குமரன்

வடக்கு ஆளுநருக்கு எதிராக 217 வழக்குகள்!

தனக்கு எதிராக கொழும்பு, யாழ்ப்பாண நீதிமன்றங்களில் 217 வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக வடமாகாண ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் தெரிவித்தார். அது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில், ஒவ்வொரு விடயத்துக்கும் நீதிமன்றங்களை நாடி வழக்கு தாக்கல் செய்கின்றார்கள். இதுவரைக்கும் எனக்கு எதிராக யாழ்ப்பாணம், கொழும்பு, வவுனியா நீதிமன்றங்களின் 217 வழக்குகள் தாக்கல் செய்துள்ளனர். அவற்றை நாம் எதிர்கொண்டு வருகின்றோம். அண்மையில் கூட ஊழியர் ஒருவர் பணியிடத்தில் தன்னுடைய உரிமை மீறப்பட்டுள்ளதாக கூறி வழக்கு தாக்கல் செய்துள்ளார். குறித்த ஊழியர் 2 வருட காலத்தில் ஓய்வு பெறவுள்ளார். ...

Read More »

வைரலாகும் வங்கதேச கட்டிடத் தொழிலாளியின் புகைப்படம்!

வங்கதேசத்தைச் சேர்ந்த கட்டிடத் தொழிலாளி ஒருவரது புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகப் பரவி வருகிறது. இதுகுறித்து வங்கதேச ஊடகங்கள் வெளியிட்ட செய்தியில், ”மாபெடன் முங் என்பவர் மார்ச்  21-ம் திகதி தனது ட்விட்டர் பக்கத்தில் வங்கதேசத்தைச் சேந்த கட்டிடத் தொழிலாளி ஒருவரின் புகைப்படத்தைப் பதிவிட்டிருந்தார்.  நான் புகைப்படம் எடுக்கும்போது அந்த நபர் மிகவும் வெட்கப்பட்டார். அவருக்கு எங்கு பார்க்க வேண்டும் என்றே தெரியவில்லை. அவர் கமராவைப் பார்த்தபடி ஒரு போட்டோ மட்டுமே எடுக்க முடிந்தது. நான் இறுதியாக அவரைப் புகைப்படம் எடுத்து விட்டேன். அவர் ...

Read More »

ஒரு விருதுகூட வாங்காதது எனக்கு ஒரு குறையாக இருக்கு!

அக்னி தேவி படம் மூலம் ரீஎன்ட்ரி கொடுத்திருக்கும் நடிகை மதுபாலா, திரைப்படத்துறையில் தனக்கு குறை இருப்பதாக கூறியிருக்கிறார். ‘அழகன்’, `ரோஜா’, `இருவர்’, `செங்கோட்டை’, `ஜென்டில்மேன்’, `மிஸ்டர் ரோமியோ’ என 90களின் தமிழ் சினிமாக்களில் முத்திரை பதித்தவர் மதுபாலா. பாலாஜி மோகன் இயக்கிய `வாயைமூடிப் பேசவும்‘ படத்தில் ரீஎன்ட்ரி கொடுத்தார். கிட்டத்தட்ட 5 ஆண்டுகளுக்கு பிறகு `அக்னி தேவி’ படத்தில் நடித்திருக்கிறார். இதுபற்றி அவர் அளித்த பேட்டியில் ’வாழ்க்கை என்ன கொடுக்குதோ, அப்படியேதான் போய்க்கொண்டு இருக்கிறேன். வரும் வாய்ப்புகளை பயன்படுத்திக்கொள்கிறேன். என் பெஸ்ட் எதுவோ, அதைக் ...

Read More »

வட்டத்துக்கு வெளியே வர முடியாத பூச்சியங்கள்!

