Tag Archives: ஆசிரியர்தெரிவு

குண்டை வெடிக்க வைத்து விட்டு உயிர் தப்பிய சஹ்ரான்! – அரச புலனாய்வாளர்கள்

தேசிய தவ்ஹீத் ஜமாத் அமைப்பின் தலைவர் ஜஹ்ரான் காசிம் மரணத்தை உறுதி செய்ய முடியாத நிலை காணப்படுவதாக அரச புலனாய்வாளர்கள் தெரிவிக்கின்றனர் என அரச ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. உயிர்த்தஞாயிறு தினத்தில் சங்கிரிலால் ஹோட்டலில் இடம்பெற்ற தாக்குதலை ஜஹ்ரானே மேற்கொண்டார் என தகவல்கள் வெளியாகியுள்ள நிலையிலேயே புலனாய்வு பிரிவினர் இவ்வாறு தெரிவித்துள்ளனர். ஜஹ்ரானும் இன்னொரு தற்கொலை குண்டுதாரியும் ஹோட்டலிற்கு சென்றுள்ளனர் என தெரிவித்துள்ள புலனாய்வு பிரிவினர் ஆனால் ஜஹ்ரான் தாக்குதலை மேற்கொள்ளவில்லை என குறிப்பிட்டுள்ளனர். ஜஹ்ரான்  குண்டொன்றை பொருத்தியிருக்கலாம் அல்லது தொலைவிலிருந்து அதனை வெடிக்க ...

Read More »

நியூசிலாந்து பிரதமருக்கு காதலருடன் நிச்சயதார்த்தம்!

பெண் குழந்தைக்கு தாயான பிறகு நியூசிலாந்து பிரதமர் ஜெசிந்தா, தனது நீண்டநாள் காதலருடன் திருமணத்துக்கு நிச்சயம் செய்துள்ளார். நியூசிலாந்து நாட்டில் தேசிய கட்சி மற்றும் தொழிலாளர் கட்சி ஆகிய இரு கட்சிகள் மாறி மாறி, ஆட்சியை பிடிப்பது வழக்கம். ஆனால் கடந்த 2017-ம் ஆண்டு தொழிலாளர் கட்சியின் வாக்கு வங்கி வரலாறு காணாத அளவு சரிவடைந்தது. பின்னர் அதே ஆண்டு செப்டம்பரில் நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் தன் கட்சியின் வாக்கு வங்கியை அவர் உயர்த்தினார். அத்தேர்தலில் 46 இடங்களைக் கைப்பற்றிய தொழிலாளர் கட்சி, கூட்டணி ...

Read More »

வவுனியாவில் முஸ்லிம் இளைஞன் வெட்டிக்கொலை!

வவுனியா சாளம்பைக்குளத்தில் இளம் குடும்பஸ்தர் வெட்டிக்கொலை செய்யப்பட்டுள்ளார். மரணமடைந்தவர்  சாளம்பைக்குளத்தை சேர்ந்த  இம்திகா அஹலம் என அழைக்கப்படும் 32 வயதுடையவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார். உடலின் பல இடங்களில் வெட்டுக்காயங்களுடன்  சடலம் வவுனியா பொது வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன் மேலதிக விசாரணைகளை பூவரசங்குளம் காவல் துறையினர்  மேற்கொண்டு வருகின்றனர்.

Read More »

கொழும்பை சுற்றியுள்ள பாலங்களை தகர்க்க திட்டம்!

