Tag Archives: ஆசிரியர்தெரிவு

சிறிலங்கா ஜனாதிபதியாலும் பிரதமராலும் ஏன் முடியாது?

அமைச்சரால் அரசியல் கைதிகளை விடுவிக்க முடியும் என்றால், ஏன் ஜனாதிபதியாலும் பிரதமராலும் விடுவிக்க முடியவில்லை? என  ஈழத் தமிழர் சுயாட்சி கழகத்தின் செயலாளர் நாயகமும் வடமாகாண சபையின் முன்னாள் அமைச்சருமான அனந்தி சசிதரன் கேள்வி எழுப்பினார். யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அனந்தி சசிதரன் இந்த கேள்வியை முன்வைத்துள்ளார். மேலும், நீண்ட காலமாக சிறைகளில் இருந்த  அரசியல் கைதிகளில் ஒரு தொகுதியினர் ஜனாதிபதியின் பொது மன்னிப்பின் அடிப்படையில் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். இதுவொரு மகிழ்ச்சியான விடயமாகும். தமிழ் அரசியல் கைதிகள் தொடர்பில் வருடக்கணக்கில் போராட்டங்கள் நடைபெற்று ...

Read More »

பங்காளிகளின் பற்களை பிடுங்க மந்திராலோசனை?

ஆளும் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன அரசாங்கத்துக்கும் அதன் பங்காளிக் கட்சிகள் சிலவற்றுக்கும் இடையில் ஏற்பட்டிருந்த கருத்து முரண்பாடுகள் நீண்டுகொண்டே செல்வதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. பங்காளிகள் சில தாம் கொண்டிருக்கும் நிலைப்பாட்டில் உடும்புப்பிடியாக இருப்பதால் மாற்று வழியைப் பயன்படுத்துவதற்கு அரசாங்கத்தின் முக்கியஸ்தர்கள் ஆலோசித்துள்ளனர் என அறியமுடிகின்றது. அதன் முதற்கட்டமாக முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷவை தேசியப் பட்டியலின் ஊடாக பாராளுமன்றத்துக்குள் கொண்டுவந்து அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சராக்குவதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளது. சிறிய விடுமுறையில் அமெரிக்காவுக்குச் சென்றிருந்த பசில் ராஜபக்ஷ நேற்று முன்தினம் (24) நாடு திரும்பினார். அவர் ...

Read More »

“கோபிகா-தருணிகாவுக்கு பதிலாக Jane-Sally என்றிருந்தால் அரசு விசா தந்திருக்கும்”

புகலிடக்கோரிக்கை நிராகரிக்கப்பட்ட தமிழர்களான பிரியா-நடேஸ் தம்பதியரின் இரு மகள்களான கோபிகா மற்றும் தருணிகாவுக்கு Jane மற்றும் Sally என்ற பெயர்கள் இருந்திருந்தால் ஆஸ்திரேலிய அரசு அவர்களை வேறுவிதமாக நடத்தியிருக்கும் என முன்வைக்கப்பட்ட விமர்சனத்தை குடிவரவு அமைச்சர் நிராகரித்துள்ளார். ஆஸ்திரேலிய National கட்சியின் தலைவராகவும் துணைப் பிரதமராகவும் மீண்டும் தெரிவுசெய்யப்படுவதற்கு முன்னதாக கருத்துவெளியிட்ட Barnaby Joyce, பிரியா குடும்பத்தை அரசு நடத்தும் விதம் தொடர்பில் விமர்சனத்தை வெளியிட்டதுடன், ஆஸ்திரேலியாவில் பிறந்த இரு பெண் குழந்தைகளுக்கும் Jane மற்றும் Sally என்ற பெயர்கள் இருந்திருந்தால் அவர்களை வேறொரு ...

