குமரன்

அரசியல்வாதி கோட்டாவின் அவலம்!

சிறுபான்மையினரின் ஆதரவு இன்றி, சிங்களவர்களின் ஆதரவுடன் ஜனாதிபதி தேர்தலில் வெற்றிபெற முடியும் என்று, சில ஆண்டுகளாகக் கூறிவந்த முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்‌ஷ, பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளராகத் தெரிவு செய்யப்பட்டதும், பதற்றமடைந்து போயிருக்கிறார். அண்மையில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரும், புளொட் தலைவருமான தர்மலிங்கம் சித்தார்த்தனை, அழைத்துப் பேசியிருந்தார் கோட்டாபய ராஜபக்‌ஷ. இந்தச் சந்திப்புத் தொடர்பாக, அரசல்புரசலாகத் தகவல்கள் வெளியானதும் சித்தார்த்தன், ஊடகங்களிடம் உண்மையைக் கக்கினார்.  அதில், “தமிழ் மக்களின் வாக்குகள் இல்லாமலேயே, தம்மால் வெற்றிபெற முடியும். ஆனாலும், அனைத்து ...

Read More »

பலுசிஸ்தான்: மசூதியில் குண்டு வெடித்து 5 பேர் பலி!

பாகிஸ்தானின் பலுசிஸ்தான் மாகாணத்தில் உள்ள மசூதியில் நிகழ்ந்த குண்டு வெடிப்பு சம்பவத்தில் 5 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். பாகிஸ்தான் நாட்டின் பலுசிஸ்தான் மாகாணம் குவெட்டாவின் புறநகர் பகுதியில் குச்லாக் என்ற பகுதி அமைந்துள்ளது. அப்பகுதியில் உள்ள மசூதி ஒன்றில் இன்று வெள்ளிக்கிழமை பிராத்தனை கூட்டம் நடைபெற்றுக் கொண்டிருந்தது. அப்போது அந்த மசூதியில் திடீரென பயங்கர சத்தத்துடன் குண்டு வெடித்தது. இந்த குண்டு வெடிப்பில் 5 பேர் உடல் சிதறி பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 15 பேர் படுகாயமடைந்தனர். இதுகுறித்து தகவல் அறிந்த காவல் துறை  ...

Read More »

சிறிலங்காவுக்கான பிரித்தானியாவின் புதிய தூதுவராக சரா!

சிறிலங்காவுக்கான  பிரித்தானியாவின் புதிய தூதுவராக சரா ஹூல்ரன் அம்மையார் நியமிக்கப்பட்டுள்ளார்.   இதேவேளை, சிறிலங்காவுக்கான  பிரித்தானியாவின் தூதுவராக பணியாற்றிய உயர்ஸ்தானிகர் ஜேம்ஸ் டோரிஸ் இடமாற்றம் பெற்று சென்ற நிலையிலேயே புதிய தூதுவராக சரா அம்மையார் நியமிக்கப்பட்டுள்ளார். புதிய தூதுவராக நியமிக்கப்பட்டுள்ள சரா அம்மையார், சில தினங்களில் பதவியை பொறுப்பேற்கவுள்ளார். ஹூல்ரன் அம்மையார் பிரித்தானிய வெளிவிவகார மற்றும் பொதுநலவாய அலுவலகத்தின் துணை இயக்குநராக கடமையாற்றியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Read More »

பலாலி விமான நிலையத்திற்காக காணிகளை சுவீகரிப்பதை அனுமதிக்க முடியாது!