கொழும்பிலுள்ள பாலங்களை தகர்ப்பதற்கு இஸ்லாமிய தீவிரவாதிகள் திட்டமிட்டுள்ளனர் என காவல் துறையினரை மேற்கோள்காட்டி ஏஎவ்பீ செய்தி வெளியிட்டுள்ளது. உயிர்த்தஞாயிறு தாக்குதலுடன் தொடர்புடைய பலர் இன்னமும் கைதுசெய்யப்படாமலிருக்கின்றனர் எனவும் காவல் துறையினu் குறிப்பிட்டுள்ளதாக ஏஎவ்பி தெரிவித்துள்ளது. கொழும்பில் உள்ள பாலங்களை தகர்ப்பதற்கான முயற்சிகள் இடம்பெறலாம் என்ற புலனாய்வு தகவல்களை தொடர்ந்து கொழும்பை சுற்றியுள்ள காவல் துறையினநிலையங்களின் பொறுப்பதிகாரிகளிடம் மேலதிக காவல் துறையினர் பாதுகாப்பு பணிகளில் ஈடுபடுத்துமாறு கோரியுள்ளோம் என அதிகாரிகள் ஏஎவ்பீ செய்திச்சேவைக்கு தெரிவித்துள்ளனர். ஆறுகளில் படகுகளை பயன்படுத்தி கண்காணிப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு கடற்படையினரை கோரியுள்ளதாகவும்காவல் ...

Read More »

மசூத் அசாரின் சொத்துக்கள் முடக்கம், பயணம் மேற்கொள்ளவும் தடை!

சர்வதேச பயங்கரவாதியாக அறிவிக்கப்பட்ட ஜெய்ஷ் இ முகமது பயங்கரவாத அமைப்பின் தலைவர் மசூத் அசாரின் சொத்துக்களை முடக்கவும் பயணம் மேற்கொள்ள தடையும் விதித்து பாகிஸ்தான் அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. புல்வாமா உள்பட பல்வேறு பயங்கரவாத தாக்குதல்களுக்கு மூளையாக செயல்பட்ட ஜெய்ஷ் இ முகமது பயங்கரவாத அமைப்பின் இயக்க தலைவர் மசூத் அசாரை சர்வதேச பயங்கரவாதியாக ஐ.நா அறிவித்தது. சர்வதேச பயங்கரவாதியாக மசூத் அசார் அறிவிக்கப்பட்டதையடுத்து, அசாருக்கு சொந்தமான சொத்துக்களை முடக்க பாகிஸ்தான் அரசு உத்தரவிட்டுள்ளது. மசூத் அசார் பயணம் மேற்கொள்ள தடையையும் விதித்துள்ளது. பாகிஸ்தான் ...

Read More »

சஹ்ரானின் சகோதரன் வீட்டில் தற்கொலை அங்கி மீட்பு!

தற்கொலை செய்துகொள்ளப்பட்ட, தேசிய தௌஹித் ஜமாஅத் அமைப்பின் தலைவரென கூறப்படும், சஹ்ரான் ஹாஷிமின் ச​கோதரனான ரிழ்வானின் இல்லத்திலிருந்து தற்கொலை அங்கி உட்பட பெருமளவு வெடிபொருள்கள், இன்று (02) மாலை மீட்கப்பட்டுள்ளன. அத்துடன், ரிழ்வானின் மாமனார் மற்றம் மாமியார் இருவரும் கைதுசெய்யப்பட்டுள்ளனர் என காவல் துறையினர் தெரிவித்தனர். சகோதரரான ரிழ்வான், சாய்ந்தமருது தற்கொலை குண்டு வெடிப்பில் பலியாகிவிட்டார். ரிழ்வானின் மனைவியும் பலியாகிவிட்டார். அவர்களுடைய காத்தான்குடி வீட்டிலிருந்தே இவை மீட்கப்பட்டுள்ளன. தற்கொலை அங்கி, அலைபேசிகள்-4, ஏ.ரி.எம்.அட்டைகள், வங்கி புத்தகம், மரணமடைந்த ரிழ்வான் தம்பதிகளின் நான்கு குழந்தைகளின் 4 ...

Read More »

அடிப்படைவாத கொள்கையால்  அடிமையாகியுள்ளவர்களுக்கு புனர்வாழ்வளிக்கப்பட வேண்டும்!

