குமரன்

3 வயது மகளுக்கு நடனத்தை கற்றுக் கொடுக்கும் பிரபல நடிகை

தமிழில் முன்னணி நடிகர்களான கமல்ஹாசன், அஜித், விஜய், சூர்யா என பல ஹீரோக்களுடன் ஜோடி சேர்ந்து நடித்த நடிகை, தனது மகளுக்கு நடனத்தை கற்றுக் கொடுத்து வருகிறார். ஜெயம் ரவி நடித்த எம்.குமரன் சன் ஆஃப் மகாலட்சுமி படத்தில் கேரள நாயகி கதாபாத்திரமாக அறிமுகமாகிய அசின் அந்த படத்தில் ஜெயம் ரவியிடம் பேசும் ‘அய்யடா..’ எனும் வசனம் அப்போது பிரபலமாகியது. தொடர்ந்து கஜினி, சிவகாசி, போக்கிரி, தசாவதாரம் என பெரும் ஹீரோக்களின் வெற்றிப்படங்களில் அசின் நடித்தார். இதனைத் தொடர்ந்து அப்படியே பாலிவுட்டில் தடம் பதித்த ...

Read More »

கவிஞர் அஹ்னாப் ஜசீம் போன்றோர் விடுதலை செய்யப்பட வேண்டும்

பயங்கரவாதத்தடைச் சட்டத்தை மீளாய்வு செய்வதற்கு முன்னர், அச்சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் கவிஞர் அஹ்னாப் ஜசீம் போன்றவர்கள் விடுதலை செய்யப்பட வேண்டும். அப்போதுதான் இச்சட்டம் மீளாய்வு செய்யப்படும் என்பதை நம்பக்கூடியதாக இருக்கும் என்று இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் முன்னாள் ஆணையாளரும் சட்டத்தரணியுமான அம்பிகா சற்குணநாதன் தெரிவித்துள்ளார். அம்பிகா சற்குணநாதன் அவரது உத்தியோகபூர்வ டுவிட்டர் பக்கத்தில் செய்திருக்கும் பதிவிலேயே மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார். பயங்கரவாதத்தடைச் சட்டத்தை மீளாய்வு செய்வதன் முதற்கட்ட நடவடிக்கையாக அச்சட்டத்தின் கீழ் தன்னிச்சையாகத் தடுத்துவைக்கப்பட்டுள்ள கவிஞர் அஹ்னாப் ஜசீம் போன்றவர்கள் விடுவிக்கப்பட்டால், அவர் ...

Read More »

நான் ஏன் நாடாளுமன்றம் செல்கின்றேன்’?

நாட்டில் தீவிரமாக பரவிச்செல்லும் கொவிட் தொற்றை கட்டுப்படுத்த அரசாங்கத்திடம் முறையான வேலைத்திட்டம் எதுவும் இல்லை. அதேபோன்று இவ்வாறான நிலையில் அரசாங்கத்தின் செல்வாக்கு வீழ்ச்சியடைவது பயங்கரமான நிலையாகும். இதற்கு எதிர்க்கட்சியும் மாற்று வழியொன்றை இதுவரை பாராளுமன்றத்துக்கு சமர்ப்பிக்கவில்லை. அதனால் இது தொடர்பில் குரல்கொடுக்க வேண்டும் என உணர்ந்தே நாடாளுமன்றத்துக்கு செல்வதற்கு தீர்மானித்திருக்கின்றேன் என ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார். இது தொடர்பாக அவர் தொடர்ந்து குறிப்பிடுகையில் நாடாளுமன்றம் செல்வதற்கு ; நான் எதிர்பார்த்திருக்கவில்லை. என்றாலும் இதுதொடர்பில், பாரிய அழுத்தம் வந்தது. விசேடமாக ...