பலாலி விமான நிலையத்தின் ஓடுதள விஸ்தரிப்பின் போது  மேலதிக காணிகளை சுவீகரிக்க அனுமதிக்க முடியாது.மாறாக தேவைப்படின் கடற்கரை பக்கமாக அதனை நிரவி ஓடுதளத்தை அமையுங்கள் அதற்கான வழிவகையை சம்பந்தப்படட அதிகாரிகள ஆராயுங்கள் என நாடாளுமன்ற  உறுப்பினர் மாவை சேனாதிராஜா தலைமை அமைச்சர் ரணில் விக்ரமசிங்க ஊடாக அதிகாரி களுக்கு தெரிவித்தார். யாழ் மாவட்டத்தின் அபிவிருத்தி தொடர்பான கூட்டம் ஒன்று பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில் யாழ். மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் இன்று நடைபெற்றது. இந்த கலந்துரையாடலிலேயே நாடாளுமனற உறுப்பினர் இதனை தெரிவித்தார். பலாலி ...

Read More »

தேசிய விருது பெற்ற படத்தில் பிரசாந்த்!

சமீபத்தில் வெளியான தேசிய விருது பட்டியலில் இடம் பெற்ற பிரபல இந்தி படத்தின் தமிழ் ரீமேக்கில் நடிகர் பிரசாந்த் நடிக்க இருக்கிறார். இந்தியாவிலும் சீனாவிலும் வெளியிடப்பட்டு, வசூலில் மகத்தான வெற்றிப் பெற்றதோடு மட்டுமல்லாமல், சிறந்த நடிகர், சிறந்த திரைப்படம், மற்றும் சிறந்த திரைக்கதை உள்ளிட்ட மூன்று தேசிய விருதுகளையும் ‘அந்தாதுன்’ திரைப்படம் வென்று சாதனை படைத்து, அனைத்து தரப்பினரின் பாராட்டையும் பெற்றிருக்கிறது. சமீபத்தில் மெல்பர்னில் நடைபெற்ற ஆஸ்திரேலிய திரைப்பட விழாவில் பங்குபெற்று, சிறந்த நடிகர், சிறந்த இயக்குனர் மற்றும் சிறந்த திரைப்படத்திற்கான விருதுகளை வென்ற ...

Read More »

கோத்தபாய போட்டியிடுவதற்கு அமெரிக்கா பச்சைக்கொடி காட்டியதா?

கோத்தபாய ராஜபக்ச தேர்தலில் போட்டியிடுவதற்கு தடையாகயிருக்கமாட்டோம் என தெரிவிப்பதற்காகவும் அதேவேளை சோபா உடன்படிக்கைக்கான ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஆதரவை பெறுவதற்காகவுமே அமெரிக்காவின் தென்னாசியாவிற்கான பதில் இராஜாங்க செயலாளர் அலைஸ் வெல்ஸ் கடந்த வாரம் இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டார் என இந்தியாவின் முன்னாள் இராஜதந்திரி எம் கே பத்ரகுமார் தெரிவித்துள்ளார். ஆங்கில இணையத்தளமொன்றில் எழுதியுள்ள கட்டுரையில் அவர்  இதனை தெரிவித்துள்ளார். கோத்தபாய ராஜபக்ச ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுகின்றார் என்ற உத்தியோகபூர்வ அறிவிப்பு வெளியாவதற்கு சில மணித்தியாலங்களிற்கு முன்னர் இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டிருந்த அமெரிக்காவின் தென்னாசியா மற்றும் ...

Read More »

எமது பிள்ளைகள் எங்கே ?

வடக்கு மற்றும் கிழக்கு   எட்டு மாவட்டங்களைச் சேர்ந்த வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின்  உறவினர்கள் திருகோணமலை மனித உரிமைகள் ஆணைக்குழுவிற்கு முன்னாள் இன்று (15) கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர் . பத்து வருட காலங்களாக போராடியும் இலங்கை அரசாங்கம் இதுவரை காலமும் காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் தொடர்பில் எதுவித பதிலும் வழங்காத  நிலையில்   சர்வதேசமாவது  நியாயமான பதிலை கூற வேண்டும் எனக் கோரியே இக்கவனயீர்ப்பு போராட்டம் இடம்பெற்றது. திருகோணமலை – அம்பாறை மட்டக்களப்பு – மன்னார் – முல்லைத்தீவு – யாழ்ப்பாணம்- கிளிநொச்சி – மற்றும் ...

