குமரன்

நாடற்ற 50 பேர் காலவரையின்றி ஆஸ்திரேலிய தடுப்பு முகாமில்!

ஆஸ்திரேலிய குடியுரிமை பெறாதவர் அல்லது அகதியாக அடையாளம் காணப்படாதவர் என அறியப்படும் நபரை நாடுகடத்தும் வரை சிறைப்படுத்தி வைக்க ஆஸ்திரலிய சட்டம் அனுமதிக்கின்றது. அந்த வகையில் 45 ஆண்கள், 5 பெண்கள் உள்பட நாடற்ற 50 பேர் காலவரையின்றி ஆஸ்திரேலிய தடுப்பு முகாமில் வைக்கப்பட்டுள்ளனர். சயித் இமாசி அதில் ஒருவர். கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு, முறையான கடவுச்சீட்டு மற்றும் விசாயின்றி ஆஸ்திரேலியா சென்ற அவர் கைது செய்யப்பட்டு சிறைவைக்கப்பட்டார். எந்த நாட்டில் தான் பிறந்தேன் என்று அறியாத அவரை நாடுகடத்த முடியாத நிலை ...

Read More »

இந்திராகாந்தி பயோபிக்கில் அஜித் பட நடிகை!

மறைந்த பிரதமர் இந்திராகாந்தி வாழ்க்கையையும் படமாக்கும் பணிகள் தொடங்கியுள்ளன, இதில் இந்திராகாந்தி வேடத்தில் அஜித் பட நடிகை நடிக்க உள்ளார். அரசியல் தலைவர்கள் வாழ்க்கை கதைகள் திரைப்படங்களாக வெளிவருகின்றன. ஏற்கனவே பிரதமர் நரேந்திரமோடி, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் வாழ்க்கை படங்கள் வெளிவந்தன. மறைந்த முதல் அமைச்சர் ஜெயலலிதா வாழ்க்கையையும் ‘தலைவி,’ ‘த அயன் லேடி’ ஆகிய பெயர்களில் இரண்டு இயக்குனர்கள் படங்களாக எடுக்கின்றனர். இவற்றில் கங்கனா ரணாவத், நித்யாமேனன் ஆகியோர் ஜெயலலிதா வேடத்தில் நடிக்கின்றனர். மறைந்த பிரதமர் இந்திராகாந்தி வாழ்க்கையையும் படமாக்கும் பணிகள் ...

Read More »

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 4வது டெஸ்ட்……!

ஆஷஸ் தொடரில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 4-வது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி முதல் இன்னிங்சில் 301 ரன்னில் ஆல் அவுட்டானது. இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான 4-வது ஆஷஸ் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி மான்செஸ்டரில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற ஆஸ்திரேலியா அணி கேப்டன் டிம் பெய்ன் முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார். அதன்படி, அந்த அணி முதல் இன்னிங்சை தொடங்கியது. ஓய்விற்கு பிறகு மீண்டும் களமிறங்கியுள்ள ஸ்டீவ் ஸ்மித் அபாரமாக விளையாடி இரட்டை சதத்தை பதிவுசெய்தார். இறுதியில், ஆஸ்திரேலியா 8 விக்கெட் ...

Read More »

உலகின் மிகப்பெரிய உணவகம் சிக்காகோவில் திறப்பு!

உலகின் மிகப்பெரிய ஸ்டார்பக்ஸ் உணவகம் சிக்காகோவில் திறக்கப்படவுள்ளது. உலகில் அதிக துரித உணவகங்கள் வைத்துள்ள ஒரு நிறுவனமாக ஸ்டார்பக்ஸ் உணவகம் திகழ்வதுடன் இந்நிறுவனம் உலகளவில் 30,000 இடங்களுக்கு மேல் இயங்கி வருகின்றது. உலகளவில் டோக்யோவில்தான் மிகப்பெரிய ஸ்டார்பக்ஸ் உணவு விடுதி செயற்பட்டு வருகின்றது. இந்நிலையில், நவம்பர் 15ஆம் திகதி சிக்காகோவில் 43 ஆயிரம் சதுர அடியில் 4 தளங்கள் கொண்ட ஸ்டார்பக்ஸ் உணவகத்தை திறக்கவுள்ளதாக அந்நிறுவனம் அறிவித்துள்ளது.   சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கும் புதிய தளமாக இது இருக்குமென நம்பிக்கை தெரிவித்துள்ள ஸ்டார்பக்ஸ், இங்கு ...

