கொட்டுமுரசு

பொதுக்குரல் என்பது சாதியத்திலிருந்து வராது! – எழுத்தாளர் எஸ்.செந்தில்குமார் பேட்டி

இலக்கியவாதிகள் அனைவருக்குமே எழுதுவதற்கான சூழல் அமைந்துவிடுவதில்லை. விமர்சன உலகின் மௌனம், நிரந்தரமற்ற பணிச்சூழலுக்கு இடையே முக்கியமான படைப்புகளைத் தொடர்ந்து எழுதிக்கொண்டிருந்தவர் எஸ்.செந்தில்குமார். நகைத் தொழிலாளிகளின் வரலாறு பேசும் ‘காலகண்டம்’, ஆடு வளர்க்கும் கிராமத்துப் பெண்களின் வாழ்க்கையைப் பேசும் ‘மருக்கை’ இரண்டும் இவரது முக்கியமான நாவல்கள். ஸ்பாரோ இலக்கிய அமைப்பு வழங்கும் இந்த ஆண்டுக்கான எழுத்தாளர் விருது எஸ்.செந்தில்குமாருக்கு அறிவிக்கப்பட்டிருக்கிறது. நூற்றாண்டுகால நெடிய தமிழ் இலக்கிய மரபில் புகுந்து வேர் பிடித்திருக்கும் களைகளாகச் சில விஷயங்களை இந்தப் பேட்டியில் கோடிகாட்டுகிறார். அற்புதத்தன்மை கொண்ட கதை வடிவத்தை ...

Read More »

பாலைவனத்துக்கான பயணமா, பால்நிலவுக்கான பயணமா?

நல்ல உறவு (நல்லுறவு) என்பது மற்றவர்களுடன் ஏற்படுத்திக் கொள்கின்ற கட்டாய ஒப்பந்தம் அல்ல. மாறாக, அது இயல்பாக விரும்பி, மனதில் தோன்ற வேண்டிய ‘புனித உறவு’ ஆகும். ஆனால், 2015ஆம் ஆண்டு ஜனவரி எட்டாம் திகதி தொடக்கம், கடந்த ஒக்டோபர் 26ஆம் திகதி வரை, ‘நல்லாட்சி’ என்ற ஒற்றை வார்த்தை, மலிந்து காணப்பட்ட சொல் ஆகும். அவர்கள், வலிந்து ஏற்படுத்திய உறவு என்பதால்தான், நல்லுறவும் நல்லாட்சியும் இன்று வலுவிழந்து விட்டது. இவ்வகையில், இலங்கை அரசியலில், கடந்த ஒரு மாத காலமாகப் பல ‘அசிங்கங்கள்’ அரங்கேறி ...

Read More »

நார்த் சென்டினல் தீவில் எத்தனைப் பழங்குடியினர் வசிக்கிறார்கள்?

அந்தமான் நிகோபார் தீவுக்கு அருகே இருக்கும் நார்த் சென்டினல் தீவில் சென்டினல்ஸ் பழங்குடியினர் எத்தனை பேர் வசிக்கிறார்கள் என்பது குறித்து 1967-ம் ஆண்டு அங்கு சென்று வந்த மானுடவியலாளர் டி.என் பண்டிட் சுவாரஸ்ய தகவல்களைத் தெரிவித்துள்ளார். நார்த் சென்டினல் தீவு அந்தமான் நிகோபார் தீவுகளில் இருந்து 35 மைல் தொலைவில் இருப்பதுதான் நார்த் சென்டினல் தீவு. இந்தத் தீவைச் சுற்றி 5 நாட்டிகல் மைல்வரை மனிதர்கள் செல்ல மத்திய அரசு தடை விதிக்கப்பட்டுள்ளது. தடை இந்த தீவில் உள்ள பூர்வீகக் குடிகளான சென்டினல் பழங்குடி ...

Read More »

மாற்று அணி உடையுமா? ஒட்டுமா?