வடக்கு மாகாணத்திலுள்ள அரசாங்கத் திணைக்களம் ஒன்றின் பணிப்பாளருடன் உரையாடும் வாய்ப்பு, கடந்த வாரம் கிட்டியது. அவர், பாரியதொரு மனித வளத்துடன் தொழிற்படும் திணைக்களத்தின் பணிப்பாளர் ஆவார். மனித வளங்களை முகாமை செய்தல், அவர்களை வழிப்படுத்தல் என்பது மிகவும் சவாலான விடயம். வழமையாக, இவ்வாறான வேலைகளைக் கண்காணிக்கவே நேரம் போதுமானதாக இல்லை. அவர்களது முறைப்பாடுகள், அதற்கான தீர்வுகள் என அதனுடனேயே, பெரும் பெறுமதியான நேரத்தை நாளாந்தம் செலவிட வேண்டி ஏற்படுகின்றது. இப்படியிருக்கையில், நாம் எவ்வாறு புதிதாகச் சிந்திக்க முடியும், மாற்றி யோசிக்க முடியும், எவ்வாறு பெட்டிக்கு ...

Read More »

ஆஸி.யின் பந்து வீச்சுப் பயிற்சியாளராக அடம் கிரிப்த்!

எதிர்வரும் மே மாதம் 30 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரில் களமிறங்கவுள்ள அவுஸ்திரேலிய அணியின் பந்து வீச்சுப் பயிற்சியாளராக அடம் கிரிப்த் நியமிக்கப்பட்டுள்ளார். 41 வயதுடைய அடம் கிரிப்த் அவுஸ்திரேலிய அணியின் முன்னாள் வலது கை வேகப் பந்து வீச்சாளர் ஆவார். இதேவேளை அவுஸ்திரேலிய அணியின் பந்து வீச்சு பயிற்சியாளராக இருக்கும் முதல் தர வீரரான 53 வயது டிராய் கூலே எதிர்வரும் ஜூலை மாதம் நடைபெறும் ஆஷஸ் தொடர் முடியும் வரை அணியினருடன் தொடர்ந்து நீடிப்பார் என்றும் அவுஸ்திரேலிய ...

Read More »

மனப்பாங்கு மாற்றம் ஏற்படாதவரையில் இன முரண்பாடுகளை களையமுடியாது!

எம்மத்தியில் மனப்பாங்கு மாற்றம் ஏற்படாதவரையில் இலங்கையில் இனங்களுக்கிடையிலான முரண்பாடுகளை களைவது சாத்தியப்படாது என இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் கண்டி மாவட்ட இணைப்பாளர் திருமதி குமுதினி விதானகே தெரிவித்தார். கண்டி ஓக்ரைன் ஹோட்டலில் இண்டர்நியூஸ் நிறுவனம் ஒழுங்கு செய்த அரச உத்தியோகத்தர்களுக்கான இன நல்லிணக்கம் மற்றும் பல்லின வாதம் தொடர்பான செயலமர்விலே, அவர் இதனைத் தெரிவித்தார். அவர் மேலும் தெரிவித்ததாவது, நாம் மனித உரிகைள் ஆணைக்கு என்ற வகையில் பாரிய முயற்சி எடுத்தாலும், சட்டத்தால் எதனையும் சாதிக்க முடியாது. தனி நபர் ஒவ்வொருவரதும் மனதில் ...

Read More »

இந்திய படை சிறிலங்கா வருகை!

சிறிலங்கா மற்றும் இந்திய இராணுவம் பங்குகொள்ளும் கூட்டு இராணுவப் பயிற்சி இம் மாதம் 26 ஆம் திகதியிலிருந்து ஏப்பிரல் மாதம் 8 ஆம் திகதி வரை தியத்தலாவையில் நடைபெறவுள்ளது. இந்தக் கூட்டுப் பயிற்சி வருடாந்தம் இந்தியா மற்றும்சிறிலங்காவில் ஒரு சுழற்சி முறையில் நடைபெறுகின்றது. மித்திர சக்தி – ஏ இந்தியாவின் புனே நகரில் நடத்தப்பட்டது. இந்தப் பயிற்சியில் 120 சிறிலங்கா இராணுவத்தினர் பங்குபற்றினர். இந்த வருடம் 11 அதிகாரிகள் உட்பட, 120 இந்திய இராணுவத் தொகுதியொன்று சிறிலங்கா இராணுவத்துடன் இரண்டு வார கால பயிற்சியில் ...

