செய்திமுரசு

2 வெவ்வேறு தடுப்பூசி போட்ட ஜெர்மனி பிரதமர்

உலகின் செல்வாக்கு மிகுந்த தலைவர்களில் ஒருவரான ஜெர்மனி பெண் பிரதமர் ஏஞ்சலா மெர்க்கல் இரு வெவ்வேறு தடுப்பூசிகளை செலுத்திக்கொண்டு அனைவரது கவனத்தை ஈர்த்து உள்ளார். கொரோனா வைரஸ் தொற்றுக்கு எதிராக உலகமெங்கும் பல்வேறு தடுப்பூசிகள் வந்துள்ளன. எந்தவொரு தடுப்பூசியையும் ஒருவர் போட்டுக்கொள்கிறபோது, குறிப்பிட்ட கால இடைவெளியில் அதே தடுப்பூசியின் இரண்டாவது டோஸ் எடுத்துக்கொள்ள வேண்டும் என்று பரிந்துரைக்கப்படுகிறது. இதைத் தான் அனைவரும் பின்பற்றுகின்றனர். அதே நேரத்தில் முதலில் ஒரு டோஸ் தடுப்பூசியையும், இரண்டாவது டோஸ் வேறொரு தடுப்பூசியையும் போடுகிறபோது, என்ன ஆகும் என்பது பற்றியும் ...

Read More »

பயங்கரவாத தடைச்சட்டத்தை முற்றாக ஒழிப்பதே அரசியல் கைதிகளின் விடுதலைக்கு ஒரே வழி.!

பயங்கரவாத தடைச்சட்டத்தை முற்றாக ஒழிப்பதே அரசியல் கைதிகளின் விடுதலைக்கு ஒரே வழி.! அதை விடுத்து உங்கள் அரசியல் தேவைகளுக்காக இந்த விடயத்தைப் பாவிக்காதீர்கள்-என நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் தெரிவித்துள்ளார். அவர் தனது உரையில் மேலும் தெரிவித்துள்ளதாவது நாமல் ராஜபக்ச அரசியல் கைதிகள் விடுதலை தொடர்பில் தெரிவித்த கருத்துகளை வரவேற்கும் அதே நேரம் ,செயல்பாட்டில் ஏதும் இல்லாதவாறு வெறுமனே தத்தமது கருத்துகளை அரச தரப்பினர் எழுந்தமானமாக கூறிவிட்டு முடிப்பதை , குறிப்பாகஜெனீவா மனித உரிமை பேரவை கூட்டத்தொடர் ஆரம்பமாகியிருக்கின்ற இந்த காலப்பகுதியில் , ஜி எஸ் ...

Read More »

ரிஷாத்தின் அடிப்படை உரிமை மீறல் மனு: நீதியரசர்களின் விலகல் தொடர்கிறது

முன்னாள் அமைச்சரும், வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான ரிஷாத் பதியுதீன், அவரது சகோதரர் ரியாஜ் பதியுதீன் ஆகியோர் தம்மை பயங்கரவாத தடை சட்டத்தின் கீழ் கைது செய்து சி.ஐ.டி.யினர் தடுத்து வைத்துள்ளதை ஆட்சேபித்து ; தலா 500 கோடி ரூபா நட்ட ஈடு பெற்றுத் தரக் கோரி உயர் நீதிமன்றில் மனுத் தாக்கல் செய்துள்ள வழக்கின் பரிசீலனைகளில் இருந்து உயர் நீதிமன்ற நீதியரசர்கள் ஒவ்வொருவராக விலகி வருகின்றனர் அதன்படி நேற்று இவ்வழக்கு விசாரணைகளிலுருந்து ஒதுங்கிக் கொள்வதாக நீதியரசர் ஏ.எச்.எம்.ஏ ; நவாஸ் அறிவித்துள்ளார். தனிப்பட்ட ...

