சிறப்பு செய்திகள்

பனைமரக்காடு திரைப்படம் அவுஸ்திரேலியாவில் வெளியீடு! – UPDATED 3

ஈழத்து திரைப்படங்களில் ஒன்றான பனைமரக்காடு என்ற திரைப்படத்தின் முதலாவது காட்சி மெல்பேர்ணில் எதிர்வரும் ஒக்ரோபர் 6 ஆம் திகதி மாலை 3 மணிக்கும், சிட்னியில் ஒக்ரோபர் மாதம் 14 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை 10 மணிக்கும், பின்னர் மாலை 5 மணிக்கும் என இரண்டு காட்சிகளாகவும் திரையிடப்படவுள்ளது. அதேவேளை ஒக்ரோபர் மாதம் 14 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை யாழ்ப்பாணத்தின் ராஜா திரையரங்கில் சிறப்பு விருந்தினர்களுக்கான மூன்று காட்சிகள் காண்பிக்கப்படவுள்ளன. அதனைத் தொடர்ந்து ஈழத்தின் அனைத்து பகுதிகளிலும் தமிழர் புலம்பெயர் தேசங்களிலும் திரையிடுவதற்கான பணிகள் நடைபெற்றுவருகின்றமை ...

Read More »

இம்ரான் கான் (IMRAN KHAN) என்னும் ஆளுமையின் வளர்ச்சியில் கற்கக்கூடிய சில பாடங்கள்!

பாகிஸ்தானின் புதிய பிரதமராக ஆவணி மாதம் 11ம் திகதி பதவி ஏற்கவிருக்கும் இம்ரான் கான் தொடர்பான சில குறிப்புகளுடன் இந்த பதிவு அமையவிருக்கிறது. 1952ம் ஆண்டு ஜப்பசி மாதம் 05ம் திகதி லாகூரில் பிறந்த இம்ரான் கான், 1971ம் ஆண்டு பாகிஸ்தான் அணி சார்பாக பேர்மிங்கத்தில் இங்கிலாந்துக்கெதிரான டெஸ்ட் கிரிக்கெட் போட்டியுடன் ஆரம்பித்து, 1992ம் ஆண்டு இங்கிலாந்துக்கெதிரான ஒரு நாள் கிரிக்கெட் ஆட்டத்துடன் தனது கிரிக்கெட் வாழ்க்கையினை நிறைவு செய்து கொண்டார். இந்த இடைப்பட்ட 21 வருட காலத்தில் சகலதுறை ஆட்டக்காரராக, 88 டெஸ்ட், ...

Read More »

கணிதத்திற்கு ‘நோபல் பரிசு’ வென்றுள்ள ஆஸ்திரேலியத் தமிழர்!

நான்கு வருடங்களுக்கு ஒருமுறை கணிதத் துறையில் சாதனை புரிந்தவர்கள் மற்றும் புதிய சிந்தனைகளை வளர்ப்பவர்கள் என்று கருதப்படும் 40 வயதிலும் குறைந்தவர்களுக்கு வழங்கப்படும் “Fields Medal” விருது, கணிதத்திற்கான ‘நோபல் பரிசு’ என்று பரவலாக அறியப்படுகிறது. இந்த விருது இரண்டு முதல் நான்கு கணித மேதைகளுக்கு வழங்கப்படுகிறது. இந்த வருடம், இந்த விருது நால்வருக்கு வழங்கப்படுகிறது. அதில், 16 வயதிலேயே மேற்கு ஆஸ்திரேலியா பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்ற அக்‌ஷய் வெங்கடேஷ் என்ற பேராசிரியரும் ஒருவர். தற்போது 36 வயதான பேராசிரியர் அக்‌ஷய் வெங்கடேஷ் அமெரிக்காவின் ...

Read More »

குடும்பங்களை பிரிக்கும் நாடுகடத்தலை நிறுத்துமாறு ஐநா கோரிக்கை!

