பேரினவாதம் என்பது ஏனைய சிறுபான்மை இனத்தவர்களை அடக்கியொடுக்குவதற்கான சக்தியாக இருந்துவந்துள்ள அதேவேளை, அதனை சில அரசியல்வாதிகள் தமது தனிப்பட்ட நலன்களுக்காகப் பயன்படுத்தி வந்தார்கள். தற்போது நாட்டின் அரசியல் செயற்பாடுகளைத் தீர்மானிக்கும் சக்தியாகப் பேரினவாதம் மாறியிருக்கிறது என்று அரசியல் கைதிகளின் விடுதலைக்கான தேசிய இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் அருட்தந்தை சக்திவேல் தெரிவித்துள்ளார். இதுவிடயம் தொடர்பில் அவர் மேலும் கூறியதாவது : தற்போது நாட்டின் அரசியல் செயற்பாடுகளைத் தீர்மானிக்கும் சக்தியாகப் பேரினவாதம் மாறியிருக்கிறது. நாடு சுதந்திரம் அடைந்ததிலிருந்து அரசாங்கங்களை மாற்றியமைப்பதிலும், தீர்மானம் மேற்கொள்வதிலும் இந்தப் பேரினவாதத்தின் ஆதிக்கம் எப்போதும் ...
Read More »குமரன்
இலங்கையில் உலக பயங்கரவாத்தை ஒழிக்க அவுஸ்திரேலியா ஒத்துழைப்பு வழங்கும்!
உலக பயங்கரவாத்தை இலங்கையில் இருந்து முழுமையாக ஒழிக்க அவுஸ்திரேலிய அரசாங்கம் முழு ஒத்துழைப்பை வழங்கும் என அவுஸ்திரேலிய உள்துறை அமைச்சர் பீட்டர் டட்டன் உறுதியளித்துள்ளார். அத்துடன் சிறிலங்கா பிரதமர் ரணில் விக்ரமசிங்கவை அவுஸ்திரேலியாவிற்கு விஜயமொன்றை மேற்கொள்ளுமாறும் அழைப்பு விடுத்தார். அவுஸ்திரேலிய உள்துறை அமைச்சர் பீட்டர் டட்டனுக்கும் சிறிலங்கா பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கும் இடையிலான சந்திப்பு நேற்று அலரிமாளிகையில் இடம்பெற்றது. இதன் போதே மேற்படி அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இதன்போது உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களின் பின்னர் மீண்டும் நாட்டை வழமைக்கு திருப்பவும் உலக பயங்கரவாத்தை இல்லாதொழிப்பதற்கும் தேவையான ...
Read More »பேரினவாதம் விரித்த வலையில் சிறுபான்மை இனங்கள் சிக்கிக் கொண்டன!
அன்று தைப்பொங்கல் திருநாள். கவிதாவின் வீட்டுக்கு, அவளின் நண்பர்களான அன்வரும் மேரியும் தமது பெற்றோருடன் வந்திருந்தனர். தோழர்களைக் கண்ட கவிதா, வீட்டு வாசல் வரை ஓடி வந்து, அவர்களை அன்புடன் வரவேற்றாள். “வணக்கம்! வாருங்கள் வாருங்கள்” எனக் கவிதா நண்பர்களை வரவேற்றாள். மேரியும் அன்வரும் பொங்கல் வாழ்த்துகளைக் கூறி, அன்பையும் மகிழ்ச்சியையும் வெளிப்படுத்தினர். இது நான்காம் ஆண்டு மாணவர்களுக்கான, தமிழ்ப் பாட நூலில், ‘பண்டிகைகள்’ என்ற தலையங்கத்தின் கீழ், உரையாடல் வடிவில் அமைந்த பாடப்பரப்பு ஆகும். எம் உயிரிலும் மேலான தமிழைத் தாய் மொழியாகக் ...
Read More »இந்திய கிரிக்கெட் அணிக்காக சிறப்பு பாடல்!