Read More »

நகங்களின் மீது ஒளித்து வைக்கப்படும் ‘மைக்ரோ சிப்’

துபாயில் சமீப காலமாக அழகு நிலையங்களில் நகங்களின் மீது நெயில் பாலீஷ் உதவியுடன் ஒளித்து வைக்கப்படும் மைக்ரோ சிப் பிரபலமடைந்து வருகிறது. ஆங்கிலத்தில் நியர் பீல்டு கம்யூனிகேசன் டெக்னாலஜி என்பதன் சுருக்கம் என்.எப்.சி. என்று அழைக்கப்படுகிறது. தற்போது வெளிவரும் புதிய ரக ஸ்மார்ட் போன்களில் இந்த தொழில்நுட்பம் இருப்பதை காணலாம். பொதுவாக தகவல்களை ஒரு ஸ்மார்ட் போனிலிருந்து மற்றொரு போனுக்கு பரிமாற்றி கொள்ள இந்த தொழில்நுட்பம் பயன்படுகிறது. என்.எப்.சி.யை பொறுத்தவரையில் உணரும் கருவி அல்லது செல்போனை பக்கத்தில் வைத்தாலே போதும் தகவல் பரிமாற்றம் செய்து ...

Read More »

நடுக்கடலில் பற்றியெறியும் மற்றுமொரு கப்பல்

MSC MESSINA என்ற கொள்கலன் கப்பல் நடுக்கடலில் தீப்பற்றியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இலங்கை மற்றும் மலாக்கா ஜலசந்திக்கு இடையில் இந்திய பெருங்கடலில் பயணிக்கும் போது குறித்த கப்பலின் இயந்திர அறையில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த கப்பல் கொழும்பிலிருந்து சிங்கப்பூர் செல்லும் வழியில் உள்ளதாக கூறப்படுகின்றது. லிபேரியா நாட்டு கொடியுடன் குறித்த கொள்கலன் கப்பல் பயணிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

Read More »

மஹர – வெலிக்கடை மரண தண்டனைக் கைதிகளின் போராட்டம் தொடர்கிறது

மஹர மற்றும் வெலிக்கடை சிறைகளில் கைதிகள் குழு ஆரம்பித்த உண்ணாவிரதப் போராட்டம் இன்றும் தொடர்வதாக சிறைச்சாலை ஊடகப் பேச்சாளர் சந்தன ஏக்கநாயக்க தெரிவித்தார். மரண தண்டனை விதிக்கப்பட்ட கைதிகள் குழுவினரே உண்ணாவிரதத்தில் ஈடுபட்டிருப்பதாக சிறைச்சாலைத் திணைக்களம் தெரிவித்துள்ளது. கைதிகள் மரண தண்டனையை ஆயுள் தண்டனையாக மாற்றக் கோரி உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ளனர். வெலிக்கடை சிறைச்சாலையின் கூரையில் ஒரு குழுவினர் போராட்டத்தில் ஈடுபடுவதாகவும் சந்தன ஏக்கநாயக்க தெரிவித்தார்.

Read More »

விடுதலை செய்யப்பட்ட அரசியல் கைதிகளின் விபரம்

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச இன்றையதினம் பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு தடுப்பில் வைக்கப்பட்டிருந்த முன்னாள் விடுதலைப் புலிகளின் உறுப்பினர்கள் 16 பேர் உள்ளிட்ட, 93 கைதிகள், பொசன் பெளர்ணமி தினத்தையொட்டி, விடுதலை செய்துள்ளார். இவ்வாறு விடுதலை செய்யப்பட்டுள்ள 16 தமிழ் அரசியல் கைதிகளின் விபரமும் வெளிவந்துள்ளது. இதன்படி யாழ்ப்பாண மாவட்டத்தில் நடராஜா சரவணபவன், புருஷோத்தமன் அரவிந்தன், இராசபல்லவன் தபோரூபன், இராசதுரை ஜெகன், நளன் சிவலிங்கம், சூரியமூர்த்தி ஜீவோகன், சிவப்பிரகாசன் சிவசீலன், மயில்வாகனம் மாடன், சூர்யகுமார் ஜெயச்சந்திரன் மன்னார் மாவட்டம் சைமன் சந்தியாகு, ...

