குமரன்

தற்கொலைதாரிகளின் இலக்குகளில் மட்டக்களப்பு மரியாள் தேவாலயம்?

மட்­டக்­க­ளப்பு சீயோன் தேவா­ல­யத்தின் மீது மேற்­கொள்­ளப்­பட்ட தாக்­குதல் தொடர்பில் பல்­வேறு தக­வல்கள் வெளி­யா­கி­ வருகின்றன. குறித்த தாக்­கு­தலை நடத்த வந்­த­வரை தேவா­லய நிர்­வா­கத்­தினர் சந்­தேகம் கொண்டு வெளியில் அனுப்ப முற்­பட்­ட­போது அவர் வாய்த்­தர்க்­கத்தில் ஈடு­பட்­ட­தா­கவும் சம்­ப­வத்­தின்­போது பாதிக்கப்பட்­ட­வர்கள் தெரி­விக்­கின்­றனர். தேவா­ல­யத்­திற்குள் நுழைய முற்­பட்­ட­வரை தேவா­லய ஊழி­யர்கள் தேவா­ல­யத்­திற்குள் இருந்­து­வெ­ளி­யேற்­றிய நிலையில் மீண்டும் அவர் தேவா­ல­யத்­திற்குள் நுழைய முற்­பட்ட வேளையில் அவர் ஊழி­யர்­க­ளுடன் வாக்­கு­வாதம் செய்­து­கொண்­டி­ருக்­கும்­போதே குண்டை வெடிக்­கச்­செய்­துள்­ள­தாக தெரி­ய­வ­ரு­கின்­றது. இதே­வேளை கொலை­யாளி மட்­டக்­க­ளப்பு மரியாள் பேராலயத்தினை இலக்­கு­வைத்தே வந்­துள்­ள­தா­கவும் தக­வல்கள் வெளி­யா­கி­யுள்­ளன. தாக்­குதல் நடந்த ...

Read More »

யாழ். இணுவில் கந்தசுவாமி ஆலயத்திற்கு அருகில் வெடிபொருட்கள் ?

யாழ்.  இணுவில் கந்தசுவாமி ஆலயத்திற்கு அருகில் வெடிபொருட்கள் இருக்கலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் சற்று முன்னர் பாரிய தேடுதல் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. குறித்த ஆலயத்திற்கு அருகில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த உரிமை கோரப்படாத மோட்டார் சைக்கில் மற்றும், அவ்வாலயத்திற்கு அருகில் உள்ள விளையாட்டு மைதானத்தில் கைவிடப்பட்ட நிலையிலிருந்த பொதி ஒன்று தொடர்பிலேயே குறித்த சோதனை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்நிலையில் சம்பவ இடத்திற்கு விரைந்த காவல் துறை  இராணுவத்தின் குண்டு செயலிழப்பு செய்யும் பிரிவினரை அழைத்து குறித்த பகுதியில் சோதணை நடத்தினர். இதன் போது கோவிலுக்கு அருகில் நிறுத்தி ...

Read More »

கதாநாயகியாகும் ஸ்ரீதேவியின் இரண்டாவது மகள்!

நடிகை ஸ்ரீதேவியின் முதல் மகள் ஜான்வி கபூர் கடந்த ஆண்டு சினிமாவில் அறிமுகமான நிலையில், இரண்டாவது மகள் குஷி கபூர் விரைவில் சினிமாவில் அறிமுகமாக இருப்பதாக ஜான்வி தெரிவித்துள்ளார். நடிகை ஸ்ரீதேவி தனது மூத்த மகள் ஜான்வியை ‘தடக்’ என்ற இந்தி படத்தில் கதாநாயகியாக அறிமுகப்படுத்தினார். ஆனால் படம் திரைக்கு வரும் முன்பே துபாயில் குளியல் அறை தொட்டியில் மூழ்கி அவர் இறந்து போனார். தடக் படத்தில் ஜான்வி நடிப்புக்கு பாராட்டுகள் கிடைத்தன. மேலும் புதிய படங்களில் நடிக்க கதை கேட்டு வருகிறார். இந்த ...

