குமரன்

பொதுமக்களிடமிருந்து 2077 பில்லியனை வரி வருமானமாக பெற அரசாங்கம் முயற்சி!

அரசாங்கம் இவ்வருடத்தில் பொதுமக்களிடம் இருந்து 2077 பில்லியன் ரூபா வரி வருமானத்தை திரட்டிக் கொள்ள எதிர்பார்த்துள்ளது. இத்தொகையானது கடந்த 2014 ஆம் ஆண்டு திரட்டப்பட்ட வரி வருமானத்தை போல் இரண்டு மடங்காகும் என எதிர்க்கட்சி தலைவர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். எதிர்க்கட்சி தலைவர் மஹிந்த ராஜபக்ஷ நேற்று வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே மேற்கண்டவாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. அதில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது , 2019 ஆம் ஆண்டுக்கான வரவு – செலவு திட்டத்திற்கு அமைய  அனைத்து அரச ஊழியர்களுக்கும்  விசேட மாதாந்த கொடுப்பனவு  2500 ரூபா வழங்கல், ...

Read More »

அவுஸ்திரேலிய மக்களுக்கு எச்சரிக்கை!

அவுஸ்திரேலியாவில் பெருமளவில் பரவிவருவதாக சந்தேகிக்கப்படும் தட்டம்மை-Measles குறித்து எச்சரிக்கையுடன் இருக்குமாறு அறிவிக்கப்பட்டுள்ளது. அவுஸ்திரேலிய சுகாதாரத்திணைக்களம் பொது மக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்த தொற்று நோயிலிருந்து தப்பித்துக்கொள்வதற்கு தடுப்பூசியை போட்டுக்கொள்ளுமாறும் சுகாதாரணத்திணைக்களம் வேண்டுகோள் விடுத்துள்ளது. அவுஸ்திரேலியாவில் இந்த வருடம் இதுவரைக்கும் 84 பேருக்கு இந்த நோய் கண்டறியப்பட்டுள்ளது. அதேவேளை, இந்த நோய் தாக்கம் பிலிப்பீன்ஸ் உட்பட ஏனைய நாடுகளில் பாரதூரமான விளைவுகளை ஏற்படுத்தியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தடுப்பூசி போட்டுக்கொள்ளாமல் வெளிநாடு சென்று வருகின்ற பயணிகளினால்தான் இந்த நோய் அவுஸ்திரேலியாவுக்குள் பெருமளவு கொண்டுவரப்பட்டிருக்கிறது. வெளிநாடு செல்கின்ற அவுஸ்திரேலியர்கள் தடுப்பூசியை ...

Read More »

மண்டைதீவில் கடற்படை முகாம் அமைப்பதற்காக காணி சுவீகரிக்க காணி அளவீடு!

மண்டைதீவில் கடற்படை முகாம் அமைப்பதற்காக காணி சுவீகரிக்க காணி அளவீடு செய்யும் பணிகள் நாளைய தினம் வியாழக்கிழமை மேற்கொள்ளப்படும் என நிலஅளவை திணைக்களம் அறிவித்துள்ளது. யாழ்.வேலணை பிரதேச செயலர் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் அமைந்துள்ள கடற்படை முகாமுக்கு நிரந்தரமாக காணியினை சுவீகரிக்கும் நோக்குடன் காணி அளவீடு மேற்கொள்ளப்படவுள்ளது. குறித்த காணிகள் 11 தனியாருக்கு சொந்தமான 18 ஏக்கர் 1 நூட் 10 பேர்ச்சஸ் காணிகளை கையகப்படுத்தவே நடவடிக்கை எடுக்கப்படுகின்றது காணி சுவீகரிப்பு சட்டத்தின் கீழ் நாளைய தினம் 11ஆம் திகதி காலை 9 மணி ...

Read More »

ஜீவாவுக்கு கபில்தேவ் பயிற்சி!

