குமரன்

வேட்புமனுத் தாக்கல் செய்யும் நடவடிக்க‍ை ஆரம்பம்!

2019 ஆண்டு ஜனாதிபதித் தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல்ளை ஏற்றுக் கொள்ளும் நடவடிக்கையானது தேர்தல் ஆணைக்குழுவின்  தலைவர் மஹிந்த தேசப்பிரிய தலைமையில் தற்போது ஆரம்பமாகியுள்ளது. அதன்படி காலை 9.00 மணிக்கு வேட்பு மனுக்களை ஏற்கும் நடவடிக்கைகள் இராஜகிரியவிலுள்ள தேர்தல்கள் திணைக்களத்தில் ஆரம்பமாகியுள்ள நிலையில், இன்று 11.30 மணிவரையில் வேட்பு மனுக்கள் அனைத்தும் ஏற்றுக் கொள்ளப்படவுள்ளன. அத்துடன்  வேட்புமனு தொடர்பில் எதிர்ப்புத் தெரிவிப்பதற்கும்  காலை 9.00 மணியிலிருந்து 11.30 வரை கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. இதன் பின்னர்  ஏற்றுக்கொள்ளப்பட்ட மற்றும் நிராகரிக்கப்பட்ட வேட்புமனுக்கள் குறித்து தேர்தல்கள் ஆணைக்குழு ...

Read More »

ஆஸ்திரேலியாவில் புதிதாக அறிமுகப்படுத்தப்பட உள்ள விசாக்கள்!

ஆஸ்திரேலியாவில் புதிதாக அறிமுகப்படுத்தப்பட உள்ள பிராந்தியா விசாக்கள், வெளிநாட்டினர் ஆஸ்திரேலியாவில் நிரந்தரமாக வசிப்பதற்கான வழியை ஏற்படுத்துகின்றது. அதே சமயம், பிராந்திய விசாக்கள் மூலம் PR எனப்படும் நிரந்தர வதிவிடம் கோரி விண்ணப்பிக்கும் பொழுது, சம்பந்தப்பட்ட நபர் பிராந்திய பகுதியில் மூன்றாண்டுகள் வாழ்ந்ததை நிரூபிக்க வேண்டும் என ஆஸ்திரேலிய குடியேற்றத்துறை அமைச்சர் டேவிட் கோலிமன் தெரிவித்துள்ளார். ஆஸ்திரேலியாவின் பிரதான நகருங்களுக்கு வெளியே உள்ளவை பிராந்திய பகுதிகளாக பார்க்கப்படுகின்றது. இவ்வாறான பகுதிகளில் பணியாற்ற ஆட்கள் பற்றாக்குறை நிலவி வருவதால், வரும் நவம்பர் மாதம் திறன்வாய்ந்த குடியேறிகளுக்கான 2 ...

Read More »

சர்வதேச திரைப்பட விழாவில் ஒத்தசெருப்பு!

கோவாவில் நடைபெற உள்ள சர்வதேச திரைப்பட விழாவில் ஒத்தசெருப்பு, ஹவுஸ்ஓனர் ஆகிய படங்கள் திரையிடப்பட உள்ளது. 50-வது சர்வதேச திரைப்பட விழா கோவாவில் அடுத்த மாதம் (நவம்பர்) 20-ந்தேதி தொடங்கி 28-ந்தேதி வரை நடைபெறுகிறது. விழாவில் பல்வேறு நாடுகளை சேர்ந்த 200-க்கும் மேற்பட்ட படங்கள் மற்றும் இந்தியாவில் பல்வேறு மொழிகளில் வெளியான 26 திரைப்படங்கள் திரையிடப்பட உள்ளது. 50 ஆண்டுகளுக்கு முன்பு வெளியான பழம்பெரும் படங்களும் காட்சிக்கு வைக்கப்பட்டு திரையிடப்பட உள்ளது. இதில் தமிழில் வெளியான ஒத்தசெருப்பு, ஹவுஸ்ஓனர் ஆகிய படங்கள் திரையிடப்பட உள்ளது. ...

Read More »

வாழ்வுரிமையைக் காக்கும் வாக்குரிமை..!