Read More »

தாக்குதல் தொடர்பில் எமக்கு தகவல் கிடைக்கவில்லை! – நியூஸிலாந்து பிரதமர்

நியூஸிலாந்தின் கிரைஸ்சேர்ச் நகரில் மேற்கொள்ளப்பட்ட தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையிலேயே இலங்கையில் மேற்கொள்ளப்பட்ட தற்கொலை தாக்குதல்கள் அமைந்துள்ளதாக இலங்கை அரசாங்கம் தெரிவித்துள்ளது. இந் நிலையில் இக் கருத்து தொடர்பில் நியூஸிலாந்துப் பிரதமர் ஜெஸின்டா ஆர்டென், இலங்கைத் தாக்குதல் தொடர்பில் தமது நாட்டு புலனாய்வுத் துறையினருக்கு தகவல்கள் எதுவும் கிடைக்கவில்ல‍ை எனவும், இலங்கையின் விசாரணைகள் தற்போது ஆரம்பக்கட்டத்திலேயே உள்ளது என்பதை தான் புரிந்து கொள்வதாகவும் குறிப்பிட்டுள்ளார். நியூஸிலாந்து கிரைஸ்சேர்ச் நகரில் பள்ளிவாசலில் இடம்பெற்ற தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் இங்கு தேவாலயங்களில் இந்த தாக்குதல் இடம்பெற்றுள்ளதாகவும், ...

Read More »

பெற்றோரை பார்க்க சென்ற அவுஸ்திரேலிய பிரஜைகள் தற்கொலை குண்டுத்தாக்குதலில் பலி!

இலங்கையில் இடம்பெற்ற குண்டுத்தாக்குதலில் அவுஸ்திரேலியா பிரஜைகளான இரண்டு சிங்கள இனத்தவர்  பலியாகியுள்ளனர். Manik Suriaaratchi மற்றும் 10 வயதான அவரது மகள் Alexendria ஆகியோர் நீர்கொழும்பு கட்டுவப்பிட்டிய St. Sebastian தேவாலயத்தில்  நடந்த குண்டு வெடிப்பில் கொல்லப்பட்டுள்ளனர். அவுஸ்திரேலியர்களான இவர்கள் தமது பெற்றோரை பார்க்க இலங்கை சென்றுள்ளனர். ஈஸ்டர் ஞாயிறு வழிபாடுகளில் கலந்துக்கொண்டனர். சம்பவம் நடைபெற்ற போது Manik Suriaaratchiயின் கணவர் Mawjood வாகனத்தை நிறுத்த சென்றிருந்ததால் அவர் காயங்களுடன் உயிர் தப்பியுள்ளார். இலங்கையில்   நடந்த பயங்கரவாத தாக்குதல் சம்பவங்களை அவுஸ்திரேலிய பிரதமர் Scott ...

Read More »

வெள்ளவத்தையில் குண்டு வெடிப்பு!

கொழும்பு வெள்ளவத்தை பகுதியில் சற்றுமுன்னர் மோட்டார் சைக்கிளில் வைக்கப்பட்ட குண்டு வெடித்துள்ளது. சாவோய் திரையரங்கிற்கு அருகே இந்த வெடிப்பு சம்பவம் இடம்பெற்றுள்ளது.  மோட்டார் சைக்கிளில் வைக்கப்பட்டிருந்த குண்டு ஒன்றே இவ்வாறு வெடித்து சிதறியுள்ளது.

Read More »

மஹிந்த ராஜபக்சவுடன் நெருங்கிய தொடர்பு வைத்திருந்த முஸ்லிம் தற்கொலை குண்டுதாரிகள்?

