குமரன்

மன்னார்,மாந்தை மனித புதைகுழி வழக்கு விசாரணை ஒத்திவைப்பு!

மன்னார் மற்றும் மாந்தை மனித புதைகுழி வழக்கு விசாரணைகள் எதிர் வரும் 17 ஆம் திகதி வரை ஒத்தி வைப்பு. மன்னார்,திருகேதீஸ்வரம்,மாந்தை பகுதியில் கண்டு பிடிக்கப்பட்ட மனித புதைகுழி மற்றும் மன்னார் நகர மத்திய பகுதியில் கண்டு பிடிக்கப்பட்ட மனித புதைகுழி ஆகியவற்றின்  வழக்கு விசாரனைகள் எதிர்வரும் வெள்ளிக்கிழமை 17 ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. நேற்று மன்னார் நீதிமன்றத்தில் குறித்த இரு வழக்குகளும் விசாரனைக்காக எடுத்துக்கொள்ளப்பட்டது. எனினும் இன்றைய தினம்  மன்னார் நீதிமன்ற நீதவான் ரி.சரவணராஜா   மன்றுக்கு சமூகம் அளிக்காத காரணத்தினால் பதில் ...

Read More »

நயன்தாரா, திரிஷா வழியை பின்பற்றும் தமன்னா!

தமிழில் முன்னணி நடிகையாக வலம் தமன்னா, அடுத்ததாக நயன்தாரா, திரிஷா வழியை பின்பற்றி படங்களை தேர்வு செய்து நடித்து வருகிறார். நயன்தாரா, திரிஷா போன்ற முன்னணி கதாநாயகிகள், பெண்களின் கதாபாத்திரங்களுக்கு முக்கியத்துவம் அளிக்கும் படங்களில் நடித்து வருகிறார்கள். அந்த வரிசையில் இப்போது தமன்னாவும் இணைந்து இருக்கிறார். அவர் நகைச்சுவை கலந்த புதிய திகில் படத்தில் நடிக்கிறார். படத்துக்கு இன்னும் பெயர் சூட்டப்படவில்லை. `அதே கண்கள்’ படத்தை இயக்கிய ரோஹின் வெங்கடேசன், இந்த படத்தை டைரக்டு செய்கிறார். படத்தை பற்றி இவர் கூறியதாவது:- தமன்னா தனக்கென ...

Read More »

சிறிலங்கா காவல் துறை விடுக்கும் அவசர வேண்டுகோள் !

வெடிபொருட்களை வைத்திருப்பவர்கள் அருகில் உள்ள காவல் துறை  நிலையத்தில் அறிவிக்குமாறு காவல் துறை பொது மக்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளனர். அனுமதிப்பத்திரமின்றி வெடிபொருட்களை தமது உடமையில் வைத்திருப்பவர்கள் அதனை காவல் துறையிடம் ஒப்படைக்க கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. அவ்வாறு அனுமதிப்பத்திரமின்றி வெடிபொருட்களை வைத்திருப்பவர்கள் அருகில் உள்ளகாவல் துறை நிலையத்திற்கு சென்று அறிவிக்குமாறுகாவல் துறை பொதுமக்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளனர். அதன்படி எதிர்வரும் 14 ஆம் திகதி காலை 06 மணிக்கு முன்னர் அவை தொடர்பில் அருகில் உள்ள காவல் துறை நிலையத்தில் அறிவிக்குமாறு காவல் துறை ஊடகப் ...

Read More »

அவுஸ்திரேலிய நாணயத்தாளில் தவறாக அச்சிடப்பட்ட சொல் !

