குமரன்

புல்வாமா தாக்குதல் சம்பவங்களை சினிமாவாக எடுக்க கடும் போட்டி!

புல்வாமா தாக்குதல் சம்பவங்களை சினிமாவாக எடுக்க இந்தி பட உலகில் கடும் போட்டி நிலவியுள்ளது. ஜம்மு காஷ்மீரின் உரி பகுதியில் கடந்த 2016-ம் ஆண்டு நடத்தப்பட்ட தீவிரவாத தாக்குதலுக்கு இந்திய ராணுவம் பதிலடி கொடுத்தது. இந்த சம்பவத்தை இந்தியில் உரி த சர்ஜிகல் ஸ்ட்ரைக் என்ற பெயரில் படமாக எடுக்கப்பட்டது. கடந்த ஜனவரி 11-ந்தேதி வெளியான இந்த படத்துக்கு நாடு முழுவதும் நல்ல வரவேற்பு கிடைத்தது. கடந்த பிப்ரவரி 14-ந்தேதி புல்வாமா பகுதியில் தீவிரவாத தாக்குதலுக்கு 40 ராணுவ வீரர்கள் பலியானார்கள். புல்வாமா தாக்குதலுக்கு ...

Read More »

கேப்பாப்புலவில் அடையாள உண்ணாவிரதம்!

முல்லைத்தீவு – கேப்பாப்புலவில் அடையாள உணவு தவிர்ப்பு போராட்டமொன்றை முன்னெடுக்கவுள்ளதாக, தொடர் நிலமீட்பு போராட்டத்தில் ஈடுபட்டுவரும் கேப்பாப்புலவு மக்கள் தெரிவித்துள்ளனர். குறித்த போராட்டம் இன்று சனிக்கிழமை போராட்டம் இடம்பெறும் இடத்தில் முன்னெடுக்கப்படவுள்ளது. முல்லைத்தீவில் தேசிய மீனவ ஒத்துழைப்பு இயக்கத்தின் ஏற்பாட்டில் ‘காணி உரிமைக்கான மக்கள் ஊர்வலம்’ எனும் தொனிப்பொருளில் ஆரம்பிக்கப்பட்ட  ஊர்வலம், இன்றுடன்  நிறைவடையவுள்ளது. இதனை முன்னிட்டு குறித்த போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளதாக கேப்பாப்புலவு மக்கள் தெரிவித்துள்ளனர்.

Read More »

யாழ்-வலி வடக்கில் 30 ஏக்கர் காணி விடுவிக்கப்படுமாம்!

யாழ்ப்­பா­ணம், வலி.வடக்கு பிர­தேச செய­லர் பிரி­வில் 30 ஏக்­கர் காணி மற்­றும் மக்­கள் பாவ­னைக்­கு­ரிய வீதி ஒன்­றும் நாளை மறு­தினம் திங்கட்கி­ழமை விடு­விக்­கப்­ப­ட­வுள்­ளது. மயி­லிட்­டித்­துறை வடக்கு, மயி­லிட்டி வடக்கு ஆகிய கிராம அலுவ­லர் பிரி­வு­க­ளில் மக்­கள் காணி­க­ளும், பலாலி கிழக்­கில் முதன்மை வீதி ஒன்றும் விடு­விக்­கப்­ப­ட­வுள்­ளன. தெல்­லிப்­பழை பிர­தேச செய­லர் எஸ்.சிவ­சி­றி­யி­டம் நாளை மறு­தினம் திங்­கட்­கி­ழமை மாலை 3 மணிக்கு இரா­ணு­வத்­தி­னர் காணி விடுவிப்புக்கான பத்­தி­ரத்தை ஒப்­ப­டைக்­க­வுள்­ள­னர். காணி­கள் விடு­விக்­கப்­ப­ட­வுள்ள நிலை­யில் அந்­தப் பகு­தி­யில் அமைந்­துள்ள இரா­ணுவ முகாம்­களை அகற்­றும் நட­வ­டிக்­கை­யில் இரா­ணு­வத்­தி­னர் ஈடு­பட்டு ...

