குமரன்

அவுஸ்திரேலியாவில் அச்சமூட்டும் சம்பவம்!

சிட்னியின் உணவுவிடுதியொன்றில்  முஸ்லீம் கர்ப்பிணிப்பெண்ணை இனரீதியில் நபர்ஒருவர் மோசமாக தாக்கிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 38 வார கர்ப்பிணியான 31 ரசா எலஸ்மெர் என்ற முஸ்லீம பெண் பரமெட்டா கபேயில் தனது நண்பிகளுடன் காணப்பட்டவேளை 43 வயது நபர் ஒருவர்அவரை தாக்கினார் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். ருசாஎலெஸ்மருடனும்  அவரது நண்பிகளுடனும் உரையாடிய பின்னர் அந்த நபர் தாக்குதலில் ஈடுபடுவதை சிசிரிவி காட்சிகள் காண்பித்துள்ளன. அந்த நபர் எலஸ்மெரின் முகத்தில் ஓங்கிகுத்துவதையும் அவர் நிலை தடுமாறி கீழே விழுவதையும் அதன் பின்னர்அந்த நபர் காலால் ...

Read More »

பிளவடைந்துள்ள அரசியலை மீள ஐக்கியப்படுத்துவதில் உள்ள சவால்கள்!

நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறையில் ஜனாதிபதியை தெரிந்தெடுப்பதில் தமக்கும் ஒரு பங்கு இருப்பதன் காரணமாக, ஜனாதிபதிக்கு சிறுபான்மையினத்தவர்களது நலன்கள் தொடர்பில் கவனம் செலுத்துவதில் ஆர்வம் இருக்கும் என்ற நம்பிக்கையே சிறுபான்மையினத்தினர் இம்முறை தேர்தலில் பெரிதும் அக்கறையும் ஆதரவும் காட்டுவதற்கான காரணமாக இருந்துள்ளது. ஆனால் ஜனாதிபதி கோத்தாபய ராஜபக் ஷவின் தேர்தல் பிரச்சாரமும் தேர்தல் முடிவுகளும் பெரும்பான்மையின மக்களையே ஒன்றிணைத்ததாக அமைந்துள்ளமை சிறுபான்மையினத்தவர்களை அச்சுறுத்தக் கூடியதாகியுள்ளது. மேலும் பொதுவாகவே எந்தவொரு ஜனாதிபதி வேட்பாளரும் 50 வீதத்திற்கு மேல் வாக்குகளைப் பெறப் போவதில்லை என்ற அனுமானம் ...

Read More »

நவாஸ் ஷெரீப் உடல்நிலையில் இம்ரான்கான் சந்தேகம்!

லண்டனுக்கு சிகிச்சைக்காக சென்ற நவாஸ் ஷெரீப் உடல்நிலையில் பிரதமர் இம்ரான்கான் சந்தேகம் எழுப்பி உள்ளார். பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப் (வயது 70). இவர் ஊழல் வழக்கில் 7 ஆண்டு தண்டனை விதிக்கப்பட்டு, லாகூர் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். இந்த நிலையில் அவரது உடல்நிலை மோசம் அடைந்ததாக தகவல்கள் வெளியாகின. உடல்நிலையைக் காரணம் காட்டி அவருக்கு நீதிமன்றம் பிணை வழங்கியது. வீட்டில் இருந்து அவர் சிகிச்சை பெற்ற நிலையில், உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட வேண்டுமானால், அவர் லண்டனில் சிகிச்சை பெற வேண்டும் என்று டாக்டர்கள் ...

Read More »

என் வாழ்க்கையை மாற்றியது அவர்தான்!

