வவுனிக்குளத்திற்குள் வாகனம் விழுந்ததில் இரண்டு வயது சிறுமி உட்பட மூவர் பலி

வாகனம் குளத்திற்கு வீழ்ந்ததன் காரணமாக இரண்டரை வயது சிறுமி உட்பட மூவர் பலியாகியுள்ளனர்.


வவுனிக்குள வீதிவழியாக பயணித்த வாகனம் குளத்திற்குள் விழுந்ததன் காரணமாக இந்த உயிரிழப்புகள் இடம்பெற்றுள்ளன.

வவுனிக்குளம் செல்வபுரம் பகுதியில் வசிக்கும் தந்தை அவரது இரண்டரை வயது மகள் அயல்வீட்டை சேர்ந்த 13 வயது சிறுவன் ஆகியோர் உயிரிழந்துள்ளனர்.
உயிரிழந்தவரின் மகன் நீந்திகரைசேர்ந்துள்ளான் என அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.


பதின்மூன்று வயது சிறுவனின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாகவும் தந்தை மகளின் சடலத்தை மீட்கும் நடவடிக்கைகள் இடம்பெறுவதாகவும் தகவல்கள் கிடைத்துள்ளன.