அவுஸ்திரேலியாவின் அனைத்து 50 டொலர் நாணயத்தாள்களிலும் ஒரு வார்த்தையொன்று தவறுதலாக அச்சிடப்பட்டிருப்பது தெரியவந்துள்ளது. அவுஸ்திரேலியாவின் 50 டொலர் நாணயத்தாளில் ‘ரெஸ்பொன்ஸிபிலிட்டி’ (responsibility) என்ற வார்த்தை தவறுதலாக ‘ரெஸ்பொன்ஸிபில்டி’ (responsibilty) என்று அச்சிடப்பட்டுள்ளது. கோடிக்கணக்கான மக்கள் குறித்த நாணயத்தாள்களைப் பயன்படுத்தியுள்ளனர். ஆனால் இத்தனை நாட்கள் யாரும் பிழையை கண்டுபிடிக்கவில்லை. இந்நிலையில் ஒருவர் அதிலிருக்கும் பிழையை கண்டறிந்துள்ளார். அத்துடன் குறித்த நபர் இன்ஸ்டகிராமில் அதனை பதிவிட்டுள்ளார். இந்நிலையில் இது அவுஸ்திரேலிய ரிசர்வ் நிர்வாகத்திற்கு தெரியப்படுத்திய நிலையில், குறித்த நாணயத்தாளில் பிழை இருப்பது உண்மை தான் என ரிசர்வ் வங்கி ஒப்புக்கொண்டுள்ளது. ...

Read More »

என் உயிர் இருக்கும் வரை இந்த பணியை தொடர்வேன்!-வைத்தியராக பணிபுரியும் பூடான் பிரதமர்

பூடான் நாட்டின்  பிரதமர் லோட்டே ஷெரிங்  சிறிதும் மன கசப்பின்றி வார இறுதியான சனிக்கிழமைகளில் வைத்தியராக பணிபுரிகிறார். 41 வயதாகும்  லோட்டே கடந்த 2018ம் ஆண்டு நவம்பர் மாதம் 7ம் திகதி, 7 லட்சத்து 50 ஆயிரம் மக்களால் பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்டார். பூடான் நாட்டை ஆளும் இவர், ஒரு அறுவை சிகிச்சை மருத்துவராவார். வங்காள தேசம், ஜப்பான், ஆஸ்திரேலியா, அமெரிக்கா போன்ற நாடுகளில் லோட்டே மருத்துவ பயிற்சி பெற்றவர் ஆவார். தான் பயின்ற கல்வியும், பெற்ற பயிற்சியும் மக்களுக்கு உதவும் வண்ணம் இருக்க வேண்டும் ...

Read More »

விஷால் – அனிஷா திருமணம்!

நடிகர் விஷாலுக்கும் அவரது காதலியான அனிஷாவுக்கும் சமீபத்தில் திருமண நிச்சயதார்த்தம் நடந்த நிலையில், இவர்களது திருமண திகதி அறிவிக்கப்பட்டுள்ளது. விஷால் நடிப்பில் உருவான அயோக்யா இன்று வெளியாக  இருந்தது. சில பைனான்ஸ் சிக்கல்களால் தள்ளிப்போனது. இந்த நிலையில் அவர் அளித்துள்ள பேட்டி வருமாறு:- முதன்முறையாக ஒரு ரீமேக் படத்தில் நடித்துள்ளேன். படங்களை ரீமேக் செய்யும்போது அந்தந்த மொழியின் மார்க்கெட்டில் சிக்கல் ஏற்படும். இதனாலேயே நான் ரீமேக் செய்வதை தவிர்த்து விடுவேன். ஆனால் அயோக்யா படத்தின் கதை என்னை பாதித்ததால் ரீமேக் செய்துள்ளேன். பாலியல் பலாத்கார ...

Read More »