தமிழகத்தைச் சேர்ந்த விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் அண்மையில் யாழ்ப்பாணத்திற்கு வருகை தந்திருந்தார். இங்கு நடந்த சந்திப்புக்களில் அவர் ஒரு விடயத்தை அழுத்தமாகக் கூறினார். இப்போதைக்கு ஈழத்தமிழர்களுக்கு கையாளக் கூடிய ஒரே அரசியல் வெளியாக காணப்படுவது பிரதிநிதித்துவ ஜனநாயக வெளிதான். இந்தப்பரப்பில் தங்களது பேரம் பேசும் பலத்தை அதிகரிப்பதன் மூலம் தான் ஈழத்தமிழர்கள் அடுத்தடுத்தக் கட்டங்களுக்கு முன்னேறிச் செல்லலாம் என்று. மேலும் அவர் ‘இப்போது அரங்கிலுள்ள பெரும்பாலான சக்திகள் spent forces- தீர்ந்துபோன சக்திகள்’ என்றும் தெரிவித்தார். இப்படிப்பட்ட தீர்ந்து போன சக்திகளை ...

Read More »

மேரி கொல்வின் இலங்கையில் எப்படி தனது ஒரு கண்ணை இழந்தார்?

அமெரிக்க பெண் பத்திரிகையாளர் மேரிகொல்வின் இலங்கையில் இராணுவத்தினரால் சுடப்பட்டு உயிருக்கு போராடிய அந்த தருணங்களை அவரது சிநேகிதி லின்ட்சே ஹில்சம் பேட்டியொன்றில் விபரித்துள்ளார். 2012 இல் சிரியாவில் கொல்லப்பட்ட மேரி கொல்வின் குறித்து நூலொன்றை எழுதியுள்ள லின்ட்சே ஹில்சம் 2001 இல் மேரி கொல்வின் இலங்கையில் சந்தித்த அனுபவங்கள் குறித்து சர்வதேச ஊடகமொன்றிற்கு பேட்டியொன்றில் குறிப்பிட்டுள்ளார் அதன் தமிழ் மொழிபெயர்ப்பு கேள்வி- இலங்கை தொடர்பான அந்த கதை குறித்து அறிய விரும்புகின்றேன்- அவரின் கண்ணில் பாதிப்பு ஏற்படுவதற்கு காரணமான காயம் எவ்வாறு ஏற்பட்டது? பதில்- ...

Read More »

நிர்பயா: மரண தண்டனையை நிறைவேற்றுமாறு மனு!

நிர்பயா பாலியல் வல்லுறவுக் கொலை வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்ட 4 குற்றவாளிகளுக்கும் உடனடியாகத் தண்டனையை நிறைவேற்றக் கோரி, நேற்று உச்ச நீதிமன்றத்தில் மனுவொன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அது மட்டுமல்லாமல், பாலியல் வல்லுறவுக் கொலை வழக்கில் கீழமை நீதிமன்றத்தால் மரண தண்டனை வழங்கப்பட்ட குற்றவாளிக்கு எட்டு மாதங்களுக்குள் தண்டனை நிறைவேற்ற வழிவகை செய்ய வேண்டுமென்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 2012ஆம் ஆண்டு டிசம்பர் 16ஆம் தேதி நள்ளிரவில், டெல்லி மாநகரப் பேருந்தொன்றில் 23 வயது மருத்துவ மாணவி ஒருவர் ஆறு நபர்களால் பாலியல் வல்லுறவுக்கு ஆளாக்கப்பட்டார். ...

Read More »

மருதோடை: எப்படியிருக்கிறது எல்லை?

வவுனியா வடக்கு பிரதேச செயலாளர் பிரிவின் எல்லையில் இருக்கிறது, மருதோடை – நாவலடி எனும் கிராமம். அதாவது, வடமாகாணத்தின் எல்லைக் கிராமம். அதன் மறுகரையில், அநுராதபுரம் ஆரம்பிக்கிறது. தமிழ், சிங்களம் என்ற இரு இனங்களையும் நிலவியல்பு அடிப்படையில் இயற்கையாகவே பிரித்து வைத்திருக்கும் இந்த எல்லைக்கோட்டை சிதைத்தமையால் உண்டானதே, 2009 வரைக்கும் நீடித்த இனப்போர். இப்போது போர் முடிந்து 10 ஆண்டுகளைத் தொட்டிருக்கிறது இலங்கை. இந்நிலையில், இனப்போருக்குத் தூபமிட்ட எல்லைக் கிராமங்களில் ஒன்றான மருதோடை எப்படியிருக்கிறது? யாரும் இலகுவில் சென்றடைந்துவிட முடியாதளவு பயணப் பாதையையும் தொலைவையும் ...