Read More »

அவுஸ்திரேலியாவில் வெரோனிக்கா சூறாவளி!

கடந்த 48 மணித்தியாலத்தில் இரண்டாவது முறையாக வடக்கு அவுஸ்திரேலியாவில் வெரோனிக்கா சூறாவளி தாக்கியுள்ளது. வட மேற்கு கரையோரப்பகுதியான பில்பரா பகுதியில் மையம் கொண்டிருந்த வெரோனிகா புயல் இன்று அதிகாலை மீண்டும் 95 கிலோமீற்றர் வேகத்தில் தாக்கியுள்ளது. இதனால் அப்பகுதியில் நிலச்சரிவு ஏற்படலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் அடுத்த 24 மணி நேரம் பலத்த மழை மற்றும் வெள்ளம் நீடிக்கும் எனவும் அந்நாட்டு வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதேவேளை பொதுமக்கள் பாதுகாப்பான இடங்களில் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. பில்பராவில் நேற்று முன்தினம் சுமார் 180 மில்லிமீற்றர் ...

Read More »

அமெரிக்காவுடன் நெருங்கும் மஹிந்த!

மேற்குலகத்துக்கு எதிரான, குறிப்பாக அமெரிக்காவுக்கு எதிராக வெறுப்புணர்வை வெளிப்படுத்தி வந்த மஹிந்த ராஜபக்‌ஷ, அண்மையில் திடீரென அமெரிக்கத் தூதுவர் அலெய்னா ரெப்லிட்சை சந்திக்கச் சென்றிருந்தார்.  ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தலைவர் பேராசிரியர் ஜி.எல். பீரிஸையும் மஹிந்த ராஜபக்‌ஷவையும் அமெரிக்கத் தூதுவரிடம் அழைத்துச் சென்றவர் பசில் ராஜபக்‌ஷ. மஹிந்த ராஜபக்‌ஷ, எதிர்க்கட்சித் தலைவராக இருந்த போதும், அவரை அமெரிக்கத் தூதுவரிடம் இன்னொருவர் அழைத்துச் செல்லும் அளவுக்கு, இருதரப்பு உறவுகள் எட்டத்தில் இருந்தன. பசில் ராஜபக்‌ஷ, அமெரிக்க குடியுரிமையைக் கொண்டிருப்பவர் என்ற வகையில், இந்தச் சந்திப்புக்கான ஏற்பாட்டாளராகக் ...

Read More »

52 கோடி ஆண்டுகளுக்கு முந்தைய உயிரினங்களின் புதை படிமங்கள்!

சுமார் 52 கோடி ஆண்டுகள் முன்பு வாழ்ந்த ஆயிரக்கணக்கான உயிரினங்களின் புதை படிமங்கள் கண்டுபிடித்து சீனா ஆய்வாளர்கள் சாதனை படைத்துள்ளனர். சீனாவின் ஹூபே மாகாணத்தில் உள்ள டான்ஷூய் ஆற்றங்கரை அருகே புதைபடிம ஆய்வாளர்கள் ஆராய்ச்சியில் ஈடுபட்டனர். அப்போது, சுமார் 52 கோடி ஆண்டுகள் முன்பு வாழ்ந்த ஆயிரக்கணக்கான உயிரினங்களின் புதை படிமங்கள் கண்டுபிடிக்கப்பட்டன. இதுவரை 20,000-க்கும் மேற்பட்ட புதைபடிமங்கள் சேகரிக்கப்பட்டு, அவற்றில் புழுக்கள், ஜெல்லி மீன், கடல் அனிமோன், பாசி உள்ளிட்ட உயிரிகளின் 4,351 புதைபடிமங்கள் ஆய்வு செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. புதைபடிமமான பல ...

Read More »