புதிய பயங்கரவாத எதிர்ப்பு சட்டம் அவசியமற்றது – டிலான் பெரேரா

காவல் துறை  விஷேட அதிரடிப்படையினர், இராணுவம் மற்றும் நீதிமன்றம் உள்ளிட்ட சகல துறைகளும் புதிய பயங்கரவாத தடைச்சட்டம் அவசியமற்றது என்பதை தெரிவித்துள்ள போதிலும்  சிறிலங்கா பிரதமர் ரணில் விக்ரமசிங்க அதனைக் கொண்டு வருவதில் உறுதியாக உள்ளார். இதனால் எந்த பயனையும் நாட்டு மக்கள் பெற்றுக் கொள்ளப்போவதில்லை என்று நாடாளுமன்ற உறுப்பினர் டிலான் பெரேரா தெரிவித்தார். அங்கு தொடர்ந்தும் அவர் தெரிவிக்கையில், சிறிலங்கா  பிரதமர் ரணில் விக்ரமசிங்க நாட்டில் உள்ள பிரச்சினைகள் அனைத்தையும் ஒரு புறம் ஒதுக்கி வைத்துவிட்டு புதிய பயங்கரவாத எதிர்ப்பு சட்டம் குறித்து ...

Read More »

‘சஹ்ரான் உயிர் வாழ்கிறார்’ !

சஹ்ரான் நாட்டைவிட்டுச் சென்றுவிட்டார் என்று ஒரு கதை, இப்போது வெளிவரத் தொடங்கியிருக்கிறது. அவர் தற்கொலைத் தாக்குதலில் இறந்துவிட்டார் என்று, கடந்த வாரம் வரை சொல்லிக் கொண்டிருந்த பாதுகாப்புத் தரப்பு, திடீரென்று இந்தக் கதையைச் சொல்லத் தொடங்கியிருக்கிறது. இலங்கையில் கொழும்பு , நீர்கொழும்பு, மட்டக்களப்பு ஆகிய இடங்களில் மேற்கொள்ளப்பட்ட குண்டுத் தாக்குதல்களுக்கான பொறுப்பை, இஸ்லாமிய அரசு என்ற பெயரில் இயங்கிவரும் ஐ.எஸ் அமைப்பு ஏற்றுக்கொண்டு, உயிர்த்த ஞாயிறன்று (ஏப்ரல் 21) குண்டுத் தாக்குதல் நடத்தியவர்களில் அபு உபைதா எனும் ஐ.எஸ். பெயருடைய  சஹரான் ஹஸ்மியும் அடங்குவதாக அறிவித்திருந்தது. ...

Read More »

‘வாப்பாவின் பெயரைச் சொன்னால் காது, வாயை வாப்பா வெட்டுவார்’!

“வாப்பாவின் பெயரை கூறமாட்டேன். வாப்பாவின் பெயரை சொன்னால், என்னுடைய காதுகள் இரண்டையும் வாயையும் வெட்டிவிடுவதாக வாப்பா சொன்னார் என, சஹ்ரானின் நான்கு வயதான மகள் கூறியுள்ளார் என, அம்பாறை காவல் துறை  மற்றும் வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன. கொழும்பு, ஷங்கரில்லா ஹோட்டலில் தற்கொலைத் தாக்குதல் நடத்திய தேசிய தௌஹீத் ஜமாஅத் அமைப்பின் பயங்கரவாத தலைவராக மொஹமட் சஹ்ரான் என்பவரின் நான்கு வயது மகளான மொஹமட் சஹ்ரான் ருசேசினாவே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். நான்கு வயதான அந்த பெண் பிள்ளையிடம் பாதுகாப்பு தரப்பினர் சில விடயங்களை கேட்டபோதே ...

Read More »

சங்கத்தமிழன் – விஜய் சேதுபதிக்கு இது முதல்முறை!

விஜய் சந்தர் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடித்து வரும் `சங்கத்தமிழன்’ படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில், படத்தில் விஜய் சேதுபதி இரட்டை வேடத்தில் நடிப்பதாக கூறப்படுகிறது. விஜய் சந்தர் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடித்து வரும் `சங்கத்தமிழன்’ படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில், படத்தில் விஜய் சேதுபதி இரட்டை வேடத்தில் நடிப்பதாக கூறப்படுகிறது. ‘வாலு’, `ஸ்கெட்ச்‘ ஆகிய படங்களை இயக்கிய விஜய் சந்தர் தற்போது விஜய் சேதுபதியை வைத்து `சங்கத்தமிழன்’ என்ற படத்தை இயக்கி வருகிறார். இந்தப் படத்தின் ...

Read More »