குமரன்

மகேஷ் பாபு இயக்கத்தில் நடிக்கும் அனுஷ்கா

நடிகை அனுஷ்கா நடிக்க உள்ள புதிய படம், தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம் ஆகிய 4 மொழிகளில் தயாராக உள்ளது. தமிழ், தெலுங்கு பட உலகில் முன்னணி கதாநாயகியாக இருப்பவர் அனுஷ்கா. இவர் நடிப்பில் கடைசியாக வெளிவந்த நிசப்தம் படம் தோல்வியடைந்தது. இதனால் இரண்டு வருடங்களுக்கு மேலாக அவர் படங்களில் நடிக்கவில்லை. இதனிடையே நடிகை அனுஷ்கா, திருமணத்துக்கு தயாராகி வருவதாகவும் கிசுகிசுக்கள் பரவி வந்தன. இந்த நிலையில், அனுஷ்கா நடிக்க உள்ள 48-வது படம் பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளது. தமிழ், தெலுங்கு, ...

Read More »

நியூசிலாந்தில் இதுவரை இல்லாத அளவுக்கு கொரோனா பாதிப்பு அதிகரிப்பு

ஏறத்தாழ 50 லட்சம் மக்கள் தொகை கொண்ட நியூசிலாந்தில் இன்னும் தடுப்பூசி போடுவதில் சுணக்கம் காணப்படுகிறது. நியூசிலாந்து நாட்டில் இதுவரை இல்லாத அளவாக ஒரே நாளில் 206- பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது. ஏறத்தாழ 50 லட்சம் மக்கள் தொகை கொண்ட நியூசிலாந்தில் இன்னும் தடுப்பூசி போடுவதில் சுணக்கம் காணப்படுகிறது. அந்நாட்டில் மொத்த மக்கள் தொகையில்78 சதவீதம் பேர் மட்டுமே கொரோனா தடுப்பூசிகளின் இரு டோஸ்களையும் போட்டுக்கொண்டுள்ளனர். 89 சதவீதம் பேர் ஒரு தவணை தடுப்பூசி மட்டுமே போட்டுள்ளனர். தலைநகர் ஆக்லாண்டில் மட்டும் ...

Read More »

டி20 உலக கோப்பை – குரூப் 1 பிரிவில் இங்கிலாந்து, ஆஸ்திரேலியா அணிகள் அரையிறுதிக்கு முன்னேற்றம்

சார்ஜாவில் நேற்று நடந்த போட்டியில் இங்கிலாந்து அணியை 10 ரன்கள் வித்தியாசததில் வீழ்த்தினாலும், தென் ஆப்பிரிக்கா அணி அரையிறுதி வாய்ப்பை இழந்தது. டி20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டி ஐக்கிய அரபு எமிரேட்சில் உள்ள துபாய், அபுதாபி, சார்ஜா ஆகிய இடங்களில் நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் விளையாடும் 12 அணிகளும் 2 பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு அணியும் தங்கள் பிரிவில் உள்ள மற்ற அணிகளுடன், ஒரு முறை மோத வேண்டும். 2 பிரிவிலும் முதல் 2 இடங்களை பிடிக்கும் அணிகள் அரைஇறுதிக்கு தகுதிபெறும். ...

Read More »

பேராயர் மல்கம் கர்தினால் ரஞ்சித் மனு ஒன்றைத் தாக்கல்

முத்துராஜவெல ஈரநிலங்கள் தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் குறித்து கொழும்பு பேராயர் மல்கம் கர்தினால் ரஞ்சித், உயர் நீதிமன்றத்தில் ரிட் மனு ஒன்றைத் தாக்கல் செய்துள்ளார். நகர அபிவிருத்தி அதிகாரசபையிடம் முத்துராஜவெல ஈரநிலங்களில் ஏறத்தாழ 3,000 ஏக்கர் நிலங்களைக் கையளிக்கும் வர்த்தமானியைத் திரும்பப் பெறும் உத்தரவுக்காகவே உயர் நீதிமன்றத்தை மல்கம் ரஞ்சித் நாடியுள்ளார். பிரதிவாதிகளாக, நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சரான பிரதமர் மஹிந்த ராஜபக்‌ஷ, இராஜங்க அமைச்சர் நாலக கொடஹெவா, சுற்றுச்சூழல் அமைச்சர் மஹிந்த அமரவீர, நகர அபிவிருத்தி அதிகாரசமை மற்றும் அதன் தலைவர், ...

Read More »

வரவு – செலவுத் திட்டத்தை சமர்ப்பிப்பதற்கு, நிதியமைச்சர் தீவிரம்

கொவிட் சவால்களை வெற்றிகொண்டு, வலுவான பொருளாதாரத்தைக் கட்டியெழுப்புவதனை இலக்காகக் கொண்டு, எதிர்வரும் வரவு – செலவுத் திட்டத்தை சமர்ப்பிப்பதற்கு, நிதியமைச்சர் பசில் ராஜபக்ஷ நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளார். இம்முறை வரவுசெலவுத் திட்டம் தயாரிப்பின்போது, பெரும் எண்ணிக்கையிலானோரின் பங்களிப்பு பெறப்பட்டுள்ளது. நிதியமைச்சின் வேலைத்திட்டத்துக்கு அமைவாக, நிறுவனங்கள் மற்றும் தனி நபர்களின் அபிப்பிராயங்களும் இதற்குப் பெறப்பட்டுள்ளன. கொவிட் வைரஸ் தொற்றுக்கு மத்தியில் தேசிய மற்றும் சர்வதேச ரீதியில் பொருளாதாரத்துக்குகு மிகுந்த அழுத்தம் ஏற்பட்டிருக்கின்றது. எனவே, கொவிட் சவால்களை வெற்றிகொண்டு, வலுவான பொருளாதாரத்தைக் கட்டியெழுப்புவதனை லக்காகக் கொண்டு, எதிர்வரும் வரவு ...