கோவா சர்வதேச திரைப்பட விழாவில் சிறப்பு விருது பெற்ற ரஜினிகாந்த், தனது வாழ்க்கையை மாற்றியது அவர்தான் என கூறியுள்ளார். கோவா சர்வதேச திரைப்பட விழாவில் ‘ஐகான் ஆப் கோல்டன் ஜூப்ளி’ என்ற மத்திய அரசின் சிறப்பு விருது ரஜினிக்கு வழங்கப்பட்டது. இதையொட்டி ரஜினிகாந்த் தூர்தர்‌ஷன் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:- கோல்டன் ஐகான் விருது அறிவிக்கப்பட்டது ஆச்சர்யத்தை அளித்தது. இந்த விருதுக்கு நான் தகுதியானவனா என்ற எண்ணம் கூட ஏற்பட்டது. இருப்பினும், பெருமையுடன் விருதை ஏற்று கொண்டேன். விருதை அறிவித்த அரசிற்கு நன்றி தெரிவித்து ...

Read More »

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் 16 வயதில் அறிமுகமான நசீம் ஷா!

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் 16 வயதில் அறிமுகமான நசீம் ஷா, தற்போது சர்ச்சையில் சிக்கியுள்ளார். ஆஸ்திரேலியா – பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் பிரிஸ்பேனில் நேற்று தொடங்கியது. இதில் பாகிஸ்தான் அணியில் வேகப்பந்து வீச்சாளர் நசீம் ஷா அறிமுகம் ஆனார். அவருக்கு 16 வயது 279 நாட்களே ஆனது. இதனால் மிக இளம் வயதில் சச்சின் தெண்டுல்கருக்குப் பிறகு டெஸ்ட் போட்டியில் அறிமுகம் ஆன வீரர் என்ற சாதனையைப் படைத்தார். இந்நிலையில் இந்திய அணியின் முன்னாள் பேட்ஸ்மேன் ஆன முகமது கைப் ...

Read More »

ட்விட்டரில் புதிய ஹைட் ரிப்ளைஸ் அம்சம் வழங்கப்படுகிறது!

ட்விட்டர் சமூக வலைத்தளத்தில் சோதனை செய்யப்பட்டு வந்த ஹைட் ரிப்ளைஸ் அம்சம் அனைத்து வாடிக்கையாளர்களுக்கும் வழங்கப்படுகிறது. ட்விட்டர் தளத்தில் கமென்ட்களை மறைக்கச் செய்யும் ஹைட் ரிப்ளைஸ் அம்சம் அனைத்து வாடிக்கையாளர்களுக்கும் வழங்கப்படுகிறது. முன்னதாக இந்த அம்சம் இந்த ஆண்டு ஜூலை மாதத்தில் சோதனை செய்யப்பட்டு வந்தது. தற்சமயம் இந்த அம்சம் வழங்கப்படுவதால் வாடிக்கையாளர்கள் ட்வீட்களில் உள்ள கிரே நிற ஐகானை க்ளிக் செய்து ஹைட் ரிப்ளைஸ் அம்சத்தை இயக்க முடியும். புதிய அம்சம் கொண்டு பயனர்கள் எதிர்மறை கருத்துக்களை மற்றவர்கள் பார்க்காதபடி மறைக்கச் செய்ய ...

Read More »

டெங்கு காய்ச்சலை குணப்படுத்த கொசு மூலம் நூதன முயற்சி!

டெங்கு காய்ச்சலை கொசுக்கள் மூலம் குணப்படுத்தும் புதிய முயற்சியில் விஞ்ஞானிகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். டெங்கு காய்ச்சல் கொசுக்கள் மூலம் பரவுகிறது. கொசுக்கள் கடிப்பதால் மனிதர்கள் உடலில் பரவும் வைரஸ்கள் டெங்கு காய்ச்சலை ஏற்படுத்துகின்றன. உயிருக்கு ஆபத்தை விளைவிக்கும் டெங்கு காய்ச்சலை குணப்படுத்த இதுவரை உரிய மருந்துகள் கண்டு பிடிக்கபடவில்லை. எனவே அதற்கான பல்வேறு முயற்சியில் விஞ்ஞானிகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். டெங்கு காய்ச்சலை அதை உருவாக்கும் கொசுக்கள் மூலமே குணப்படுத்தும் புதிய முயற்சியை மேற்கொண்டனர். அதாவது ஆய்வகத்தில் வளர்க்கும் கொசுக்களின் உடலில் மனிதர்களின் உடல் நலனுக்கு ...