Read More »

சிறுவர்களை தாக்கும் ‘மிஸ்ஸி’ நோய்

இலங்கையில் கொவிட் தொற்றுக்கு உள்ளான சிறுவர்களை தாக்கும் ‘மிஸ்ஸி’ என்ற நோய் பெரும்பாலான உடற்பாகங்களை அல்லது தொகுதிகளை பாதிக்கக் கூடியதாகும். எனினும் இது வரையில் கொவிட் தொற்றுக்கு உள்ளான சிறுவர்களில் நூற்றுக்கு ஒரு வீதத்திற்கும் குறைவானாரோ இந்நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று சிறுவர் நோய் தொடர்பான பணியகத்தின் செயலாளர் சிறுவர் நோய் தொடர்பான விசேட வைத்திய நிபுணர் சன்ன டி சில்வா தெரிவித்தார். எனவே இந்த நோய் தொடர்பில் பெற்றோர் வீண் அச்சமடையத் தேவையில்லை. ஆனால் 8 – 11 வயதுக்கு இடைப்பட்ட சிறுவர்களின் அன்றாட ...

Read More »

தமிழ் அகதி குடும்பத்துக்கு இணைப்பு விசா வழங்கிய ஆஸ்திரேலியா

ஆஸ்திரேலியாவின் கடல் கடந்த தடுப்பு முகாமில் பல ஆண்டுகள் கழித்த பிரியா- நடேசலிங்கம் எனும் இலங்கைத் தமிழ் அகதி குடும்பத்துக்கு இணைப்பு விசாக்களை வழங்கியுள்ளதாக ஆஸ்திரேலிய குடிவரவுத்துறை அமைச்சர் அலெக்ஸ் ஹாக் தெரிவித்திருக்கிறார். இதன் மூலம் பிரியாவும் நடேசலிங்கமும் வேலைச் செய்ய, கல்வி கற்க அனுமதிக்கப்படுவார்கள். இக்குடும்பத்துக்கு மருத்துவ உதவிகள், பிற உதவிகள் மட்டுமின்றி அவர்களது குழந்தைகளுக்கு கல்வி உதவியும் வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Read More »

அகதியாக ஆஸ்திரேலியா சென்று பேருந்து ஓட்டும் தமிழ்ப்பெண்

ஈழத்தில்  இருந்து அகதியாகச் சென்ற பருத்தித்துறையைச்  சேர்ந்த பெண் ஒருவர் அவுஸ்ரேலியா நாட்டில் பொதுப் போக்குவரத்து சாரதியாக பணிபுர்ந்து வருவது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது. பருத்தித்துறையைச் சேர்ந்த சோதிகா ஞானேஸ்வரன் என்பவரே இவ்வாறு பணிபுரிந்து வருகிறார். பெற்றோர்கள் இல்லாத நிலையில் அவரின் திருமண வாழ்கையும் 3 வருட காலத்தில் முறிவடைந்த நிலையில் தனது 3 வயதுக் குழந்தையுடன் கடல் மார்க்கமாக அவுஸ்ரேலியாவிற்குச் சென்றுள்ளார். அவுஸ்ரேலியாவில் 5 வருடங்கள் கழித்து விசா கிடைத்ததும் தனது கையில் கிடைக்கும் வேலைகளைச் செய்து பணம் சாம்பாதித்தார். அதன் ...

Read More »

ரணில் வாறார்?

அண்மை வாரங்களில் அமெரிக்காவிலும் ஐரோப்பிய நாடாளுமன்றத்திலும் முன்னெடுக்கப்பட்டிருக்கும் இரண்டு நகர்வுகள் ஈழத்தமிழர்களுக்கு உற்சாகமூட்டக்கூடியவை. அதேசமயம் அரசாங்கத்துக்கு அழுத்தம் கொடுக்கக் கூடியவை.முதலாவது நகர்வு அமெரிக்கக் கொங்கிரசின் வட கரோலினாவைச் சேர்ந்த ஜனநாயகக் கட்சி உறுப்பினர் ஒருவர் கொண்டு வந்திருக்கும் ஒரு முன்மொழிவு. அது தமிழ் மக்களின் பாரம்பரிய பிரதேசத்தை தாயகம் என்று ஏற்றுக்கொள்ளும் ஒரு முன்மொழிவு. அது இனிமேற்றான் அமெரிக்க கொங்கிரசிலும் செனட் சபையிலும் நிறைவேற்றப்பட வேண்டும். ஆனால் அதில் ஓர் அழுத்தப் பிரயோக நோக்கம் இருக்கிறது. அமெரிக்கா இலங்கை அரசாங்கத்தின் மீது ஏதோ ஒருவித ...