கொழும்பில் கிங்ஸ்பெரி மற்றும் சினமன் ஹோட்டல்களில் தாக்குதல் நடத்திய இரண்டு தற்கொலைதாரிகளும் சகோதரர்கள் எனவும் இவர்களின் தந்தையான பிரபல வர்த்தகருக்கு முன்னாள் ஜனாதிபதி மஹிந்தவுடன் மிகவும் நெருக்கமான உறவு இருந்ததாக தெரிவிக்கப்படுகின்றது. கொழும்பின் பிரபல ஊடகமொன்று இது தொடர்பான தகவலை வெளியிட்டுள்ளது. இது தொடர்பில் அந்த ஊடகத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது பிரபல வர்த்தகரான அல்காஜ் மொகமட் யூசுப் இப்ராஹிம் (வயது 65) என்பவரின் மகன்களான இம்சாத் அகமட் இப்ராஹிம் (வயது 33), இல்காம் அகமட் இப்ராஹிம் (வயது31) இருவரும் கிங்ஸ்பெரி மற்றும் சினமன்ட் கிரான்ட் ...

Read More »

குண்டுகளுடன், ‘உலகத்துக்கு ஒரே கடவுள்’ என எழுதப்பட்ட வாகனங்கள் நடமாட்டம்!

வெடிபொருள்களுடனான வான் ஒன்றும் லொரியொன்றும் கொழும்புக்குள் உட்பிரவேசித்துள்ளமை தொடர்பில் அனைத்து காவல் துறை நிலையங்களுக்கும் அறிவிக்கப்பட்டுள்ளதுடன், அவற்றை விட ஐந்து மோட்டார் வாகனங்கள் மற்றும் கெப் ரக வாகனமொன்றும் தொடர்பில் தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளன. மேலும் குறித்த இந்த வாகனங்கள் தொடர்பிலான விடங்கள் ஏதேனும் அறியமுடிந்தால் உடனடியாகப் அவசர காவல் துறை  இலக்குத்து அழைத்து தெரியப்படுத்துமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. அவை பின்வருமாறு, #. WP BCY- 2183 (Black Red TVS Scooty #. NWP VP 7783 (Midnight Black Bajaj pulsar 150) #. ...

Read More »

தாக்குதல் நடத்தியோரின் புகைப்படத்தை வெளியிட்ட ஐ.எஸ்.ஐ.எஸ்!

கொழும்பு உட்பட  நாட்டில் நடத்தப்ப்ட்ட  8 தொடர் குண்டுவெடிப்பு சம்பவங்களுக்கு ஐ.எஸ்.ஐ.எஸ். அமைப்பினர் உரிமை கோரியுள்ள நிலையில் அந்த அமைப்பினர் குறித்த தாக்குதலை மேற்கொண்ட 7 ஐ.எஸ்.ஐ.எஸ். உறுப்பினர்களுடைய புகைப்படத்தை வெளியிட்டுள்ளது. அத்துடன் தாக்குதல் நடத்தியோர் தொடர்பான பெயர் உள்ளடங்கிய விரிவான அறிக்கையொன்றையும் ஐ.எஸ்.ஐ.எஸ் இயக்கம் வெளியிட்டுள்ளது.

Read More »

தற்கொலை தாக்குதலில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 359 ஆக உயர்வு!

கடந்த 21 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நாட்டில் 8 இடங்களில்இடம் பெற்ற மிலேச்சதனமான தற்கொலை  குண்டு தாக்குதலில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 359 ஆக அதிகரித்துள்ளதுடன் மேலும் பலர் படுகாயமடைந்து வைத்தியாசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். குறித்த தற்கொலை குண்டுத் தாக்குதல்களில் இலங்கையர்கள் உட்பட பல வெளிநாட்டவர்கள் உயிரிழந்துள்ளனர். இக் கொடூரத் தாக்குதலில் 38 வெளிநாட்டவர்கள் உயிரழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது. இதேவேளை, இறந்தவர்கள் பலரின் இறுதிச் சடங்குகள் நேற்றைய தினம் பலபாகங்களிலும் இடம்பெற்றதுடன் நேற்றைய நாள் துக்கநாளாகவும் அனுஷ்டிக்கப்பட்டது.

Read More »