Read More »

தமிழரசுக் கட்சியின் ஜனநாயகப் போக்கும் தமிழ் மக்களின் அபிலாசைகளும்!

முள்ளிவாய்க்காலில், 2009ஆம் ஆண்டு, தமிழீழ விடுதலைப் புலிகளின் ஆயுதப் போராட்டம் ஸ்தம்பிக்கச் செய்யப்பட்டதன் பின்னர்தான், தாம் முழுநேரப்பணியில் ஈடுபட்டு வருவதாகவும் விடுதலைப் புலிகள் காலத்தில், பகுதி நேரமாகத்தான் அரசியலில் ஈடுபட்டதாகவும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பிரதான கட்சியான தமிழரசுக்கட்சி, புதுக் கதையொன்றைச் சொல்லி வருகின்றது. இந்தக் கருத்துத் தொடர்பில், தமிழ் மக்களிடம் பல்வேறுபட்ட ஐயப்பாடுகள் எழுந்துள்ளன. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தொடர்பில், மக்கள் மத்தியில் உள்ள சந்தேகங்களுக்குத் தெளிவூட்டும் வகையிலமைந்த, விழிப்புணர்வுக் கருத்தரங்கு, களுவாஞ்சிக்குடி, கிரான் ஆகிய இடங்களில் திங்கட்கிழமை (12) நடைபெற்றிருந்தது. இதன் ...

Read More »

ஆஸ்திரேலியாவில் 60 மில்லியன் டாலர் மதிப்பு போதைப்பொருள்கள் பறிமுதல்

ஆஸ்திரேலியாவின் குயின்ஸ்லாந்து மாகாணத்தில் சுமார் 60 மில்லியன் டாலர்கள் மதிப்பிலான போதைப்பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. போதைப் பொருட்கள் கடத்தும் பிரிட்டனைச் சேர்ந்த  சர்வதேச கடத்தல் கும்பலைக் கைது செய்ய பல்வேறு நாட்டு காவல்துறையினர் ரகசிய திட்டம் தீட்டி செயல்படுத்தி வந்தனர். அவர்களின் நடமாட்டத்தையும் ரகசியமாக தொடர்ந்து கண்காணித்து வந்தனர். இந்நிலையில் நேற்று ஆஸ்திரேலியாவின் குயின்ஸ்லாந்து மகாணத்தில், போதைப்பொருட்கள் வைத்திருந்த குற்றத்திற்காக பிரிட்டனைச் சேர்ந்த இருவரை ஆஸ்திரேலியா காவல் துறை கைது செய்தனர். இது குறித்து காவல்துறை அதிகாரிகள் கூறுகையில், “அவர்களிடம் இருந்து 766 கிலோ ...

Read More »

அதிரடியில் களமிறங்கிய விஜய் சேதுபதி!

விஜயா புரொடக்க்ஷன்ஸ் தயாரிப்பில் விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகி இருக்கும் சங்கத்தமிழன் திரைப்படத்தின் டீசர் வெளியாகி சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. விஜய்சேதுபதி நடிப்பில் தற்போது உருவாகி வரும் படம் ‘சங்கத்தமிழன்’. விஜய் சந்தர் இயக்கியுள்ள இப்படத்தை விஜயா புரொடக்ஷன்ஸ் சார்பில் பி.பாரதி ரெட்டி தயாரித்து வருகிறார். இப்படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக ராஷிகண்ணா மற்றும் நடிகை நிவேதா பெத்துராஜ் நடித்துள்ளனர். இவர்களுடன் நாசர், சூரி, அசுதோஷ் ராணா, ரவி கிஷான், மொட்டை ராஜேந்திரன், மாரிமுத்து, ஜான் விஜய் மற்றும் ஸ்ரீமன் போன்ற நட்சத்திர ...

Read More »