Read More »

கொரோனாச் சந்தைகளும் தமிழ் அரசியல்வாதிகளும்

கிளிநொச்சியைச் சேர்ந்த ஓர் ஊடகவியலாளர் சொன்னார்.திரு நகரிலும் உதய நகரிலும் கொரோனாச் சந்தைகள் இயங்குவதாக.பிரதான சந்தைகள் மூடப்பட்ட காரணத்தால் தற்காலிக கள்ளச் சந்தைகளாக இவை இயங்குவதாகவும் அவர் தெரிவித்தார்.சிலசமயங்களில் உதயநகர் சந்தையில் படைத்தரப்பும் வாகனத்தை நிறுத்திவிட்டு பொருள் வாங்குவதை தான் கண்டதாகவும் சொன்னார். இதைப்போலவே யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த ஒர் ஊடகவியலாளர் சொன்னார் கொக்குவில் இந்து பள்ளிக்கூடத்தின் மைதான வீதியில் காலை வேளைகளில் ஒரு மீன் சந்தை இயங்குவதாகவும் அது மிகவும் நெரிசலான ஒரு சந்தை என்றும்.யாழ்ப்பாணம் பாசையூர் சந்தையும் இயங்குகிறது. இடையில் போலீசாரோடு சில ...

Read More »

பிரியா குடும்பத்தை உடனடியாக விடுவிக்குக

புகலிடக்கோரிக்கை நிராகரிக்கப்பட்ட நிலையில் கிறிஸ்மஸ் தீவில் தடுத்துவைக்கப்பட்டுள்ள பிரியா-நடேஸ் குடும்பத்தை உடனடியாக விடுதலைசெய்ய வேண்டுமென ஒன்பது மருத்துவ அமைப்புகள் ஒன்றாக இணைந்து கோரிக்கைவிடுத்துள்ளன. நீண்டகாலம் தடுப்புமுகாமில் வாழ்வது பிரியா-நடேஸ் தம்பதியரின் இரண்டு பிள்ளைகளுக்கும் பாரதூரமான பாதிப்புகளை உண்டுபண்ணும் என்பதால் இனிமேலும் தாமதிக்காமல் இக்குடும்பம் சமூகத்தில் வாழ அனுமதிக்கப்படவேண்டுமென Royal Australasian College of Physicians (RACP) அமைப்பு உட்பட ஒன்பது அமைப்புகள் கடிதம் மூலம் கோரிக்கைவிடுத்துள்ளன நீண்டகால தடுப்புமுகாம் வாழ்க்கை குழந்தைகள் மற்றும் சிறுவர்களில் அளவிட முடியாத மனநிலை பாதிப்பை ஏற்படுத்தும் எனவும் இந்நிலை ...

Read More »

கோலிவுட் முதல் பாலிவுட் வரை குவியும் பட வாய்ப்பு..

நடிகை ராஷி கண்ணா, தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி என பல்வேறு மொழி படங்களில் பிசியாக நடித்து வருகிறார். நடிகை ராஷி கண்ணா, கடந்த 2013-ம் ஆண்டு வெளியான ‘மெட்ராஸ் கபே’ எனும் இந்தி படம் மூலம் நடிகையாக அறிமுகமானார். பின்னர் தெலுங்கு படங்களில் நடித்து தென்னிந்திய அளவில் பிரபலமான இவர், கடந்த 2018-ம் ஆண்டு வெளியான ‘இமைக்கா நொடிகள்’ படம் மூலம் தமிழ் திரையுலகில் எண்ட்ரி கொடுத்தார். பின்னர் அடங்கமறு, அயோக்யா, சங்கத்தமிழன் போன்ற படங்களில் நடித்ததன் மூலம் முன்னணி நடிகையாக உயர்ந்தார். ...