பிளவுப்பட்டுள்ள தேசிய புலனாய்வு பிரிவு மற்றும் பிரத்தியேக புலனாய்வு சேவையினை பலப்படுத்த வேண்டும் என முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபய ராஜபக்ஷ தெரிவித்தார். தேசிய  பாதுகாப்பு தொடர்பில் முன்னெடுக்கப்பட வேண்டிய  செயற்பாடுகள் தொடர்பில் ஆராய எதிர்க்கட்சி தலைவர் மஹிந்த ராஜபக்ஷ  முன்னாள்  பாதுகாப்பு  செயலாளர் கோத்தபய ராஜபக்ஷ  தலைமையில் ஓய்வுப்பெற்ற இராணுவ அதிகாரிகளை அங்கத்துவப்படுத்தி குழுவினை  நியமித்தார். இக்குழுவின் அறிக்கை இன்று எதிர்க்கட்சி தலைவர் மஹிந்த ராஜபக்ஷவிற்கு அவரது உத்தியோகப்பூர்வ  இல்லத்தில் வைத்து  கையளிக்கப்பட்டது. இவ்வறிக்கை தொடர்பில் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபய ராஜபக்ஷ ...

Read More »

வௌ்ளை நிற பாவாடைகளை வைத்திருந்த இருவர் கைது!

திஹாரியிலிருந்து அநுராதபுரம் நோக்கி பயணஞ்செய்த வானொன்றிலிருந்து 28 வௌ்ளை நிற பாவாடைகளுடன் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட இருவரும் 41 மற்றும் 47 வயதுகளையுடையவர்களாவார். குறித்த இருவரையும் இன்று (02) நீதிமன்றத்தில் சமர்பிக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக, அநுராதபுரம் காவல் துறையினர்  தெரிவித்தனர்.  

Read More »

மசூத் அசாரை சர்வதேச பயங்கரவாதியாக ஐ.நா. அறிவிப்பு!

பாகிஸ்தானை சேர்ந்த ஜெய்ஷ்-இ-முகமது இயக்க தலைவர் மசூத் அசாரை சர்வதேச பயங்கரவாதியாக ஐ.நா. அறிவித்ததை அமெரிக்கா வரவேற்று உள்ளது. பாகிஸ்தானை சேர்ந்த ஜெய்ஷ்-இ-முகமது இயக்க தலைவர் மசூத் அசாரை சர்வதேச பயங்கரவாதியாக ஐ.நா. அறிவித்து இருப்பதை பல்வேறு நாடுகள் பாராட்டி உள்ளன. அந்தவகையில் அமெரிக்காவும் இந்த நடவடிக்கையை வரவேற்று உள்ளது. இது குறித்து ஐ.நா.வுக்கான அமெரிக்க தூதுக்குழு உறுப்பினர்களில் ஒருவர் பி.டி.ஐ. செய்தி நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில், ‘மசூத் அசாரை ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலின் 1267 அல்-கொய்தா தடை பட்டியலில் சேர்த்திருப்பதை அமெரிக்கா வரவேற்கிறது. ...

Read More »

ராஜஸ்தான் அணியில் இருந்து விடைபெற்றார் ஸ்மித்!

12-வது ஐபிஎல் தொடரில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக விளையாடிய ஸ்மித் உலகக்கோப்பைக்கான ஆஸ்திரேலியா முகாமுக்குச் செல்வதால் அணியில் இருந்து பிரியா விடைபெற்றார். ஆஸ்திரேலியாவின் முன்னணி பேட்ஸ்மேன் ஸ்டீவ் ஸ்மித். பந்தை சேதப்படுத்திய விவகாரத்தில் சிக்கிய இவருக்கு ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் ஓராண்டு தடைவிதித்தது. இந்த தடை முடிந்து பல டி20 தொடரில் விளையாடி வந்தநிலையில் ஐபிஎல் தொடரில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக விளையாடினார். இவர் உலகக்கோப்பைக்கான ஆஸ்திரேலியா அணியில் இடம் பிடித்துள்ளார். ஆஸ்திரேலியா உலகக்கோப்பைக்கான முகாமை வருகிற 2-ந்தேதி தொடங்குகிறது. இதனால் உலகக்கோப்பைக்கான அணியில் ...

Read More »