குமரன்

நடிகை அனிதாவுக்கு குழந்தை பிறந்தது

தமிழில் விக்ரம், தனுஷ் போன்ற முன்னணி நடிகர்களுடன் நடித்த நடிகை அனிதாவுக்கு குழந்தை பிறந்துள்ளது. தமிழில் வருஷமெல்லாம் வசந்தம் படத்தில் அறிமுகமானவர் அனிதா ஹசானந்தனி. விக்ரம் நடித்த சாமுராய், எஸ்.ஏ.சந்திரசேகர் இயக்கிய சுக்ரன், மகாராஜா உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். இந்தியில் முன்னணி நடிகையாக இருக்கிறார். ஐஸ்வர்யாராயின் தால் படத்தில் ஒரு பாடலுக்கு நடனம் ஆடி உள்ளார். தெலுங்கு, இந்தி தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்து இருக்கிறார். கடந்த 2013-ல் ரோகித் ரெட்டி என்பவரை அனிதா காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்த நிலையில் அனிதா ...

Read More »

ஞானசார தேரரிற்கு எதிராக நடவடிக்கை எடுக்குமாறு ஆணைக்குழு பரிந்துரை

பொதுபலசேனாவின் ஞானசார தேரருக்கு எதிராக நடவடிக்கைகளை எடுக்கவேண்டும் என உயிர்த்த ஞாயிறு தாக்குதல் குறித்து விசாரணைகளை மேற்கொண்ட ஆணைக்குழு தனது அறிக்கையில் தெரிவித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஞானசார தேரருக்கு எதிராக குற்றவியல் குற்றச்சாட்டுகளை சுமத்துமாறு ஆணைக்குழு பரிந்துரைந்துள்ளது என மோர்னிங் தெரிவித்துள்ளது. 2014இல் அளுத்கம பேருவளையில் இடம்பெற்ற வன்முறைகளி;ற்கு காரணமாகயிருந்தார் என்ற குற்றச்சாட்டுகளின் அடிப்படையிலேயே ஞானசார தேரருக்கு எதிராக குற்றவியல் நடவடிக்கைகளை எடுக்குமாறு ஆணைக்குழு பரிந்துரைந்துள்ளது என நம்பகதன்மை மிக்க வட்டாரங்கள் தெரிவித்துள்ளதாக மோர்னிங் செய்தி வெளியிட்டுள்ளது. மதமற்றும் இனரீதியிலான குழப்பங்களை ஏற்படுத்துவதற்கு காரணமான ...

Read More »

ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ்: சோபியா கெனின் அதிர்ச்சி தோல்வி

ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டியில் நடப்பு சாம்பியனான அமெரிக்காவை சேர்ந்த சோபியா கெனின் அதிர்ச்சிகரமாக தோல்வி அடைந்தார். கிராண்ட்சிலாம் போட்டிகளில் ஒன்றான ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டி மெல்போர்ன் நகரில் நடைபெற்று வருகிறது. உலகின் முதல்நிலை வீராங்கனையான ஆஸ்லே பார்டி (ஆஸ்திரேலியா) 2-வது சுற்றில் சக நாட்டை சேர்ந்த கவ்ரிலோவாவை எதிர்கொண்டார். இதில் ஆஸ்லே பார்டி 6-1, 7-6 (9-7) என்ற நேர் செட் கணக்கில் வென்று 3-வது சுற்றுக்கு தகுதி பெற்றார். மற்றொரு ஆட்டத்தில் 6-வது வரிசையில் உள்ள கரோலினா பிரிஸ்கோவா (செக் ...

Read More »

திருமணத்துக்கு பின் அதிக பட வாய்ப்புகள் வருகிறது – நடிகை ஆனந்தி

சமீபத்தில் திருமணமான நடிகை ஆனந்தி, திருமணத்துக்கு பிறகு தனக்கு அதிக பட வாய்ப்புகள் வருவதாக தெரிவித்துள்ளார். கயல், விசாரணை, பரியேறும் பெருமாள். இரண்டாம் உலகப்போரின் கடைசி குண்டு என்று தொடர்ந்து அழுத்தமான கதைகளில் நடித்து வரும் ஆனந்தி தற்போது ராஜசேகர் துரைசாமி இயக்கிய “கமலி பிரம் நடுக்காவேரி” படத்தில் நடித்துள்ளார். அவர் அளித்த பேட்டி வருமாறு: “குடும்ப வாழ்க்கையில் எனது கணவர் ஆதரவாக இருக்கிறார். நான் தொடர்ந்து நடிக்க வேண்டும் என்பது தான் அவர் ஆசை. திருமணத்துக்கு பிறகு பட வாய்ப்புகள் வராது என்பார்கள். ...

Read More »

ஜனாதிபதி ஆணைக்குழுவின் இறுதி அறிக்கையின் பிரதி இதுவரை கிடைக்கவில்லை

ஜனாதிபதி ஆணைக்குழுவின் இறுதி அறிக்கையின் பிரதி இதுவரை கிடைக்கவில்லை என பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை தெரிவித்துள்ளார். இந்நிலையில், உயிர்த்த ஞாயிறு தாக்குதலுக்குப் பொ றுப்புக் கூற வேண்டியவர்களுக்கு எதிராக இலங்கையில் சட்டம் உரிய முறையில் செயற்படுத்தப்படவில்லை என்றால் சர்வதேச நீதிமன்றத்திற்குச் செல்லவுள்ளதாக கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை தெரிவித்துள்ளார். உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் இறுதி அறிக்கையின் பிரதியை ஜனாதிபதியிடம் கேட்டதாகவும், ஆனால் இதுவரை அது கிடைக்கவில்லை என்றும் இன்றைய தினம் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் தெரிவித்துள்ளார்.

