செய்திமுரசு

தமிழரசு கட்சி தமிழ் மக்களை எங்கு கொண்டு செல்ல விரும்புகிறது?

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை ஒரு வலுவான தமிழ்த் தேசிய அரசியல் சக்தியாக உருவாக்க வேண்டும் என்னும் குரலுக்கு கிட்டத்தட்ட அரை சகாப்தகால வயதுண்டு. ஆனாலும், ஆண்டுகள் கழிந்தனவேயன்றி முன்னேற்றங்கள் எதனையும் காண முடியவில்லை. இது தொடர்பில் நான் முன்னரும் பல தடவைகள் விவாதித்திருக்கிறேன். அந்த வகையில் என்னைப் போன்றவர்களின் வாதங்களுக்கும் அரைத்தசாப்த கால வயதாகிறது. இன்னும் எத்தனை ஆண்டுகள் இதற்காக நாம் செலவிடப் போகின்றோம்? ஆட்சி மாற்றத்தைத் தொடர்ந்து ஏற்பட்டிருக்கும் ஓரளவு சுமூகமான சூழலில் தமிழ் மக்களின் பேரம் பேசும் சக்தியை பலப்படுத்த வேண்டிய ...

Read More »

பறிக்கப்படுமா தமிழரின் நாடாளுமன்ற பிரதிநிதித்துவம்?

இலங்கையின் தேர்தல் முறைமையை மாற்றியமைக்கும் விவகாரம் இப்போது முக்கியமான கட்டத்தை அடைந்திருக்கிறது. தற்போதுள்ள விகிதாசாரப் பிரதிநிதித்துவ முறைமை பல்வேறு சிக்கல்களைக் கொண்டதாக இருப்பதால், கலப்பு பிரதிநிதித்துவ முறைமை ஒன்றை உருவாக்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இலங்கையில் ஆரம்பத்தில் இருந்தே நடைமுறையில் இருந்து வந்த தொகுதிவாரி தேர்தல் முறைமையை தனது வசதி கருதி, 1978ஆம் ஆண்டு புதிய அரசியலமைப்பு உருவாக்கத்தின் போது, முற்றாகவே இல்லாமல் செய்திருந்தார் அப்போதைய ஜனாதிபதி ஜே.ஆர்.ஜெயவர்த்தன. அப்போது பாராளுமன்றத்தில் பெற்றிருந்த அசுர பலத்தைக் கொண்டு, எதிர்க்கட்சியான ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியைத் தலையெடுக்க ...

Read More »

ஜீலோங் நகரில் சிறப்புற நடைபெற்ற தமிழீழத் தேசியக் கொடியேற்றல் நிகழ்வு

அவுஸ்திரேலியா ஜீலோங் (Geelong) நகரில் தமிழீழத் தேசியக்கொடியைத் தமது தொழிற்சங்கக் கட்டடத்தில் அதிகாரபூர்வமாக ஏற்றி தமிழீழ விடுதலைப் போராட்டத்துக்குத் தமது ஆதரவை அந்நகரத் தொழிற்சங்கம் வழங்கிக் கெளரவப்படுத்தியுள்ளது. இத்தொழிற்சங்கத்தினரோடு ஏனைய இடதுசாரி அமைப்புக்களும் இக்கொடியேற்றல் நிகழ்வில் கலந்துகொண்டு ஆதரவு நல்கின. கடந்த வெள்ளிக்கிழமை (17-04-2015) மாலை 6.00 மணிக்கு இக்கொடியேற்றல் நிகழ்வு இடம்பெற்றது. அவுஸ்திரேலியாவில் மெல்பேர்ன் நகருக்கு அண்மையில் அமைந்துள்ள நகரம் ஜீலோங் நகரமாகும். தமிழர்கள் யாருமே வசிக்காத ஒரு நகரமாக இருந்து வந்த இந்நகரத்தில் அண்மைக்காலத்தில்தான் தமிழ்ப் புகலிடக் கோரிக்கையாளர்களைக் குடியமர்த்தியது அவுஸ்திரேலிய ...

Read More »

வெளிநாட்டு அமைச்சர் யூலி பிசப் சென்னையில்!!

இந்தியாவுக்கான தனது வெளிநாட்டுப்பயணத்தை மேற்கொண்டுள்ள அவுஸ்திரேலிய வெளிநாட்டமைச்சர் யூலி பிசப் இந்தியாவில் அகதிகளாக தங்கியுள்ள தமிழர் பிரதிநிதிகளையும் சந்தித்துள்ளார். தற்போது இலங்கைத்தீவில் தமிழ்மக்களுக்கான புனர்வாழ்வு மற்றும் நல்லிணக்கம் (Rehabilitation and Reconciliation) என்பவற்றை ஏற்படுத்துதல் தொடர்பாக அவர்களுடன் கலந்துரையாடியதாக அவர் தெரிவித்துள்ளார். அத்துடன் அகதிகளாக அவுஸ்திரேலியாவுக்கு வருவதை மனிதகடத்தல் என்ற ரீதியில் எவ்வாறு தொடர்ந்தும் தடுக்கப்படலாம் என்பதுபற்றியும் தமிழ்நாடு முதல்வருடன் அவர் கலந்துரையாடியதாக தெரிவித்துள்ளார். அத்துடன் தற்போதைய இந்திய – அவுஸ்திரேலிய நெருக்கத்தை அதிகரிக்கும் வகையில் சென்னையிலும் தனது இந்தியாவுக்கான அவுஸ்திரேலியாவின் துணைத்தூதரகத்தையும் திறந்துவைத்தார். மும்பாயில் ஏற்கனவே ...