கபீர்கான் இயக்கத்தில் 1983 உலகக்கோப்பை கிரிக்கெட்டை மையப்படுத்தி உருவாகும் 83 படத்திற்காக ஜீவாவுக்கு கபில்தேவ் பயிற்சியளித்து வருகிறார். கபில்தேவ் தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி 1983-ல் நடந்த உலக கோப்பை போட்டியில் வென்று சாதனை நிகழ்த்தியது. இந்த வரலாற்று நிகழ்வை மையமாக வைத்து ‘83’ என்ற பெயரில் புதிய படம் தயாராகிறது. இதில் கபில்தேவ் வேடத்தில் ரன்வீர் சிங் நடிக்கிறார். உலக கோப்பையை வென்ற அணியில் இருந்த தமிழக வீரர் ஸ்ரீகாந்த் வேடத்தில் ஜீவா, கவாஸ்கர் வேடத்தில் தாஹிர் ராஜ் பாசின், மொஹிந்தர் அமர்நாத் ...

Read More »

பிரெக்சிட்டை தாமதப்படுத்தும் மசோதாவுக்கு ராணி ஒப்புதல்!

ஐரோப்பிய கூட்டமைப்பில் இருந்து விலகும் பிரெக்சிட்டை தாமதப்படுத்தும் மசோதாவுக்கு பிரிட்டன் ராணி ஒப்புதல் அளித்துள்ளார். ஐரோப்பிய கூட்டமைப்பில் இருந்து பிரிட்டன் ஒப்பந்தம் இல்லாமல் வெளியேறுவதற்கான காலக்கெடு வருகிற 12-ந் திகதியுடன் முடிகிறது. இது சாத்தியமானால் பிரிட்டனில் வேலைவாய்ப்பு, தொழில் மற்றும் பாதுகாப்பில் எதிர்மறையான தாக்கங்களை ஏற்படுத்தும். ஐரோப்பிய கூட்டமைப்பில் இருந்து பிரிட்டன் ஒப்பந்தம் இல்லாமல் வெளியேறுவதற்கான காலக்கெடு வருகிற 12-ந் திகதியுடன் முடிகிறது. இது சாத்தியமானால் பிரிட்டனில் வேலைவாய்ப்பு, தொழில் மற்றும் பாதுகாப்பில் எதிர்மறையான தாக்கங்களை ஏற்படுத்தும். எனவே இதனை தவிர்க்கும் விதமாக ‘பிரெக்ஸிட்’ ...

Read More »

மலையக தனி வீட்டுத்திட்டமும் மலையக பிரதிநிதிகளின் உரையும்!

கடந்த காலங்களில் பாராளுமன்றுக்கு மிகக்குறைவான நாட்கள் வருகை தந்த எம்.பிக்கள் பட்டியலில் இ.தொ.கா தலைவர் ஆறுமுகன் தொண்டமானும் அடங்குகிறார். அந்த வகையில் அவர் 03/4/19   அன்று இடம்பெற்ற மலைநாட்டு புதிய கிராமங்கள், உட்கட்டமைப்பு மற்றும் சமுதாய அபிவிருத்தி அமைச்சு மீதான நிதி ஒதுக்கீட்டு விவாதத்தில் கலந்து கொண்டு 8 நிமிடங்கள் வரை உரையாற்றியமையை அனைவரும் ஒரு அதிசய நிகழ்வாக நோக்குகின்றனர். மேற்படி அமைச்சின் மீதான விவாதத்தில் மலையகத்தை பிரதிநிதித்துவப்படுத்தாத பலரும் இம்மக்கள் பற்றிய தமது கருத்துக்களை முன் வைத்திருந்தமை முக்கிய விடயம். எனினும் நீண்ட ...

Read More »

அவுஸ்திரேலியாவில் மொத்த குடும்பத்தையும் கொன்ற தந்தை!

அவுஸ்திரேலியாவில் நபர் ஒருவர் மொத்த குடும்பத்தையும் கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. விஷவாயு செலுத்தி இரண்டு பிஞ்சு குழந்தைகள் உள்ளிட்ட மொத்த குடும்பத்தின் பின்னணி வெளியாகியுள்ளது. அவுஸ்திரேலியாவின் சிட்னி நகரில் குடும்பத்துடன் குடியிருந்து வந்தவர் 44 வயதான பெர்னாண்டோ மன்ரிக். கடந்த 2016 ஆம் ஆண்டு அல்டோபர் மாதம் இவரது மனைவி மரியா லூட்ஸ், பிள்ளைகள் எலிசா மற்றும் மார்ட்டின் என நால்வரும் பரிதாபமாக இறந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டனர். இந்த வழக்கு விசாரணையில் மன்ரிக் என்பவரே தமது மொத்த குடும்பத்தையும் கொன்றுவிட்டு தப்பிக்க ...