Read More »

திண்ணைச் சந்திப்பு

கடந்த செவ்வாய்க்கிழமை யாழ் திருநெல்வேலியில் அமைந்துள்ள திண்ணை உல்லாசவிடுதியில் 7 கட்சிகள் கூடின.13வது திருத்தத்தை முழுமையாக அமல்படுத்துமாறு இந்தியாவிடம் கோரிக்கை விடுப்பது அச்சந்திப்பில் நோக்கமாக இருந்தது.தமிழ் தேசிய மக்கள் முன்னணி அதில் அழைக்கப்படவில்லை. தமிழரசுக் கட்சி அழைக்கப்பட்ட போதிலும் பங்குபற்றவில்லை.மனோ கணேசனும் ரவுப் ஹக்கீமும் சந்திப்புக்காக கொழும்பிலிருந்து வந்திருந்தார்கள். எனினும்,எதிர்பார்த்தபடி ஒரு இறுதித்தீர்மானம் எடுக்கப்படவில்லை. தமிழரசுக் கட்சியையும் இணைத்துக் கொண்டு ஒரு தீர்மானத்தை எடுப்பது என்று முடிவெடுக்கப்பட்டது. இதுதொடர்பில் முடிவெடுப்பதற்கு தமிழரசுக்கட்சி கால அவகாசம் கேட்ட படியால் அக்கட்சியையும் இணைத்துக் கொண்டு  இறுதிமுடிவை எடுப்பது ...

Read More »

தடுப்பூசி போட்டவர்கள் எண்ணிக்கை 80 சதவீத இலக்கை எட்டியது

ஆஸ்திரேலியாவில் தடுப்பூசியை முழுமையாகப் போட்டுக் கொண்டவர்கள் எண்ணிக்கை 80 சதவீதம் என்று உயர்ந்துள்ளது. “மற்றொரு அற்புதமான இலக்கை எட்டியுள்ளோம்” என்று பிரதமர் இன்று காலை தெரிவித்தார். 6 மற்றும் அதற்கு மேற்பட்ட வயதுடையவர்களில் 80 சதவீதமானோர் இப்போது COVID-19 தடுப்பூசியை முழுமையாகப் போடப்பட்டுள்ளனர் என்று பிரதமர் Scott Morrison கூறினார். “அனைவருக்கும் மிக்க நன்றி. இது ஒரு பாரிய, தேசிய முயற்சி. இந்தப் பணி இத்துடன் ஓயவில்லை. விகிதாசார அடிப்படையில், தடுப்பூசியை அதிகம் போட்டுக் கொண்ட மக்கள் வாழும் நாடுகளில் முதன்மை நிலையை நாம் ...

Read More »

மனஅழுத்தம் நீங்கி மலரட்டும் நம் மனது!

நவீன வாழ்க்கையின் அடையாளங்களுள் ஒன்று மனஅழுத்தம். ஒருவரிடம் தொடர்ச்சியாக நீடித்திருக்கும் மனஅழுத்தம் உடல்ரீதியாகவும் உளவியல் ரீதியாகவும் அவருக்குப் பல்வேறு வகையான பாதிப்புகளை ஏற்படுத்துகிறது என்கின்றன ஆய்வுகள். ரத்த அழுத்தம், இதய நோய்கள், நீரிழிவு நோய்கள் என உடல் சார்ந்த நோய்கள் பலவும் இளம் வயதிலேயே வருவதற்கு நீடித்திருக்கும் இந்த மனஅழுத்தம்தான் முக்கியமான காரணம். மனஅழுத்தம் என்றால் என்ன? ஒரு ஆபத்தையோ அல்லது எதிர்பார்க்காத வகையில் ஏற்படும் நெருக்கடியையோ எதிர்கொள்ள வேண்டுமானால், நமக்கு ஏராளமான ஆற்றல் தேவைப்படும், அந்த ஆற்றலும் உடனடியாக நமக்குக் கிடைக்க வேண்டும். ...

Read More »

ஒத்தையடி பாதை போட்டேன்… இன்று எட்டு வழிச்சாலையாக மாற்றியிருக்கிறார்

சென்னையில் நடந்த விழாவில் இயக்குனர் எஸ்.ஏ.சந்திரசேகர், தனது மகன் விஜய் பற்றி பேசி இருக்கிறார். விஜய்க்கும் அவரது தந்தை எஸ்.ஏ.சந்திரசேகருக்கும் பனிப்போர் நடந்து வருகிறது. இந்நிலையில் சென்னையில் நடந்த தமிழ்த் திரைப்பட பத்திரிகையாளர்கள் சங்கத்தின் சார்பாக நடந்த விழாவில் விஜய்யின் திரையுலக வளர்ச்சி பற்றி மனம் திறந்திருக்கிறார் எஸ்.ஏ.சந்திரசேகர். ஒரு படைப்பாளி நினைத்தால் களிமண்ணையும் அழகான பானையாக்க முடியும். உண்மையான உழைப்பு இருந்தால் அழகு ஒரு பொருட்டே இல்லை. என் மகனுக்கு நான் வெறும் ஒரு ஒத்தையடிப் பாதை தான் போட்டுக் கொடுத்தேன் இன்று ...

Read More »