நடிகை அனிதாவுக்கு குழந்தை பிறந்தது

தமிழில் விக்ரம், தனுஷ் போன்ற முன்னணி நடிகர்களுடன் நடித்த நடிகை அனிதாவுக்கு குழந்தை பிறந்துள்ளது.

தமிழில் வருஷமெல்லாம் வசந்தம் படத்தில் அறிமுகமானவர் அனிதா ஹசானந்தனி. விக்ரம் நடித்த சாமுராய், எஸ்.ஏ.சந்திரசேகர் இயக்கிய சுக்ரன், மகாராஜா உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். இந்தியில் முன்னணி நடிகையாக இருக்கிறார். ஐஸ்வர்யாராயின் தால் படத்தில் ஒரு பாடலுக்கு நடனம் ஆடி உள்ளார். தெலுங்கு, இந்தி தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்து இருக்கிறார்.
கடந்த 2013-ல் ரோகித் ரெட்டி என்பவரை அனிதா காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்த நிலையில் அனிதா கர்ப்பமானார். கர்ப்பத்துடன் இருக்கும் புகைப்படத்தை சில மாதங்களுக்கு முன்பு இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு இருந்தார். சில தினங்களுக்கு முன்பு அனிதாவுக்கு பிரசவ வலி ஏற்பட்டு மும்பையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார்.
அனிதா ஹசானந்தனி
அங்கு அவருக்கு அழகான ஆண் குழந்தை பிறந்தது. தனது விரலை குழந்தை பிடித்து இருக்கும் புகைப்படத்தை சமூக வலைத்தளத்தில் வெளியிட்டு உள்ளார். அவருக்கு நடிகர், நடிகைகள் வாழ்த்து தெரிவித்து உள்ளனர்.