உலக கோப்பை போட்டி நடந்து வரும் நிலையில், இந்திய கிரிக்கெட் அணிக்காக இசையமைப்பாளர், நடிகர் ஜி.வி.பிரகாஷ் சிறப்பு பாடல் ஒன்றை உருவாக்கியுள்ளார். ஜி.வி.பிரகாஷ் நடிப்பில் 5-க்கும் மேற்பட்ட படங்கள் வெளியீட்டுக்கு காத்திருக்கின்றன. மேலும் 5 படங்களில் நடித்துக்கொண்டு இருக்கிறார். இவை தவிர சூர்யா நடிப்பில் சூரரைப்போற்று, தனுஷ் நடிப்பில் அசுரன் படங்களுக்கு இசையமைத்தும் வருகிறார். இந்த பணிகளுக்கு இடையே மகத்தான மனிதர்கள் என்ற பெயரில் அதிகம் வெளியில் தெரியாத சமூக சேவகர்களை யூடியூபில் அடையாளப்படுத்த இருக்கிறார். சினிமா மற்றும் சமூக பணிகளுக்கு இடையே உலகக்கோப்பை ...
Read More »சட்டவிரோத குடிவாசிகளுக்கு வாய்ப்பு வழங்கப்பட மாட்டாது!-அவுஸ்திரேலியா
சட்டவிரோத குடியேற்றவாசிகள் தொடர்பான அவுஸ்திரேலியாவின் கொள்கைகள் முன்னரைப் போன்று தற்போதும் கடுமையானதாகவே காணப்படுவதாகவும், படகுகளின் மூலம் சட்டவிரோதமாக அவுஸ்திரேலியாவை வந்தடைவதற்கு இலங்கையர்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட மாட்டாது என்றும் அவுஸ்திரேலிய உள்துறை அமைச்சர் பீட்டர் டட்டன் எச்சரித்துள்ளார். இரண்டு நாட்கள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு நேற்று இலங்கை வந்துள்ள அவுஸ்திரேலிய உள்துறை அமைச்சர் பீட்டர் டட்டனின் தலைமையில் நேற்றைய தினம் கொழும்பிலுள்ள அவுஸ்திரேலிய இல்லத்தில் ஊடகவியலாளர் சந்திப்பொன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அச்சந்திப்பில் அவுஸ்திரேலிய எல்லை விவகாரங்களுக்கு பொறுப்பான கொமாண்டர் மேஜர் ஜெனரல் கிரெய்க் பியுரினியால் கடல் ...
Read More »தீயில் எரிந்து கரிகிப்போன அரிய பொக்கிஷம்!
நான்கு தசாப்தங்கள் கழிந்துவிட்டன. சரியாகச் சொல்வதானால் யாழ்.நூலகம் எரித்தழிக்கப்பட்டு, 38 ஆண்டுகள் கடந்துவிட்டன. தமிழர்களின் கலாசார தலைநகராகிய யாழ்ப்பாணத்தில் நான்கு நாட்கள் கொழுந்துவிட்டு எரிந்த தீச்சுவாலையில் கலாசார, கல்வி, பண்பாட்டு ரீதியான இன அழிப்பு நடவடிக்கையே மேற்கொள்ளப்பட்டிருந்தது. அந்த வன்முறையின் பாதிப்பு நீறுபூத்த நெருப்பாக தமிழ் மக்கள் மனங்களில் இன் னும் கனன்று கொண்டிருக்கின்றது. மாவட்ட சபைகளுக்கான தேர்தல் நடைபெற்ற தருணம் அது. அந்தத் தேர்தலில் தமிழர் விடுதலைக் கூட்டணி முழுமையாக வெற்றி பெறுவதை எப்படியாவது தடுத்து, குறைந்தது ஒரு ஆசனத்தையாவது கைப்பற்றிவிட வேண்டும் ...
Read More »என் கணவர் அமெரிக்க அதிபர், நான் இந்திய பிரதமர் !
பிரபல நடிகை பிரியங்கா சோப்ரா சமீபத்தில் அளித்த பேட்டியில், என் கணவர் அமெரிக்க அதிபர், நான் இந்திய பிரதமர் என்று தன்னுடைய விருப்பத்தை கூறியுள்ளார். இந்தி சினிமாவில் முன்னணி நடிகையாக விளங்குபவர் பிரியங்கா சோப்ரா. தமிழில் விஜய்யுடன் தமிழன் படத்தில் நடித்தவர். ஹாலிவுட்டுக்கு சென்று ஆங்கில படங்களிலும் நடித்து வரும் பிரியங்கா சோப்ரா கடந்த ஆண்டு தன்னை விட 10 வயது குறைந்த அமெரிக்க பாடகர் நிக் ஜோன்சை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்த திருமண வரவேற்பு நிகழ்ச்சிக்கு சென்று மண மக்களை ...