மிகவும் ஆவலுடன் எதிர்­பார்க்­கப்­பட்ட 8ஆவது ஜனா­தி­பதித் தேர்தலுக்­கான திகதி அறி­விக்­கப்­பட்டு இரு வாரம் கடந்­துள்ள நிலையில், அர­சியல் களத்தில் தேர்தலுக்கு எஞ்­சி­யுள்ள நாட்­களில் என்ன நடக்கும் என்ற கேள்விக் கணை­க­ளோடு ­நாட்டு மக்­களும், அர­சியல் அவ­தா­னி­களும் ஒவ்­வொரு விடி­ய­லையும் எதிர்­பார்த்தே வாழ்நாளை நகர்த்­திக்­கொண்­டி­ருக்­கி­றார்கள். ஊட­கங்­க­ளின்பால் என்­று­மில்­லாத அக்­கறை மக்­க­ளுக்கும் அர­சியல் வாதி­க­ளுக்கும் இக்­கா­லங்­களில் ஏற்­பட்­டி­ருக்­கி­றது. தேர்தல் நாட்கள், மக்­களின் மனச்­சாட்­சியை பரி­சோ­திக்கும் பரீட்­சைத்­த­ளங்­க­ளாக அமை­கி­ன்றன. ஒரு மனி­தனின் மனச்­சாட்­சியே அவ­னுக்கு நீதி­பதி. அத்­த­கைய மனச்­சாட்­சியின் அடிப்­ப­டை­யி­லேயே அவ­ரவர் விரும்பும் வேட்­பா­ளர்­களைத் தெரிவு செய்ய வாக்­கா­ளர்கள் ...

Read More »

ஞானசார தேரர் காவியை கழற்றிவிட்டு சண்டித்தனம் செய்யட்டும்!

ஞானசார தேரர் காவியை கழற்றிவிட்டு சண்டித்தனத்தைக் காட்டினால், அதற்கான பதிலைக் கொடுப்போம்” இவ்வாறு நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் சவால் விடுத்தார். முல்லைத்தீவு நீதிமன்றத்தின் கட்டளையை அவமதித்து, ஆலயக் கேணிப் பகுதியில் தேரரின் சடலத்தை அடக்கம் செய்த ஞானசார தேரரை கைது செய்ய வலியுறுத்தி  நேற்று (05) யாழ்.நகரில் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. இதன்போதே அவர் இதனை தெரிவித்தார். மேலும், எம்மைப் பொறுத்தமட்டில் காவி உடை புனிதமானது. காவி உடையை கழற்றிவிட்டு ஞானசார தேரர் சண்டித்தனத்தைக் காட்ட வேண்டும். எமது சைவ சித்தாந்தத்தின் அடிப்படையில் காவி ...

Read More »

கொழும்பில் இளைஞர்கள் கடத்தப்பட்ட விவகாரம்- முக்கிய சந்தேகநபரிற்கு பதவி உயர்வு!

கொழும்பில் 11 இளைஞர்கள் கடத்தப்பட்டட சம்பவத்தின் முக்கிய சூத்திரதாரி என கருதப்படும் முன்னாள் கடற்படை பேச்சாளர் டீகேபி தசநாயக்கவிற்கு இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பதவி உயர்வு வழங்கியுள்ளமை குறித்து காணாமல்போனோர் குறித்த அலுவலகம் கடும் அதிருப்தி வெளியிட்டுள்ளது. 2008-2009 இல் கடற்படையை சேர்ந்த குழுவொன்றினால் கொழும்பில் இளைஞர்கள் கடத்தப்பட்ட சம்பவத்தில் முக்கிய சந்தேகநபர் என கருதப்படும் டீகேபி தசநாயக்காவிற்கே சிறிசேன பதவி உயர்வு வழங்கியுள்ளார். குற்றச்சாட்டு சுமத்தப்பட்ட அதிகாரிக்கு பதவி உயர்வு வழங்கப்பட்டமை குறித்த தனது ஆட்சேபனையை தெரிவிக்கும் கடிதமொன்றை இலங்கை ஜனாதிபதிக்கு ...

Read More »

பொது வேட்பாளருக்கான கோரிக்கை..!