Read More »

கைக்குண்டு, வாள்களுடன் இருவர் கைது!

மட்டக்களப்பு, ஏறாவூர் பொலிஸ் பிரிவிலுள்ள ஐயங்கேணி பிரதேசத்தில் கைக்குண்டு மற்றும் வாள்களுடன் இரு இளைஞர்களை  நேற்று திங்கட்கிழமை மாலை கைது செய்துள்ளதாக ஏறாவூர் காவல் துறையினர் தெரிவித்தனர். மாவட்ட குற்றப் புலனாய்வு பிரிவுக்கு கிடைத்த தகவல் ஒன்றினையடுத்து சம்பவதினமான நேற்று திங்கட்கிழமை மாலை மாவட்ட குற்றப் புலனாய்வு பிரிவு பொறுப்பதிகாரி எஸ்.எஸ்.எஸ். சமந்த தலைமையிலான புலனாய்வு பிரிவினர் ஐயங்கேணி பிரதேசத்தில் வைத்து ஒரு கைக்குண்டு 4 வாள்களுடன் இரு இளைஞர்களை கைதுசெய்து ஏறாவூர் காவல் துறையிடம் ஒப்படைத்தனர் .   இதில் கைதுசெய்யப்பட்டவர்கள் விபுலானந்தபுரம் ...

Read More »

அமெரிக்க குடியுரிமை விவகாரம்; உறுதிப்படுத்தியது எதிர்க்கட்சி!

பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ, தனது அமெரிக்க குடியுரிமை நீக்கிக்கொள்வதற்கான ஆவணங்களை அமெரிக்காவிடம் சமர்ப்பித்திருப்பதை எதிர்க்கட்சி உறுதி செய்துள்ளது. எதிர்க்கட்சி அலுவலகத்தில் இன்று(​09) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டிருந்த நாடாளுமன்ற உறுப்பினர்களான, டலஸ் அழகப்பெரும, விமல் வீரவன்ச, பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் ஆகியோர் இன்றைய ஊடகவியலாளர் சந்திப்பில் தெரிவித்த கருத்துகள் மேற்கண்ட விடயத்தை உறுதிப்படுத்துவதாக அமைந்தது. ஜனாதிபதி வேட்பாளராக கோட்டா போட்டியிடுவார் என்கிற அச்சத்தில் ஐ.தே.கவின் அமைச்சர்கள் பிரபல ஆங்கில ஊடகவியலாளர் ஒருவருடன் இணைந்து கோட்டாவுக்கு எதிரான சூழ்ச்சிகளை செய்துவருவதாகவும் இதன்போது விமல் ...

Read More »

ஜெயலலிதா, சசிகலா வாழ்க்கையை மையப்படுத்தி புதிய படம்!

ஜெயலலிதா, சசிகலா வாழ்க்கையை மையப்படுத்தி பல படங்கள் உருவாகி வரும் நிலையில், புதிய படம் பற்றிய அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது. ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு அவரது வாழ்க்கை வரலாற்றை படமாக்க பலரும் முயற்சி செய்து வருகிறார்கள். இதற்கான இயக்குனர்கள் பட்டியலில் பாரதிராஜா, விஜய் மற்றும் பிரியதர்ஷினி ஆகியோர் இருந்தனர். பிரியதர்ஷினி முதல் ஆளாக தன் ஜெயலலிதா வாழ்க்கை வரலாறு படத்தை அறிவித்தார். இவர் மிஷ்கினிடம் உதவி இயக்குனராக பணிபுரிந்தவர். ‘த அயர்ன் லேடி’ என்று பெயரிடப்பட்டுள்ள இந்த படத்தில் ஜெயலலிதாவாக நடிக்க நித்யாமேனன் ஒப்பந்தம் ...

Read More »