Read More »

விவசாய நிலத்தை மீட்டுத்தருமாறு கோரி‌ வவுனியாவில் போராட்டம்!

வவுனியா போஹஸ்வெவ பகுதியில் சிவில் பாதுகாப்புப்படையின் பயிர்ச் செய்கை மேற்கொள்ளும் விவசாய பண்ணைக்காணியை அப்பகுதியில் அரசியல் தலைமைகளினால் குடியேற்றப்பட்ட மக்கள் தமக்கு விவசாயம் மேற்கொள்வதற்கு பகிர்ந்தளிக்குமாறு கோரியுள்ளனர். இதையடுத்து அக்காணியின் உரிமையாளர்கள் இன்று மதியம் தமது விவசாயக்காணியை சிவில் பாதுகாப்புப்படையினரிடமிருந்து மீட்டுத்தருமாறு கோரிப் போராட்டம் ஒன்றினை மேற்கொண்டனர். போஹஸ்வாவே நந்திமித்திரகம றம்பாவெட்டிகுளம் பகுதியில் அப்பகுதி மக்கள் தமது பேரணியாக விவசாயம் மேற்கொள்ளும் பகுதிக்குச் சென்று சிவில் பாதுகாப்புப்படையினர் வசமுள்ள தமது பூர்வீக காணியை மீட்டுத்தருமாறு கோரிப் போராட்டம் மேற்கொண்டனர். மாமடுவ, மகாகச்சக்கொடிய, பிரப்பமடு பகுதிகளிலிருந்து ...

Read More »

காலம் கடந்த ஞானம்…!

ஐக்­கிய தேசிய கட்­சியும் சிறி­லங்கா சுதந்­திரக் கட்­சியும் இணைந்து உரு­வாக்­கிய நல்­லாட்சி அர­சாங்கத்தரப்­பினர் ஜனா­தி­பதி ஆட்சி முறையை ஒழிப்­ப­தையே பிர­தான நோக்­க­மாகக் கொண்­டி­ருந்­தனர். அத்­துடன் இனப்­பி­ரச்­சி­னைக்கு ஓர் அர­சியல் தீர்வு காண்­ப­தாக அளித்த உறு­தி­மொ­ழிக்கு அமை­வா­கவே 2015ஆம் ஆண்டு ஜனா­தி­பதி தேர்­தலில் பொது வேட்­பா­ள­ரா­கிய மைத்­தி­ரி­பால சிறி­சே­னவை தமிழ்த்­தே­சிய கூட்­ட­மைப்பு ஆத­ரித்து வெற்றி பெறச் செய்­தது. ஏட்­டிக்குப் போட்­டி­யான நிலைப்­பாட்டைக் கொண்­டி­ருந்த இந்த இரண்டு கட்­சி­களும் இணைந்து ஓர் அரச நிர்­வா­கத்தில் இணைந்­தி­ருந்த ஓர் அரி­தான சந்­தர்ப்­பத்தின் மூலம் புரை­யோ­டிப்­போ­யுள்ள தமிழர் பிரச்­சி­னைக்குத் தீர்வு ...

Read More »

காலை இழந்த மாணவன்; மூன்று தங்கப் பதக்கங்களை வென்று சாதனை!

தனக்கு  கால் இல்லாத போதும் விளையாட்டுக்கு ஊனம் தடை கிடையாது என்பதை நிரூபித்து தேசிய போட்டிகளில் மூன்று தங்கப் பதக்கங்களை மாணவன் ஒருவன் வெற்றுள்ளார். காத்தான் குடியைச் சேர்ந்த 17வயதான அஹமட் அனீக் என்ற மாணவரே இவ்வாறு பதக்கங்களை பெற்றுள்ளார். தனக்கு ஒரு கால் இல்லாத போதும்  விளையாட்டுக்கு ஊனம் எவ்விதத்திலும் தடை கிடையாது என்பதை நிரூபித்து (NPAC -National Para Athletics Championships-2019)    தேசிய பரா மெய்வல்லுனர் போட்டியில் எம்.எம்.அஹமட்  அனீக் என்ற மாணவன் மூன்று தங்கப் பதக்கங்களை வென்று சாதனை படைத்துள்ளார். ...