அண்மையில் நாடுகடத்தபட்ட தீலீபன் என்ற இளைஞரின் சம்பவத்தை சுட்டிகாட்டியுள்ள ஐநா அகதிகளுக்கான நிறுவனம், குடும்பங்களை பிரிக்கும் நாடுகடத்தலுக்கு கவலை வெளியிட்டுள்ளது. அவுஸ்திரேலிய அரசிடம் குறித்த இளைஞரை நாடுகடத்தவேண்டாம் எனக் கேட்டுக் கொண்ட போதும், தங்களால் அந்த நாடுகடத்தலை தடுக்கமுடியாமல் போனமை கவலை அளிப்பதாக அதன் செய்திக்குறிப்பு தெரிவிக்கிறது. மேலும் இத்தகைய குடும்பங்களை பிரிப்பது, அடிப்படை மனிதவுரிமை மீறல் எனவும் இத்தகைய நடவடிக்கைகளை நிறுத்துமாறும் கேட்டுக்கொள்வதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக தமிழ் அகதிகள் சபை வெளியிட்டுள்ள அறிக்கை: UNHCR, the UN Refugee Agency, ...

Read More »

விசா நிராகரிக்கப்படுவோர் விரைவான நடவடிக்கை எடுப்பது அவசியம்!

அவுஸ்திரேலியாவில் அகதி தஞ்சகோரிக்கை விண்ணப்பங்கள் அண்மைக்காலத்தில் அதிகமாக நிராகரிக்கப்பட்டுவருகின்றது. இன்று மனைவிக்கும் மகளுக்கு விசா வழங்கப்பட்ட நிலையில் திலீபன் என்ற 30 வயதுடைய இளைஞர் ஒருவர் விசா விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டு சிறிலங்காவுக்கு நாடுகடத்தப்பட்டுள்ளார். குறுகிய காலஅவகாசம் வழங்கப்பட்டே இத்தகைய நாடுகடத்தல் நடவடிக்கைகளை அவுஸ்திரேலிய குடிவரவுத்துறை தொடர்ச்சியாக மேற்கொண்டுவருவதால் போதிய மாற்று ஏற்பாடுகளை செய்வதற்கு காலஅவகாசம் கிடைப்பதில்லை என அகதிகளுக்கான சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவிக்கின்றனர். விசா கோரிக்கை நிராகரிக்கப்பட்டவர்கள் உடனடியாக தமிழ்ச்சமூக செயற்பாட்டாளர்களையோ அல்லது அகதி தஞ்சகோரிக்கைகளை கையாளுகின்ற சட்டவாளர்ளை தொடர்புகொண்டு தேவையான உதவிகளை ...

Read More »

பிரபாகரன் ஓர் அதிசயப் பிறவி! -ஆனந்தி

விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனை முதன் முதலாக சந்தித்து நேர்காணல் செய்ய மூத்த ஊடகவியலாளர் ஆனந்தியுடனான நேர்காணல் ஒன்றை இந்திய ஊடகம் ஒன்று வெளியிட்டுள்ளது. அந்த நேர்காணல் இதோ, லண்டனிலிருந்து கொழும்பு சென்றதுமே இலங்கை அரசின் கெடுபிடி ஆரம்பித்து விட்டது. எனது பயணத்திட்டம் என்ன, பயணத்தின் நோக்கம் என்ன என்பது பற்றி எல்லாம் துருவித்துருவி விசாரிக்க ஆரம்பித்தார்கள். என்னைத் தொடர்ந்து கண்காணிக்கவும் செய்தார்கள். அப்போது கிட்டதட்ட வவுனியாவுக்கு முன் வரை மட்டுமே இலங்கை படைகளின் ஆதிக்கம் இருக்கும். அதுவரை சென்றேன். அதன் பிறகு ...

Read More »

ரெலோ அமைப்பின் ஆயுதக் குவியல் ரமேஸ்வரத்தில் கண்டுபிடிப்பு!

ராமேஸ்வரம் அருகே கைப்பற்றப்பட்ட துப்பாக்கி குண்டுகள், வெடிகுண்டுகள் தமிழ்ஈழ விடுதலை இயக்கம் பதுக்கியது என தெரிய வந்ததால் டெல்லி, சென்னையைச் சேர்ந்த புலனாய்வு அதிகாரிகள் விசாரணை நடத்த ராமேசுவரம் விரைந்துள்ளனர். ராமேசுவரம் அருகே கடற்கரை கிராமமான தங்கச்சி மடத்தில் ஆயுத குவியல் சிக்கியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இது தமிழ்ஈழ விடுதலை இயக்கம் பதுக்கியது என தெரிய வந்ததால் டெல்லி மற்றும் சென்னையைச் சேர்ந்த புலனாய்வு அதிகாரிகள் மேல் விசாரணை நடத்த ராமேசுவரம் விரைந்துள்ளனர். தங்கச்சி மடத்தைச் சேர்ந்த மீனவர் எடிசன் என்பவரது ...

