மஹர – வெலிக்கடை மரண தண்டனைக் கைதிகளின் போராட்டம் தொடர்கிறது

மஹர மற்றும் வெலிக்கடை சிறைகளில் கைதிகள் குழு ஆரம்பித்த உண்ணாவிரதப் போராட்டம் இன்றும் தொடர்வதாக சிறைச்சாலை ஊடகப் பேச்சாளர் சந்தன ஏக்கநாயக்க தெரிவித்தார்.
மரண தண்டனை விதிக்கப்பட்ட கைதிகள் குழுவினரே உண்ணாவிரதத்தில் ஈடுபட்டிருப்பதாக சிறைச்சாலைத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

கைதிகள் மரண தண்டனையை ஆயுள் தண்டனையாக மாற்றக் கோரி உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ளனர்.

வெலிக்கடை சிறைச்சாலையின் கூரையில் ஒரு குழுவினர் போராட்டத்தில் ஈடுபடுவதாகவும் சந்தன ஏக்கநாயக்க தெரிவித்தார்.