Read More »

புலத்துதமிழரை வழிக்கு கொண்டுவரும் சிங்கப்பூர் பேச்சுவார்த்தை பின்னனிகள்!!

புலம்பெயர் தமிழ் அமைப்புக்கள் சிலவற்றிற்கும் தென்னிலங்கைக் கட்சிகளுக்கும் தமிழ் தேசிய கூட்டமைப்பிற்கும் நடக்கும் பேச்சுவார்த்தைகள் எதனைப் பற்றியவை? குறித்த பேச்சுவார்த்தைகளின் பின்னனி என்ன? என்பது பற்றி தமிழ்ச்சிவில் சமூக அமையத்தின் பேச்சாளர் குருபரன் கனேடிய தமிழ் வானொலிக்கு வழங்கிய நேர்காணலில் பல்வேறு விடயங்களை பகிர்ந்துகொள்கின்றார். சிங்கப்பூர் கூட்டம் தொடர்பாக உலகத் தமிழ்ப் பேரவையின் ஊடக அறிக்கை: நேர்காணலில் குறிப்பிடும் தமிழ்நெட் செய்தி நேர்காணலில் குறிப்பிடும் In Transformation Initiatives பணிப்பாளரின் நேர்காணல் நேர்காணலில் குறிப்பிடும் ட்விட்டர் உரையாடல் மூலம் – https://rkguruparan.wordpress.com/2015/04/15/singaporeprocess/

Read More »

அஞ்சலிக்கு அனுமதிக்கப்படுமா முள்ளிவாய்க்கால்?

2009ஆம் ஆண்டு போர் முடிவுக்கு வந்த முல்லைத்தீவின், முள்ளிவாய்க்கால் கரையோரத்தில், முதல் முறையாக ஒரு சர்வதேசப் பிரமுகர், போரில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தியிருக்கிறார். இம்மாதம் முதல்வாரம், இலங்கைக்குப் பயணம் மேற்கொண்டிருந்த, அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் ஜனநாயகம், மனித உரிமைகள் மற்றும் தொழிலாளர் விவகாரங்களுக்கான உதவிச்செயலர் ரொம் மாலினோவ்ஸ்கியே, முள்ளிவாய்க்காலில் மலர் அஞ்சலி செலுத்திய முதல் சர்வதேசப் பிரமுகராவார். இவர் முள்ளிவாய்க்கால் கரையோரமாக நடந்து சென்று, விடுதலைப் புலிகளால் கைப்பற்றப்பட்டு, தரைதட்டி நின்ற பாரா-–3 என்ற கப்பலின் எச்சம் இன்னமும் காணப்படும், பகுதியை அண்டிய கடற்கரையில் ...

Read More »

Liberating Champoor is fundamental to Tamils’ existence in East – TamilNet

Liberating Champoor is liberating Tamils from permanent subjugation in Trincomalee district, say the Tamil people of Moothoor East in Trincomalee. From the average Tamil families languishing in the camps to experts among Tamils coming from Moothoor East, having in-depth knowledge of their region and the politics, are unanimous in their opinion that both the Indian Coal Power Plant, for which ...

Read More »

எம்மை பிரித்து, கட்சியை வளர்க்கவே வந்தார் ரணில்!! – விக்கி

பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தமது கட்சியை வளர்க்கவும் நிலைநாட்டவுமே இங்கு வந்தார். அதற்கும் எமக்கும் எந்த சம்பந்தமுமில்லை. இது முற்றிலும் ஓர் அரசியல் ரீதியான பயணம். எனவே நான் மக்களின் பிரதிநிதி என்ற முறையில் பிரதமரின் கூட்டங்களில் கலந்துகொள்ளவில்லையே என்ற குற்றச்சாட்டு அர்த்தமற்றது. அவர் ராணுவத்தினரை படிப்படியாக வெளியேற்றுவேன் என உத்தரவாதம் தந்தால் நான் அவருடன் கைகுலுக்குவேன். – இவ்வாறு தெரிவித்தார் வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன். இன்று வியாழக்கிழமை (02-04-2015) முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலையின் சத்திரசிகிச்சை விடுதித் தொகுதி மற்றும் இரத்த வங்கி ...

Read More »

கூட்டமைப்பு கட்டமைப்பு சார் அமைப்பாக பதியப்பட வேண்டும் – வீரகேசரி

மக்­களைச் சென்­ற­டைதல் என்­பது அர­சி­யலில் மிகவும் முக்­கி­ய­மா­ன­தொரு தேவை­யாகும். அர­சியல் கட்சி அல்­லது அர­சியல் தலை­வர்­களின் கருத்­துக்கள் மக்­களைச் சென்­ற­டை­வதன் ஊடா­கத்தான் மக்­களின் ஆத­ரவைப் பெற முடியும். அதன் அடிப்­ப­டை­யில்தான் மக்­களை அணி திரட்ட முடியும். அர­சியல் செயற்­பா­டு­களை முன்­னெ­டுக்க, முடியும். ஆகவே மக்­களைச் சென்­ற­டை­வ­தற்­காக அர­சி­யல்­வா­திகள் எத­னையும் சொல்­வார்கள். எத­னையும் செய்­வார்கள். ஆனால், இவ்­வாறு எத­னையும் சொல்­வதும், செய்­வதும் ஆரோக்­கி­ய­மான அர­சி­ய­லுக்கு உகந்­த­தல்ல. மக்­களின் தேவைகள், அவர்­களின் எதிர்­கால வாழ்க்கை என்­ப­வற்­றையும் நாட்டின் சுபிட்சம், எதிர்­காலப் போக்கு என்­ப­வற்றைச் சிந்­த­னையில் கொண்டு அதற்­கேற்ற ...

Read More »