Read More »

அச்சு நூல்கள் அழியாது..! ஏன்?

உலகெங்கும் பதிப்புத் துறை சார்ந்த கூடுகைகளில், “விரைவில் அச்சு நூல் மறைந்து விடும், இனி மின்னூல்கள் மட்டுமே தழைக்கும்” என்று சில ஆண்டுகளுக்கு முன்பு வரை தொடர்ந்து பேசப்பட்டுவந்தது. பெரும் பதிப்பாளர்களை நோக்கிப் பல வரலாற்றுத் தீர்ப்புகளை வீசினர் தொழில்நுட்பக் கற்றுக்குட்டிகள். பதிப்புலகுக்குப் பெரும் பங்களித்த ஆளுமைகள் பலர் மனங்கலங்கி நின்றிருப்பதைக் கண்டிருக்கிறேன். தொழில்நுட்பத்தால் மட்டும் வரலாறு தீர்மானிக்கப்படுவதில்லை. தொழில்நுட்பத் தின் தாக்கத்தை மறுப்பது மூடத்தனம். ஆனால், தொழில்நுட்பம் பண்பாட்டின் செல்வாக்குக்கு உட்பட்டது என்பதை உணரா திருப்பது அறியாமை. அச்சு இயந்திரங்கள் வந்ததும் ஓலைச்சுவடி ...

Read More »

“என் கோபத்துக்குக்கூட அவர்கள் தகுதியற்றவர்கள்!” கெளரி லங்கேஷின் தங்கை கவிதா

உலகம் முழுவதும் இருக்கின்ற பத்திரிகையாளர்களுக்கு 2017ம் ஆண்டு மிகவும் மோசமான ஆண்டு எனக் கூறலாம். கடந்த ஆண்டு மட்டும் , தங்களின் வேலைக்   காரணமாக , உலகம் முழுவதும் கொல்லப்பட்ட பத்திரிகையாளர்களின் எண்ணிக்கை …46! அதில் இந்தியாவில் கொல்லப்பட்டவர்கள் மூன்று பேர் ..கர்நாடகாவைச் சேர்ந்த  கெளரி லங்கேஷ் என்ற பெண் பத்திரிகையாளர் உட்பட! 2017ம் ஆண்டு,  செப்டம்பர்  5ம் தேதி, பெங்களூரில், காந்தி நகரிலுள்ள தன் அலுவலகத்திலிருந்து , ராஜராஜேஸ்வரி நகரிலுள்ள தன்  வீட்டிற்கு திரும்பியபோது, மூன்று  மர்ம நபர்களால் சுட்டுக்கொல்லப்பட்டார் கெளரி லங்கேஷ். இந்த கொலை வழக்கில், ...

Read More »

பேச்சுவார்த்தைகளால் தீர்க்க முடியாததை துப்பாக்கிகளால் நிச்சயம் தீர்க்க முடியாது!

ஒரு பத்திரிகையாளரின் இறுதிச் சடங்கில் ஏன் இத்தனை பேர் கூடவேண்டும் என்கிற கேள்வி அந்தப் புகைப்படங்களைப் பார்த்ததும் தனிச்சையாக எழுந்தது. கொள்கைகளால் பிரிவுபட்டிருந்த காஷ்மீரின் அனைத்துத் தரப்பு அரசியல்வாதிகளும் பலத்த மழைக்கு இடையே சையது சுஜாத் புகாரி குடும்பத்தின் கல்லறைத் தோட்டத்தில் அவரை நல்லடக்கம் செய்யக் கூடியிருந்தார்கள். ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கொட்டும் மழையையும் பொருட்படுத்தாது தங்களின் அமைதியான வாழ்வுக்காக போராடியவரை இறுதியாகப் பார்க்க வந்ததில் ஆச்சரியம் இல்லைதான். சகபத்திரிகையாளர்களே மக்களுக்கான சுஜாத்தின் பங்களிப்பை விவரிக்கிறார்கள். இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையிலான அமைதிப் பேச்சுவார்த்தையில் மிகத் ...

Read More »