Read More »

விஜய்க்கு மெழுகு சிலை!

தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக திகழும் நடிகர் விஜய்க்கு அருங்காட்சியகம் ஒன்றில் மெழுகு சிலை வைக்கப்பட்டுள்ளது. கன்னியாகுமரி பேவாட்ச்சின் மாயாபுரி அருங்காட்சியகத்தில் நடிகர் விஜய்க்கு மெழுகு சிலை வைக்கப்பட்டுள்ளது. நடிகர் விஜய் மெழுகு சிலை சுற்றுலாப்பயணிகளை வெகுவாக கவர்ந்துள்ளது. ஏற்கனவே அந்த அருங்காட்சியகத்தில் அப்துல்கலாம், மைக்கேல் ஜாக்சன், பாரக் ஓபாமா, சார்லின் சாப்ளின், கர்நாடக இசை பாடகி எம்எஸ் சுப்புலெட்சுமி, ரவீந்திரநாத் தாகூர், மன்மோகன் சிங் உள்ளிட்ட பிரபலங்களுக்கு சிலை வைக்கப்பட்டுள்ளன. இதேபோல் மோகன்லால், ஷாருக்கான், அமிதாப் பச்சன் போன்ற பல்வேறு திரையுலக பிரபலங்களின் ...

Read More »

கோத்தாபயவின் வெற்றியினால் அதிர்ச்சி!

நந்தசேன கோத்தாபய ராஜபக்ச முழுமையான வெள்ளை ஆடையில் நவம்பர் 18 ம் திகதி அனுராபுரத்தில் உள்ள ருவன்வெலிசயவில் உள்ள பௌத்த தூபியில் பதவிப்பிரமாணம் செய்துகொண்டவேளை வடக்குகிழக்கில் அச்சம் பதவியேற்பு நிகழ்வு இடம்பெற்ற இடம்போன்று அந்த நிகழ்வில் தெரிவிக்கப்பட்ட சிங்களவர்கள் மாத்திரம் செய்தியும் முக்கியமானது என அதனை தொலைக்காட்சியில் பார்வையிட்ட தமிழர்கள் தெரிவித்தனர். செயற்பாட்டாளர்கள் மிகவும் அமைதியாக உள்ளனர்,அவர்கள் கட்டுரை எழுதுவதையும் அறிக்கைகள் விடுவதையும் நிறுத்திவிட்டனர்,அச்சம் வெளிப்படையாக தெரிகின்றது என யாழ்ப்பாணத்தை சேர்ந்த செயற்பாட்டாளர் ஒருவர் தெரிவித்தார். நல்லாட்சிக்காக பிரச்சாரம் செய்த காமினிவியாங்கொடவும் சந்திரகுப்ததேனுவரவும் தேர்தல் ...

Read More »

சிஐடியின் இயக்குநர் இடமாற்றம்! – அரசியல் தலைவர்கள் கடும் கண்டனம்!

முன்னைய மகிந்த ராஜபக்ச அரசாங்கத்தின் காலத்தில் இடம்பெற்ற முக்கிய சம்பவங்கள் குறித்து விசாரணைளை மேற்கொண்டுவந்த  சிஐடியின் இயக்குநர் ஸானி அபயசேகர  புதிய அரசாங்கத்தின் கீழ் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளமை அரசியல் உள்நோக்கம் கொண்ட நடவடிக்கை என அரசியல் தலைவர்கள் குற்றம்சாட்டியுள்ளனர். ஐக்கியதேசிய கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் அஜித்பெரேரா ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ச உடனடியாக தலையிட்டு இந்த இடமாற்றத்தை  தடுத்து நிறுத்தவேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளார். புதிய ஜனாதிபதி பதவியேற்றவுடன் இந்த நடவடிக்கை இடம்பெற்றுள்ளமை ஜனாதிபதியின் கௌரவத்திற்கு பாதிப்பை ஏற்படுத்தும்எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். மிகச்சிறப்பாக செயற்பட்டபோதிலும் சிஐடியின் ...

Read More »