Read More »

தமன்னாவுக்கு ராணுவ பயிற்சி!

விஷாலின் ஆக்‌ஷன் படத்திற்காக நடிகை தமன்னா ராணுவ பயிற்சியில் ஈடுபட்டதாக இயக்குனர் சுந்தர் சி தெரிவித்துள்ளார். தமிழில் அஜித், விஜய், சூர்யா போன்ற முன்னணி நடிகர்களுடன் நடித்து பிரபலமானவர் தமன்னா. பாலிவுட்டில் பிசியாக இருக்கும் இவர் அவ்வப்போது தமிழ் படங்களிலும் நடித்து வருகிறார். அந்த வகையில், இவர் அடுத்ததாக சுந்தர் சி இயக்கத்தில் விஷாலுக்கு ஜோடியாக ஆக்‌ஷன் படத்தில் நடித்து வருகிறார். கவர்ச்சி ஹீரோயினாகவே வலம் வந்துக்கொண்டிருந்த தமன்னாவை இப்படத்தில் ராணுவ கமாண்டோவாக மாற்றியிருக்கிறார் இயக்குனர் சுந்தர்.சி. இதுபற்றி அவர் கூறும்போது, ’ராணுவ பெண் ...

Read More »

ஆட்கடத்தலை முறியடிக்க அவுஸ்திரேலியாவிற்கு முழு ஆதரவு!

இலங்கையின் கரையோரத்தில் இடம்பெறும் ஆட்கடத்தல் மற்றும் சட்டவிரோதக் குடியேற்றம் ஆகிய நடவடிக்கைகளைக் கட்டுப்படுத்துவதற்கு அவுஸ்திரேலியாவிற்கு முழுமையான ஆதரவை வழங்குவதாக அரசாங்கம் உறுதியளித்திருக்கிறது.   இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டிருந்த அவுஸ்திரேலியாவின் இறையாண்மை எல்லைகள் செயற்பாட்டின் தளபதி மேஜர் ஜெனரல் கிரேய்க் ப்ஃயூரினி தலைமையிலான தூதுக்குழுவினருடன் வெளிவிவகார அமைச்சின் செயலாளர் ரவிநாத ஆரியசிங்க தலைமையிலான குழுவினர் நடத்திய பேச்சுவார்த்தையின் போதே இந்த இணக்கப்பாடு எட்டப்பட்டுள்ளதாக வெளிவிவகார அமைச்சு அறிவித்திருக்கிறது. இதுகுறித்து வெளிவிவகார அமைச்சு வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டிருப்பதாவது: மேஜர் ஜெனரல் க்ரேய்க் ப்ஃயூரினி தலைமையிலான ...

Read More »

திடீரென திருமண அறிவிப்பை வெளியிட்ட நடிகை!

தமிழ் மற்றும் மலையாள திரையுலகில் நடித்து வந்த புதுமுக நடிகை திடீரென திருமண அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.மலையாளத்தில் இருந்து தமிழுக்கு வந்த நவ்யா நாயர், காவ்யா மாதவன், நஸ்ரியா நாசிம், பிரியாமணி, பாவனா என பல நடிகைகள் குடும்ப தலைவிகள் ஆகிவிட்டனர். நயன்தாரா போன்றோர் இன்னும் நடித்து வருகின்றனர். மலையாளத்தில் திருமணத்துக்கு பின்னும் நடிகைகளுக்கு நல்ல நல்ல வேடங்கள் வருகின்றன. தமிழில் கேணி படத்தில் நடித்தவர் பார்வதி நம்பியார். மலையாளத்திலும் ஒரு சில படங்களில் மட்டுமே நடித்தார். இவரும் நடிப்புக்கு குட்பை சொல்லிவிட்டு கல்யாணத்துக்கு தயாராகிவிட்டார். ...

Read More »