Read More »

ஜெனீவாவில் அழுத்தங்கள் சாத்தியமா?

ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையின் 40ஆவது கூட்டத்தொடர் ஜெனீவாவில் ஆரம்பமாகி, நடந்து கொண்டிருக்கும் நிலையில், இந்தக் கூட்டத்தொடரில், இலங்கை தொடர்பான தீர்மானம் ஒன்றைக் கொண்டு வரப்போவதாக, பிரித்தானியா அறிவித்திருக்கிறது. பிரித்தானியா, சில வாரங்களுக்கு முன்னரே இதை உறுதி செய்திருந்தது. கடந்த திங்கட்கிழமை, பேரவைக் கூட்டத்தொடரின் தொடக்க நிகழ்வில் உரையாற்றிய பிரித்தானியாவின் வெளிவிவகாரப் பணியக அமைச்சர் அஹமட் பிரபு, இதை மீண்டும் உறுதி செய்திருந்தார். அவர், ஜெனீவாவில் உரையாற்றுவதற்குச் சில மணி நேரம் முன்னதாக, வடக்கில் பாரிய போராட்டங்கள் நடைபெற்றிருந்தன. காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு நீதி கோரியும் இலங்கை ...

Read More »

வடக்கில் குவிக்கப்படும் சிறிலங்கா காவல் துறை!

வடக்கில் மேலும் 850 சிறிலங்கா காவல் துறை உத்தியோகத்தர்களை புதிதாக இணைத்து கொள்ளவுள்ளதாக வட மாகாண சிரேஸ்ர காவல் துறை அத்தியட்சகர் கணேசநாதன் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாண மாவட்ட செயலகத்தில் நேற்று இடம்பெற்ற மாவட்ட சிவில் பாதுகாப்பு குழுக்கூட்டத்தில் கலந்து கொண்டு கருத்து வெளியிட்ட போதே அவர் இதனை தெரிவித்துள்ளார். வடக்கு மாகாணத்தில் புதிதாக 850 தமிழ்காவல் துறை உத்தியோகத்தர்கள் இணைத்து கொள்ளப்படவுள்ளனர். இதற்காக 18 வயதுக்கு 28 வயதுக்கு இடைப்பட்ட 5 அடி 4 அங்குலம் உயரமுடைய இளைஞர்கள், யுவதிகள் முன்வரவேண்டும். இலங்கையின் சனத்தொகை ...

Read More »

இந்தியா-ஆஸ்திரேலியா நாளை மோதல்!

இந்தியா-ஆஸ்திரேலியா இடையேயான முதல் ஒரு நாள் கிரிக்கெட் போட்டி ஐதராபாத்தில் நாளை நடக்கிறது. ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப் பயணம் செய்து விளையாடி வருகிறது. 2 ஆட்டம் கொண்ட 20 ஓவர் போட்டி ஆஸ்திரேலியா 2-0 என்ற கணக்கில் கைப்பற்றியது. விசாகப்பட்டினத்தில் நடந்த முதல் 20 ஓவர் போட்டியில் 3 விக்கெட் வித்தியாசத்திலும், பெங்களூரில் நடந்த 2-வது போட்டியில் 7 விக்கெட் வித்தியாசத்திலும் ஆஸ்திரேலியா வென்றது. அடுத்து இரு அணிகளும் 5 போட்டி கொண்ட ஒரு நாள் தொடரில் விளையாடுகிறது. இதில் முதல் ...

Read More »

அபினந்தன் விடுதலைக்காக குரல் கொடுத்த பாகிஸ்தான் மக்கள்!