Read More »

மியான்மரில் ராணுவ ஆட்சிக்கு எதிரான போராட்டத்தில் துப்பாக்கி சூடு – பெண் கவலைக்கிடம்

மியான்மரில் ராணுவ ஆட்சிக்கு எதிரான போராட்டத்தில் நிகழ்ந்த துப்பாக்கி சூட்டில் பெண் ஒருவர் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மியான்மரில் ராணுவ ஆட்சிக்கு எதிராகவும், கைது செய்யப்பட்டுள்ள அரசியல் தலைவர்களை உடனடியாக விடுவிக்ககோரியும் கடந்த சில நாட்களாக தொடர் போராட்டம் நடந்து வருகிறது. தலைநகர் நேபிடாவ் மற்றும் நாட்டின் 2 மிகப் பெரிய நகரங்களான யாங்கூன், மாண்டலே நகரங்களில் பல்லாயிரக்கணக்கான மக்கள் வீதியில் இறங்கி போராட்டம் நடத்தி வருகின்றனர். போராட்டம் நாளுக்கு நாள் தீவிரமடைந்து வரும் நிலையில், பொதுமக்கள் ஆா்ப்பாட்டங்களில் ...

Read More »

ஆஸ்திரேலிய கடற்பரப்பில் 7.7 ஆக பதிவான நிலநடுக்கம் – சுனாமி எச்சரிக்கை விடுப்பு

ஆஸ்திரேலியா கடற்பரப்பில் ஏற்பட்ட திடீர் நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 7.7 ஆக பதிவானது. இதனால் அங்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ஆஸ்திரேலியா கடற்பரப்பிற்கு அருகே தெற்கு பசிபிக் பகுதியில் இன்று ஏற்பட்ட திடீர் நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 7.7 ஆக பதிவாகி உள்ளதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனைத்தொடர்ந்து நியூசிலாந்து, வணூட்டு, புதிய கலிடோனியா கடற்கரை பகுதிகளில் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்த பூகம்பத்தால் அபாயகரமான சுனாமி அலைகள் அடுத்த மூன்று மணி நேரத்திற்குள் உருவாக வாய்ப்புள்ளதாக பசிபிக் சுனாமி எச்சரிக்கை ...

Read More »

மக்கள் பேரெழுச்சி இயக்கம் அங்குரார்ப்பணம்

தமிழ் பேசும் அத்தனை உறவுகளின் அபிலாசைகளின் வெளிப்பாடுதான் பேரணி வெற்றிபெற்றது. நாம் பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரை மக்கள் பேரெழச்சி இயக்கம் என்ற பெயரில் ஒரு மக்கள் இயக்கத்தை இங்கு அங்குரார்ப்பணம் செய்கிறோம் என தவத்திரு வேலன்சுவாமி தெரிவித்தார். யாழ் ஊடக அமையத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இதனை தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், வடக்கு கிழக்கு சிவில் சமூகங்கள் இணைந்து ஏற்பாடு செய்திருந்த பொத்துவில் பொலிகண்டி வரையான மாபெரும் மக்கள் எழுச்சிப் போராட்டம் பெரு வெற்றியாக தாயகத்திலும் சர்வதேசத்திலும்& கவனத்தை ...

Read More »

நியூசிலாந்து, இந்தோனேசியாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் -சுனாமி எச்சரிக்கை

நியூசிலாந்தின் வடக்கே கடலுக்கடியில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதால், அப்பகுதியில் சுனாமி உருவாகலாம் என்ற அச்சம் எழுந்துள்ளது. நியூசிலாந்துக்கு வடக்கே ஆஸ்திரேலியாவுக்கும், பிஜிக்கும் இடையே இன்று சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. கடலுக்கடியில் 10 கிமீ ஆழத்தில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் 7.7 ரிக்டர் அளவில் பதிவாகியிருந்ததாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் கூறி உள்ளது. இதனால் சுனாமி உருவாகலாம் என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது. அடுத்த மூன்று மணி நேரத்திற்குள் சுனாமி அலை உருவாகலாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. பிஜி, நியூசிலாந்து மற்றும் வனுவாட்டுவின் சில கடலோர ...

Read More »

ஊரடங்கை பயன்படுத்தி 87 ஆபாச படங்களை தயாரித்த நடிகை கைது

மும்பையில் ஊரடங்கை பயன்படுத்தி 87 ஆபாச படங்களை தயாரித்த மாடல் அழகியும் நடிகையுமான கெஹானா வசிஸ்த் கைது செய்யப்பட்டார். மும்பையில்  ஆபாச படம் எடுத்த  தொலைக்காட்சி நடிகை உள்பட 8 பேரை போலீசார் கைது செய்தனர். குறும்படங்கள் தயாரிப்பதாக கூறி மும்பை மற்றும் அதைச் சுற்றியுள்ள பங்களாக்களில் ஆபாச  திரைப்படங்களை உருவாக்கி வந்து உள்ளனர். நடிகை கெஹானா வசிஸ்த் ஒரு தயாரிப்பு நிறுவனத்தைத் தொடங்கி ஆபாச வீடியோக்களை தயாரித்து உள்ளார். ஓடிடி தளங்களில் இந்த ஆபாச விடியோக்களை பதிவேற்றப்படுவது தொடர்பாக உமேஷ் காமத் என்ற ...

Read More »