Read More »

2 வெவ்வேறு தடுப்பூசி போட்ட ஜெர்மனி பிரதமர்

உலகின் செல்வாக்கு மிகுந்த தலைவர்களில் ஒருவரான ஜெர்மனி பெண் பிரதமர் ஏஞ்சலா மெர்க்கல் இரு வெவ்வேறு தடுப்பூசிகளை செலுத்திக்கொண்டு அனைவரது கவனத்தை ஈர்த்து உள்ளார். கொரோனா வைரஸ் தொற்றுக்கு எதிராக உலகமெங்கும் பல்வேறு தடுப்பூசிகள் வந்துள்ளன. எந்தவொரு தடுப்பூசியையும் ஒருவர் போட்டுக்கொள்கிறபோது, குறிப்பிட்ட கால இடைவெளியில் அதே தடுப்பூசியின் இரண்டாவது டோஸ் எடுத்துக்கொள்ள வேண்டும் என்று பரிந்துரைக்கப்படுகிறது. இதைத் தான் அனைவரும் பின்பற்றுகின்றனர். அதே நேரத்தில் முதலில் ஒரு டோஸ் தடுப்பூசியையும், இரண்டாவது டோஸ் வேறொரு தடுப்பூசியையும் போடுகிறபோது, என்ன ஆகும் என்பது பற்றியும் ...

Read More »

ரிஷாத்தின் அடிப்படை உரிமை மீறல் மனு: நீதியரசர்களின் விலகல் தொடர்கிறது

முன்னாள் அமைச்சரும், வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான ரிஷாத் பதியுதீன், அவரது சகோதரர் ரியாஜ் பதியுதீன் ஆகியோர் தம்மை பயங்கரவாத தடை சட்டத்தின் கீழ் கைது செய்து சி.ஐ.டி.யினர் தடுத்து வைத்துள்ளதை ஆட்சேபித்து ; தலா 500 கோடி ரூபா நட்ட ஈடு பெற்றுத் தரக் கோரி உயர் நீதிமன்றில் மனுத் தாக்கல் செய்துள்ள வழக்கின் பரிசீலனைகளில் இருந்து உயர் நீதிமன்ற நீதியரசர்கள் ஒவ்வொருவராக விலகி வருகின்றனர் அதன்படி நேற்று இவ்வழக்கு விசாரணைகளிலுருந்து ஒதுங்கிக் கொள்வதாக நீதியரசர் ஏ.எச்.எம்.ஏ ; நவாஸ் அறிவித்துள்ளார். தனிப்பட்ட ...

Read More »

சிறுவர்களை தாக்கும் ‘மிஸ்ஸி’ நோய்

இலங்கையில் கொவிட் தொற்றுக்கு உள்ளான சிறுவர்களை தாக்கும் ‘மிஸ்ஸி’ என்ற நோய் பெரும்பாலான உடற்பாகங்களை அல்லது தொகுதிகளை பாதிக்கக் கூடியதாகும். எனினும் இது வரையில் கொவிட் தொற்றுக்கு உள்ளான சிறுவர்களில் நூற்றுக்கு ஒரு வீதத்திற்கும் குறைவானாரோ இந்நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று சிறுவர் நோய் தொடர்பான பணியகத்தின் செயலாளர் சிறுவர் நோய் தொடர்பான விசேட வைத்திய நிபுணர் சன்ன டி சில்வா தெரிவித்தார். எனவே இந்த நோய் தொடர்பில் பெற்றோர் வீண் அச்சமடையத் தேவையில்லை. ஆனால் 8 – 11 வயதுக்கு இடைப்பட்ட சிறுவர்களின் அன்றாட ...

Read More »