாண சபைகள் உருவாக்கத்தின் மூலாதாரமான 13 ஆவது அரசியலமைப்பு திருத்தம் நீக்கப்பட வேண்டும், மாகாணசபைகள் ஒழிக்கப்பட வேண்டும்,மாகாண சபைகளுக்கான தேர்தல்கள் நடத்தப்படக்கூடாது என அரசின் பங்காளிகளும் முக்கிய அமைச்சர்களும் போர்க் கொடிதூக்கியுள்ள நிலையில் அதற்கான நகர்வுகளையே மேற்கொண்டு வந்த கோத்தபாய ராஜபக்ச அரசு ,திடீரென 2021 ஆம் ஆண்டு மார்ச் மாதமளவில் மாகாணசபைகளுக்கான தேர்தலை நடத்த முயற்சிப்பதன் பின்னணி என்ன? மாகாண சபைகளுக்கான தேர்தலை விரைவில் நடத்துவது தொடர்பில் கவனம் செலுத்தி, அதற்கான சட்ட நடவடிக்கைகள் குறித்து ஆராயுமாறு பிரதமர் மஹிந்த ...

Read More »

கொரோனா தடுப்பூசியை செலுத்திக் கொண்ட தாதியொருவர் ஊடகவியலாளர் சந்திப்பின் போது மயங்கினார்!

அமெரிக்காவில் கொரோனா தடுப்பூசியை செலுத்திக் கொண்ட தாதியொருவர் ஊடகவியலாளர் சந்திப்பின் போது மயங்கி விழுந்த சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது. ஃபைஸர் நிறுவனத்தின் கொரோனா தடுப்பு மருந்தை டென்னிசி பகுதியைச் சேர்ந்த டிஃபனி டோவர்  (Tiffany Dover ) என்பவர் முதல் தடுப்பூசியைப் செலுத்திக் கொண்டார்.   அடுத்த சில நிமிடங்களில் செய்தியாளர்களைச் சந்தித்தார் டிஃபனி, தனக்கு செலுத்தப்பட்ட ஊசி குறித்து பேசிக் கொண்டிருந்தபோது திடீரென தனக்கு உடல் நலம் பாதித்ததாகக் கூறி பாதியில் எழுந்து சென்றார். ஆனாலும் ஓரிரு அடி எடுத்து வைப்பதற்குள் மயங்கிச் சரிந்தார். ...

Read More »

அவுஸ்திரேலியாவில் புதிய பரவல் ஆரம்பமானது எப்படி?

நியுஸ்சவுத்வேல்சில் புதிதாக பரவிவரும் கொரோனா வைரசிற்கு காரணமான பிரதான தொற்றாளரை கண்டுபிடிக்க முடியாத நிலை காணப்படுவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதன்காரணமாக புதிய பரவல் குறித்த உண்மை அறியமுடியாத நிலை காணப்படுவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். பிரதான தொற்றாளரை அடையாளம் காணமுடியாத நிலை காரணமாக எதனையும் உறுதியாக தெரிவிக்க முடியாத நிலை காணப்படுவதாக நியுசவுத்வேல்சின் பிரதம வைத்திய அதிகாரி கெரி சன்ட் தெரிவித்துள்ளார். பிரதான தொற்றாளரை கண்டுபிடிக்காமல் கொரோனா பரவுவதற்கான வழியை தடுத்துவிட்டோம் என தெரிவிக்க முடியாது என அவர் தெரிவித்துள்ளார். நியுசவுத்வேல்ஸ் இரண்டுவிதமான பரவலை எதிர்கொள்கின்றது ...

Read More »

வவுனிக்குளத்திற்குள் வாகனம் விழுந்ததில் இரண்டு வயது சிறுமி உட்பட மூவர் பலி

வாகனம் குளத்திற்கு வீழ்ந்ததன் காரணமாக இரண்டரை வயது சிறுமி உட்பட மூவர் பலியாகியுள்ளனர். வவுனிக்குள வீதிவழியாக பயணித்த வாகனம் குளத்திற்குள் விழுந்ததன் காரணமாக இந்த உயிரிழப்புகள் இடம்பெற்றுள்ளன. வவுனிக்குளம் செல்வபுரம் பகுதியில் வசிக்கும் தந்தை அவரது இரண்டரை வயது மகள் அயல்வீட்டை சேர்ந்த 13 வயது சிறுவன் ஆகியோர் உயிரிழந்துள்ளனர். உயிரிழந்தவரின் மகன் நீந்திகரைசேர்ந்துள்ளான் என அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன. பதின்மூன்று வயது சிறுவனின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாகவும் தந்தை மகளின் சடலத்தை மீட்கும் நடவடிக்கைகள் இடம்பெறுவதாகவும் தகவல்கள் கிடைத்துள்ளன.