Read More »

ஆஸ்திரேலியாவில் குடியேறுவதற்கான தொழிற்பட்டியலில் புதிதாக 22 தொழில்கள் இணைப்பு!

ஆஸ்திரேலியாவில் குடியேறுவதற்கான Priority Migration Skilled Occupation List (PMSOL)- முன்னுரிமை  அடிப்படையிலான தொழிற்பட்டியலில் புதிதாக 22 தொழில்கள் இணைக்கப்பட்டுள்ளதாக குடிவரவு அமைச்சர் Alex Hawke இன்று அறிவித்தார். இதையடுத்து Priority Migration Skilled Occupation List-இல் உள்ள மொத்த தொழில்களின் எண்ணிக்கை 41 ஆக அதிகரித்துள்ளது. Priority Migration Skilled Occupation List என்பது மிக அத்தியாவசிய தொழில்துறைகளுக்கான பணியாளர்களை  முன்னுரிமை அடிப்படையில் ஆஸ்திரேலியாவுக்கு வரவழைப்பதற்கான பொறிமுறையாகும். Priority Migration Skilled Occupation List-இல் புதிதாக சேர்த்துக்கொள்ளப்பட்டுள்ள தொழில்களின் விவரங்கள் வருமாறு: Accountant ...

Read More »

ராணாவை நாடு கடத்தும் வழக்கில் நாளை நேரடி விசாரணை

மும்பை தாக்குதல் குற்றவாளி ராணாவும் அவருடைய நண்பரும், கனடா குடியுரிமை பெற்ற பாகிஸ்தான் தொழிலதிபருமான தஹாவுர் ராணாவுக்கும் இவ்வழக்கில் தொடர்புள்ளது. கடந்த 2008-ம் ஆண்டு நவம்பர் மாதம், மும்பையில் பாகிஸ்தான் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தியதில் 6 அமெரிக்கர்கள் உள்பட 166 பேர் பலியானார்கள். இதில் முக்கிய குற்றவாளியான ஹெட்லி, அமெரிக்காவில் பிடிபட்டார். அவர் அப்ரூவராக மாறி, சிறைத்தண்டனை அனுபவித்து வருகிறார். அவருடைய நண்பரும், கனடா குடியுரிமை பெற்ற பாகிஸ்தான் தொழிலதிபருமான தஹாவுர் ராணாவுக்கும் இவ்வழக்கில் தொடர்புள்ளது. அவர் இந்தியாவால் தேடப்படும் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டுள்ளார். இந்தியாவின் ...

Read More »

தமிழ் மக்களுடைய நில உரிமையைப் பறித்தெடுக்கப்படுகிறது!

இந்த அரசு மேற்கொள்கின்ற அனைத்து விதமான செயற்பாடுகளும் இறுதியிலே தமிழ் மக்களுடைய நில உரிமையைப் பறித்தெடுப்பதாகத்தான் இருக்கின்றதே தவிர தமிழ் மக்களுடைய நில உரிமையை உறுதிப்படுத்துவதாக இல்லை என தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் செயலாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான செல்வராசா கஜேந்திரன் தெரிவித்தார். நேற்றைய தினம் நாடாளுமன்றத்தில் இடம்பெற்ற காணி அபிவிருத்தி கூட்டுத்தாபனம் தொடர்பான சட்டமூல விவாதத்தின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், காணி அபிவிருத்தி கூட்டுத்தாபனம் தொடர்பான சட்டமூல விவாதம் இங்கு இடம்பெற்றுக் கொண்டிருக்கிறது. இந்த ...

Read More »