ஜனா­தி­பதி தேர்­தலின் பிர­தான வேட்­பா­ளர்­க­ளாகக் கரு­தப்­ப­டு­கின்ற கோத்­த­பாய மற்றும் சஜித் பிரே­ம­தாச ஆகிய இரு­வ­ருமே தமிழ்மக்­க­ளு­டைய பிரச்­சி­னை­க­ளுக்குத் தீர்வு காண்­ப­தி­லான தமது நிலைப்­பாடு குறித்து எழுத்தில் எந்­த­ வி­த­மான உத்­த­ர­வா­தத்­தையும் தர முடி­யாது என கூறி­யுள்­ளனர். அவர்கள் சார்ந்த பிர­தான அர­சியல் கட்­சி­க­ளா­கிய பொது­ஜன பெர­முன மற்றும் ஐக்­கிய தேசியக் கட்சி ஆகியன கூட இந்த விட­யத்தில் தமது நிலைப்­பாட்டை வெளிப்­ப­டுத்­த­வில்லை. பல்­வேறு பிரச்­சி­னை­க­ளுக்கு முகம் கொடுத்­துள்ள தமிழ்மக்கள் தொடர்பில் உறு­தி­யான ஓர் அர­சியல் கொள்­கையை அல்­லது நிலைப்­பாட்டை வேட்­பா­ளர்­களும் கொண்­டி­ருக்­க­வில்லை. அவர்கள் சார்ந்த ...

Read More »

சமூக வலைத்தளத்தில் ஆர்வம் காட்டும் மாதுரி தீட்ஷித் !

பாலிவுட்டில் முன்னணி நடிகையாக வலம் வந்த மாதுரி தீட்ஷித் தற்போது சமூக வலைத்தளங்களில் ஆர்வம் காண்பித்து வருகிறார். ஸ்ரீதேவிக்கு பின், பாலிவுட் ரசிகர்களின் கனவு ராணியாக திகழ்ந்தவர், மாதுரி தீட்ஷித். இவர், நடனமாடும் அழகை பார்ப்பதற்கென்றே, பாலிவுட்டில் பெரும் ரசிகர் பட்டாளம் உருவானது. திருமணத்துக்கு பின் படங்களில் நடிப்பதை தவிர்த்து வந்த அவர், சமீபகாலமாக, ஒரு சில படங்களில் நடித்தார். அந்த படங்கள், பெரிய அளவில் பேசப்படவில்லை. மும்பையில் நடக்கும் திரைப்பட விழாக்கள், டிவி நிகழ்ச்சிகளில் தவறாமல் பங்கேற்கும் அவர், திடீரென, சமூக வலைதளங்களில் ...

Read More »

கா‌‌ஷ்மீர் மக்களுக்கு உதவ எல்லை தாண்ட வேண்டாம்!

கா‌‌ஷ்மீர் மக்களுக்கு உதவுவதற்காக யாரும் எல்லை தாண்ட வேண்டாம் என பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு கா‌‌ஷ்மீர் மக்களுக்கு இம்ரான்கான் எச்சரிக்கை விடுத்துள்ளார். கா‌‌ஷ்மீர் மாநிலத்துக்கு வழங்கப்பட்டு இருந்த சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்த மத்திய அரசு, அந்த மாநிலத்தை 2 யூனியன் பிரதேசங்களாக பிரித்தது. இந்த நடவடிக்கைக்கு கடும் கண்டனம் தெரிவித்த பாகிஸ்தான், உடனடியாக இந்தியாவுடனான தூதரக உறவின் தரத்தை குறைத்தது. மேலும் இந்த விவகாரத்தை சர்வதேச அளவில் கொண்டு சென்று, உலக நாடுகளிடம் ஆதரவு கோரியது. ஆனால் இது இந்தியாவின் உள்நாட்டு விவகாரம் எனக்கூறி ...

Read More »

ஆஸ்திரேலியாவில் புகழ்பெற்ற ‘பாப்’ நட்சத்திரம் சியாவுக்கு விசித்திர நோய்!

ஆஸ்திரேலியாவை சேர்ந்தவர் பிரபல ‘பாப்’ இசை நட்சத்திரம் சியா ‘எட்ஸ்’ என்ற விசித்திர நோயால் அவதிப்படுகிறார் என்று தெரிய வந்து இருக்கிறது. ஆஸ்திரேலியாவை சேர்ந்தவர் பிரபல ‘பாப்’ இசை நட்சத்திரம் சியா (வயது 43). தனது தனிப்பட்ட வாழ்க்கையை இந்தப் பெண் கலைஞர் ரகசியமாக வைத்துள்ளார். ‘விக்’ என்னும் செயற்கை முடி அலங்காரத்துடன், தலைக்கவசம் அணிந்து தன் முகத்தை இவர் மறைத்து வந்தாலும், இவரது பாடல்களை ரசிப்பதற்கென்று அங்கு ஒரு கூட்டம் இருக்கிறது. இவர் ‘எட்ஸ்’ என்ற விசித்திர நோயால் அவதிப்படுகிறார் என்று தெரிய ...

Read More »