Read More »

‘அவதந்திரம் தனக்கு அந்தரம்’

‘திருகோணமலை பன்குளத்தில் புலிகளின் கண்ணிவெடியில் சிக்கி, 11 பொலிஸார் கொல்லப்பட்டனர். மேலும் எட்டுப் பேர் காயமடைந்தனர். வவுனியா, ஓமந்தையில் படையினரின் எறிகணை வீச்சில், புலிகளில் எட்டுப் பேர் மரணமடைந்துள்ளனர்’. இவை, பத்து ஆண்டுகளுக்கு முற்பட்ட அன்றாடச் செய்திகள் ஆகும். ஆனால், நாடாளுமன்றத்தில் மஹிந்த அணியினரின் தாக்குதலில் 11 பொலிஸார் காயமடைந்தனர் என்பது, இன்றைய செய்தி ஆகும். கலைகளை வளர்க்கும் கலா மன்றங்கள், வாசிப்பு, பொது வேலைகளை ஊக்குவிக்கும் சனசமூக நிலையங்கள், கிராமங்களை அபிவிருத்தி செய்யும் கிராம அபிவிருத்தி மன்றங்கள் எனப் பல அமைப்புகள் நாட்டில் ...

Read More »

அரசியல் நெருக்கடியை தொடக்கிவைத்தவரே முடித்துவைக்கவும் வேண்டும்!

எவரும் எதிர்பார்க்காத முறையில் அக்டோபர் 26 மூண்ட அரசியல் நெருக்கடி இன்னமும் தொடருகிறது. இப்போது அது நான்காவது வாரத்திற்குள் பிரவேசிக்கின்றது.   பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவைப் பதவி நீக்கிவிட்டு அவரின் இடத்துக்கு முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவை நியமிப்பதற்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன எடுத்த எதிர்பாராத தீர்மானம் சந்தேகப்படாதிருந்த ஒரு நாட்டின் மீது பிரச்சினையைக் கட்டவிழ்த்துவிட்டது. ராஜபக்ச பிரதமர் என்ற வகையில் தனது புதிய பதவியை சட்டபூர்வமாகப் பொறுப்பேற்பதற்கு பாராளுமன்றத்தில் பெரும்பான்மை ஆதரவு இருக்கிறது என்பதை நிரூபிக்க இயலாதவராக இருப்பதே இன்றுள்ள பிரச்சினையாகும். கடந்த ...

Read More »

மைத்திரியின் அளாப்பி அரசியலும் தமிழ்த் தரப்பும்!

அப்பா பொலன்னறுவை ரோயல் கல்லூரியில் கல்வி கற்றுக்கொண்டிருந்த போதுஒரு முறை வகுப்பத்தலைவராக நியமிக்கப்பட்டார்.உதவி வகுப்புத்தலைவராகநியமிக்கப்பட்ட மாணவர் சற்று வெட்க குணமும் பெண் சுபாவமும் கொண்டவராகஇருந்தார். அத்தோடு அவர் அவரது சில குறிப்பிட்ட நண்பர்களுடன் சேர்ந்துகொண்டு ஆங்கிலத்தில் கதைப்பவராகவும் இருந்தார்.இந்த நடவடிக்கைகள்அப்பாவை கோபத்திற்கு ஆளாக்கியது.உடனே வகுப்பாசிரியரிடம் சென்று உதவிமாணவத்தலைவரை பதவி நீக்கம் செய்யுமாறு அடம்பிடித்திருக்கிறார்.இதனால்இரண்டு நாட்கள் பாடசாலைக்கும் செல்லவில்லையாம்.அப்பாவின் முகம்சாதாரண நிலையிலும் கோபக்காரரைப்போலவே இருந்ததால்வகுப்புத்தலைவருக்கு அவரே பொருத்தம் என கருதிய வகுப்பாசிரியர் அப்பாவின்கோரிக்கையினை நிராகரிக்க முடியாத நிலையில் உதவி மாணவத்தலைவரைபதவி நீக்கினாராம்.இந்த செய்தியை கேள்விப்பட்ட பின்னரே ...

Read More »