Read More »

இஸ்ரேலின் புதிய பிரதமராக நப்தாலி பென்னட் பதவியேற்றார்

இஸ்ரேலில் பெஞ்சமின் நேதன்யாகுவின் 12 ஆண்டு கால ஆட்சி முடிவுக்கு வந்துள்ளது. இஸ்ரேல் நாட்டில் 2009, மார்ச் 31-ம் தேதி பெஞ்சமின்-நேதன்யாகு பிரதமராக இருந்து வந்தார். அங்கு 2 ஆண்டுகளாக 4 முறை பாராளுமன்ற தேர்தல் நடந்தும் எந்தக்கட்சிக்கும் பெரும்பான்மை பலம் கிடைக்கவில்லை. கடந்த மார்ச் மாதம் 23-ம் தேதி நடந்த தேர்தலில், மொத்தம் உள்ள 120 இடங்களில் பெஞ்சமின்-நேதன்யாகு கட்சி 30 இடங்களைப் பிடித்தது. தனிப்பெரும் கட்சியாக வந்தபோதும் அவரால் கூட்டணி அரசு அமைக்க முடியவில்லை. இதனால் இழுபறி நிலைமை நீடித்தது. இதற்கிடையே, ...

Read More »

கையில் துப்பாக்கியுடன் செல்வராகவன்

முன்னணி இயக்குனராகவும் தற்போது நடிகராகவும் இருக்கும் செல்வராகவனின் புதிய புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமாவில் பல வெற்றி படங்களை கொடுத்தவர் இயக்குனர் செல்வராகவன். இவர் கீர்த்தி சுரேஷுடன் இணைந்து சாணிக்காயிதம் என்ற படத்தில் நடித்து வருகிறார். அருண் மாதேஸ்வரன் இயக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு கொரோனா இரண்டாவது அலை காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் ஏற்கனவே வெளியாகி நல்ல வரவேற்பு பெற்றது. இந்நிலையில் இயக்குனர் செல்வராகவன் தனது சமூக வலைதளப் பக்கத்தில் சாணிக்காயிதம் படத்தின் புகைப்படம் ஒன்றை ...

Read More »

ஆஷஸ் தொடருக்கு உதவாது: வாகன் எச்சரிக்கை!

நியூசிலாந்துக்கு எதிராக இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இங்கிலாந்து பேட்ஸ்மேன்கள் சொதப்பிய நிலையில், மைக்கேல் வாகன் எச்சரித்துள்ளார். இங்கிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவுக்கு எதிராக ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது. அதன்பின் டி20 உலகக்கோப்பையில் விளையாடிய பின்னர், ஆஷஸ் தொடரில் விளையாடுவதற்காக ஆஸ்திரேலியா செல்கிறது. இந்திய தொடருக்கு முன் நியூசிலாந்துக்கு எதிராக இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடியது. இரண்டிலும் இங்கிலாந்து பேட்ஸ்மேன்கள் சிறப்பாக விளையாடவில்லை. முதல் போட்டியில் ஒருநாள் ஆட்டம் முழுவதும் மழையால் பாதிக்கப்பட்டதால் அந்த ஆட்டம் ...

Read More »

பிரபாஸுக்கு ஜோடியாக நடிக்க பிரபல நடிகைக்கு ரூ.8 கோடி சம்பளம்?

தெலுங்கில் முன்னணி நடிகராக வலம்வரும் பிரபாஸ், சலார், ஆதிபுருஷ், ராதே ஷ்யாம் போன்ற படங்களை கைவசம் வைத்துள்ளார். ‘பாகுபலி’ படங்களுக்குப் பிறகு இந்திய அளவில் பிரபலமான நடிகராகிவிட்டார் பிரபாஸ். இதனால் அவர் நடித்து வரும் படங்களை பான்-இந்தியா படமாகவே உருவாக்கி வருகின்றனர். இதன் காரணமாக இந்திய அளவில் பிரபலமான நடிகைகளை அவருக்கு ஜோடியாக நடிக்க வைக்கின்றனர். குறிப்பாக பாலிவுட் நடிகைகளுக்கு முன்னுரிமை கொடுக்கப்படுகிறது. அந்த வகையில், சாஹோ படத்தில் ஷ்ரத்தா கபூருடன் ஜோடி சேர்ந்த பிரபாஸ், ஆதிபுருஷ் படத்தில் கீர்த்தி சனோனுடன் நடித்து வருகிறார். ...

Read More »