Read More »குற்றங்கள் நிரூபிக்கப்படுமாயின் வழக்குத் தொடரப்படும்!
குற்றஞ்சாட்டப்பட்டுள்ள பாராளுமன்ற உறுப்பினர்கள் மீதான குற்றங்கள் நிரூபிக்கபடுமாயின் அவர்கள் மீது வழக்குத்தொடரவும் குற்றவாளிகள் இல்லாவிட்டால் அதற்கான ஆதாரங்களை வெளியிடவும் நடவடிக்கை எடுக்கப்படும் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க குறிப்பிட்டார். யுத்தக்காலத்தில் முஸ்லிம் பிரதிநிதிகள் நாட்டுக்கும் மக்களுக்கும் முழு ஒத்துழைப்பை வழங்கியிருந்தனர். ஆனால் வரலாற்றில் முதல் முறையாக முஸ்லிம் பிரதிநிதிகள் இல்லாத அமைச்சரவை உருவாகியுள்ளது. ஆகவே குற்றஞ்சாட்டப்பட்டுள்ள பாராளுமன்ற உறுப்பனர்களிடம் சென்று வாக்கு மூலத்தை பெற்று ஒருமாதத்துக்குள் இறுதி விசாரணை அறிக்கைகளை குற்ற விசாரணை பிரிவு பாராளுமன்றத்துக்கு அனுப்பி வைக்க வேண்டும். அந்த அறிக்கைக்கு அமைவாக ...
Read More »கனடாவில் உலகின் மிகப்பெரிய சர்வதேச பெண்கள் மாநாடு !
கனடாவில் பிரிடிஸ் கொலம்பிய வான்கூவாரில் பெண்கள் 2019 மாநாடு அடம்பெற்று வருகின்றது. பெண்கள் மற்றும் சிறுமியர் நல்வாழ்வு, சுகாதாரம் பால்நிலைஈ, சமத்துவம், உரிமை குறித்து இப் பெண்கள் மாநாட்டில் ஆராயப்படுகின்றது 160 நாடுகளை சேர்ந்த 8000 பேர் இதில் பங்கேற்கின்றனர். இந்த பெண்கள் மாநாட்டில் 100000 வரையிலான பார்வையாளர்கள் கலந்துகொள்கின்றனர். கடந்த திங்கட்கிழமை 03ஆம் திகதி ஆரம்பமாண இப் பெண்கள் மாநாடு நாளை (06) நிறைவடைகின்றது. இப் பெண்கள் மாநாட்டில் இலங்கைகை பிரதிநிதித்துவப்படுத்தி இலங்கை பெண்கள் மற்றும் சிறுவர் விவகார அமைச்சர் சந்திராணி பண்டார ...
Read More »சாஹ்ரானுடன் ஹிஸ்புல்லாவுக்கு தொடர்பு !
கிழக்கு மாகாண முன்னாள் ஆளுநர் எம்.ஏ.எம்.ஹிஸ்புல்லா மீது சஹ்ரானுடன் நெருக்கிய தொடர்புகளை வைத்துள்ளார் எனக் கூறி காத்தான்குடி காவல் துறை நிலையத்தில் இன்று முறைப்பாடு ஒன்று செய்யப் பட்டுள்ளது. குறித்த முறைப்பாட்டினை ஈரோஸ் இயக்கத்தின் தலைவர் ஆர் .பிரபாகரன் இன்று காலை காத்தான்குடி காவல் துறை நிலையத்தில் பதிவு செய்துள்ளார் . குறித்த முறைப்பாட்டில் கிழக்கு மாகாண முன்னாள் ஆளுநர் ஹிஸ்புல்லா தற்கொலை குண்டுதாரி சஹ்ரானுடன் நெருங்கிய தொடர்புகளைப் பேணி வந்துள்ளார் எனவும், அது குறித்த படங்கள் சமூக வலைத்தளங்களில் உலாவுவதாகவும் இது ...
Read More »
Eelamurasu Australia Online News Portal