போர் வேண்டாம் என்றும், விமானி அபினந்தனை விடுதலை செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தி பாகிஸ்தானில் உள்ள பொதுமக்கள் போராட்டம் நடத்தும் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றன. புல்வாமா தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் உள்ள பயங்கரவாத முகாமை இந்திய விமானப்படை குண்டுவீசி தகர்த்தது. தங்கள் பகுதிக்குள் இந்திய விமானப்படை ஊடுருவியதால் கடும் ஆத்திரமடைந்த பாகிஸ்தான் ராணுவம், பதில் நடவடிக்கையாக இந்திய எல்லைக்குள் உள்ள ராணுவ நிலைகளை குறிவைத்து தாக்குதல் நடத்தியது. இந்திய விமானப்படை மீண்டும் பதிலடி கொடுத்தது. ...

Read More »

புதிது புதிதாக ஆணைக்குழுக்களை அமைப்பதன் ஊடாக எந்தப் பலனும் இல்லை!

காணாமல் போனவர்கள் தொடர்பாக புதிது புதிதாக ஆணைக்குழுக்களை அமைப்பதன் ஊடாக எந்தப் பலனும் இல்லை எனத் தெரிவித்த அமைச்சர் சம்பிக்க ரணவக்க, பழைய தகவல்களுக்கு அமைய பரணகம மற்றும் உடலாகம ஆணைக்குழுவின் தகவல்களை பெற்று காணாமல் போனோருக்கான சான்றிதழை வழங்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் எனவும் அமைச்சர் தெரிவித்தார். சுஹூருபாயவில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். இராணுவத்தினர் அனர்த்த நிலைமைகளின் போதே முகாம்களில் இருந்து வெளியே வந்து செயற்படுகின்றனர். வேறு தேவைகளுக்காக அவர்கள் வெளியே வர வேண்டிய அவசியம் இல்லாத ...

Read More »

தமிழக அரசின் கலைமாமணி விருதுகள்!

2011 – 2018 ஆம் ஆண்டுக்கான தமிழக அரசின் கலைமாமணி விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. சினிமாவில் சிறந்து விளங்கும் நடிகர், நடிகைகள், தொழில்நுட்பக் கலைஞர்களுக்கு, தமிழக அரசு ஒவ்வொரு ஆண்டும் கலைமாமணி விருது வழங்குவது வழக்கம். இந்த விருதுகள், சில ஆண்டுகளாக வழங்கப்படாமல் இருந்தன. இந்நிலையில், 2011 முதல் 2018 வரை 8 ஆண்டுகளுக்கான கலைமாமணி விருதுகளை மொத்தமாக அறிவித்துள்ளது தமிழக அரசு. விருதுகள் அறிவிக்கப்பட்டவர்களின் விவரம் பின்வருமாறு: நடிகர்கள் விஜய் சேதுபதி கார்த்தி பிரசன்னா ஆர்.பாண்டியராஜன் சசிகுமார் ஸ்ரீகாந்த் எம்.எஸ்.பாஸ்கர் தம்பி ராமையா சூரி ...

Read More »

அவுஸ்திரேலிய வாகன ஓட்டிகளுக்கு முக்கிய அறிவிப்பு!

போக்குவரத்து கண்காணிப்பை மேற்கொள்ளும் காவல் துறை  வாகனங்களில் Number plate recognition வசதிகொண்ட விசேட கமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. விக்டோரியா மாநிலத்தில் இந்த விடயம் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. வீதியில் செல்லும் வாகனங்களின் இலக்கத்தகடுகளை ஒரே பார்வையில் ஸ்கான் செய்யப்படும். அதனை iPad app வழியாக காவல் துறைகுத் தகவல் கொடுக்கும் வகையில் இக்கமரா வடிவமைக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் பதிவு செய்யப்படாத அல்லது திருடப்பட்ட வாகனங்கள் மற்றும் ஓட்டுநர் உரிமம் ரத்துச் செய்யப்பட்டவர்களை இலகுவாக கண்டறிய முடியும்.

Read More »