Read More »

ஜெனிவாவா? சர்வதேச நீதிமன்றமா?

ஆங்கிலத்தில் “ஸ்குயர் வண்” என்றொரு சொற்பதம் உண்டு. அதாவது, ஏதாவதொன்றில் முன்னேற முடியாது மீண்டும் தொடங்கிய இடத்துக்கு அல்லது முன்னைய இடத்துக்குச் செல்வதென்பது இதன் அர்த்தம். இலங்கைத் தமிழர் அரசியலில் இப்பதம் எப்போதும் சாகாவரம் பெற்றது. மீண்டும் ஜெனிவாக் கூட்டத்தொடர் பற்றியே தமிழரின் அரசியல் கட்சிகளும் அவர்களின் தலைவர்களும் பேச ஆரம்பித்துள்ளனர். இதற்காக ஒற்றுமை அல்லது இணக்கம் என்பது தேடப்படுகிறது. இலங்கை நாடாளுமன்ற அரசியலில் உதயமான முதலாவது தமிழர் அரசியல் கட்சி அகில இலங்கைத் தமிழ் காங்கிரஸ். அதன் உருவாக்கத் தலைவர் (காலஞ்சென்ற) ஜி.ஜி. ...

Read More »

கொழும்பில் இன்று பரபரப்பாககக் கூடுகின்றது கூட்டமைப்பு

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முக்கிய கூட்டம் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தலைமையில் கொழும்பில் இன்று பரபரப்பான சூழ்நிலையில் நடைபெறவுள்ளது. புதிய அரசமைப்புக்கான முன்மொழிவுகளைச் சமர்ப்பிக்குமாறு அரசியல் கட்சிகளிடம் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையிலான அரசு வேண்டுகோள் விடுத்துள்ள நிலையில், அதற்கான வேலைத்திட்டத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் களமிறங்கியுள்ளது. அதற்கமைய தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சமர்ப்பிக்க வேண்டிய முன்மொழிவுகள் தொடர்பில் முடிவெடுக்கக் கூட்டமைப்பின் நாடாளுமன்றக் குழு இன்று கொழும்பில் கூடுகின்றது. காலை 10 மணிக்கு நடைபெறவுள்ள இந்தக் கூட்டத்தில் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளின் தலைவர்களும் பங்கேற்பார்கள் ...

Read More »

அண்ணாத்த படக்குழுவுக்கு வேண்டுகோள் விடுத்த ரஜினிகாந்த்

சிவா இயக்கத்தில் அண்ணாத்த படத்தில் நடித்து வரும் ரஜினி படக்குழுவினருக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார். சிவா இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்துவரும் படம் அண்ணாத்த. நயன்தாரா, கீர்த்திசுரேஷ், மீனா, குஷ்பு, சூரி, சதீஷ் ஆகியோர் ரஜினியுடன் நடித்துவருகிறார்கள். கொரோனாவுக்கு முன்பாக முதல்கட்டப் படப்பிடிப்பை முடித்தனர். கொரோனாவுக்குப் பிறகு படப்பிடிப்பு தொடங்குவதில் சிக்கல் இருந்தது. ஏற்கெனவே 60 சதவீத படப்பிடிப்பு முடிந்துவிட்ட நிலையில், மீதம் இருக்கும் 40 சதவீத படப்பிடிப்பு தற்போது நடந்துவருகிறது.  ஐதராபாத்தில் உள்ள ராமோஜிராவ் பிலிம் சிட்டியில் படப்பிடிப்பு நடக்கிறது. படக்குழுவினருக்கு ரஜினி ஒரு வேண்டுகோள் ...

Read More »

அச்சுஅசல் சித்ராவை போல இருக்கும் இளம்பெண்

தற்கொலை செய்துகொண்ட சின்னத்திரை நடிகை சித்ராவை போன்று தோற்றமுடைய பெண்ணின் போட்டோஷூட் வைரலாகி வருகிறது. சின்னத்திரை நடிகை சித்ரா தற்கொலை செய்துகொண்டது ரசிகர்களிடையே மிகவும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இது தொடர்பாக போலீசார் மற்றும் ஆர்டிஓ விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. சித்ராவை தற்கொலைக்கு தூண்டியதாக அவரது கணவர் ஹேம்நாத்தை போலீசார் கைது செய்துள்ளனர். இதனிடையே சித்ராவை போன்றே தோற்றம் கொண்ட பெண்ணின் புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. அவர் பெயர் கீர்த்தனா தினகர். சித்ரா போலவே போட்டோ ஷூட் நடத்தியதன் பின்னணி குறித்து ...

Read More »